Monday, March 17, 2008

சிந்தனைக்கு சில


உங்கள் சிந்தனைக்கு சில….

-- "நான் அனுபவசாலி,
நான் சொல்வதைக் கேள்
என்று கூறி நம் முடிவைப் பலர் திசை திருப்ப முயல்கிறார்கள்.
அனுபவம் என்பது வெகு சில பொது அனுபவங்களே
எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன. மற்ற பெரும்பாலான அனுபவங்கள் தனிமனிதனின் சொந்த அனுபவங்கள்.
ஒரு விஷயத்தை ஒரு மனிதன் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறான்
என்பதை பொறுத்து அனுபவங்கள் பல்வேறு விதமாய் அமையலாம்.

"மார்க்டு வெயின்" என்ற அறிஞர் சொல்கிறார் :

பூனை பாடம் படித்துக் கொண்டது உண்மைதான்.
ஆனால் என்ன ஆயிற்று? "பூனை சூடான அடுப்புக் கல்லின் மீது உட்காருவதில்லை. அத்துடன் சூடில்லாத அடுப்புக்கல்லின் மீதும் உட்காருவதில்லையே".


-- மனிதனிடமுள்ள மிகப் பெரிய குறை
தன்னிடமுள்ள குறையை ஏற்றுக்கொள்வதில்லை.
நம்மைக் குறை கூறுகின்றவர்கள் யார்?
அவர்களது உள்நோக்கம் என்ன?
நம்மைக் குறை கூறுவதால்
அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது
என்று சில கேள்விகளை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்
என்றாலும் அப்படிச் சொல்கிறவர்களுக்கு உள்ள உள்நோக்கம்
என்ன என்று ஆராய்வதை விட,
அவர்கள் கூற்றில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதே முக்கியம்.


-- வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை ஆமோதித்தால்
அடுத்த அவதூறு உன் மேல்தான்.


-- திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன்
திருடனைப் போல் மோசமானவன் தான்.
அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான்.
(செஸ்டர் பீல்டு 1694 – 1773)


-- உங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்குத்
தடையான வாசகங்கள் எவைகள் எல்லாம்
நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களோ
அவற்றை தெளிவாகக் கண்டறியுங்கள்.
அவைகளை உங்கள் மனத்திலிருந்து வெளியேற்றுங்கள்.


-- சிறந்த மனிதர்கள் -
தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


-- மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு
நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகிவிடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை
நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும்.
(மான்டெஸ்கியூ)


-- மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால் நீ உன் காதை அடைத்துக் கொள்.
(குவாரல்ஸ் 1592-1644)


-- என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக
அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்யும்.
என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது.
(ஜான்ஸன் - 1709-1784)


-- அவதூறு -
கடல்களையும்,
மலைகளையும்,
பாலைவங்களையும்
எளிதில் தாண்டிச் செல்லும்.
(கோல்டன் 1780-1832)


-- கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
தன் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்த போதிலும்
கர்வத்தோடு வீரம் பேசக் கூடாது.


-- படைகளை விட -
வல்லமை உள்ளது சொற்கள்.
(ப்ரமர்ஸ்டன் பிரபு)


-- கடுஞ்சினமும்,
வஞ்சகமும்,
நம்மிடமிருந்து
செயல்படும் போது
அறிவுடைமையும்,
பண்பும்,
உண்மையும்
மறைந்து விடுகிறது
அல்லது மறைக்கப்பட்டு
விடுகிறது.


-- கோபங்களையும்,
வெறுப்புக்களையும்,
பழிவாங்கும் உணர்வுகளையும்
சேர்த்து வைத்திருந்து
அந்த கெடுதல் உணர்வுகளை
பேச்சாகவோ,
செயல்களாகவோ
வெளியேற்ற
மனிதர்கள் தகுந்த சந்தர்ப்பத்தை
தேடுகிறார்கள்.
ஏதாவது சிறு காரணம்
கிடைத்தால் கூட போதும்.


-- நீ புனிதனாகவோ,
போதகனாகவோ,
இருக்க வேண்டாம்.
மனிதனாக இருந்தாலே போதும்.


-- நாம் மற்றவர்களுக்கு
பிரியமானவர்களாக வேண்டும் என்றால்
நாம் தவீர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஒழுங்கின்மை,
கோபப்படுதல்,
நேரம் தவறாமை,
பிறறை குறை சொல்லுவது,
பொய் பேசுவது
இவ்விஷயங்களை தவீர்ப்பது நல்லது.


-- விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளாமலேயே
நம் கருத்தை வலியுறுத்தும் திறமைக்குத் தான்
"கெட்டிக்காரத்தனம்" என்று பெயர்.


-- வார்த்தைகள் பூவைப் போன்றவை.
அதை தொடுக்கும் விதத்தில்
தொடுத்தால் தான் மதிப்பை பெற முடியும்.


-- திட்டி கெட்டாருமில்லை,
வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை.


-- அடுத்தவனுக்கு
ஆறுதல் சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்குத் தேவைப்படும் போது –
அடுத்தவனிடம் போய்விடும்.
(கண்ணதாசன்)


-- தேவையற்ற எண்ணங்கள்,
தேவையற்ற பேச்சுக்கள்,
தேவையற்ற செயல்கள்,
தேவையற்ற நண்பர்கள்,
தேவையற்ற பழக்கவழக்கங்கள்,
தேவையற்ற பொழுது போக்குகள்
இப்படித் தேவையற்ற
பல நடவடிக்கைகளை
ஒழித்துக் கட்டும் போது
உங்களிடம் மிஞ்சி இருப்பது
மிகவும் தேவையானது மட்டுமே.


-- விரோதியால் கூட குற்றச்சாட்டப்பட முடியாதபடி
எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.


-- 'முடியாதது' என்பது
முட்டாள்களின் அகராதியில் உள்ள ஒரு சொல்.


-- தவறான நோக்கத்துடன் கூறப்படுகின்ற
ஓர் "உண்மை" என்பது
நீ கண்டு பிடித்துப் பயன்படுத்தும்
எல்லாவகைப் பொய்களிலும் மிக மோசமானது.


-- புறம்பேசும் வழக்கம் பலரிடம் வளருவதற்குக் காரணமே
அத்தகைய கூற்றுக்களை சுவையுடன் நாம் கேட்பதால் தான்.
ஒருவரில்லாத சமயம் அவரைப்பற்றி குறை சொல்லி
பேச்சு வந்தால் உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றி
பேசுவது முறையாகாது. நம்மைப்பற்றி மட்டும் பேசுவோம் என
பேச்சை திசை மாற்றம் செய்வது நல்லது.


-- செய்த ஒன்றை நேரடியாகச்
சுட்டிக் காட்டும் போது
அந்தச் செயலுக்கோ,
உதவிக்கோ இருந்த
மகத்துவம் சடாலென்று
மங்கிவிடுகிறது.
மதிப்பு போய்விடுகிறது.


-- 'தன்னம்பிக்கை' _
உள்ளிருந்து புறப்படும் ஒரு மாபெரும் சக்தி.
அது உள்ளவர்களை பேச்சின் மூலம்,
செயலின் மூலம்,
நடையுடை பாவனைகள் மூலம்
உடனே அறிந்து கொண்டுவிடலாம்.
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கோ
எல்லாவற்றிலும் ஒரு தயக்கம்.
பேச்சில் தயக்கம்;
நடை உடை பாவனைகளில் தயக்கம்
இவர்கள் மற்றவர்களை
சார்ந்து இருக்கவே விரும்புவார்கள்.



_யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம். _வாழ்வில் முன்னேற நல்ல அடித்தளம் தேவை. அந்த அடித்தளங்கள் தான் நாமாக நம் வாழ்வில் அமைத்துக் கொள்ளும் சுயகட்டுப்பாடுகள். _யாருக்கும் எதற்கும் தீமை இல்லாத சொற்களையே பேசுவது தான் வாய்மை. _அளவுக்கு மீறிய பேச்சு – ஆழ்ந்த சிந்தனை மனப்போக்கிறகு எதிரான நிலையாகும். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனை செய்யவே முடியாமல் போய்விடும்._வீண்பேச்சு பேசிக்கொள்வது சிலருடைய பலவீனம்.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வடலூர் வள்ளலார் உள்ளமும், உடலும் ஒன்றாமல் இருப்பவர்களைப் பற்றி சொல்கிறார்._மனிதரை மனிதர் மதித்து நடந்தால் மதித்து பேசினால் அதுவே பண்பாடு. அதுவே சமூதாயநீதி. எந்தக் காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதர்களின் கண்ணியத்துக்கு பரஸ்பரம் மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்வதே நீதி என்று எழுதியிருக்கிறார். – பிரெஞ்ச் சிந்தனையாளர் புரெதான். _பேச்சளவில் இருக்கிறது கொள்கைப்பிடிப்பு, கோட்பாடு, உறுதி எல்லாம். செயலில் இறங்கும் போது தான் சிக்கல் தன்னலக் குறுக்கிடுகள் ஏற்பட்டுவிடுகின்றன._தொலைகிறது விடுவோம் என்று பேசாமலிருக்கும் போது அநியாயம் செய்பவர்கள் தைரியம் பெறுகிறார்கள். அநீதி வலுக்கிறது._அறநெறிப்பற்றிப் பேசுவதன்று அறநெறியில் நடப்பதே சுவர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். எம். ஹென்றி (1662 – 1714)_தெளிவான பேச்சு – தூய்மையான உள்ளத்தின் எதிரொலி. - வில்லியம் லா (1686 -1781)_நாம் வாயைத்திறந்து பேசிக் கொண்டிருக்கும் வரையில் நம்மால் புதிய அறிவு எதையும் பெற முடியாது. அறிவைப் பெற வேண்டுமானால் நாலு பேருக்கு நடுவே இருக்கும் போது நம் வாயை மூடி சிந்தனையைத் திறந்து வைத்திருக்க வேண்டும்._நல்லெண்ணத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் தான் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். உங்களது பேச்சின் போது, எழுத்தின் மூலம், செயலின் மூலம் இதை நீஙகள் உண்டாக்க வேண்டும். _நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது முக்கியமானது. வெற்றி பெற்ற மனிதர்களோடு நீங்கள் பேசுகின்ற போது அது உங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். _ஒவ்வொருவரும் தாங்கள் பாராட்டப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும் என விரும்புகிறவர்களாக இருப்பதால் அதை எப்போதும் கவனத்தில் வைத்தபடி பேசுங்கள்._உங்களைப்பற்றி அவதூறாகவோ மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். தனக்கு பிடிக்காத மனிதர்களைப்பற்றி நினைத்துப் பார்ப்பதே கிடையாது என்கிறார் "ஜெனரல் ஐசன்ஹோவர்"._பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மனம் ஒன்றை எண்ணுகிறது. வாய் வேறொன்றைப் பேசுகிறது. செய்யும் காரியமோ வேறொன்றாக இருக்கிறது.நம் மனம் மொழி, மெய்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. இம்முரண்பாடுகள் தான் மனிதவர்க்கத்தின் பலவீனத்துக்கே அடிப்படைக் காரணம். _பிறரைத்தூற்றுதல், இகழ்தல், கேவலப்படுத்திப் பேசுதல்,பரிகாசம் செய்தல், கண்டனம் செய்தல், பிறரைத் தாழ்த்திப் பேசுதல் -போன்றவைகளை தவீர்த்துக் கொள்ளுங்கள். குற்றம் இருந்தால் ஆதாரத்துடன் நயமாக, பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசுங்கள். _திறமை என்பது முக்கியமாக மொழியைக் கையாளும் திறமைதான்.பேச்சிலிருந்து பண்பாடு தெரியும். குணம் தெரியும்.அறிவாற்றல் அனைத்துமே தெரிந்துவிடும். _எப்படி பேசுவது? எதைப் பேசுவது? யாரிடம் எதைப் பேசுவது? எப்போது அதைப் பேசுவது? என்ற அறிவு நமக்கு இருக்க வேண்டும்._நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சுக்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய விஷயம். _எவ்வளவு மனிதர்களோ அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._தீங்குகளை அடிக்கடி மன்னித்து விடலாம். ஆனால் இகழ்ச்சியை ஒரு போதும் மன்னிக்க முடியாது. – செஸ்டர் பீல்டு (1694-1773)_மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாமே ஊகித்து உணர முயன்றால் அது பெரும்பாலும் தவறாகவே முடியும். மற்றவர்களின் நடவடிக்கைகளை வைத்து நாம் இதை ஓரளவு ஊகித்து விட முடியும் என்றாலும் அவர்கள் நம்மைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லும் அபிப்பிராயத்தின் மூலமாகவே இதை நன்கு உணர முடியும்._ஒருவரது குறையை வேறு எவரும் இல்லாத போது அவரிடம் மட்டும் கூறுவது பெருந்தன்மையாகும். அவரது சிறப்புகளை அவர் இல்லாத போது பிறரிடம் கூறுவது நாகரிகமாகும். _மனிதனிடம் அமைந்துள்ள குணங்கள் கொள்கைகள் ஆகியவையே வேறுபாட்டை உருவாக்குகின்றன._சொல்வன்மை : உணர்ச்சியின் வேகத்தை அணைக்கட்டித்தடுத்து சுருங்கச் சொல்லுதலே சொல்வன்மை. கூச்சல்கள், அதிகமான பேச்சுக்கள், கோபத்தை உண்டாக்குமே தவீர வேறு நன்மைகள் வரப்போவதில்லை._எப்போது பிறர் மனைவி பிறர் கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் குடும்பம் கௌரவம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும். _பதினேழாம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் ஸ்பினோசா என்ற தத்துவஞானி வாழ்ந்தார். அவர் கூறுகிறார் : உன் அறிவும், புத்திக் கூர்மையும் வளரத் துணை செய்வது எதுவோ அதுவே உனக்கு நன்மை. உன் சக்தி வளர, உன் சுதந்திரம் வளர உறுதுணையாகக் கூடியதொன்றே உனக்கு நல்லது. உன் அறிவு வளர்ச்சியைத் தடுப்பதெல்லாம் தீமையானது என்று கருது. அறிவு வளர்ச்சி தடைப்பட்டாலும் உன் பேச்சு சுதந்திரம், பறிக்கப்பட்டாலும் உன் சுதந்திரம் குன்றிவிடும். உன் உயிராற்றல் தேய்ந்துவிடும்._எப்போது பிறர் மனைவி, கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் கௌரம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும்._எவ்வளவு மனிதர்களோ! அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._பாராட்டுக்களை அவையிலே சொல்லுவோம். குறைபாடுகளை நான்கு சுவர்களுக்கு நடுவே சொல்லுவோம்._என்ன சொன்னார் என்பதை யோசி!யார் சொன்னார் என்பதையல்ல._உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்தி சொல்வதற்கு முன்னால் ஒப்புக் கொள்._மனிதர்கள் வழக்கமாக எண்ணிக்கொள்கிறார்கள்.பலர் அடிமையாயிருப்பதன் காரணம் ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதால் தான். ஆகவே அந்தக் கொடுங்கோலனை வெறுப்போம் என்று. இப்போது ஒரு சிலர் இதற்கு நேர்மாறான தீர்ப்பை வழங்குகிறார்கள். ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதற்கு காரணம் பலர் அடிமைப்பட்டு கிடப்பதனால் தான். ஆகவே அடிமைகளை கேவலப்படுத்தி ஒதுக்குவோம் என்கிறார்கள்._நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். அன்புடன் பழக வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறோம். வருகிற ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே அவர் உதிர்க்கும் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே நமது மனஅமைதி குலைகிறது. பேசுபவரது பொறாமை, ஆணவம், தற்பெருமை, அலட்சியப் போக்கு எல்லாமே நம்மை நிலைகுனிய வைத்துவிடுகிறது. ஒரு மனிதனின் வரவால் அது இப்போது கறைபடிந்து விட்டது. நமக்கு வேண்டுவது நிதானம். நிலைகுனியாத பொறுமை._எதிர்பார்பபுகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், சண்டை, விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்து தெரிந்து கொள்வது, தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும். _கோபமாக பேசுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது, சரியான அளவில்,சரியான நேரத்தில்,சரியான நோக்கத்துடன்,சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது._ஆறுவிஷயங்களைக் கொண்டு அறிவாளியைக் கண்டு கொள்ளலாம். காரணமில்லாத கோபம்,பயனில்லாத பேச்சு, முன்னேற்றமில்லாத மாறுதல், பொறுத்தமில்லாததைப் பற்றி ஆராயதல்,அன்னியனை நம்புதல், பகைவரை நண்பராகக் கருதுதல்._வாழ்க்கையின் எட்டுபடிகள் என புத்தர் காட்டும் பாதை 1. சரியாகப் புரிந்து கொள். 2. சுரியான எண்ணம். 3. சரியானபடி பேச்சு. 4. சரியான செயல்களில் ஈடுபடு. 5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு. 6. சரியான முயற்சியில் ஈடுபடு. 7. சரியான சிந்தனை. 8.சரியான கவனம்._தன் தவறுகளைத் திருத்திக் கொள்கின்ற தைரியம் - தனி மனிதனுக்கோ, ஒரு நாட்டுக்கோ எளிதான காரியம் அன்று.வீண்மானப் பிரச்சனை குறுக்கிடும்._மொழி - வெளியே இருந்து பெறும் பயிற்சி. மௌனம் - உள்ளே இருந்து எடுக்கும் முயற்சி. _பொறாமை உடையவர், வெறுப்பு நிறைந்தவர், எதிலும் திருப்தியற்றவர்,எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்,எதையும் சந்தேகப்படுபவர்,பிறரைச் சுரண்டி வாழ்பவர்,இந்த ஆறுவகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள்._எல்லாவற்றையும் இகழ்ந்து பேசுவது என்ற கேவலமான நோய் உன்னிடம் இருந்தால் அதை விரட்டிவிடு. _எதிர்பார்ப்புகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்துத் தெரிந்து கொள்வது , தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது - இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும்


பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

தத்துவம்+கவிதை


பொதுவாகவே நாம் ஏதாவதொன்றைத் திட்டமிடும் போது,அத் திட்டம்
நிறைவேறும் நாளொன்று,நேரமொன்று இருக்கும்.
உதாரணமாக நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதவேண்டுமெனத் திட்டமிட்டுப்
படிப்பீர்களாயின் பரீட்சையோடு அத்திட்டமிடல் நிறைவேறிவிடும்.ஒரு சுற்றுலா
செல்லத் திட்டமிடுவீர்களெனில் அப்பயணம் நிறைவேறிய பின்னர் அத்திட்டம் பூர்த்தி
செய்யப்பட்டு விடும்.
அது போல திருமணம் செய்ய,வீடு கட்ட,வாகனம் வாங்க,மேற்படிப்பு படிக்க என
எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தானே செய்கிறோம்.
ஆகவே நமது வாழ்க்கையானது இதுபோன்ற சின்னச் சின்ன,பெரிய திட்டங்கள்
,இலக்குகள் கொண்டே அடுக்கடுக்காகக் கட்டப்படுகிறது எனச் சொன்னால்
ஏற்றுக்கொள்வீர்கள் தானே..?அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான திட்டங்கள்,
இலக்குகள் வித்தியாசப்பட்ட போதும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒத்த இலக்கு,
இலட்சியம் என்பது 'வாழ்க்கையை வெற்றி கொள்வது' .நாமனைவரும் அதனை நோக்கியே
கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இலக்குகளை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நகர்ந்து
கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம்மனைவருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்கவேண்டுமென்பதே
இலட்சியமாக இருப்பினும் வென்றெடுக்கும் நாளெது? அதற்கான நேரமெது ? என்பதைப்
பற்றிச் சிந்திக்காமலேயே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.உண்மைதானே ?
வாழ்க்கையை வெற்றிகொள்ளவேண்டுமென நாம் பலவிதங்களில்
முயற்சிக்கிறோம்.போராடுகிறோம்.ஆனால் எமதான வாழ்க்கையை எப்பொழுது வென்றெடுக்கப்
போகிறோம் என்ற கேள்விக்கு எம்மிடம் பதிலிருப்பதில்லை அல்லது பதிலளிக்க
முடிவதில்லை.
இதுவரை நீங்கள் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப்
பார்த்து அல்லது எதிர்காலத்தில் பயணிக்க எண்ணியிருக்கும் திசையை நோக்கிச்
சொல்லுங்கள்.*உங்கள்** **வாழ்க்கையை** **நீங்கள்** **வெற்றிகொள்ளத்** **
தீர்மானித்திருக்கும்** **நாளெது** **?*
* *நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான,சிக்கலான வலைகளால் நம்மை
நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டு,இலட்சியங்களை
ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம்.நாம்
வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்?நாமா?நாம்தான்
மரணித்துவிட்டோமே..?
நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம்
வாழ்க்கையை வென்றோமா ? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள்.நம் இறப்பின்
பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலன்கள் பற்றி நாம்
வாழும்போதே உணர்ந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.நாம் வாழ்க்கையை
வென்றோமா என்ற கேள்விக்கான பதில் பயனளிப்பது நமக்கேயன்றி பிறர்க்கல்ல.எப்படி
நமக்கு மற்றவர்கள் வாழ்க்கையை வென்றார்களா இல்லையா என்பதற்கான விடை தேவையாக
இல்லையோ அதுபோலவே அவர்களுக்கும் நமது வாழ்க்கை பற்றிய கேள்விக்கான விடை
தேவையற்றதாக இருக்கும்.(சிலர் நமக்குத் தோல்வி ஏற்படும்வரை,நாம் தவறிழைக்கும்
வரை சிரிக்கப் பார்த்துக்கொண்டிருப்பர் என முணுமுணுப்பீர்கள் இக்கணத்தில்.
உண்மைதான்.அது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாமே ! )
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாட்களுக்குள் தான் தனது வாழ்க்கையை
வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது.அந்த நாள் எப்பொழுது? எந்தப் பராயத்தில் ?
*பால்யத்தில் ?
*இளமைக்காலத்தில் ?
*நடுத்தர வயதில் ?
*வயோதிபத்தில் ?
நம்மில் அனேகம்பேர் தமது வாழ்க்கையை வெல்வதற்காக அவர்களது
சிறுவயதில் ஆரம்பித்த போராட்டம் அவர்களது முதுமை வரை தொடர்ந்து செல்கையில் தாம்
வாழ்க்கையை வென்றுவிட்டோமா,இல்லையா எனத் திரும்பிப் பார்க்கக் கூட
நேரமிருக்காது.அவர்கள் அறியாமலேயே முதுமை வந்துவிடும்.ஒரு கட்டத்தில்
வயதாகிவிட்டது எனச் சோர்ந்துவிடுவார்கள்.இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டோமே என
வருந்துவார்கள்.
ஆகவே 'வாழ்க்கையை வெற்றி கொள்வது என்றால் என்ன?' என்பதற்கான விடையை
உங்களை நீங்களே கேட்டுப்பார்த்து அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளும் பொழுது
வாழ்க்கையை வென்றெடுக்கும் நாளெது பற்றிய கேள்வி எழாது.
உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,ஒவ்வொரு பகுதியிலும்
நம்மால் செய்யப்பட வேண்டிய அத்தனை செயல்களையும்,எதிர்பார்ப்புக்களையும்
திட்டமிட்டு நிறைவேற்றுவதுதான் வெற்றியின் முதல்படி.ஆகவேதான் வெற்றியின் ஏனைய
படிகள் நமது வாழ்க்கையின் நாட்களையும்,நேரங்களையும் சார்ந்து இருக்கின்றன.எனவே
வெற்றி நமக்கான காலங்களில்,வருடங்களில்,மாதங்களில்,வாரங்களில்,நாட்களில்,
மணித்தியாலங்களில்,நிமிடங்களில்,வினாடிகளில் இருக்கின்றன என்பதனை
ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே.
இப்பொழுது இப்படிப் பார்ப்போம்.நாங்கள் சுவாசித்துக்கொண்டிருக்கும்
,நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியை,இந்த நிமிடத்தை மிகவும்
நிம்மதியான முறையில்,பயனுள்ள வழியில் செலவழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.நமது
ஒவ்வொரு வினாடிகளும் வீணடிக்கப்படாமல்,பயனுள்ள வகையில் நாம் அன்றைய தினம்
போட்டுவைத்திருக்கும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும்.இப்படிப் பயனுள்ள
விநாடிகள் கொண்டு உருவாக்கப்படும் நிமிடங்கள்,மணித்தியாலங்கள்,நாட்கள்,வாரங்கள்
,மாதங்கள்,வருடங்கள்,காலங்கள் உங்களது வெற்றியை நீங்கள் வாழும்போதே கூறுபவைதானே.
வேறுவகையில் சொல்வதானால் *நீங்கள்** **வாழ்க்கையை** **
வெற்றிகொள்ளும்** **நாள்** **இன்று** *தான்.வெற்றியை நோக்கி நகரும் வினாடி
இதுதான்.இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.இதனை
நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி
பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம்.இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம்,
கோபம்,பொறாமை,வஞ்சகம்,சுயநலம்* *கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில்
தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?
பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைவது,உயர்ந்த தொழிலொன்றைப்
பெற்றுக்கொள்வது,நல்லதொரு குடும்ப வாழ்க்கையைக் கொண்டுசெல்வது,வசதியாக,
நிம்மதியாக வாழ்வது என அவரவர்க்கு வெவ்வேறான இலட்சியங்கள் இருக்கும்.அவற்றை
நோக்கிச் செல்லும்போது பலவிதமான தடங்கல்கள்,தடைகள் வரத்தான் செய்யும்.அவை
பொருளாதார ரீதியாகவோ,பிறராலோ,பிறகாரணங்களாலோ இருக்கலாமே தவிர நமது சோம்பேறித்
தனத்தால் இருக்கக்கூடாது.வெற்றி மனப்பான்மையோடு ஒவ்வொரு நிமிடத்தையும்
கழிப்பவர் எவரோ அவரே வாழ்க்கையை வென்றவராகிறார்.
அந்த வகையில் நாம் எந்த வயதில் இருந்தாலும்,எத் தொழிலைச்
செய்தாலும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு
நிமிடத்தையும் வெற்றிமனப்பாங்கோடு கழிப்போமாயின் அதுவே வெற்றிகரமான வாழ்க்கை.
வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்காலத்தின் ஏதோ ஒருநாள் வரும்வரை
பார்த்திருக்கவேண்டாம்.இன்று செய்ய வேண்டியவற்றை தன்னம்பிக்கையுடனும்,
முழுமையாகவும்,மகிழ்வோடும் செய்யுங்கள்.இந்தக் கணத்தை வெற்றியின் நேரமாகக்
கொண்டு செயல்படுங்கள்.அப்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை நீங்கள்
வென்றவர் ஆகிறீர்கள்.
இப்பொழுது சொல்லுங்கள்.
*உங்கள்** **வாழ்க்கையை** **நீங்கள்** **வெற்றிகொள்ளத்** **
தீர்மானித்திருக்கும்** **நாளெத

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்ச் நாட்டு மாமேதை, மகாகவிஞர் விக்தோர் உய்கோ (Victor Hugo) எழுதிய கவிதைகளும், வரைந்த ஓவியங்களும் பிரெஞ்ச் நாட்டின் தேசீய சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டவை.

மனிதர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவனுக்குள் இருக்கும் கொடுர குணங்களைக் கூட கவிதை நடையில் அழகாக விவரிப்பார். "பேச்சடக்கம்" பற்றி தன் கவிதையில் அவர் விளக்குகிறார் :

நல்லவர்களே! பேசுவதில் நீங்கள் கவனமாக இருங்கள். கவனக் குறைவால் நீங்ள் உச்சரித்த ஒரு சொல்லிலிருந்து கவலை, வெறுப்பு முதலிய எல்லாம் பிறக்கும்.

உங்கள் நண்பர் நம்பிக்கைக்குரியவர். நீங்கள் அவரிடம் தாழ்ந்த குரலில் தான் பேசுகிறீர்கள் என்று எண்ணி நான் சொல்வதை மறுக்காதீர்கள்.

இதைக் கூர்ந்து கேளுங்கள் :

காதோடு காதாய் கதவுகளைச் சாத்தி விட்டு உங்கள் வீட்டினுள் சாட்சி யாருமின்றி வெளியில் சொல்லாத நீங்கள் நேசிக்கும் நண்பர்களில் அதிகம் நேசிக்கும், ரகசியத்தைக் காப்பாற்றும் ஒருவனிடம் யாருமில்லாத இடத்தில் முப்பதடி ஆழமுள்ள சுரங்கத்தில் யாரோ ஒருவனைப்பற்றி வெறுப்புக்குரிய ஒரு சொல்லை முணு முணுக்கிறீர்கள்.

யாரும் கேட்டிருக்க முடியாது என்று நீங்கள் நம்பும் அந்தச் சொல் - மிகத்தாழ்ந்த குரலில் இருண்ட ஓசை வெளிச் செல்ல முடியாத இடத்தில் நீங்கள் சொன்ன அந்தச் சொல் - கட்டவிழ்த்துக் கொண்டு கிளம்பும். தாவிக்குதித்து, இருளிலிருந்து வெளிவரும்.

இதோ அது வெளியேறிவிட்டது.

அதற்கு வழிதெரியும். அது நடக்கும், அதற்கு இரண்டு கால்களுண்டு, கையில் தடியுடன் இருப்பாணிகள் உள்ள செருப்புக்களை மாட்டிக் கொண்டு முறையான கடவுச் சீட்டுடன் (Passeport) செல்லும். தேவைப்பட்டால் அது கழுகைப் போல் பறக்கும்.

உங்களிடமிருந்து தப்பி ஓடும் அந்தச் சொல்லை, எதனாலும் நிறுத்த முடியாது. மேட்டையும், சதுக்கத்தையும், மற்றவற்றையும் கடந்து செல்லும். வெள்ளம் ஓடும் காலமானால் தெப்பமின்றி அதைக் கடக்கும். சிக்கலான இருண்ட வீதிகளைக் கடந்து செல்லும்.

