Monday, March 17, 2008

தத்துவம்+கவிதை


பொதுவாகவே நாம் ஏதாவதொன்றைத் திட்டமிடும் போது,அத் திட்டம்
நிறைவேறும் நாளொன்று,நேரமொன்று இருக்கும்.
உதாரணமாக நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதவேண்டுமெனத் திட்டமிட்டுப்
படிப்பீர்களாயின் பரீட்சையோடு அத்திட்டமிடல் நிறைவேறிவிடும்.ஒரு சுற்றுலா
செல்லத் திட்டமிடுவீர்களெனில் அப்பயணம் நிறைவேறிய பின்னர் அத்திட்டம் பூர்த்தி
செய்யப்பட்டு விடும்.
அது போல திருமணம் செய்ய,வீடு கட்ட,வாகனம் வாங்க,மேற்படிப்பு படிக்க என
எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தானே செய்கிறோம்.
ஆகவே நமது வாழ்க்கையானது இதுபோன்ற சின்னச் சின்ன,பெரிய திட்டங்கள்
,இலக்குகள் கொண்டே அடுக்கடுக்காகக் கட்டப்படுகிறது எனச் சொன்னால்
ஏற்றுக்கொள்வீர்கள் தானே..?அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான திட்டங்கள்,
இலக்குகள் வித்தியாசப்பட்ட போதும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒத்த இலக்கு,
இலட்சியம் என்பது 'வாழ்க்கையை வெற்றி கொள்வது' .நாமனைவரும் அதனை நோக்கியே
கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இலக்குகளை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நகர்ந்து
கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம்மனைவருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்கவேண்டுமென்பதே
இலட்சியமாக இருப்பினும் வென்றெடுக்கும் நாளெது? அதற்கான நேரமெது ? என்பதைப்
பற்றிச் சிந்திக்காமலேயே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.உண்மைதானே ?
வாழ்க்கையை வெற்றிகொள்ளவேண்டுமென நாம் பலவிதங்களில்
முயற்சிக்கிறோம்.போராடுகிறோம்.ஆனால் எமதான வாழ்க்கையை எப்பொழுது வென்றெடுக்கப்
போகிறோம் என்ற கேள்விக்கு எம்மிடம் பதிலிருப்பதில்லை அல்லது பதிலளிக்க
முடிவதில்லை.
இதுவரை நீங்கள் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப்
பார்த்து அல்லது எதிர்காலத்தில் பயணிக்க எண்ணியிருக்கும் திசையை நோக்கிச்
சொல்லுங்கள்.*உங்கள்** **வாழ்க்கையை** **நீங்கள்** **வெற்றிகொள்ளத்** **
தீர்மானித்திருக்கும்** **நாளெது** **?*
* *நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான,சிக்கலான வலைகளால் நம்மை
நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டு,இலட்சியங்களை
ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம்.நாம்
வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்?நாமா?நாம்தான்
மரணித்துவிட்டோமே..?
நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம்
வாழ்க்கையை வென்றோமா ? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள்.நம் இறப்பின்
பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலன்கள் பற்றி நாம்
வாழும்போதே உணர்ந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.நாம் வாழ்க்கையை
வென்றோமா என்ற கேள்விக்கான பதில் பயனளிப்பது நமக்கேயன்றி பிறர்க்கல்ல.எப்படி
நமக்கு மற்றவர்கள் வாழ்க்கையை வென்றார்களா இல்லையா என்பதற்கான விடை தேவையாக
இல்லையோ அதுபோலவே அவர்களுக்கும் நமது வாழ்க்கை பற்றிய கேள்விக்கான விடை
தேவையற்றதாக இருக்கும்.(சிலர் நமக்குத் தோல்வி ஏற்படும்வரை,நாம் தவறிழைக்கும்
வரை சிரிக்கப் பார்த்துக்கொண்டிருப்பர் என முணுமுணுப்பீர்கள் இக்கணத்தில்.
உண்மைதான்.அது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாமே ! )
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாட்களுக்குள் தான் தனது வாழ்க்கையை
வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது.அந்த நாள் எப்பொழுது? எந்தப் பராயத்தில் ?
*பால்யத்தில் ?
*இளமைக்காலத்தில் ?
*நடுத்தர வயதில் ?
*வயோதிபத்தில் ?
நம்மில் அனேகம்பேர் தமது வாழ்க்கையை வெல்வதற்காக அவர்களது
சிறுவயதில் ஆரம்பித்த போராட்டம் அவர்களது முதுமை வரை தொடர்ந்து செல்கையில் தாம்
வாழ்க்கையை வென்றுவிட்டோமா,இல்லையா எனத் திரும்பிப் பார்க்கக் கூட
நேரமிருக்காது.அவர்கள் அறியாமலேயே முதுமை வந்துவிடும்.ஒரு கட்டத்தில்
வயதாகிவிட்டது எனச் சோர்ந்துவிடுவார்கள்.இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டோமே என
வருந்துவார்கள்.
ஆகவே 'வாழ்க்கையை வெற்றி கொள்வது என்றால் என்ன?' என்பதற்கான விடையை
உங்களை நீங்களே கேட்டுப்பார்த்து அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளும் பொழுது
வாழ்க்கையை வென்றெடுக்கும் நாளெது பற்றிய கேள்வி எழாது.
உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,ஒவ்வொரு பகுதியிலும்
நம்மால் செய்யப்பட வேண்டிய அத்தனை செயல்களையும்,எதிர்பார்ப்புக்களையும்
திட்டமிட்டு நிறைவேற்றுவதுதான் வெற்றியின் முதல்படி.ஆகவேதான் வெற்றியின் ஏனைய
படிகள் நமது வாழ்க்கையின் நாட்களையும்,நேரங்களையும் சார்ந்து இருக்கின்றன.எனவே
வெற்றி நமக்கான காலங்களில்,வருடங்களில்,மாதங்களில்,வாரங்களில்,நாட்களில்,
மணித்தியாலங்களில்,நிமிடங்களில்,வினாடிகளில் இருக்கின்றன என்பதனை
ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே.
இப்பொழுது இப்படிப் பார்ப்போம்.நாங்கள் சுவாசித்துக்கொண்டிருக்கும்
,நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியை,இந்த நிமிடத்தை மிகவும்
நிம்மதியான முறையில்,பயனுள்ள வழியில் செலவழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.நமது
ஒவ்வொரு வினாடிகளும் வீணடிக்கப்படாமல்,பயனுள்ள வகையில் நாம் அன்றைய தினம்
போட்டுவைத்திருக்கும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும்.இப்படிப் பயனுள்ள
விநாடிகள் கொண்டு உருவாக்கப்படும் நிமிடங்கள்,மணித்தியாலங்கள்,நாட்கள்,வாரங்கள்
,மாதங்கள்,வருடங்கள்,காலங்கள் உங்களது வெற்றியை நீங்கள் வாழும்போதே கூறுபவைதானே.
வேறுவகையில் சொல்வதானால் *நீங்கள்** **வாழ்க்கையை** **
வெற்றிகொள்ளும்** **நாள்** **இன்று** *தான்.வெற்றியை நோக்கி நகரும் வினாடி
இதுதான்.இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.இதனை
நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி
பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம்.இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம்,
கோபம்,பொறாமை,வஞ்சகம்,சுயநலம்* *கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில்
தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?
பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைவது,உயர்ந்த தொழிலொன்றைப்
பெற்றுக்கொள்வது,நல்லதொரு குடும்ப வாழ்க்கையைக் கொண்டுசெல்வது,வசதியாக,
நிம்மதியாக வாழ்வது என அவரவர்க்கு வெவ்வேறான இலட்சியங்கள் இருக்கும்.அவற்றை
நோக்கிச் செல்லும்போது பலவிதமான தடங்கல்கள்,தடைகள் வரத்தான் செய்யும்.அவை
பொருளாதார ரீதியாகவோ,பிறராலோ,பிறகாரணங்களாலோ இருக்கலாமே தவிர நமது சோம்பேறித்
தனத்தால் இருக்கக்கூடாது.வெற்றி மனப்பான்மையோடு ஒவ்வொரு நிமிடத்தையும்
கழிப்பவர் எவரோ அவரே வாழ்க்கையை வென்றவராகிறார்.
அந்த வகையில் நாம் எந்த வயதில் இருந்தாலும்,எத் தொழிலைச்
செய்தாலும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு
நிமிடத்தையும் வெற்றிமனப்பாங்கோடு கழிப்போமாயின் அதுவே வெற்றிகரமான வாழ்க்கை.
வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்காலத்தின் ஏதோ ஒருநாள் வரும்வரை
பார்த்திருக்கவேண்டாம்.இன்று செய்ய வேண்டியவற்றை தன்னம்பிக்கையுடனும்,
முழுமையாகவும்,மகிழ்வோடும் செய்யுங்கள்.இந்தக் கணத்தை வெற்றியின் நேரமாகக்
கொண்டு செயல்படுங்கள்.அப்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை நீங்கள்
வென்றவர் ஆகிறீர்கள்.
இப்பொழுது சொல்லுங்கள்.
*உங்கள்** **வாழ்க்கையை** **நீங்கள்** **வெற்றிகொள்ளத்** **
தீர்மானித்திருக்கும்** **நாளெத