நீங்கள் யாரைப் பற்றிப் பேசினீர்களோ அவனுடைய வீட்டுக்கு அது நேராகச் செல்லும்.

அந்த வீட்டின் கதவெண்ணும் மாடியும் அதற்குத் தெரியும். அதனிடம் திறவுகோல் இருக்கும். மாடியின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும்.

அவன் எதிரே நின்று அவனைக் கேலியாக நோக்கும்.

"நான் இன்னாருடைய வாயிலிருந்து வருகிறேன்" என்று அவனிடம் கூறும்.

அது வந்த வேலை முடிந்துவிட்டது.

இப்போது உங்களைக் கொல்லத்துடிக்கும் "பகைவன்" ஒருவன் உங்களுக்கு இருக்கிறான்....


நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது




நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.



நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.



ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்.



முனிவர்கள்

கடவுளைப் பார்ப்பதற்காகத்

தவம் இருக்கிறார்கள்.



நானோ,

ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு

தவம் இருக்கிறேன்





சிந்திய மழை

மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்

உன் கன்னத்துக்குள்ளேயே

போய்விடுகிறதே.




உன் பெயரில் உள்ள

இரண்டு எழுத்துக்களைத் தவிர

தமிழில் மிச்சமுள்ள

245 எழுத்துக்களும்

தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்

இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




'நிலா ஏன்

தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'

நீ அடிக்கடி

'நேரமாயிடுச்சு போகணும்' என்று

உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா

அதனால்தான்.






தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியன் போல

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி சய்கிறாய்.






காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்

அவ்வளவுதான்...

நின்றுவிட்டது காற்று.





தொலைபேசியில்

நீ எனக்குத்தானே 'குட்நைட்'

சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ 'நல்ல இரவு'

என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம்

பிடிக்கிறதே.





என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டு முன் நின்று

'இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது'

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.




நான்

உன்னைக் காதலிக்கிறேன்

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது





மழை வந்து

நின்ற பிறகும்

செடிகள் வைத்திருக்கும்

மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது

நீ வந்து போன பிறகும்

உன்னை.






எல்லா தெய்வங்களும்

தங்களைக் குளிப்பாட்டிவிட

பூசாரி வைத்திருக்கும்போது

நீ மட்டும் ஏன்

நீயே குளித்துக்கொள்கிறாய்?






புத்தர் இந்த உலகத்தில்

தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்தாய்.




அன்று

நீ குடை விரித்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

நின்றுவிட்ட மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று

சட்டென்று மழை நின்றால்

நீ எங்கோ குடை விரிப்பதாகவே

நினைத்துக் கொள்கிறேன்.






உன்னைப் பார்த்தால்

எடை பார்க்கும் இயந்திரம்கூட

கவிதை எழுத

ஆரம்பித்துவிடும் போல.

உன் எடையை அடிக்கவேண்டிய

இடத்தில்

'அழகு நீங்களாக 50 கிலோ' என்று

அடித்திருப்பதைப் பார்!






'அமாவாசை அன்றுதான்

தீபாவளி வரும் என்பதால்

உங்கள் வீட்டுக்குத் தீபாவளி

வரவே வராது' என்றேன்.

அர்த்தம் புரியாமல்

'ஏன்' என்றாய்.

'உங்கள் வீட்டில்தான்

எப்போதும் பெளர்ணமியாக

நீ இருக்கிறாயே' என்றேன்.

'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று

நீ ஆரம்பித்தாய்

வெட்கப்பட...




உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து

'அய்...எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.

நகையோ,

'அய்...எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.




இந்தா என் இதயம்.

விளையாடும்வரை

விளையாடிவிட்டுத்

தூக்கிப் போட்டுவிடு.

அது அதற்குத்தான்

படைக்கப்பட்டது!




ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது...



'ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே

இருக்கிறது?' என்று!




உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.



'கடிகாரம் ஓடலியா?'-என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்



அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!




அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.




உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்





அடிக்கிற கைகள் எல்லாம்

அணைக்குமா என்பது தெரியாது.

ஆனால், நீ அடிப்பதே

அணைப்பது மாதிரிதான்

இருக்கிறது.




கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன...

'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.






பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?






'என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று

விடுகிறாய்?' என்றா

கேட்கிறாய்.



நீ கூடத்தான்

கண்ணாடியை எங்கு

பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.



உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளாவு இருக்கும்!




உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே.




சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.




நீ முகம் கழுவுகையில்

ஓடிய தண்ணீரைப் பார்த்துத்

திடுக்கிட்டுவிட்டேன் நான்.

ஒவ்வொரு நாளும்

அவ்வளவு அழகையா

வேண்டாமென்று

நீ நீரில் விடுகிறாய்.




நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கிவிடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆழையோடு பார்க்க வந்த

முடிகளை ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை

ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.






திருவிழா அன்று

கோவிலில் எல்லோருக்கும்

கஞ்சி ஊற்றிக்

கொண்டிருந்தாய்.

அடடா...

எல்லா ஊர்களிலும்

அம்மனுக்குக்

கஞ்சி ஊற்றுவார்கள்.

அங்கள் ஊரில்

அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!






யாராவது

ஏதாவது

அதிர்சியான

செய்தி சொன்னால்

'அச்சச்சோ' என்று

நீ நெஞ்சில் கைவைத்துக்

கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்!




நீ ஒரு கடி கடித்துவிட்ட

பழத்தைக் கேட்டேன்.

'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'

என்றாய் புரியாமல்.

'வேண்டாம்...வேண்டாம்...

நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்

பழத்தைத் துடைத்துவிட்டு

அச்சிலை மட்டும் தா!'




நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.




எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்...?



பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!






உனக்கு திருஷ்டி சுற்றி

வாசலில் உடைந்த பூசணிக்காய்

நன்றி சொன்னது...

உன் அழகு முகத்தை

மூன்று முறை

சுற்றிக் காட்டியதற்காக.






உலகிலேயே

அழகான

ஒன்றையொன்று ஒருபோதும்

பிரியாத

லவ் பேர்ட்ஸ்

உனது மார்புகள்.




நீ எந்த உடை அணிந்தாலும்

உன்னால்

உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய

உன் அழகை மறைக்க முடியாது
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.



உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.



சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!



நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!




'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'



உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.

காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!



நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய்.

'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.

'வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.




உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

'கடிகாரம் ஓடலியா?'என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!



என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.

கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.

உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.

'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.

'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'



சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.




உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்

பிறந்திருக்க வேண்டும் என்று.



ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.



நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.



கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்




பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
'இது எந்த ஊர் ஆப்பிள்?'
'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
'நீ எந்த ஊர் ஆப்பிள்?'



உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!

அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.

'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.

'ஏம்ப்பா..?'

டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா, அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...

இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!




'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப் போகிறது' என்றாய்.
ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது?
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.



கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோ மா
நிலவை! என்று.



தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.



தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி செய்கிறாய்.



காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.



முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!



வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை...
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?



நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?



கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.



என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.



அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.



உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.



என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ
His Side

♥ "Tell her how you feel" is what my friends said

♥ So I picked up the phone

♥ Called your house

♥ You answered

♥ I said "I Love you"

♥ And hung up right away

♥ The next day

♥ I told you it was a bet from a friend

♥ It was partly true

♥ But you didn't react

♥ No sassy come back which you always do

♥ Just stood there

♥ Then walked away



Her side


♥ You called my house

♥ I picked up

♥ You told me you loved me

♥ Then hung up

♥ The next day

♥ I was going to tell you I loved you back

♥ But you said it was a bet

♥ I had everything planned out

♥ Every move I planned

♥ Every word I rehearsed

♥ But when you said that...

♥ I had nothing to say

♥ I stood and watched you

♥ As you broke my heart

You forgive me for liking you too much,
And I'll forgive you for not liking me enough.

You forgive me for missing you so,
And I'll forgive you for being so cold.

You forgive me for the loud racing of my heart,
And I'll forgive you for not hearing it.

You forgive me for playing your games,
And I'll forgive you for toying with my emotions.

You forgive me for finding you so attractive,
And I'll forgive you for not noticing.

You forgive me for raising you up so high,
And I'll forgive you for bringing me down so low.

You forgive me for wanting to be with you,
And I'll forgive you for avoiding me.

You forgive me for being so pathetic,
And I'll forgive you for taking advantage of it.

You forgive me for not being able to let go,
And I'll forgive you for never having latched on.

You forgive me for having hopes and dreams,
And I'll forgive you for crushing them.

Forgiveness brings inner peace.
Do we have a deal?

A FRIEND is a tissue when you can't stop crying

A FRIEND is a shoulder when you feel like dying

A FRIEND always listens when you have something to say

A FRIEND is a week when you just need a day

A FRIEND is a crutch when you have a broken heart

A FRIEND is some glue when everything falls apart

A FRIEND is a sun when the rain just won't stop

A FRIEND is your mom when you run into a cop

A FRIEND is a phone call when you can't leave your home

A FRIEND is a hand when you feel all alone

A FRIEND is a wing if you want to fly

A FRIEND understands without knowing why

A FRIEND is an ear for a secret to tell

A FRIEND is an aspirin when your head hurts like hell

A FRIEND is a love that can never let go

A FRIEND Is YOU, & I Wanted YOU To Know

When i was searching for friend..
I found you!

When i was walking alone;
You have decided to walk with me!

When i wanted to trust on someone;
You made me realize what is belief!

When i was in a critical situation;
You showed me the right path!

When i had lost my confidence
You helped me to grow it up!

When i had no aim;
You escorted me to my aim!

When i had no inspiration;
You became my inspiration!