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்ச் நாட்டு மாமேதை, மகாகவிஞர் விக்தோர் உய்கோ (Victor Hugo) எழுதிய கவிதைகளும், வரைந்த ஓவியங்களும் பிரெஞ்ச் நாட்டின் தேசீய சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டவை.

மனிதர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவனுக்குள் இருக்கும் கொடுர குணங்களைக் கூட கவிதை நடையில் அழகாக விவரிப்பார். "பேச்சடக்கம்" பற்றி தன் கவிதையில் அவர் விளக்குகிறார் :

நல்லவர்களே! பேசுவதில் நீங்கள் கவனமாக இருங்கள். கவனக் குறைவால் நீங்ள் உச்சரித்த ஒரு சொல்லிலிருந்து கவலை, வெறுப்பு முதலிய எல்லாம் பிறக்கும்.

உங்கள் நண்பர் நம்பிக்கைக்குரியவர். நீங்கள் அவரிடம் தாழ்ந்த குரலில் தான் பேசுகிறீர்கள் என்று எண்ணி நான் சொல்வதை மறுக்காதீர்கள்.

இதைக் கூர்ந்து கேளுங்கள் :

காதோடு காதாய் கதவுகளைச் சாத்தி விட்டு உங்கள் வீட்டினுள் சாட்சி யாருமின்றி வெளியில் சொல்லாத நீங்கள் நேசிக்கும் நண்பர்களில் அதிகம் நேசிக்கும், ரகசியத்தைக் காப்பாற்றும் ஒருவனிடம் யாருமில்லாத இடத்தில் முப்பதடி ஆழமுள்ள சுரங்கத்தில் யாரோ ஒருவனைப்பற்றி வெறுப்புக்குரிய ஒரு சொல்லை முணு முணுக்கிறீர்கள்.

யாரும் கேட்டிருக்க முடியாது என்று நீங்கள் நம்பும் அந்தச் சொல் - மிகத்தாழ்ந்த குரலில் இருண்ட ஓசை வெளிச் செல்ல முடியாத இடத்தில் நீங்கள் சொன்ன அந்தச் சொல் - கட்டவிழ்த்துக் கொண்டு கிளம்பும். தாவிக்குதித்து, இருளிலிருந்து வெளிவரும்.

இதோ அது வெளியேறிவிட்டது.

அதற்கு வழிதெரியும். அது நடக்கும், அதற்கு இரண்டு கால்களுண்டு, கையில் தடியுடன் இருப்பாணிகள் உள்ள செருப்புக்களை மாட்டிக் கொண்டு முறையான கடவுச் சீட்டுடன் (Passeport) செல்லும். தேவைப்பட்டால் அது கழுகைப் போல் பறக்கும்.

உங்களிடமிருந்து தப்பி ஓடும் அந்தச் சொல்லை, எதனாலும் நிறுத்த முடியாது. மேட்டையும், சதுக்கத்தையும், மற்றவற்றையும் கடந்து செல்லும். வெள்ளம் ஓடும் காலமானால் தெப்பமின்றி அதைக் கடக்கும். சிக்கலான இருண்ட வீதிகளைக் கடந்து செல்லும்.

நீங்கள் யாரைப் பற்றிப் பேசினீர்களோ அவனுடைய வீட்டுக்கு அது நேராகச் செல்லும்.

அந்த வீட்டின் கதவெண்ணும் மாடியும் அதற்குத் தெரியும். அதனிடம் திறவுகோல் இருக்கும். மாடியின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும்.

அவன் எதிரே நின்று அவனைக் கேலியாக நோக்கும்.

"நான் இன்னாருடைய வாயிலிருந்து வருகிறேன்" என்று அவனிடம் கூறும்.

அது வந்த வேலை முடிந்துவிட்டது.

இப்போது உங்களைக் கொல்லத்துடிக்கும் "பகைவன்" ஒருவன் உங்களுக்கு இருக்கிறான்....


நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது




நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.



நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.



ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்.



முனிவர்கள்

கடவுளைப் பார்ப்பதற்காகத்

தவம் இருக்கிறார்கள்.



நானோ,

ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு

தவம் இருக்கிறேன்





சிந்திய மழை

மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்

உன் கன்னத்துக்குள்ளேயே

போய்விடுகிறதே.




உன் பெயரில் உள்ள

இரண்டு எழுத்துக்களைத் தவிர

தமிழில் மிச்சமுள்ள

245 எழுத்துக்களும்

தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்

இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




'நிலா ஏன்

தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'

நீ அடிக்கடி

'நேரமாயிடுச்சு போகணும்' என்று

உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா

அதனால்தான்.






தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியன் போல

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி சய்கிறாய்.






காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்

அவ்வளவுதான்...

நின்றுவிட்டது காற்று.





தொலைபேசியில்

நீ எனக்குத்தானே 'குட்நைட்'

சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ 'நல்ல இரவு'

என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம்

பிடிக்கிறதே.





என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டு முன் நின்று

'இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது'

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.




நான்

உன்னைக் காதலிக்கிறேன்

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது





மழை வந்து

நின்ற பிறகும்

செடிகள் வைத்திருக்கும்

மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது

நீ வந்து போன பிறகும்

உன்னை.






எல்லா தெய்வங்களும்

தங்களைக் குளிப்பாட்டிவிட

பூசாரி வைத்திருக்கும்போது

நீ மட்டும் ஏன்

நீயே குளித்துக்கொள்கிறாய்?






புத்தர் இந்த உலகத்தில்

தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்தாய்.




அன்று

நீ குடை விரித்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

நின்றுவிட்ட மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று

சட்டென்று மழை நின்றால்

நீ எங்கோ குடை விரிப்பதாகவே

நினைத்துக் கொள்கிறேன்.






உன்னைப் பார்த்தால்

எடை பார்க்கும் இயந்திரம்கூட

கவிதை எழுத

ஆரம்பித்துவிடும் போல.

உன் எடையை அடிக்கவேண்டிய

இடத்தில்

'அழகு நீங்களாக 50 கிலோ' என்று

அடித்திருப்பதைப் பார்!






'அமாவாசை அன்றுதான்

தீபாவளி வரும் என்பதால்

உங்கள் வீட்டுக்குத் தீபாவளி

வரவே வராது' என்றேன்.

அர்த்தம் புரியாமல்

'ஏன்' என்றாய்.