When i feel lonely,
You tell you are always in my heart

You are so special to me
for I will never forget you!!


www.desipundit.com/2007/03/15/lollusabha


ஒருவர் மீது ஒருவர், ஒரே நேரத்தில் கோபித்து கொள்ளக் கூடாது

ஏதாவது தலைபோகிற காரியமாக இருந்தால் ஒழிய ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளக்கூடாது

வாக்குவாதத்தில் ஒருவர் ஜெயிப்பதாக இருந்தால், அது அது மற்றோருவராக இருக்கட்டும்

நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் அன்பாக செய்யுங்கள்

கடந்த கால தவறுகளை நினைவுபடுத்தாதீர்கள்

இந்த உலகத்தையே வெறுத்தாலும், நீங்கள் ஒருவரை ஒருவர் , வெறுத்துக் கொள்ளாதீர்கள்

இருவருக்கும் ஏதாவது வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தால், அதை சமரசம் செய்யாமல் உறங்க செல்லாதீர்கள்

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அன்பான புகழ் வார்த்தைகளை பேசிக் கொள்ளுங்கள்

ஏதாவது தவறு செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்

சண்டை போட இருவர் தேவை, தவறு செய்தவர் தான் எப்போதும் அதிகம் பேசுவார்.

தத்துவம்


உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

*துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

*அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

*அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

*தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்

உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன்.


வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

2.ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

3.தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

4.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

5.அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

6.ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

7.நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

8.நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

9.கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.

10.நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது

எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள்.

2.மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.

3.பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

4.மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு.

5.உண்மை ஒரு நாள் வெண்றே தீரும்.

6.தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

7.உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்.

8.செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

9.அழகே உண்மை, உண்மையே அழகு.

10.அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை.


தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.


2.நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.


3.மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகள்.

4.நான்கு வேண்டும்.
i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.
ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.
iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும்.
iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.

மகிழ்ச்சியின் சாவி பொறுமை. - துருக்கி


*சிந்தனையின் வெளியீடு இலக்கியம். - வேனா

*அன்புள்ள மனம் சலனமற்று ஓடும் நதி. - ரிக்டர்

*இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம், ஆனால் மோசமான மேலங்கி.- புல்லர்

*இதயங்கள் சேர்ந்திருக்கட்டும், ஆனால் கூடாரங்களை தனித்தனியாக அமையுங்கள். -

*மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில் வைத்திரு. - கம்பர்.

*அடக்கமே உன்னை அமரனாகச் செய்யும். அதுவும் இளமையில் அந்த அடக்கம் வருவது பொன்மலர் நாற்றமுடைத்து போன்ற சிறப்பைத் தரும். - வாரியார்.


நாம அடுத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ செய்கிறோமோ அதைத்தான் ஆண்டவன் நமக்கு நினைப்பாரு, செய்வாரு.


நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்

*பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.

*உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.

*மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்

*நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்


"நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
- காந்தியடிகள்


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
- ஓர் அனுபவசாலி


இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்


கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்
- கிளெண்டல்


என்றாவது நான் ஆசி¡¢யரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி


நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்


மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்


உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.


இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.


நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்


மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்
- மு.வ.


நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
- ஜான்ஸன்


ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்


ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்


நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்


உலகம் எவ்வளவு பொ¢யதோ, அவ்வளவு பொ¢யதாக உங்கள் இதயத்தை வி¡¢வாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்


உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது
- எமர்சன்


கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
- பிளேட்டோ


காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்


நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி


அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் - மா¡¢யோ போஜியோ


துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்


கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.
'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.-
(ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)



உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்-
(லாங்·பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அ¡¢ஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதி¡¢யாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)


நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்

*மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. - பார்பரா ஷெர்

*வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது. - எச். ஜி. வெல்ஸ்
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது. - இயன்லா வன்சான்ற்.

*வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும். - அல்பேட் ஐன்ஸ்டீன்.

*நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.

*மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும். - சாள்ஸ் பேட்

*பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.- யாரோ

*மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம். - பேர்ள் எஸ். பக்

*புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு. - மார்கஸ் அரேலியஸ்

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.- நெப்போலியன் ஹில்

*கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- நெப்போலியன் ஹில்

*ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.- ஸாடி

*எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.- எமர்சன்

*மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.- அக்னஸ் றெப்லையர்

*புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.- பிலிப் குறொஸ்பி

*உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.- எலனொர் றூஸ்வெல்ற்

*ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.- கென்றி சி. லிங்க்

*எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று: எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது: செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன? நான் என்ன செய்ய வேண்டும்? இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும். - நதானியல் பிராண்டன்

*வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல. - எட்வின் சி. ப்ளிஸ்
சிக்கனத்தைக் கடைப் பிடிக்காத எவருமே செல்வந்தனாக முடியாது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எவரும் ஏழையாகவும் இருக்க முடியாது. -ஜான்சன்

*எதிலும் சிக்கனம் பிடிப்பவர் மன்னிக்க முடியாத கருமி. சிக்கனம் செய்யாதவன் பைத்தியக்காரன். - ஜார்ஜ் நேவில்

*சில்லறைக் காசை நீ காத்துக் கொள்ள. பெரிய காசு உன்னைத் தானாக காத்துக் கொள்ளும். - பெஞ்சமின்

*சிறிய செலவுகள் பற்றிக் கவனமாயிருங்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும். - ஜார்ஜ் பெர்னாட்ஷா

*சிக்கனம் சிறியதொரு வருமானம். - லிஸ்ரோ


100 தடவை நீ தோற்றாலும், நீ வெற்றியே பெற்றுருக்கிறாய். 100 தடவைகளிலும் எந்த தவறுகளைச்
செய்யக்கூடாது என்பதை கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்திருக்கிறாயே


கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
மற்றவரை நம்புகின்றன.
-ஜெர்மன் பழமொழி

உனது கண் உனக்கு குற்றமிழைத்தால் அதைப் பிடுங்கி
விட்டெறி: இரண்டு கண்களோடு நரகத்தில் வீசி
எறியப்படுவதைக் காட்டிலும், ஒற்றைக்கண்ணோடு
வாழ்வில் பிரவேசிப்பதே நலம்.
-சார்வாண்டிஸ்
முட்டாள் நண்பனை விட அறிவாளி எதிரி மேல்... யாரோ


செல்வம் வரும் போது நண்பர்கள் வரலாம், அவர்களை வறுமை வரும் போது தேர்வு செய்யலாம்...யாரோ

மிகத் துயரகரமான எண்ணத்தை வெளிப்படுத்துவதே நமது இனிய பாடல்கள்
மது- பெண்கள் -பாடல் ஆகியவற்றை விரும்பாதவன், ஆயுள் முழுதும்
முட்டாளாக இருக்கிறாள்
பாடல்களை உருவக்குவது, மிகச் சிறந்த தொழில் அவற்றுக்கு அடுத்தபடியானது, அவற்றைப் பாடுவதே
முட்டாள் தான் மழைநீரை சேமிப்பான்.

அறிவாளியோ, மரம் வைத்து மழை நீரை உண்டாக்கிக் கொள்வான்!


கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே, உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்[/COLOR]
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே
விட்டு கொடுப்பவன் கெட்டுபோவதில்லை, கெட்டுபோகிறவன் விட்டு கொடுப்பதில்லை.---யாரோ
முயலும் வெல்லும்.. ஆமையும் வெல்லும்.. முயலாமை வெல்லாது


சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!

அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!

முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!

கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!

எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.

என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.

நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.

மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை.

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.

கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

[left]தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.
[/left]
வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.

படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!

பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.

காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.
அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

விதை எப்படியோ, பழமும் அப்படியே!

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!

பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்!

நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.

தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.

உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.

இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!

தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!

எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.


வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ... அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.
வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.

உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்


அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்


வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றியடைய தேவையானவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றியடையதேவையானவை பொறுமையும் தன்னம்பிக்கையும் தான்.

-அரிஸ்டாடில்
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும்
அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.


- நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும்.


- பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.


- ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.


- பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.


- இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்குத் திறந்து விடுகின்றான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவனை இறைவன் திடீரென்று வேதனையைக் கொண்டு பிடிப்பான்.


- எந்தத் தலைவன் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.


- உமது நெருங்கிய நண்பரிடம் பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்
நான் எனது என்ற இரண்டையும் மதம் அரசியல் பொருளாதாரம் முதலியவற்றிலிருந்து ஒழித்துவிட்டல். தெய்வலோகத்தையும்,பூலோகத்துக்குக் கொண்டுவந்து விடுவோம்.


ஒருவன் உண்மையே பேசவேண்டும் .மனதிற்க்கு இன்பம் அளிப்பதையே பேச வேண்டும்.ஆனால்,மனத்திற்குப் பிடிக்காத உண்மையைப் பேசக்கூடாது.
உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.சேவைதான் வெளிப்படுத்தும்
உன் சொந்த முயர்ச்சியால் சம்பாதிக்கும் செல்வம் சிறிதளவாயினும் அதைக்கொன்டு
மனத்திருப்தி பெறு.


நான் பயப்படாதவன் போல் என்னை எண்ணிக்கொண்ட காரணத்தால்.படிப்படியாக
என்னிடத்திலிருந்து பயம் ஒழிந்து விட்டது


உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்
கவலை, நாளைய தினத்தின் துக்கத்தைக் குறைக்கப் போவதில்லை. அது இன்றைய தினத்தின் சந்தோஷத்தை அழித்து விடுகிறது. - யாரோ
உண்மையைத் தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் நான் சேவை செய்வதில்லை,எனக்குக் கடவுள் என்றாலும்ஒன்றுதான்.உண்மை என்றாலும் ஒன்றுதான்.

-மகாத்மா காந்தி.

மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம் ஆகும்.

-ஜேம்ஸ் ஆலன்

மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ,அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே. குற்றங்களில் பெரிய குற்றம், தன் குற்றங்களை திருத்த முயலாத்துதான்.

-கன்ஃபூஷியாஸ்

இந்த உலகில் மனிதனுக்குத் தேவை எல்லாம் மிக்க் கொச்சம் தான். அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான்.

-கோல்ட்ஸ்மித்

ஒரு மனிதனுடைய வாழ்வு இன்பமாகவோ, துன்பமாகவோ இருப்பதற்கு அவனே காரணம் அன்றி பிறர் இல்லை.

-மகாவீர்ர்

நண்பர்களிடம் மட்டுமின்றி,பகைவனிடமும் நேசம் கொள். நீநடக்கும் வழியில் முள்ளைப் போடுபவன் முன் நீ பூவை வை.

-இயேசு

நாம் பணக்கார்ர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

-பொர்னாட்ஷா

அதிகமான சிரிப்பு, அறிவு சூன்யத்தையே காட்டும்.

-கோல்ட்ஸ்மித்

நல்ல நண்பருக்கு அடுத்தபடி இடம் வகிப்பவை நல்ல நூல்களே.

-கோல்ட்டன்
நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து
உலகத்தாருக்கு நீ அளிப்பது உன் நன்னடத்தை. உலகத்தாரிடமிருந்து நீ பெறுவது புகழ்
உள்ளத்தின் அந்தரங்க சுத்தமான ஆசை எப்பொழுதும் நிறைவேறிக்கொண்டுதான் வருகிறது.என் சொந்த அனுபவத்திலேயே இதைக் கண்டுருக்கிறேன்

கெடுதி செய்து தான் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த காரியத்தையே விட்டு விடுவது நல்லது.
வாழ்கையின் முதல் பகுதியில் வெற்றி பெறத் தேவை என்ன தெரியுமா?
சுறு சுறுப்பும்,ஊக்கமும் தான்.இறுதியில் வெற்றி பெறப் பொறுமையும்,தன்னடக்கமும் தேவை


நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியுள்ளது. கடல் விரும்பாவிட்டாலும்,நதிகளெல்லாம் கடலில் வந்து சேருகின்றன. அதுபோல அறவழியில் நடப்பவரிடம் சுகமும்,செல்வமும் அழைக்காமலே வந்தடைகின்றன

கடவுளிடம் ‘இது வேண்டும்’ என்று குறிப்பிடாமல்,பொதுவாகப் பிராத்திப்பதே முறை.]நமக்கு நன்மை எது என்பதை கடவுள் நன்கு அறிவார்.


நாம் எல்லோரும் எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது
மனம்,வாக்கு,உடல் ஆகிய மூன்றும்ஒரே மாதிரி உள்ளவர்கள் மகாத்மாக்கள் .இந்த மூன்றிலும் வேறுபாடு உள்ளவர்கள் துராத்மாக்கள் ஆகும்.

- பீஷ்மர்

படித்தவன் மூடனுக்கும்,கண் தெரிந்தவன் குருடனுக்கும்,ஆரோக்கியமானவன் நோயாளிக்கும்,பணக்காரன் ஏழைக்கும் உபகாரம் செய்ய வேண்டும்.இதுவே எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு செய்யும் பூஜையாகும்.

-கிருஷ்ணப்ரேமி

கீழே விழாதிருப்பது நமக்குப் பெரிய பெருமையல்ல.ஆனால்,விழுந்த போதெல்லாம் எழுந்திருப்பதே பெருமைக்கு உரியது ஆகும்.

-கன்ஃபூஷியஸ்

செருக்கு தேவர்களை அசுர்ர்களாக மாற்றுவது.அடக்கம் மனிதர்களை தேவர்களாக்கிவது.

-அகஸ்டுன்

இரண்டு கருத்து மோதல்களுக்கும் இடையை, மனசாட்சிக்கு வளைந்து கொடுப்பவன் தான் உலகின் முன் நீதிமானாக உயர்ந்து நிற்க முடியும்.

-வேத வாக்கு

இறைவனை அடைய ஒரே ஒரு பாதை தான் உண்டு. அதுதான் ‘பனிவு’ மற்ற பாதைகள் வேறு இடங்களுக்குக் கொண்டு போய்விடும்.

-பாய்லியோ

உண்மையை மதித்தால் அது உடனே வாளக மாறிவிடும்.

-ஹென்ரி ஜார்ஜ்


நீ பேசும்படி நேர்தால் உண்மையே பேசு. ஏனெனில், இரு பொருள்படப் பேசுதல் போய் சொல்வதற்கு உரிய பாதி வழியாகும்,பொய்யோ நகரப் பாதை தான்.

-பென்

ஒழுக்கமுள்ள மனிதன், பெருந்தன்மையும்,மரியாதையும் உள்ள சொற்களைப் பேசுவான்.மறந்தும் கடுஞ்சொல் கூறமாட்டான்.

-ஜேம்ஸ் ஆலன்.

நோய் இல்லை என்று மனதில் உறுதி செய், மனம் போல உடல் அமையும்.

-மகாகவி பாரதியார்.

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.

-கார்ஃபீல்டு.
*உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவாக இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்! - ஜெர்ரி சைன்ஃபீல்ட்

*நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்! - டாரின் வைன்பர்க்.

*வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

*எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். ஆச்சர்யப்பட்டுக் கொண்டு!

*சந்தோஷத்தை விலைகொடுத்து வாங்க முடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை சந்தோஷத்தை!

*பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களைச் சுடுவது சட்டத்துக்கு புறம்பானது என்பதாலேயே.

*உன் எதிரிகளை மன்னித்து விடு. ஆனால் அவர்களின் பெயர்களை மறக்காதிரு!

*உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள் தனத்தைப் பொறுத்தது.

*கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உங்களை நினைத்துக் கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது! - யாரோ.
சோம்பேறி : சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை. --கூப்பர்

* முட்டாள் : நல்ல மேற்கோள் அறிவாளியின் மோதிரம், முட்டாள் கை கூழாங்கல் -ரூஸ்வெல்ட்

* அறிவாளி : யார் எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் வரும்போது பாதிக்கப்படாமலும் அவற்றை வரவேற்காமலும் இருக்கிறாரோ அவரே நிலையான அறிவுடையவர் ஆவார். -பகவத்கீதை
மெதுவாகப் பேசுங்கள். அது உங்களின் ரகசியங்களைப் பாது காக்கும். நல்ல எண்ணங்களோடு இருங்கள். அது உங்கள் நடத்தை யைப் பாதுகாக்கும்.
உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற விரும்பினால் நீங்கள் எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.
ஜீவாத்மாக்கள்கொன்டுள்ளவருத்தத்தைப்போக்குவதும்,எளிய வருக்கு வேன்டிய உண்ணும் உனவைக் கொடுப்பதும் மோட்சத்திற்கு செல்லும் வழியாகும்.
-சீவக சிந்தாமனி

பழிச் சொல்லையும் புகழ் மோழியையும் சம்மான முரையில் ஏற்றுக்கொள்பவனேதியாகியாக இருக்கமுடியும்
- மகாத்மா காந்தி

நான் ஒரு பசுவைப் பார்க்கும்போது மனிதன் உன்னக்குடிய ஒரு மிருகமாக நான் கருதுவதில்லை. பசு இரக்கமே உருவான ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது உலகம் முழுவதுமே எதிர.த்தாலும் கூட நான் பசுவை வழிபடுவதை ஆதரித்தே வாதாடுவேண்
-மகாத்மா காந்தி

ஓரு நாட்டின் கட்டுபாடு பெருமை இவையெல்லாம் அது எவ்வளவு கோடீஸ்வர்ர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை.அந்த நாட்டு மக்கள் பசியின்றி வாழ்கிறார்களா என்பதில் தான் இருக்கிறது.
-மகாத்மா காந்தி

பாவம் செய்யும் எண்ணம் மனத்தில் எழுந்ததுமே அதை இந்த நிமிடமே விலக்கி விடுங்கள். மனத்தில் ஒரு முறை பாவம் புகுந்துவிட்டால்,அது அங்கிருது எளிதில் வெளியேறாது.
-பாகவத ரகசியம்

பொன்மான் உலகில் எங்கேயாவது இருப்பதாக கேட்டதுண்டா? இதை அறிந்தும் சீதை அதற்க்கு ஆசைப்பட்டாள். கெட்ட காலம் நெருங்கிவிட்டால், எப்படி பட்டவருக்கும் புத்தி மழுங்கிவிடும்.
-காளிதாசர்

இளமையில் வந்த வறுமையும், முதுமையில் வந்த செல்வமும்,துன்பத்தை விளைவிப்பனவாகும்.
-ஒளவையார்

விளையாட்டிற்காக்க் கூட கோபித்துக்கொள்ளாதீர்கள்.விளையாட்டிற்க்காக யாராவது விஷம் சாப்பிடுவார்களா?
மகாத்மா காந்தி

தீமை செய்தால்,தீமை செய்வதுதான் உலக வழக்கம்.ஆனால், தீமை செய்தால்,நன்மை செய்வது உத்தமர் வழக்கம்.
-குருநானக்
எந்தக் கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதுதான் கெட்டிக் காரத்தனம்.


குருவிடம் சோகமாய் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, வாழ்க்கையில் நிறைய கஷ்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்றான்.

‘‘அப்படியா, என்ன ஆயிற்று?’’ வினவினார் குரு.

‘‘நான் செய்து வந்த வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் வந்துவிட்டது. இனிமேல் என்னால் நிமிர முடியாது. இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது.’’

அவனை அமைதியாய் பார்த்த குரு, ‘‘வா, என்னுடன்’’ என்று, அருகிலிருந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நிறைய குழந்தைகள். சில தவழ்ந்து கொண்டிருந்தன. சில நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. சில ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே விழுவதும் பிறகு எழுந்து நடப்பதுமாக உற்சாகமாய் இருந்தன.

‘‘இந்தக் குழந்தைகளைப் பார். என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார் குரு.

‘‘எதுவும் புரியவில்லையே குரு.’’

‘‘இந்தக் குழந்தைகளிடம் ஒரு பாடம் இருக்கிறது. விழுகின்ற எந்தக் குழந்தையும் ‘என்னால் முடியாது’ என்று விழுந்தே கிடக்கவில்லை. உடனே எழுந்திரிக்க முயற்சி செய்கின்றன. எழுந்து ஓடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான்’’ என்றார் குரு.றீ
பாம்பிடம் கடிபட்டு மரணித்த எவருமே பாம்பிடம் நாகரத்தினம் இல்லை என்ற உண்மையை அறிந்ததில்லை!

*காதுகளே இல்லாத பாம்பு மகுசியின் இனிய ஓசைக்கு ஆடுவதாக நம்பும் மனிதன் தன்னை பகுத்தறிவுள்ளவனாக எண்ணுகிறான்

பலன்களை எதிர்பாராமல் காரியத்தை செய்து முடிப்பவரே வீரர்.

*தேளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அது நொடிக்கு நொடி கொட்டும்.

*நாம் சுகமாகவும் உறுதியாகவும் அமர ஏற்றது நம் சொந்த நாற்காலிதான்!

*பொதுசனம் என்பது கொடிய மிருகத்தைப் போன்றது. ஒன்று அதை கட்டிப்போட வேண்டும். இல்லையேல் அதைவிட்டு ஓடிவிட வேண்டும்.

*பசி வந்தால் மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தவம், முயற்சி, தாளாமை, காமம், தானம் ஆகிய பத்தும் பறந்து போய் விடும்.

*உன்னால் அணைக்க முடியாத நெருப்பை தூண்டாதே.

*உலகில் அதிக காலம் சிறையில் கிடப்பது நாக்குதான். அதனை வெளியில் விட்டால் ஆபத்து.

*கோழிகூட தண்ணீர் பருகும்போது வானத்தைப் பார்த்து நன்றி சொல்கிறது.

*தன்னைக் கொத்திச் சிதைக்கும் கோடரிக்கும் வாசம் கொடுக்கும் சந்தனமரமே மரங்களில் உயர்ந்தது.

*அதிகாரத்திற்குப் பயந்து ஒன்றும் செய்யாமல் துருப்பிடித்து அழிவதை விட விரும்பியதைச் செய்து தேய்ந்து அழிவதே மேல்.

*துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்.

*தன்னை மறந்து பிதற்றும் பைத்தியக் காரன் அருகில் செல்லாதே.

*மெத்தையில் வைத்து பால் வார்த்தாலும் கடைசியில் அணில் சருக்குள்தான் சென்று மறையும்.

*தூய்மையும் தியாகமும் பேசுகிறவனின் பணப்பையைத் தட்டிப் பார்த்தால் அவன் மடியின் கனம் அறியலாம்.

*நாற்காலியில் இருப்பதால் மூடன் அறிஞனாவதில்லை.

*உன்னுடைய செய்கைகளை நீயே கவனி. அவைதான் உனது பழக்கம்.

*உத்தமன் என்பது ஒரு பெயரல்ல; ஒருவரின் செயலின் முடிவில் கிடைக்கும் மதிப்பீடு.

*நமது கழுத்தை வெட்டி எறிந்தாலும், சூரியனை ஒரு வினாடி முன்னால் வரவழைக்க முடியாது.

*உலகில் உள்ள அனைத்தையும் அடைய உதவுவது நேரம்தான். அது போனால் எதையும் அடையாமலே வாழ்க்கை போய் விடும்.

*மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

*திருட்டு ஒரு பழக்கம். அது வந்தால் சிறிய பொருள்கள் என்றோ பெரிய பொருள்கள் என்றோ வேறுபாடு காண்பதில்லை.
படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.


ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.


எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.


மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்

-தாமஸ் புல்லர்

அறிவுத் தேவையை விட , கவனக்குறைவுதான் நமக்கு அதிக துன்பங்களை உண்டாக்குகிறது

-ப்ராங்க்ளின்

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்

- ஜவஹர்லால் நேரு

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

- சாக்ரடீஸ்

ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை; இல்லாவிட்டால் சாக்குப்போக்கு...

-ஹென்றி போர்டு
கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்ததே. -ரஸ்யா.



அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. -ஸ்காட்லாந்து.



நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்



நாக்கு மூன்று அங்குலமேயானாலும், ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறனுள்ளது. -ஜப்பான்



தேவையில்லாதவைகளை வாங்குவதால் விரைவில் அவசியமானவற்றை விற்க நேரிடும். -பிரான்ஸ்.



நல்லவனாக இருப்பது எளிது; நேர்மையாளனக இருப்பது கடினம். -பிரெஞ்ச்



ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவனிடம் அதிகாரத்தைக் கொடு. - பல்கேரியா



நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து.



சுயநலம் என்ற நெருப்பு, முதலில் மற்றவர்களைப் புசிக்கிறது; பின்னர் தன்னையேப் புசிக்கிறது. -ரஷ்யா



வாய்ப்புகளை உணர்வதே அறிவுக் கூர்மை. - சீனா
எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.
மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை
கண்களை மூடினால் கனவு காணலாம்....

ஆனால் அதே கண்களை திறந்தால்தான் அந்த கனவை நனவாக்க முடியும்...

டாக்டர்...ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
பொய் சொல்லி ரெம்ப நாள் வாழ்க்கைய ஓட்ட முடியாது
உண்மைய சொன்னா வாழுற வரைக்கும் பிரச்சனை இல்லை..


தங்கப் படுக்கையில் படுத்தும் நோயாளிக்கு என்ன பயன்?

* பொன், பெண், ஆடை - இவற்றை பகலில் தேர்வு செய்வதே சிறப்பு.

* குண்டூசியைக் கூட எடுக்க முடியாதவனால், `ஒரு பவுன்' கூட சேர்க்க முடியாது.

* சொற்கள் நீர்குமிழிகள். செயல்கள் தங்க காசுகள்.
சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
நீங்கள் செழுமையில் இருக்கும்போது உங்களை நண்பர்கள் அறிவார்கள்; வறுமையில் நண்பர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! - ஜான் சர்ட்டன் கோல்லீன்ஸ்.

* உண்மையான நண்பர்கள் நம்முடைய மகிழ்ச்சியை இரண்டு பங்காக மாற்றுகிறார்கள். அதே நேரத்தில் துன்பத்தை பாதியாகக் குறைத்து விடுகிறார்கள். - எடிசன்.

* உன் குறைகளை எனக்கு எடுத்துச் சொல்பவர்கள், உன் நண்பர்களும் எதிரிகளும் மட்டுமே! - தாமஸ் ஹேலிபர்ட்டன்.

* தேவையில்லாமல் நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பவனுக்கு ஒருவனும் உண்மையில் நண்பன் இல்லை. - அரிஸ்டாட்டில்.

* உண்மையான நட்பு ஆரோக்கியத்தைப் போன்றது. அதனை இழந்து விடும்வரை நாம் அதன் மதிப்பை உணர்வதில்லை! - வோல்டன்.
நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். (ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். (லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே (அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். (ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. (டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் (ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.(ஓர் அனுபவசாலி)

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். (அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. (எமர்சன்)

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாரியார் சுவாமிகள்)

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.ஜேம்ஸ் ஆலன்)

இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். (சுவாமி ராமதாஸ்)

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.(ஓர் அறிஞர்)

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.(மு.வ.)

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. (ஜான்ஸன்)

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். (வில்லியம் ஹாஸ்விட்)

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.
(ஷாம்பர்ட்)

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.அரவிந்தர்)

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.(சுவாமி விவேகானந்தர்)

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது(எமர்சன்)

கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. (பிளேட்டோ)

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். (ஹேக்ஸ்பியர்)

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். (மகாத்மா காந்தி)

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான். (யாரோ)

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.(மாரியோ போஜியோ)

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான். (ஹென்றி லீவ்ஸ்)

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.(ராபர்ட் பிராஸ்ட்)
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோரும் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லையேல் மெழுகுவர்த்திதான். - நெப்போலியன்.

உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படாதே; உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்பு. - ஆல்டர்.

நாட்கள் கற்றுத் தராததை வருடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. - எமர்சன்
மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். - பிரெஞ்சு பழமொழி.

* மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். - பிராங்களின்.

* அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. - ஷேக்ஸ்பியர்
உண்மை ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையையே விரும்புகிறது.

2. எங்கே உண்மை இருக்கிறதோ; அங்கே தன்னலம் இருப்பதில்லை.

3. உண்மை பரபரக்காது; அது அமைதியான நெஞ்சுடையது.

4. உண்மைக்கு ஒப்பானது எதுவும் இல்லை.

===ஷேக்ஸ்பியர்
நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பங்கை நல்ல விஷயங்களுக்கு கொடுங்கள்.'' - `இன்போசிஸ்' நாராயணமூர்த்தி.

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. - பில்கேட்ஸ்.
. பொறுத்தார் பூமி ஆள்வார்.

2. வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்.

3. சிறு தீயே பெரு நெருப்பாகும்.

4. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

5. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
ஜால்ராக்களுக்கு செவி சாய்க்காது, காதுகளுக்கு கசப்பான வார்த்தைகளையும் கேட்க கற்று கொடுக்கவும். சரிவு ஏற்படாது சுதாரித்துக் கொள்ளலாம்.

உலகம் ஒரு கண்ணாடி. உனது முகத்தையே திருப்பிக் காட்டும். எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.

பிரச்சினைகள் இன்றி வாய்ப்புகள் இல்லை. தடைகள் இன்றி திறமைக்கு வேலையில்லை.

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட வில்லை. ஓரொரு கல்லாகத்தான் அடுக்க வேண்டி உள்ளது.

முயற்சி சிறிதும் பயன் பெரிதும் தரும் காரியங்களை முன்னிலைப் படுத்தவும்.

தாமதம், மறதி, சோம்பல், பெருந்தூக்கம்-கெடுநீரார் காமக்கலன்.

எதைச் சாதிக்கப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானமாக எழுதி வையுங்கள்.
வாய்ப்புக்காக காத்திருப்பதை விட தேடிச் செல்க.

மழை பெய்யவில்லை என உழுவதை நிறுத்தி விடாதே. ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

கட்டிட பணியில் …கல், மண் சுமக்கிறேன் என எண்ணுவதைக் காட்டிலும் மாளிகை கட்டுகிறேன் என்பது ஊக்கப் பரிமாணம்.

வலிவும், தெளிவும் நிறைந்த கனவுகளோடு முயற்சியும் சேர சிகரமும் சின்னதாகும்.
எக்காரியமும் மகிழ்வுடன் செய்தால் உற்சாகம் தானாக வந்து ஒட்டும்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம்.மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு.
விஷம் மருத்துவனுக்கு மருந்து, மருந்தும் முட்டாளின் கையில் விஷம். பயன்பாடு தான் முடிவு செய்கிறது.
இறைவன் பறவைகளுக்கும் உணவை கூட்டில் வைக்கவில்லை, தேடித் தான் சேகரிக்கின்றன
உன்னதமான ஒவ்வோர் வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.

பெரிய காரியங்கள் யாவும் வல்லமையால் நிறைவேற வில்லை. விடா முயற்சியால் தான் நிறைவேறுகின்றன.
தளராத இதயத்தை பெறறுள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவும் இல்லை.

உறுதி உள்ளவன் உள்ளத்தில் திடம் உள்ளவன் உலகை தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்
வலிவும், தெளிவும் நிறைந்த கனவுகளோடு முயற்சியும் சேர சிகரமும் சின்னதாகும்.
எக்காரியமும் மகிழ்வுடன் செய்தால் உற்சாகம் தானாக வந்து ஒட்டும்.
எதை நீ நம்புகிறாயோ, அதுவாகவே நீ இருப்பாய். - விவேகானந்தர்.

* மனித வாழ்க்கை ஒரு யாத்திரை. - பிளேட்டோ.

* அற்ப பணம் சம்பாதிப்பதற்காக, ஒழுக்கத்தை விற்றுவிடாதே! - தாமஸ் பெயின்.

* புகழ் இல்லாத வாழ்க்கையை விட, மதிப்புள்ள மரணமே மகத்தானது. - சாக்ரடீஸ்.
சூரியனுக்கு நேரே போனால் உன் நிழல் பின்புறம் விழுகிறது; எதிரே போனால் முன்புறம் விழுகிறது; அதுபோல் நீங்கள் நேர்மையான வழியில் சென்றால் உங்கள் துன்பங்கள் பின்புறமாக ஓடிவிடும். எதிர் திசையில் சென்றால் அவை முன்பக்கத்தில் காத்திருக்கின்றன. - யாரோ

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முடியாததாகவே முதலில் தோன்றும் - கார்லைஸ்.

ஆர்வத்துடன் செயல்படாதவனுடைய, உள்ளத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை - குஸ்டாவ் க்ராஸ்மேன்.

தவறு செய்வதில் பிழையில்லை. ஆனால், தவறு என்று தெரிந்தபின் அதை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிழை - மகாத்மா காந்தி.

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும் - காங்கிரீவ்
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும் உன் நண்பர்கள் அல்லர். - தாமஸ் ஏ. பெக்கட்.

* வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள். வறுமைக் காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். - சட்டன் காலின்ஸ்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
நேற்று என்பது உடைந்த பானை

இன்று என்பது கையிலுள்ள வீணை

நாளை என்பது மதில்மேல் பூனை
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர். - விவேகானந்தர்.

* பகைமையை அன்பினால்தான் வெல்ல முடியும். இதுவே பழமையான விதி. - புத்தபிரான்.

* மலர்களைச் சுற்றி மணம் வீசுவதைப் போல, செயற்கரிய செயல்களை புகழ் சூழ்ந்து கொள்ளும். - சாக்ரடீஸ்.

4. துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்.

* உழைப்பால் உடல்நலமும், உடல்நலத்தால் அகநிறைவும் உண்டாகும். - பியாட்டி.

* சோம்பேறியானவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. - கவுப்பர்.

* தைரியம் வெற்றிக்கு அடிப்படை- நெப்போலியன்.

* அறிவின் ஒளி இருக்கும் வரை, ஞான ஒளி வீசும் வாழ்வில் தவறே நிகழ்வதில்லை. - ஸ்ரீ அரவிந்தர்.

* அஞ்சாமையை விட, நேர்மையாக இருத்தலே அழகானது. - எமர்சன்.

அகத்தின் அழகு முகத்திலே.
அடி உதவுறாப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இனம் இனத்தையே சாரும்.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
ஈர நாவிற்கு எலும்பில்லை.
உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
எத்தால் வாழலாம்? ***ல் வாழலாம்.
எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
எங்கே பர வாசனை?
கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
கரும்பு தின்னக் கூலியா?
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
குடல் காய்ந்தால் குதிரையும் புல்லைத் தின்னும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெடுவான் கேடு நினைப்பான்.
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
தன் கையே தனக்கு உதவி.
தன் முதுகு தனக்கு உதவி.
தன் வினை தன்னைச் சுடும்.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.


தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
துணை போனாலும் பிணை போகாதே.
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
நிறை குடம் நீர் தளும்பாது.
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
நெருப்பு இல்லாமல் புகையாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பாம்பின் கால் பாம்பு அறியும்
பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
விளையாட்டு வினையாயிற்று.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
வெறுங்கை முழம் போடுமா?
வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
அறுக்க மாட்டாதவன் கையில் ஆயிரத்து எட்டு அரிவாள்.
கூந்தல் உள்ள் மகராசி கொண்டை போடுறா
எடுக்கிறது பிச்சை; கொப்பளிக்கிறது பன்னீர்
ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே இருக்குதாம் ஈறும் பேனும்
நீட்டி ஆமக்கா செத்துக்கிடக்கா; பய்ய கெடத்துங்க பாடையிலே
யோக்கியன் வாறான்; சொம்பு எடுத்து உள்ளார வை.
சிறு துளி பெரு வள்ளம்
தும்பை விட்டு வாலை பிடிப்பானேன்
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்
'இடித்து புடைத்தவள் இங்கிருக்க எட்டிப் பார்த்தவள் கொட்டிகிட்டுப் போனாளாம்'.

'பருத்திக்கு உழறதுக்கு முன்னே தமபிக்கு எட்டு முழம்ன்னானாம்'

'தொடையிலிருக்கும் புண்ணை நடையில் காட்டினானாம்'
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

அடியாத மாடு படியாது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

எறும்பூரக் கல்லும் தேயும்.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

காகம் திட்டி மாடு சாகாது.

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே
தாவுமாம்.

கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில்
விழுவது மேல்.

சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

தடியெடுத்தவன் தண்டக்காரன்.

தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

தன் வினை தன்னைச் சுடும்.

தனிமரம் தோப்பாகாது.

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன்
வினையறுப்பான்.

தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

நிறைகுடம் தளம்பாது.

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

விரலுக்குத் தக்கதே வீக்கம்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

வேலிக்கு ஓணான் சாட்சி.

வைக்கோற் போர் நாய் போல. [/COLOR]
எருது புண் காக்கையறியாது.
*உடையவன் சொல்படி உரலைச் சுத்திக் குழியைப் பறி.
* ஆசை இருப்பவனுக்கு அலைச்சலும் உண்டு.
*குதிச்சி குதிச்சி குத்தினாலும், குத்தினவனுக்கு கிடைப்பது ஒரு கொழுகட்டைதான்.
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அறச் செட்டு முழு நட்டம் .
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றும் போகும்.


அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அற்ப அறிவு அல்லற் கிடம்.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராச திசையில் கெட்டவணுமில்லை
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி
இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

'' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
[இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ***ல் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்
ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம்.
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
காகம் திட்டி மாடு சாகாது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
வேலிக்கு ஓணான் சாட்சி.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
நிறைகுடம் தளம்பாது.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
தனிமரம் தோப்பாகாது.
அகத்தினழகு முகத்தில் தெரியும் நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
காகம் திட்டி மாடு சாகாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்


குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்

உங்கள் துணையிடம் சாந்தமாகவும் அமைதியாகவும் பேசுங்கள். அப்போதுதான்
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சரியான தீர்வை காணமுடியும்


உங்கள் பிரச்சனைகளையும் கருத்து வேறு பாடுகளையும்
பற்றி பேசுவதற்கு முன் உங்கள் கோபத்தை முதல் கட்டுப்படுத்திக்கொள்ளவும்

எதிர்பாராதே அதிகமாய்க் கொடு.

கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு.

இருப்பதைச் செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னைக் காப்பாற்ற உதவும்.

காதல் சொன்னால் உடனே நம்பி .
பின் அவஸ்த்தைப் படாதே.

பிறரின் இலட்சியக் கனவுகளைக் கண்டு
ஏளனம் செய்யாதே..முடிந்தால் உதவியாய் இருந்துவிடு

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்துவிடு
வார்த்தைகளை அளவாக பேசிவிடு.

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

பொது அறிவு மடமையானது
ஓழுங்கற்ற அறிவு உபயேகாம் இல்லாதது.

வாழ்க்கையில் பிரியமான நண்பர்களை சந்தித்து
கிடைத்த அன்பை விட
தாயின் விவரிக்முடியாத அன்பை
யாரலும் பெற்று தரமுடியாது.

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

மதத்தை விட மனதை கண்டுகொள்ள
முயற்சி செய்தால் பிரிவினை என்பது கிடையாது.
இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களைப் பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாஸிடிவ்'வாக இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று எதையும் தள்ளிப் போட மாட்டர். எங்கேயாவது போக வேண்டுமா? ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே செய்து விடுவர். "பிறகு' என்ற வார்த்தையே அவர்களிடம் கிடையாது.

* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை கூட எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் ஸ்கூல் டே விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?

* சின்ன, சின்ன தவறுகளை பெரிது பண்ணாதீர்கள்! ஓவர் டேக் பண்ண, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ட்ரெயினை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே, அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து அடுத்த ட்ரெயினில் போகலாமே!

* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நமது சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

* புது விஷயங்களில் ஆர்வம் எடுத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய துõங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிட கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் துõங்காதவரா? ஒரு, "ஞாயிறு' நன்றாக துõங்குங்கள்.

* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ ஸிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்கள் மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் பண்ணாத படுக்கை, இதே போல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

* "நோ' சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், "பிஸி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால் மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி ஸ்பெஷலாக சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.

* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

* நண்பர்கள், துõரத்து உறவினர்கள் இவர்கள் பலருடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை, இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், ஈமெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய், கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, சிற்பம், தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் புது செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

* வாக்கிங் செல்லுங்கள் மெதுவான, ஆனால் நிச்சயம் பயனுள்ள எக்ஸர்ஸைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.

* நல்ல, பழைய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!

*நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை.' வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும் போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண், உதவியாளர் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள். இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!

URS
SUNDARAM
MAYILADUTHURAI