'உங்கள் வீட்டில்தான்

எப்போதும் பெளர்ணமியாக

நீ இருக்கிறாயே' என்றேன்.

'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று

நீ ஆரம்பித்தாய்

வெட்கப்பட...




உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து

'அய்...எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.

நகையோ,

'அய்...எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.




இந்தா என் இதயம்.

விளையாடும்வரை

விளையாடிவிட்டுத்

தூக்கிப் போட்டுவிடு.

அது அதற்குத்தான்

படைக்கப்பட்டது!




ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது...



'ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே

இருக்கிறது?' என்று!




உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.



'கடிகாரம் ஓடலியா?'-என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்



அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!




அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.




உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்





அடிக்கிற கைகள் எல்லாம்

அணைக்குமா என்பது தெரியாது.

ஆனால், நீ அடிப்பதே

அணைப்பது மாதிரிதான்

இருக்கிறது.




கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன...

'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.






பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?






'என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று

விடுகிறாய்?' என்றா

கேட்கிறாய்.



நீ கூடத்தான்

கண்ணாடியை எங்கு

பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.



உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளாவு இருக்கும்!




உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே.




சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.




நீ முகம் கழுவுகையில்

ஓடிய தண்ணீரைப் பார்த்துத்

திடுக்கிட்டுவிட்டேன் நான்.

ஒவ்வொரு நாளும்

அவ்வளவு அழகையா

வேண்டாமென்று

நீ நீரில் விடுகிறாய்.




நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கிவிடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆழையோடு பார்க்க வந்த

முடிகளை ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை

ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.






திருவிழா அன்று

கோவிலில் எல்லோருக்கும்

கஞ்சி ஊற்றிக்

கொண்டிருந்தாய்.

அடடா...

எல்லா ஊர்களிலும்

அம்மனுக்குக்

கஞ்சி ஊற்றுவார்கள்.

அங்கள் ஊரில்

அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!






யாராவது

ஏதாவது

அதிர்சியான

செய்தி சொன்னால்

'அச்சச்சோ' என்று

நீ நெஞ்சில் கைவைத்துக்

கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்!




நீ ஒரு கடி கடித்துவிட்ட

பழத்தைக் கேட்டேன்.

'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'

என்றாய் புரியாமல்.

'வேண்டாம்...வேண்டாம்...

நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்

பழத்தைத் துடைத்துவிட்டு

அச்சிலை மட்டும் தா!'




நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.




எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்...?



பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!






உனக்கு திருஷ்டி சுற்றி

வாசலில் உடைந்த பூசணிக்காய்

நன்றி சொன்னது...

உன் அழகு முகத்தை

மூன்று முறை

சுற்றிக் காட்டியதற்காக.






உலகிலேயே

அழகான

ஒன்றையொன்று ஒருபோதும்

பிரியாத

லவ் பேர்ட்ஸ்

உனது மார்புகள்.




நீ எந்த உடை அணிந்தாலும்

உன்னால்

உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய

உன் அழகை மறைக்க முடியாது
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.



உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.



சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!



நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!




'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'



உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.

காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!



நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய்.

'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.

'வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.




உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

'கடிகாரம் ஓடலியா?'என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!



என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.

கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.

உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.

'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.

'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'



சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.




உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்

பிறந்திருக்க வேண்டும் என்று.



ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.



நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.



கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்




பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
'இது எந்த ஊர் ஆப்பிள்?'
'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
'நீ எந்த ஊர் ஆப்பிள்?'



உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!

அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.

'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.

'ஏம்ப்பா..?'

டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா, அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...

இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!




'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப் போகிறது' என்றாய்.
ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது?
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.



கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோ மா
நிலவை! என்று.



தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.



தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி செய்கிறாய்.



காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.



முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!



வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை...
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?



நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?



கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.



என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.



அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.



உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.



என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ
His Side

♥ "Tell her how you feel" is what my friends said

♥ So I picked up the phone

♥ Called your house

♥ You answered

♥ I said "I Love you"

♥ And hung up right away

♥ The next day

♥ I told you it was a bet from a friend

♥ It was partly true

♥ But you didn't react

♥ No sassy come back which you always do

♥ Just stood there

♥ Then walked away



Her side


♥ You called my house

♥ I picked up

♥ You told me you loved me

♥ Then hung up

♥ The next day

♥ I was going to tell you I loved you back

♥ But you said it was a bet

♥ I had everything planned out

♥ Every move I planned

♥ Every word I rehearsed

♥ But when you said that...

♥ I had nothing to say

♥ I stood and watched you

♥ As you broke my heart

You forgive me for liking you too much,
And I'll forgive you for not liking me enough.

You forgive me for missing you so,
And I'll forgive you for being so cold.

You forgive me for the loud racing of my heart,
And I'll forgive you for not hearing it.

You forgive me for playing your games,
And I'll forgive you for toying with my emotions.

You forgive me for finding you so attractive,
And I'll forgive you for not noticing.

You forgive me for raising you up so high,
And I'll forgive you for bringing me down so low.

You forgive me for wanting to be with you,
And I'll forgive you for avoiding me.

You forgive me for being so pathetic,
And I'll forgive you for taking advantage of it.

You forgive me for not being able to let go,
And I'll forgive you for never having latched on.

You forgive me for having hopes and dreams,
And I'll forgive you for crushing them.

Forgiveness brings inner peace.
Do we have a deal?

A FRIEND is a tissue when you can't stop crying

A FRIEND is a shoulder when you feel like dying

A FRIEND always listens when you have something to say

A FRIEND is a week when you just need a day

A FRIEND is a crutch when you have a broken heart

A FRIEND is some glue when everything falls apart

A FRIEND is a sun when the rain just won't stop

A FRIEND is your mom when you run into a cop

A FRIEND is a phone call when you can't leave your home

A FRIEND is a hand when you feel all alone

A FRIEND is a wing if you want to fly

A FRIEND understands without knowing why

A FRIEND is an ear for a secret to tell

A FRIEND is an aspirin when your head hurts like hell

A FRIEND is a love that can never let go

A FRIEND Is YOU, & I Wanted YOU To Know

When i was searching for friend..
I found you!

When i was walking alone;
You have decided to walk with me!

When i wanted to trust on someone;
You made me realize what is belief!

When i was in a critical situation;
You showed me the right path!

When i had lost my confidence
You helped me to grow it up!

When i had no aim;
You escorted me to my aim!

When i had no inspiration;
You became my inspiration!

When i feel lonely,
You tell you are always in my heart

You are so special to me
for I will never forget you!!


www.desipundit.com/2007/03/15/lollusabha


ஒருவர் மீது ஒருவர், ஒரே நேரத்தில் கோபித்து கொள்ளக் கூடாது

ஏதாவது தலைபோகிற காரியமாக இருந்தால் ஒழிய ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளக்கூடாது

வாக்குவாதத்தில் ஒருவர் ஜெயிப்பதாக இருந்தால், அது அது மற்றோருவராக இருக்கட்டும்

நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் அன்பாக செய்யுங்கள்

கடந்த கால தவறுகளை நினைவுபடுத்தாதீர்கள்

இந்த உலகத்தையே வெறுத்தாலும், நீங்கள் ஒருவரை ஒருவர் , வெறுத்துக் கொள்ளாதீர்கள்

இருவருக்கும் ஏதாவது வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தால், அதை சமரசம் செய்யாமல் உறங்க செல்லாதீர்கள்

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அன்பான புகழ் வார்த்தைகளை பேசிக் கொள்ளுங்கள்

ஏதாவது தவறு செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்

சண்டை போட இருவர் தேவை, தவறு செய்தவர் தான் எப்போதும் அதிகம் பேசுவார்.

No comments: