Friday, July 9, 2010

எனக்கு பிடித்தது

காலந் தவறாமல் செய்ய வேண்டும் !
கடின உழைப்பால் பெற வேண்டும் !
உழைப்பால் உயர உண்மை வேண்டும் !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம்மை !
போற்றிய செயல்கள் பேசும் நம்பெருமை !
விட்டுக் கொடுத்தால் உயர்வோம் !
வீட்டில் கடமை வெளியில் கடமை
வேத வாக்காய் விளங்க வேண்டும் !
பிள்ளைகள் பேச்சும் செயலும்
பெற்றோர் பின்புலம் ! மற்றவர்
பார்வை நம் உட்புலம் !
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்கள்
நாம் பெற்ற பேறு ! கற்றதின் பரிசு !
நன்செயல் எண்ணவும் இன்சொல் பேசவும்
தயங்காதே ! இதில் என்ன சுமை !
சுவை தானே இவை !
காலத்தால் அழியாத கவி அல்லவா !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம் அருமை !


துன்பங்கள் நிஜத்தில் துரும்புகள்

பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம். ஒருவனுக்கு எவ்வளவு பொறு மை குறைகிறதோ, அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும். அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.

பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இறைபக்தியிலும் ஈடுபட முடியாது. இறைவன் அருள் வேண்டுபவர்கள் முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் செயலுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப அடுத்த பிறப்பை எடுக்கின்றனர். ஆகவே, எந்த சூழ்நிலையிலும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பது அவசியம்.

உங்களது இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தீய செயல்களைச் செய்யாதீர்கள். இவர்கள் மறுபிறப்பில் இல்லாவிட்டாலும், இந்த பிறப்பிலேயே மற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவராக இல்லாமலும் திகழ்வர். இத்தகைய பிறப்பெடுத்து ஒரு பயனும் இல்லை.

தைரியத்துடன் இருங்கள். எந்த துன்பத்திற்கும் கலங்காதீர்கள். அவற்றால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. பிரச்னையை நேரே பார்க்கும்போது, பெரிய துன்பம் போல தெரியும். ஆனால், உண்மையில் அது ஒன்றுமில்லாத சிறிய துரும்பாகவே இருக்கும். எனவே, பயப்படுவது தேவையற்றது. மனதில் தைரியம் இல்லாதவர் ஆண்தன்மை இல்லாதவர் ஆவர். இவர்கள் மறுபிறப்பில் புழுக்களாகவே பிறப்பார்கள்
கடமையே பெரிய வேள்வி

குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். பேச வேண்டியது குழந்தையே. ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார். கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே. இறைவனை மனக் கண்ணின் முன் நிறுத்தி அவனோடு ஒன்றி விடுவது மனிதனின் கடமை.

உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.

புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்த நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல் நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் செய்யும் கடமைகளால் கிடைக்கும் உரிமைகளை சுயநலமில்லாமல் சமுதாயத்திற்காக பயன்படுத்துங்கள்.

இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.

உங்களது எண்ணம் எப்பொழுதும் துõய்மையாகவும், புதுமையானதாகவும் இருக்க வேண்டும். கெட்ட காற்று

வெளியேற வேண்டுமானால் நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும். எண்ணத்தை விட வலிமையானது வேறு எதுவும் கிடையாது. உங்கள் எண்ணங்களை ஒருபோதும் ஒளித்து வைக்காதீர்கள். அவற்றை வெளியே சொல்வது கேவலம் என்றால், அவ்வாறு நினைப்பது இன்னும் கேவலமானது.

உடல் பலத் தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும்.
சமநிலையுள்ள மனம் வேண்டும்

* காற்று வீசாதபோது விளக்கு, ஆடாமல் நின்று எரிகிறது. அதுபோல மனதில் சஞ்சலம் இல்லாவிட்டால், உள் மனதில் உள்ள அறிவு ஒளி அற்புதமாக எரியும். எனவே, மனம் சமநிலையுடன் இருக்க வேண்டும்.

* பதட்டமும், ஆரவாரமும் நிறைந்த இந்த உலகில் சம நிலையான மனத்துடன் பலன் எதிர்பார்க் காமல் செயல்பட வேண்டும். பலன் எதிர்பாராத செயல்களில் தான் இறையுணர்வு இருக்கும்.

* கடமையே பெரிது என நினைப்பவர்கள் விழிப்பு, சமநிலை, செயல்திறன், சுயநலமின்மை, அனுபவத்தில் ஆர்வம் போன்றவற்றுடன் இருக்க வேண்டும். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒழுங்காக ஒரு செயலைச் செய்தாலே வெற்றி நிச்சயம் தான்.

* சூரியஒளியோ, மண்ணோ, நீரோ மட்டும் தனித்து ஒரு செடியை வளரச் செய்ய முடியாது. நிலத்தில் விதையைப் போட்டு, நீர் ஊற்றினால் அவ்விதை மக்கிப் போகும். விதையை நீரில் போட்டால் அழுகிவிடும். சூரிய ஒளியில் போட்டால் கருகிவிடும். இம்மூன்றும் நியாயமான முறையில் சேர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்விதை முளைத்து செடி மரமாகும். இப்படி, ஒரு செயலுக்கு பல காரணங்கள் தேவைப்படுகின்றன. அதில், நம்முடைய பங்கை மட்டும் நாம் செலுத்திவிட்டு, மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிட வேண்டும். நாமே எல்லாவற்றையும், நம் விருப்பப்படியே செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், நமக்கு ஒரு போதும் மன அமைதி கிடைக்காது.
மனம் உங்கள் நண்பனாகட்டும்!

˜ஒவ்வொருவரும் கடமையைச் செய்யும்படி விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கடமையை நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனை பரிபூரணமாக செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு முழு உரிமை தரப்பட்டிருக்கிறதே தவிர, அதன் பலன் குறித்த எதிர்பார்ப்பிற்கான உரிமை தரப்படவில்லை. ஆகவே, கடமையை கருத்தாக நிறைவேற்றுங்கள். அதனால் உண்டாகும் பலனில் உங் களது விருப்பங்களை எதிர்பார்க்க வேண்டாம்.

˜மனமானது ஒவ்வொருவரின் நடத்தைகளைப் பொறுத்தே நண்பனாகவும், எதிரியாகவும் அமைகிறது. யார் ஒருவர் மனதை அடக்கி அதனை வெற்றி கொள்கிறாரோ, அவருக்கு மனம் சிறந்த நண்பனாகவும், அடக்க முடியாமல் அதன் போக்கிற்கு விடுபவருக்கு முதல் எதிரியாகவும் இருக்கிறது. மனதை உங்களது நண்பனாக வைத்திருக்க முயற்சியுங்கள்.

˜உங்களுடன் வாழ்பவருக்காகவோ, உங்களை விட்டு பிரிந்து சென்றவருக்காகவோ மனம் வருந்தாதீர்கள். அவ்வாறு வருந்துவது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். உண்மையான அறிஞர்களை இத்தகைய நிகழ்வுகள் பாதிப்பதில்லை.

˜நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். என்னை அனைத்திலும் அனைத்துமாக காண்பவர்களுக்கு நான் எப்போதும் இழக்கப்படாதவனாகவே இருக்கிறேன். நானும் அவர்களை இழப்பதில்லை. அத்தகையவர்களை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்கிறேன்.

தற்பெருமை அழிவைத்தரும்

* மருத்துவர்கள் நோயாளிகளிடம் "எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய்.

* கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்து விடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்திற்கு கூட சலனமடையும்.

* குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு "என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்

* அடுத்தவர்களது விஷயத்தில் தலையிடுவதும், அவர்களைப் பற்றி குறை சொல்வதும் கூடாது. உங்களுக்கு தெரிந்தே ஒருவர் தவறு செய்கிறார் என்றாலும் அமைதியாக இருந்து விடுங்கள். அவரது தவறை குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், ஒருவரது குறையை சுட்டிக்காட்டி தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து அவர்களை இயக்கும் கடவுளே, அவர்களை அவ்வாறு செயல்படும்படி துõண்டுகிறார். ஆகவே, அடுத்தவரது செயல்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

* ஓரிடத்தில் நடக்கும் செயல் உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம். அதற்காக நீங்கள் அச்செயலை தடுத்து நிறுத்தவோ, மறுப்பு தெரிவிக்கவோ கூடாது. உலகில் எந்தவொரு செயலும் கடவுளின் அனுமதியில்லாமல் நிச்சயமாக நிகழ்வதே கிடையாது. ஆகவே, நீங்கள் அச்செயலை தடை செய்யும் விதமாக செயல்படுவது கடவுளின் விருப்பத்தை தடை செய்வது போலவும், அவரது தீர்ப்பை விமர்சிப்பது போலவும் ஆகும். ஆகவே, என்ன நடந்தாலும் நன்மைக்கே நடக்கிறது என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

* நீங்கள் நிம்மதியாக இருக்க விரும்பினால், அடுத்தவர் வேலையில் கவனம் செலுத்தாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனத்துடன் இருங்கள். அவரை கவனித்துக் கொள்வதற்கு கடவுள் இருக்கிறார். ஆகவே தானுண்டு, தன் வேலையுண்டு என்று செயல்படுங்கள்.
இளமையிலேயே கடமையைச் செய்

*உலக வாழ்க்கை என்பது கற்பாறைகளும் குன்றுகளும் குறுக்கிடும் காட்டாறு போன்றது. அதில் தான் உன் குடும்பம் என்னும் படகைச் செலுத்தியாக வேண்டும். அதை செலுத்திட துடுப்புகளைத் துடிப்புடன் போட இளையபருவம் தான் ஏற்றது. அதில் வலுவுடன் செயல்பட்டு, காட்டாற்றைக் கடந்து அக்கரையில் உள்ள இறையடியைச் சேரவேண்டும். எல்லையற்ற பேரின்ப வாழ்வினை எய்த வேண்டும்.

* நீ பருவ வயதில் ஊர்சுற்றிக் கொண்டு காலத்தை வீணாக்கினால் முதிய பருவத்தில் உன் உடல் வலிமையும், மன வலிமையும் இழந்து வாழ்க்கைப் படகை துரிதமாக இயக்க முடியாமல் அது இடர்ப்படும். இளமை நிரந்தரமானதல்ல. அது, நகர்ந்து செல்லும் மேகங்களை போன்றது. அந்த அந்த பருவத்தில் கடமைகளை சரியாக செய்தால் பேரின்ப வாழ்வை அடையலாம்.

* கத்தியை தீட்டுவது என்பது கல்லை வழுவழுப்பாக மாற்றுவதற்காக அல்ல. கூர்மையும், வெட்டும் சக்தியும் அதிகரிப்பதற்காகத்தான். அதே போல வாழ்க்கையில் இனிமை சேர்த்து வாழ நீ உனக்குள்ளே உற்சாகம், சாகசம், தைரியம், புத்தி, சக்தி, பராக்கிரமம் ஆகிய குணங்களை வளர்த்துக் கொள். இந்த நல்ல குணங்கள் உனக்கு சுகத்தை தரும்.

* பெரியோரைக் கவுரவியுங்கள். பெற்றோரைக் கவுரவியுங்கள். அவர்களை வணங்கி இறைவனை நண்பனாக அடையுங்கள்.

* கடவுள் உங்களைச் சோதித்தால், அது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு தருவதாக எண்ணுங்கள். என்ன நேர்ந்தாலும் அது நன்மைக்கே என நினையுங்கள்.
வாழ்க்கைக்கு ஆதாரமானவர்

கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழியே பறந்து சென்ற பறவை ஒன்று கப்பல் மீதுள்ள பாய்மரத்தில் அமர்கிறது. நீண்ட துõரம் பயணித்த பறவைக்கு, ஒரே இடத்தில் அமர்ந்திருக்க பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றது. அப்பறவை எங்கு சென்றாலும் கடலில் தண்ணீர் மட்டும்தான் இருந்ததே தவிர அமர்வதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அப்பறவை மீண்டும் கப்பலை அடைந்து, பாய்மரத்தின் மீது அமர்ந்து கொண்டது. இதைப்போலத்தான் மனிதர்களும் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்தை விரும்பிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கான சரியான இடம் எங்கும் கிடைக்காமல் இருந்த இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். கடவுளும், பாய்மரம் போன்றவர்தான். நீங்கள் அவரை விட்டு எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு உங்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காது.

இந்த உலகில் கடவுள் ஒருவர்தான் அனைவரது வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறார். உங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோ, வாழ்க்கையின் ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தோ காப்பாற்றுகிறார். உங்களுக்கு வேலை தந்தவர்களை, உங்களுக்கு உதவி செய்யும்படியாக துõண்டிவிட்டவர் கடவுள்தான். அவர் பலரது வடிவில் உங்களுக்கு அருள் செய்கிறார். ஆனால், நாம் தான் இதைப்புரிந்து கொள்வதில்லை. எனவே, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் கடவுளிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.
மனதை அமைதிப்படுத்த வழி

* ஒருவனை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் மனமே முதலிடம் பிடித்திருக்கிறது. பல வழிகளில் வெளிப்படும் இன்ப, துன்ப எண்ணங்கள் உடல் வழியாகவும் வெளிப்படுகிறது. உள்மனதில் இன்பமுடன் இருப்பவன் வெளியில் உற்சாகமாக செயல்படுகிறான். எந்த செயலிலும் அதிக நாட்டத்துடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்கிறான். அதேசமயம் மனதில் துயரங்களுடன் இருப்பவன் எதிலுமே அக்கறையுடன் செயல்படுவதில்லை. அவன் மனம் எந்த செயலிலும் ஒன்றாமல், துயரத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எளிதாக செய்யக்கூடிய செயலில்கூட அவன் வெற்றி பெற முடியாமல் தடுமாற்றம் அடைகிறான். எனவே, மனதை எப்போதும் ஒரே நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

* மனம் விழித்திருக்கும்போது பல நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்து அலைபாய்கிறது. அது துõங்கும்போது கூட வேறு விதமாக செயல்பட்டு, தான் விரும்பி நடக்காத செயல்களை, கனவு பிம்பமாக கண்டு மகிழ்கிறது. மனதை அமைதிப்படுத்த இறைவனிடம் பக்தி செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

* மனிதன் எப்போதும் தன் மனதுடன் ஒரு தொடர் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறான். மனப்போராட்டம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதியே என்னும் அளவிற்கு, மனம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இப்படியாக உருவம் இல்லாத மனம் ஒவ்வொருநாளும் நடத்தும் போராட்டத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். முதலில் அது கடினமாக தெரிந்தாலும், பின்பு சரியாகி விடும்.
அடுத்தவர்களுக்காக செலவிடுங்கள்

* பணத்தின் மீது ஆசை கொள்ளாதிருங்கள். பணஆசையே பல தவறுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இன்று உங்களிடம் இருக்கும் செல்வம் நாளை வேறு ஒருவரிடம் சென்று விடும். நிலையற்ற செல்வம் மீது விருப்பம் இல்லாமல் வாழுங்கள். உங்களது அத்தியாவசிய தேவைக்கான செல்வத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ அது மட்டுமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். செல்வம் உங்களிடம் இருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே நன்மைதரும். செல்வத்தை வேண்டாம் என்று ஒதுக்குவது ஒருவகையில் அறிவான செயலும் ஆகும்.

* உங்களிடம் இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்கு செலவிடுங்கள். அதை கையிலேயே வைத்து கொண்டிருக்காதீர்கள். எந்த நற்செயலை செய்வதற்கு பயன்படாத செல்வம் இருந்தும் இல்லாதது போலத்தான். செல்வத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் செல்வத்தை அடுத்தவர்கள் பயன்படுத்துவதற்காக கொடுப்பது உங்கள் மனதில் இருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.

* செல்வத்தால் அனைத்தும் கிடைப்பதாக எண்ணி போலியாக வாழ்பவர்கள் உண்மையான வாழ்க்கையை பார்ப்பதே இல்லை. பறவைகள் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் வலையை பார்க்காமல், தானியத்தை எடுக்கச்சென்று சிக்கிக்கொள்வது போல, இவர்களும் ஆசைகளில் சிக்கி, உண்மை வாழ்க்கையை பார்க்காமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செல்வத்தின் மீதான பற்றை துறப்பவர்கள் நல்வாழ்க்கை காணலாம்.
செயல்பாட்டில் அதிக கவனம் வேண்டும்

* குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பு தேவை என விரும்புகிறீர்கள். அதற்கு நெருப்பு அவசியம். நெருப்பு வேண்டும் என்பதற்காக நீங்கள் நெருப்பை உடலில் வைத்துக்கொள்வதில்லை. நெருப்பின் அருகில் மட்டும் அமர்ந்து கொள்கிறீர்கள். அப்போது நெருப்பின் தாக்கத் தால் உடல் சூடாகிறது. இதனால், குளிரும் தணிகிறது. இதைப்போலவே, நீங்கள் குருவிடம் பாடம் கற்கும்போது அவருக்கு அருகில் கேட்க வேண்டும். இதனால், உங்களுக்குள் கூடுதல் மாற்றங்கள் உண்டாகும். இவ்விடத்தில் அருகில் கேட்க வேண்டும் என்பது அவரை நெருங்கி அமர்ந்து கேட்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்லும் கருத்துக்களை மிகவும் ஒன்றி கேட்க வேண்டும் என்பது பொருள். எதிலும் சிரத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தோல்வி என்பதே வருவதில்லை.


* ஒரு லட்சியத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, மனதை லட்சியத்திலேயே நிலைநிறுத்தி செயல்படுங்கள். ஒரு சிறு கணத்தில் கூட நீங்கள் அதில் காட்டும் ஈடுபாட்டில் இருந்து விலகிவிடக்கூடாது. நீங்கள் அதனைப் பற்றி எப்போதும் நினைக்கும்போது, அதன் உண்மை நிலை நன்கு புலப்படும். மேலும் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றலாம் என்ற எண்ணமும் வெளிப்படும். மனம் எப்போதும் அதனையே எண்ணிக்கொண்டிருப்பதால், அதற்கு அதீத சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியே எப்போதும் உத்வேகத்துடன் செயல்பட்டு செய்யும் செயலுக்கு வெற்றியைத் தருகிறது
கவலையை மறக்க வழி

* இந்த உலகத்தில் கவலைகள் ஏராளம். அவற்றை நினைக்கும்போதே மனம் பகீரென்கிறது. அவற்றில் விஷசக்தி ஒளிந்து கிடக்கிறது. ஒருவனது முகத்திலுள்ள அழகையும், ஒளியையும், இளமையையும் இந்தக் கவலை எவ்வளவு சீக்கிரம் அழித்து விடுகிறது தெரியுமா? கண்களின் ஒளியைப் மாற்றி விடும் இந்தக்கவலை, உடலின் நிறத்தைக் கூட குறைத்து விடுகிறது.

* கவலையால் நெற்றியிலே வரிகள் உண்டாகின்றன. கன்னங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இனிய குரல் மாறி கரகரப்பான சப்தம் உண்டாகிறது. மார்பும், தோள்களும் பலமிழந்து விடுகின்றன. ரத்தஓட்டம் தடைபட்டு, உடலுக்குள் ஏதோ அழுக்குநீர் ஓடுவது போல் உணர்வு ஏற்படுகிறது.

* கவலைப்படும் ஒருவனின் கால்கள் தடுமாறுகின்றன. அந்த விஷப்பூச்சி சரீரத்தை உள்ளூர அரித்து விடுகிறது. அறிவை அழித்துவிடுகிறது. மறதியை உண்டாக்குகிறது. படித்தபடிப்பு பாலைவனத்தில் பெய்த மழையாகி
விடுகிறது.

* கவலைகள் மறைய மனதை இறக்கச் செய்ய வேண்டும். மனம் என்று மடிகிறதோ அன்று கவலைகள் அழிந்து விடும். கவலை என்ற அசுரர்களை பெற்றுத்தள்ளும் தாயே மனம். அந்த அரக்கியிடம் இருந்து என்று விடுபடுகிறோமோ, அன்று கவலையற்ற உலகம் எனப்படும் உபசாந்தி லோகத்தை அடையலாம்.

* மனதைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் விட்டுவிடக்கூடாது. கவலைகளை மறக்க மனதைக்கொல்ல வேண்டுமென்பதில்லை. இந்த உலக வாழ்க்கையை நமக்கு தந்ததே மனம் தான். மனதை நல்லதன் பக்கம் திருப்பினாலே போதும்.
நண்பர்களின் தவறை திருத்துங்கள்

* நீங்கள் எப்போதும் எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவர்களாக இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு பணி கொடுக்கப்பட்டால் அதனை சிறப்பாக செய்து முடியுங்கள். அதைவிடுத்து அச்செயலில் கவனம் செலுத்தாமலும், சரியாக ஈடுபாடு காட்டாமலும் இருக்காதீர்கள். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நீங்கள் மட்டும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக செயல்படாதவர்கள் மீது இறைவனும் நம்பிக்கை வைப்பதில்லை.


* நல்ல செயல்களையே செய்யுங்கள். நல்ல சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்துங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு நல்லவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு செயல் செய்வதால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து வைத்திருந்தாலும்கூட அதனை செய்வதால் நன்மைகள் உண்டாகுமா என நல்லவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் அச்செயலால் துன்பம் நேரலாம் என அவர்கள் கூறினால் அதனை அப்படியே கைவிட்டுவிடுங்கள். எந்த நிலையிலும் நல்லவர்கள் விரும்பாத செயல்களை மட்டும் செய்யாதீர்கள்.


* நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுங்கள். உங்களிடம் நட்புடன் பழகும் ஒருவர் தவறான பாதையில் சென்றால் அதனை சுட்டிக்காட்டி திருத்துங்கள். அதைவிட்டுவிட்டு அவரது வழியிலேயே நீங்களும் செல்லாதீர்கள். தீய வழியில் செல்லும் நண்பர்களை திருத்துவதுதான் உண்மையான நண்பர்களுக்கு அழகாகும்.
தெய்வம் இருப்பது எங்கே?


* பக்தியுடன் இருப்பவர்களின் மத்தியில்தான், நாத்திகம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். நாத்திகவாதிகளின் பேச்சைக்கேட்டு கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார் என சிலர் மனம் வருந்துகிறார்கள். அவர்கள் அப்படி பேசுவதும் இறைவன் செயல்தான். தர்மம் இருக்கும் இடத்தில்தான் அதர்மமும் இருக்கிறது. நாட்டில் அதர்மமான செயல்கள் நடக்காமல், தர்மம் ஒன்று மட்டுமே இருந்தால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும். அதனால் தான் ஆத்திகம் இருக்கும் இடத்தில் நாத்திகமும் இருக்கிறது.

* கடவுளுக்கு உண்மையாக சேவை செய்யப்படும் இடத்தில் அன்பு, சுயநலமின்மை, அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற அனைத்து மேலான நல்ல குணங்களும் இருக்கும். ஏனென்றால், அவ்விடத்தில் கடவுள் இருக்கிறார். ஆனால், சேவை செய்வதாக கூறி எதுவும் செய்யவில்லை என்றால் அங்கு நிச்சயமாக கடவுள் இருப்பதில்லை. அங்கே அனைவரும் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* ஒரு சிலர் மக்களை ஆளும் பதவியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பையோ ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்களால்தான் அனைத்தும் நடக்கிறது என்றும், தான் இல்லாமல் எதுவும் அசையாது எனவும் மார்தட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருப்பவர்கள் ஆவர். இந்த உலகம் கடவுளின் விருப்பப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவரே அனைத்தையும் இயக்குபவராகவும், இயங்குபவராகவும் இருக்கிறார்.
தோல்விக்கு காரணமும் இறைவனே!


* ஒரு சிலர் தாங்கள் செய்த செயல்களில் தோல்வி ஏற்பட்டுவிட்டால் மனம் கலங்கி சோர்ந்து விடுகிறார்கள். தான் எவ்வளவு கடின முயற்சி செய்து உழைத்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று மனம் சஞ்சலப்படுகிறார்கள். தங்களுக்கு இறையருள் கிடைக்கவில்லையே என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். இவ்வாறு நினைத்தல் கூடாது. வெற்றி இறைவன் அருளால் கிடைக்கிறது என்றால், தோல்வியும் அவன் அருளாலேயே கிடைக்கிறது. தற்போது இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் தோல்வி அடுத்தமுறை நீங்கள் வெற்றி பெறுவதற்கும், உங்களை மேலும் தயார்படுத்திக் கொள்வதற்குமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* இறைவன் பாரபட்சம் இல்லாத அன்பு செலுத்துபவர். இருந்தாலும், தன்னை எப்போதும் நினைத்துக்கொண்டும், தன் திருநாமங்களைச் சொல்லி வணங்கிக் கொண்டும் இருப்பவர்களிடம் அதிக அன்பு காட்டுகிறார். தன்னை வேண்டி செயலை துவங்குபவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர் உறுதுணையாக செயல்படுவார். எனவே, எந்த செயலைச் செய்தாலும் இறைவனை வேண்டிக்கொண்டு துவங்குங்கள். அவர் அருள் கிடைத்துவிட்டால் தோல்வி என்பதே இருக்காது.

* இன்பம், துன்பம் எது வந்தாலும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சிறு துன்பங்
களுக்காக அதையே எண்ணிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருக்காதீர்கள். குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன தரவேண்டும் என தாய்க்கு தெரியும். அதுபோல் ஆண்டவனும், நாம் கேட்காமலேயே அனைத்தையும் நிறைவேற்றி விடுவார்.
இறைவன் தரும் வாய்ப்பு

* உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே மூலாதாரமாக இருக்கிறார்.

* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு கண்டிப் பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.


* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ், தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும். இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன் வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்
உற்சாகமாக இருக்க வழி

* உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும் செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.

* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம் அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.


* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.

* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா' செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக உங்களது சக்தியை நடத்திக் காட்டுவது தான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள் விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்
இறைவன் வைக்கும் "டெஸ்ட்'

* அனைவரும் ஒரு நாள் இறைவனை அடைந்தாக வேண்டும். முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப இப்பிறவியை எடுத்துள்ளோம். அவற்றிற் கான பலன்களை அனுபவித்த பிறகு, மீண்டும் இறைவனை அடைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளும் இடம் தான் உலகம்.

* இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளை பரிசாக கொடுக்கிறான். சிலருக்குஅதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் பரிசைத் தருகிறான். தன்னிடம் பரிசு பெற்றவர்கள் பரிசை நேசிக்கிறார்களா அல்லது தன்னை நேசிக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக அவன் வைக்கும் சோதனைதான் அது. இதை புரிந்து கொண்டு இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். தன் மீது அன்பை செலுத்துபவர்களுக்கே இறைவன், "கருணை' என்ற பரிசைக் கொடுக்கிறான்.


* மூன்று வேளை சாப்பிடுதல், கொடுக்கப்பட்ட வேலையை செய்தல், சுய நலத்துடன் செயல்படுதல் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் பலர் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் இந்த உலகில் படைக்கப்பட்டும் வீணாக இருப்பவர்களே ஆவர். இறைவன் மீது பக்தியை செலுத்தி அவன் அருளைப் பெற முயற்சிப்பதே நிஜமான வாழ்க்கை.

* பெற்றோர் சொல் கேளாத குழந்தைகள் துன்பங்களையே அனுபவிக்கின்றனர். அதுபோலவே, கடவுளின் குழந்தைகளாகிய மக்கள் அவர் விரும்பியபடி நல்வழியில் செல்லாமல், தீய வழிகளில் சென்றால் தீமையை அனுபவிக்கிறார்கள். எனவே, இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும்.
அறிவை அலங்கரித்து கொள்ளுங்கள்

ஒருவன், மற்றொருவனால் அவமதிக்கப்படும்போது, அதை அவமதிப்பாக நினைக் காமல் இருக்கும் உயர்ந்த நிலையே மன்னிப்பு ஆகும். உங்களை அவமரியாதை செய்த ஒருவன், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு ஒன்றுமே நடந்துவிடவில்லை என்று எண்ணும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பக்குவத்தை உடையவர்கள் அனைவரிலும் உயர்ந்தவர் ஆவர். இவர்களே அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பர்.

சிறு குழந்தையை தூக்கி வைத்து விளையாடுகிறீர்கள். அப்போது குழந்தை உங்களை உதைக்கிறது. முடியைப் பிடித்து இழுக்கிறது. அதற்காக நீங்கள் கோபப்படுவதில்லை. மாறாக சந்தோஷப்படுகிறீர்கள். குழந்தை உங்களை வேண்டுமென்றே உதைக்கவில்லை என்பதை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் சந்தோஷம் வருகிறது. அதைப்போலவே, உங்களுக்கு தீங்கு செய்பவர்களையும் குழந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களின் அன்பிலேயே அவர்கள் முழுவதும் திருந்தி விடுவார்கள். நீங்கள் செலுத்திய அன்பையே உங்களிடமும் செலுத்துவார்கள்.

நீங்கள் உடலை அலங்காரம் செய்வதைவிட்டு அறிவை அலங்கரித்துக் கொள்ளுங்கள். அந்த அறிவினால் பலரது அன்பையும் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். தனக்கு துன்பம் இழைக்கப் பட்டிருப்பது நேரடியாக தெரிந்தாலும்கூட அதை மறப்தோடு, மன்னித்துவிடவும் வேண்டும். இதுவே உயர்ந்த குணமாகும்.
நல்ல சிந்தனை வேண்டும்

* கறந்த பால் உடனே தயிராவதில்லை. அது போல தீய செயல்களின் பலன்கள் உடனே தெரிவதில்லை. நீறு பூத்த நெருப்பு போல மறைந்து இருந்து, தீய செயல்கள் செய்தவனையே துன்பத்திற்கு ஆளாக்குகின்றன. பாவம் செய்தவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பம் அடைகின்றான். இரு உலகிலும் அவனுக்கு துன்பமே ஏற்படுகிறது.

* தீய செயல்களை செய்பவனுக்கு எதிரிகள் என யாரும் தனியாக இருப்பதில்லை. அவன் செய்த செயல்களே அவனுக்கு எதிரியாகும். அதுவே அவனை அழித்து விடும்.

* தீமை தரக்கூடிய செயல்களை செய்வது மிகவும் எளிது. ஆனால் நன்மை உண்டாக்க கூடிய செயல்களை செய்வது மிகவும் கடினம். நாம் செய்யும் செயல்களால் தீமை ஏற்படும் என தெரிந்தும், அந்த செயல்களை செய்யக் கூடாது. எப்போதும் நல்ல சிந்தனையும், நல்ல செயல்களும் மட்டுமே செய்ய வேண்டும்.

* சிறியவரோ, பெரியவரோ, யார் ஒருவர் பாவங்களை செய்யாமல் மனதை கட்டுப்படுத்துகிறாரோ அவரே துறவி. துறவி என்பவர் தனது குறைகளையும், தான் செய்யத் தவறிய செயல்களையும் மட்டுமே சிந்தித்து பார்க்க வேண்டும். பிறரது குறைகளை கவனிப்பது துறவியின் கடமை ஆகாது.

* தலையை மொட்டை அடிப்பதால் மட்டும் ஒருவர் துறவியாகிவிட முடியாது. ஆசைகளையும், கோபத்தையும் அடக்கி உண்மை பேசுபவனே துறவியாவான். அவன் தனக்குரிய சிறு உணவைக் கூட, பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் பெற வேண்டும்.

புத்தர்
அலை பாயாத மனம் வேண்டும்

* காய்கறி, பழங்கள் போன்ற சைவ உணவையே உண்ணுதல் வேண்டும். இதனால் பலவித நோய்களிலிருந்து உடல் காப்பாற்றப்படுகிறது. மனம் அமைதியடைகிறது.

* மனதை அலைய விடக்கூடாது. மனது அலைந் தால் ஆசை உண்டாகும். அதனால், தவறான செயல்கள் செய்ய தோன்றும். வாழ்க்கை நன்கு அமைய மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.

* சிறந்த சிந்தனையாளர்கள் எல்லாம் நாவடக்கம் உடையவர்களாக இருப்பர். நாவடக்கம் உடைய உயர்ந்த மனிதர்களிடம் உயர்ந்த கருத்துக்கள் வெளிவரும். நாவடக்கம் உடையவர்களை பிறர் பழித்து கூற மாட்டார்கள்.

* அடக்கம், கோபம், அகங்காரம் இல்லாதவன், காம இச்சை ஆகிய குணங்கள் இல்லாதவன், பிறரிடம் குற்றம் காணாதவன் "சான்றோன்' என போற்றப்படுவான்.

* பிறரை ஏமாற்றுவது என்பது மிகவும் கொடிய செயலாகும். அடுத்தவர் பொருளை, அவர்கள் கவனிக்காத நேரத்தில் அபகரிக்க நினைப்பது துன்பத்தை ஏற்படுத்தும்.

* அமைதியான தியானத்தால் அகந்தை அழியும். ஆசை பெருகாது. துன்பம் விலகும். இன்பம் பெருகும். இன்றைய ஆசை நாளைய அழிவிற்கு அடிப்படை.

* நல்லவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பிற்காலத்தில் பெரும் நன்மைகளைத்தரும்.

* கோபம் கொள்ளக்கூடாது. கோபம் வந்துவிட்டால் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு, மனிதன் மிருகம் போல செயல்படுகிறான்
உழைக்காதவனுக்கு நரகமே சொந்தம்

ஆசை இல்லாமல் போனால் துன்பமே கிடையாது. ஆசை என்பது எவ்வளவு கிடைத்தாலும் அடங்காதது. ஆசையை அடக்கிவிட்டால் இந்த பிறப்பிலேயே இன்பம் கிடைத்து விடும்.

உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவன், எதிலும் வெற்றி பெறுகிறான். பொது வாழ்க்கையாக இருந்தாலும், தனி மனித வாழ்க்கையாக இருந்தாலும் உழைத் தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.உழைக்க வேண்டும் என்ற நினைப்பு இல்லாதவனை நரகம் தன் பக்கம் இழுத்து கொள்ளும்.


செல்வம் சேர்க்க வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கலாம். அப்படி சேர்க்கக்கூடிய செல்வம் நியாயமான முறையில் சேர்ந்ததாக இருக்க வேண்டும். தன்னிடம் சேர்ந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் செல்வத்தை மேலும் மேலும் சேர்த்தால், செல்வம் அழிந்து விடும்.

காவி கட்டிக்கொண்டும், திருநீறு தரித்துக்கொண்டும், ருத்ராட்சம் அணிந்து கொண்டும் வாழ்வது அறவாழ்க்கை ஆகாது. பொறாமை, ஆசை, சினம், காமம், கடுஞ்சொல் ஆகியவற்றை ஒழித்து வாழ்வதே அறவாழ்க்கை ஆகும்.

பெரியோர் தீய குணமுள்ளவர்களைக் கண்டு பயப்படுவார்கள். ஆனால் சிறியோர் (அற்பர்) தீய குணங்கள் கொண்ட கூட்டத்தாரை தங்களது சுற்றமாக கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வர்.
கவலையிலிருந்து விடுதலை

கவலை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எதிர்பார்த்தது நடக்காமலோ, விரும்பிய பொருள் கிடைக்காமல் போனாலோ கவலை வந்து விடுகிறது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, உறவுகளில் ஏற்படும் விரிசல், பொருளாதாரத்தில் பிரச்னை, வயது முதிர்வு போன்ற பல நிகழ்வுகளை எண்ணி, மனம் ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு சிலர், யாராவது ஆறுதல் சொல்லும் வேளையில் மனம் அமைதியடைந்தது போல் இருப்பர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் கவலை தொற்றிக் கொள்கிறது.

கவலைகளை நீங்கள் மனிதர்களிடம் சொல்லி பயனில்லை. பிள்ளைகள் தங்கள் பிரச்னைகளை பெற்றோரிடம் சொல்வது போல, உங்களது கவலைகளை கர்த்தரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில், நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகள் என்பதை உணர்ந்து, அவரை பற்றிக் கொண்டு, கவலைகளை அவரிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவரே, அதற்கு தீர்ப்பு கூற முடியும்.


கவலையுடன் இருப்பவர்களை, கர்த்தர் அருகிலேயே இருந்து இரட்சிக்கிறார். இதையே பைபிள் வசனம், ""நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்,'' என்கிறது.

கர்த்தரிடம், ""உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ விடாதேயும்,'' என்று மனதார ஜெபியுங்கள். நிச்சயம் கவலைகளிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார்
என்ன நடந்தாலும் கலங்காதே

நாடகத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பவனையும், உண்மையில் பிச்சையெடுப்பவனையும் ஒப்பிட்டு பார்த்தால் இருவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள். ஆனால், பிச்சை எடுப்பவன் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்கிறான், நடிப்பவனோ நிர்பந்தத்திற்கு ஆளானவனாக இருக்கிறான். இவர்களில் பிச்சைக்காரன் சுதந்திரன், நடிப்பவன் கட்டுண்டவன் ஆவான். நீ கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், சுதந்திரமானவனாக இரு

நடந்ததையும் கடந்ததையும் எண்ணி வருத்தப்படாதே. அதேபோல செய்த நற்செயல்களைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிராதே. அதை நினைவில் கூட வைத்துக் கொள்ளக்கூடாது. செய்த செயல்களுக்கான பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும். நீ இல்லை என்று சொல்வதால் அவை இல்லையென ஆகிவிடாது. அதே சமயம் அச்செயலை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்பு செய்த தவறுக்கு கிடைக்கும் பலன்களை துணிவுடன் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தீய செயல்களை புறக்கணி. அவற்றை மீண்டும் ஒரு போதும் நினைக்காதே. மூட நம்பிக்கையை விடு. மரணமே எதிர்வந்தாலும் பலவீனம் அடையாதே.

எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார். அவ்வாழ்க்கையில் நீ, மற்றவரிடமிருந்து உதவி பெற முயற்சி செய்ததும், அது கிடைக்காமல் போன நிகழ்வுகளும்தான் இருக்கும். நீ பெற்ற உதவி, உனது சுயமுயற்சியால் கிடைத்ததாகத்தான் இருக்கும்.

கடவுளின் கணக்கு புத்தகம்

மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நாவை அடக்கிக் கொண்டு செயலாற்ற வேண்டும். மவுனம் அந்தளவுக்கு நல்ல விஷயம். ஆனால், இதற்குரிய மன அடக்கத்தை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. அதற்கு நிறைந்த பொறுமையும் பயிற்சியும் தேவை.

உண்மையை நாடுவோர் மவுனமாய் இருக்க வேண்டும். நாவடக்கம் உள்ளவன் யோசிக்காமல் பேசமாட்டான். பேசும்பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்தே உபயோகிப்பான். மிகைப்படுத்தி கூறுவதும், உண்மையை மாற்றுவதும், மறைப்பதும் மனிதன் இயற்கையாகச் செய்யக்கூடிய தவறுகளில் சேர்ந்தவை. அந்தத் தவறுகள் வராமல் இருக்க மவுனம் அவசியம். கோபத்தை அடக்குவதற்கும் இது சிறந்ததொரு சாதனம்.

பேசாமல் இருப்பது மட்டும் மவுனமாகாது. பேச சக்தியிருந்தாலும், அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருக்க வேண்டும். உண்மையைத் தேடுவோருக்கு மவுனம் பெருந்துணையாகும்.

ஒவ்வொருவரும் நற்செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். கடவுளின் கணக்கு புத்தகத்தில் மனிதர்களின் செயல்கள் மட்டுமே இடம்பெறுகிறது. ஆகவே, செய்யப்படும் செயல்கள் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். நற்செயல்கள் செய்ய வேண்டுமெனில், சத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்தை பேணுபவர், அமைதியானவராக இருக்க வேண்டியதும் அவசியமாகும். அமைதியுடன் இருப்பவர்களே தங்களது செயல்களில் வெற்றி காண்கின்றனர். சாதனையாளராகவும் உருவெடுக்கின்றனர்.
சைவ உடை அணியுங்கள்

பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமான வாழ்க்கை வாழக்கூடாது. பணம் இல்லாத ஏழைகள் எப்படி எளிமையாக வாழ்கிறார்களோ, அந்த வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும். அந்த வாழ்க்கையும் ஆத்மவிருத்திக்கு நன்மை தரக்கூடியதாகவே இருக்க வேண்டும். அதுவே, அனைத்து நிலைகளிலும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று ஒவ்வொன்றின் மீதும் ஆசைப்பட்டு ஆளாய் பறந்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் ஆசையில்லாதவர்களாக இருந்தாலும், உங்களுடன் இருப்பவர்களும் ஆசையில்லாமல் இருப்பவர்களாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வரம்புமீறி சென்றாலும், எளிமையான வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். உங்களது எளிமையே, அடுத்தவர்களும் எளிமையாக வாழ்வதற்கு துõண்டுகோலாக இருக்க வேண்டும்.

பெண்கள் பட்டு, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிகப்பற்று வைக்கின்றனர். அதனை மிகவும் விரும்புவதற்கேற்ப எந்த இன்பமும் அதில் இல்லை. லட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்றுதான், ஒரு பட்டுப்புடவையை தயாரிக்கிறார்கள். பல உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரு வஸ்துவினால், நமக்கு எப்படி இன்பம் கிடைக்கமுடியும். உணவில் சைவம் என்று மட்டும் இருந்தால் போதாது. உடுத்தும் உடையிலும் சைவம் இருக்க வேண்டும்.பெண்கள் ஆடம்பர செலவுகளைக்குறைத்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் உள்ளவனே உயர்ந்தவன்

நீங்கள் பல நூல்களை படிப்பதைவிட, ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேல் . ஒருவரது ஒழுக்கம் அவரது வாழ்க்கைக்கு உயர்வைத் தரும். அதேபோல் உலகம் முழுவதும் ஒழுக்கத்துடன் நடந்தால் சாந்தி நிகழும்.

நமது நடை, உடை, செயல், பழக்க வழக்கம் எல்லாமே ஒழுங்காக அமைந்தால் தான் உயர்ந்தோர் உள்ளங்களில் இடம் கிடைக்கும். நீங்கள் பல நூல்கள் கற்றும், பண்பில்லாமல் இருந்தால், உங்களைவிட கல்வி அறிவில்லாமல், ஒழுக்கத்தோடு இருப்பவன் உயர்ந்தவனே ஆவான். கல்வியைப் பயின்று, ஒழுக்கத்தைக் கைவிட்டவன், நூல் அறுந்த, வால் மட்டும் மிஞ்சிய பட்டம் போன்றவன்.

இறைவன் நமக்கு உடலைத் தந்தபோது, அது ஒரு துõய்மையான இரவல் பாத்திரமாகவே இருந்தது. அதை அவனிடம் திருப்பிக் கொடுக்கும் போதும் அதே துõய்மையுடன் தரவேண்டும். மயிலின் முட்டையைக் கோழி அடைக்காத்தாலும் குஞ்சு பிறக்கும் போது மயிலாகத்தான் இருக்கும். அதேபோல் உங்களிடம் தெய்வீகத் தன்மை இருந்தால், எவரோடு சேர்ந்தாலும் துõய்மையானவராகவே இருப்பீர்கள்.

உங்களது நடத்தை நன்னடைத்தையாக வேண்டும். செல்வம் குறைந்திருந்தாலும், ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வானவையாக கருதப்படுகின்றன. அக்குடும்பங்களுக்கு பெரும்புகழ் தானாக வந்து சேரும். முள்ளிலே பிறந்து, முள்ளோடு மலர்ந்த தாழம்பூவுக்கும் மணம் உண்டு. அதுபோல, பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும், ஒழுக்கம் இருப்பவன் உயர்வானவனாக கருதப்படுவான்.
நல்ல எண்ணமே வெற்றி தரும்

ஒழுக்கம் என்றால், சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ அடக்குமுறை என்றும், ஆனந்தம் இல்லாத வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள். இது தவறாகும். ஒழுக்கமுள்ள மனம் கட்டுப்பாடுடன் இருப்பதுடன், நல்லதை மட்டுமே நினைக்கும். நல்லதை நினைக்காத மனமுடையவர்களால் நிச்சயமாக ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

எண்ணத்தில் கட்டுப்பாடும், ஒழுக்கமும் வந்துவிட்டாலே ஒருவருக்கு எல்லாமும் கிடைத்துவிடுகிறது. ஒருவர் பெறும் வெற்றியானது, அவரது எண்ணங்களுக்கு கிடைக்கும் வெற்றியாகவே அமைகிறது. சுத்தமான எண்ணத்துடன் இருப்பவர்களின் மனம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்.

ஒருவர் தன் வாழ்க்கையில் அடையும் எந்த சாதனையும் ஒழுக்கத்ததைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சரியாக செயல்படும் ஒருவர் வெளியில் யாருக்கும் பயப்படவோ, அவர்களது உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நடக்கவோ தேவையில்லை. சுயமாக முடிவெடுத்து, தன் விருப்பப்படியே செயல்படலாம். இத்தகையவர்கள் எடுக்கும் முடிவுகளும் தவறாக இருக்காதென்பதால், யாரும் அச்சம் கொள்ளவும் தேவையில்லை.

ஒழுக்கம், தியானம் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. தியானம் செய்யும் மனம் அமைதியடைகிறது. அமைதி இருக்கும் இடத்தில் ஒழுக்கம் வந்து விடுகிறது. இவ்விரண்டும் இருப்பவர்களின் மனம் தெளிவானதாக இருக்கிறது.
நல்ல பேச்சுக்கு அனைத்தும் சொந்தம்

* ஒவ்வொருவரும் தங்கள் தன்மையை வெளிப்படுத்த உதவும் பிரதான கருவியாக பேச்சு இருக்கிறது. ஒருவரது பேச்சில் இருந்தே அவரது குணநலனை அறிந்து கொள்ளலாம். பேச்சு நல்ல கருத்துக்களை உடையதாக இருக்க வேண்டும். சிறப்பாக பேசும் திறனுடையவர்கள் சிறந்த மனிதர்களாக திகழ்வர். அவர்களுக்கு அனைத்துமே சொந்தமாகிறது.

* சிலர் பேசும் முன்பாக, எப்படி பேச வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்றது. உள் மனதின் தன்மை எப்படியிருக்கிறதோ, அதற்கேற்பவே பேச்சும் அமையும். ஆகவே, மனதை அன்பாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். உள்மனதில் கவனம் கொள்ளாமல், வெளியே நன்றாக பேசவேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும் அது சரியாக அமையாது.

* ஒவ்வொருவரும் மற்றொருவருக்காகத்தான் பேசுகின்றனர். அத்தகைய பேச்சின் சாராம்சம் கேட்பவருடைய நலனை கருத்தில் கொண்டதாகவும், அவர்களது மனம் புண்படாத படியும் இருக்கவேண்டும். அர்த்தமற்ற, அன்பில்லாத பேச்சால் யாருக்கும் நன்மை விளையப்போவதில்லை.

* பேச்சுக்கு என வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு பேசும் பேச்சானது நோக்கம் இல்லாததாகத்தான் இருக்கும். சிலநேரங்களில் அதுவே பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்து விடலாம். ஆகவே, சூழ்நிலைக்கு தக்கபடி பேசுவதும், செயல்படுவதும் நல்லது.

மன' யானையை கட்டிப்போட வழி

* சாணத்தில் உதிக்கும் புழுவை, பத்திரமாக எடுத்து, சந்தனக் கலவையில் வைத்தால் அது செத்துவிடும். அதுபோல கயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்தாலே அதை மிகப்பெரிய துன்பமாகக் கருதுவர்.

* ஈயானது மலத்திலும் உட்காரும். உணவுப் பொருளிலும் உட்காரும். அதுபோல், சபல குணமுடைய மக்கள் நல்லது கெட்டது என்று வித்தியாசம் பார்க்காமல் இரண்டையும் மாறிமாறிச் செய்கின்றனர். அப்படி இல்லாமல் தேனீ போன்று நல்லதையே நாடி, நல்லதையே செய்தால், இறைவனுக்கு சொந்தமாவோம்.

* செல்வ செழிப்பில் மனதைப் பறிகொடுக்காமல் அருட்செல்வமான தெய்வத்திடம் மனதைப் பறிகொடுங்கள். பொருளிடம் வைக்கும் பற்று, தெய்வ நட்பை புறக்கணித்துவிடும்.

* நுõலின் இழைகளைச் சிறுகச் சிறுக வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து முறுக்கலாம். அவ்வாறு முறுக்கிய கயிற்றினால் ஒரு பெரிய யானையைக் கூட கட்டலாம். அதுபோல சிறிய அறிவுரைகளாக இருந்தாலும், அதை கேட்க கேட்க அவ்வப்போது கடைப்பிடித்து வந்தால், மனம் என்ற யானையையே கட்டிப் போட்டு விடலாம்.

* பழக்கம் இல்லாது ஒரு வேலையை ஆரம்பத்தில் செய்யும்போது சிறிது தட்டித் தடுமாறிச் செய்ய வேண்டியிருக்கும். நாளடைவில் அதே வேலை சர்வ சாதாரணமாய் ஆகிவிடும். அதேபோல் நல்ல எண்ணம் மனதுக்குள் நுழைய கஷ்டப்படுகிறது. பழக்கத்தால் அதை மனதுக்குள் எளிதாக நுழையும்படி செய்யலாம். நாளடைவில் நல்லெண்ணங்கள் உடலில் ஊறி, கெட்ட எண்ணங்கள்
உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை
விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண
காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே
இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே
மூலாதாரமாக இருக்கிறார்.
* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக
தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை
தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு
நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு
கண்டிப்பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.
* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ்,
தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான
கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு
என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு
கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும்.
இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே
கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன்
வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.
உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு
விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம்
காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை
விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள
பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும்
செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.
* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம்
அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும்
சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து
உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.
* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு
என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.
* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து
கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா'
செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக
உங்களது சக்தியை நடத்திக்காட்டுவதுதான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள்
விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்.
கவலை அகல தியாகம் செய்

* நீ துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்றால் உன்னிடமுள்ள பாவங்களைப் போக்கிக் கொள். அப்பொழுது, உனக்குள் எங்கும் நிறைந்த ஸ்வரூபமான கடவுளை உணர்வாய். தீய செயல் உன்னிடம் இருக்கும் வரை மன அமைதி இருக்காது. மன அமைதி இல்லாதவர்களால் ஒருநாளும் தனக்குள் இருக்கும் இறைவனைக் காண இயலாது. உனக்கு, முதலில் வேண்டியது உள்ளத் தூய்மையாகும்.

* மனம் போன போக்கில் போகிறவர்கள், கட்டுப்பாடில்லாத மிருகங்களாகவே மறுபடி பிறப்பார்கள். சாஸ்திரத்தில் சொன்ன கட்டுப்பாட்டுடன், யார் மனம் இருந்து வருகிறதோ அவர் பயமின்றி இருக்கலாம். உனது மறுபிறவியை நீ உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்.


* ஆடுமாடுகள் கூட தனக்குண்டான பரிசுத்த உணவையே உட்கொள்கிறது. மனிதனுக்கோ கடவுள் நல்ல பகுத்தறிவுடன் கூடிய உடலை கொடுத்திருக்கிறான். அந்த பகுத்தறிவால் தீயது செய்யாமல் நல்லவற்றை செய்தால் இறைவன் உன்னுள் குடியேறுவான்.

* நீ புண்ணியம் செய்துள்ளதற்கு அடையாளம் உனது உள்ளம் துõய்மையாய் இருப்பதேயாகும். உள்ளத்தூய்மை இல்லையென்றால் அதுவே நீ செய்த பாவத்திற்கான அடையாளமாகிறது. நீ தூய்மையாக இருப்பதற்கு ஒரே வழி அனைத்தையும் தியாகம் செய்வதாகும். தியாகம் செய்தால் கவலை அகன்று விடும்.

நன்கு சிந்திக்க நல்ல சிந்தனை,நல்ல ஒழுக்கம்,நல்ல பன்பு,எளிமை, ஆஹா அற்புதமான தொகுப்பு ஒருசேர தொகுத்துஅளிக்கும் அய்யாவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது அய்யாஅவர்களுக்கு நிச்சயம் புன்னிய பலன் கிட்டும்

ஒருவன் வாழ்நாள் முடிந்து எமலோகம் சென்றானாம் அப்போது எம தர்மராஜா சொன்னாராம் உனக்கு மோட்சம்
என்றாராம், அவனோ அய்யா நான் வாழ்நாளிள் எந்த ஒரு தர்மமோ புன்னியமோ செய்யவில்லை எனக்கு எப்படி மோட்சம் என்று வினவினான், அதற்க்கு எமதர்மராஜா கூறினார் ஆம் உன்மைதான் நீஎந்த தர்மமும் செய்யவில்லை ஆனால் வழிபோக்கன் ஒருவன் உன்னிடம் குடிக்க தன்னீர் கேட்டான் உன்னிடம் நீ அவனுக்கு தன்னீர் கொடுக்கவில்லை மறாக அவனுக்கு அங்கு செல் தன்னீர் கிடைக்கும் என்று அவனுக்கு வழிகாட்டினாய் அந்த புன்னிய பலனின் காரனமாக உனக்கு மோட்சம் வழங்கினேன் என்று எமதர்மராஜா கூறினாராம் அவன் சற்று சிந்தித்தான் இதற்கே மோட்சம் என்றால் தர்மம் செய்திருந்தால் இன்னும் அதிகபலன் அல்லவா கிடைத்திருக்கும் மனதில் நினைத்து கொண்டானாம்
உடலை சேவைக்கு அர்ப்பணிப்போம்

*இதயப்பூர்வமாக செய்யும் பிரார்த்தனைகள் அற்புதங்களைச் செய்ய வல்லமை பெற்றதாகஇருக்கிறது. அத்தகைய பிரார்த்தனையை கடவுள் மிக விரைவாக ஏற்றுக்கொள்கிறார். ஆகவே, இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். துõய எண்ணங்களை வரவேற்கவும், தீய சிந்தனை, போதனைகளை எதிர்க்கும் துணிவுடையதாகவும் இருக்கும் இதயமே பரிசுத்த இதயம் ஆகும். நீங்களும் உங்கள் இதயத்தை துணிவுடையதாக வைத்துக் கொள்ளுங்கள்.

* வயிற்றுக்கு உணவு இல்லாதிருப்பவர்கள், பசியை எண்ணி வருந்த தேவையில்லை. கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுக்கான தேவைகள் கிடைப்பதற்கு அவர் அருள் செய்து விடுவார். ஏனெனில், பசியால் வாடுபவர்களுக்கு கடவுளே உணவாக இருக்கிறார்.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான உடலைத்தான் கொடுத்திருக்கிறார். அந்த உடலை கடவுளுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுத்தவேண்டுமே தவிர, சுகங்களை அனுபவிக்கும் வழியில் ஈடுபடுத்தக்கூடாது. உடல் சுகம் என்பது மரணத்திற்கு ஒப்பானது ஆகும். உங்களது உடலை கடவுள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

* வெளிப்பொருட்கள் மீது நாட்டம் வைக்காமல், புலன்களை அடக்கி வையுங்கள். அதனை அடக்குவதற்கு விரதம் இருங்கள். இத்தகைய விரதம் ஆன்ம வளர்ச்சியை அதிகரிக்கும் சாதனமாகவும், உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை துõய்மைப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்
வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக்கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.

* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.

* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்
பக்தியின் அடிப்படை சத்தியம்

* ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணம் எங்கு செல்கிறது என்றே தெரியாமலேயே சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லையற்ற வாழ்க்கை எவ்விடத்திலும் முடிவுறப்போவதில்லை. ஆகவே, உங்கள் பயணம் ஆன்மாவைத் தேடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் ஆத்மாவை அறிந்து கொள்கிறீர்களோ, அவ் விடத்தில் பயணத்தை முடித்துவிடுங்கள்.

* அழகான பொருட்களைக் காணும்போது மகிழ்ச்சி கொள்ளும் மனம், அது அழியும்போது துன்பப்படுகிறது. இது தேவையில்லாதது. அழகான பொருளால் தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டுமே தரமுடியும். நிரந்தரமான பொருளால் மட்டுமே, நிலையான மகிழ்ச்சி கிடைக்கும். உலகில் கடவுள் ஒருவரைத்தவிர, நிரந்தரமான பொருள் என்று எதுவுமே கிடையாது. ஆகவே, கடவுள் மீது பக்தி கொண்டு, அவரை அடைந்து நிரந்தர இன்பம் காணுங்கள்.

* காலைவேளையில் ஒரு செடியில் ரோஜா மலர்கிறது. அதனை பார்க்கும்போது மனம் மகிழும். மறுநாள் காலையில் அதே மலர் இதழ்களை உதிர்த்து குச்சியாக நிற்கும்போது, முன்பிருந்த மகிழ்ச்சி இருப்பதில்லை. நாம் மகிழ வேண்டும் என்பதற்காக ரோஜா, உதிராமல் அப்படியே இருப்பதில்லை. அது தன்னிலையில் எப்போதும்போல் செயல்படுகிறது. ஆகவே, தற்காலிக இன்பம் தரும் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள்.

* சத்தியமே பேச வேண்டும். சத்திய வழியில் நடக்க வேண்டும். அதுவே பக்திக்கு மிகவும் அடிப்படையான விஷயம்.
பிறவிப்பயன் அடைய வழி

தனித்திருக்கும் ஒன்றாகத் தோன்றினாலும், "அலை' என்ற தனிப்பெயரைப் பெற்றிருந் தாலும், அலையானது, கடலை ஆதாரமாகக் கொண்டு, பிரிக்க முடியாதபடி செயல்பட்டு, மீண்டும் கடலையே அடைகிறது. இதைப் போலத்தான் மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. இன்பம் வரும்போது சிரிக்கிறார் கள், சிறிய துன்பத்திற்கு கூட கலங்குகிறார்கள், புரியாத சில கேள்விகளுக்கு விடை தேடி அங்கும் இங்குமாக அலைகிறார்கள்.

இறுதியில் எதுவுமே புலப்படாமல் வந்த இடத்திற்கே சென்று விடுகிறார்கள். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் இறுதிக்காலத்தில் பரமானந்தமாகிய இறைவனைத்தான் அடைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் மீது நாட்டம் செலுத்துங்கள். அதுதான் பிறவிப்பயன் அடைய வைக்கும் வழியாகும்.

அறிவுமயமான இறைவன் எந்த இடத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கும் அவர், உங்களை எந்த நேரத்திலும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் தான் உங்களது அறியாமையால் அதனை உணராமல் இருக்கிறீர்கள். அத்தகையவரை அடைய வேண்டுமென நினைப்பவர்கள் பக்தி ஒன்றைத்தவிர வேறெதையும் செய்ய வேண்டாம். அவரைத்தேடி வெளியில் அலைய வேண்டும், அவரோடு பேச வேண்டும் என மிகச்சிறிய வேலையைக்கூட செய்யத் தேவையில்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஏனென்றால் அமைதி மட்டுமே உண்மையாகும். இந்த உண்மையை உணருபவர்கள் இறைவனை அடைவது நிச்சயம்.
மிகவும் கவனமாக இருங்கள்

* மனிதர்கள் அனைவருக்கும் கவனத் தன்மையும், ஒருமுகப்படுத்தும் திறனும் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே எடுத்த செயலில் வெற்றி காண்கின்றனர். ஒருவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவோ, மேதையாகவோ இருக்கிறார் எனில் அது அவரது ஒருமுகப்படுத்திய தன்மையாலேயே சாத்தியமாகிறது. ஆகவே, மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம்.

* வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டுமென செயல்படுபவர்கள், முதலில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கென பெரியளவில் செயல்படத் தேவையில்லை. சிதறிக்கிடக்கும் உணர்வுகளை ஒரே முனையில் கொண்டு சேர்த்தாலே போதும். கவனம், உணர்வு நிலை இவ்விரண்டையும் ஒன்றாக்கி செயல்படும்போது, வேறெந்த சக்தியாலும் வெல்ல முடியாத அளவிற்கு அது பலன் பெற்று விடுகிறது.


* பலவீனமானவர்கள் கூட, சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம், எளிதில் பலசாலிகளாக மாறிவிடலாம். ஒரு குறிப்பிட்ட யோசனை உங்கள் மனதில் தோன்றும் போது, உடனே அதை செயல்படுத்திவிட வேண்டும். மாறாக அதன் மீது கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அதைவிட வேறு அறிவற்ற செயல் இருக்க முடியாது. அத்தகைய அறிவை பெறுவதற்கு கவனத்தை ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம்.

* மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்யுங்கள். தியானம் மூலம் அமைதி உண்டாகும். அமைதி இருக்குமிடத்தில் மனமும் ஒருமுகப்படும். அந்த நிலையில் செய்யும் செயல்கள் எளிதில் வெற்றி கண்டுவிடும்.
பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?

* கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியை, ஒரு முக்கோணமாக உருவகம் செய்து கொள்ளலாம். இதில் முதல் கோணம் பேரம் பேசாத தன்மை, இரண்டாவது பயம் இல்லாத தன்மை, மூன்றாவது போட்டியிடாத குணம், இம்மூன்றுமே பக்தியின் அடிப்படை குணங்களாகும்.

* இறைவனிடம் ஏதேனும் எதிர்பார்த்து செலுத்தும் பக்திக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில், நிச்சயமாக அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் பக்தியும் இருப்பதில்லை. கடவுள் தன் மீது பிரதிபலன் பார்க்காத பக்தியையே விரும்புகிறார். ஆகையால், அவர் மீது பரிபூரணமான அன்பை மட்டும் செலுத்துங்கள்.


* பயம் காரணமாகவும், இறைவன் மீது பக்தி செலுத்தக்கூடாது. இத்தகைய பக்தி உடையவர்கள் மனித இயல்பே இல்லாதவர் ஆவர். இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சவுக்கும், மறு கையில் செங்கோலும் ஏந்திய தலைவனாகவே தோற்றமளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு அடிபணியாவிட்டால், அவர் தண்டனை கொடுத்துவிடுவார் என்று பயந்து வணங்குவது மிகவும் இழிவான செயலாகும். அச்சம் இருக்குமிடத்தில் அன்பு இருக்கவே முடியாது. அன்பு இல்லாத பக்தியும் பக்தியே கிடையாது.

* கடவுள் மீது பக்தி கொண்டவர்கள், தங்களது லட்சியமே ஒன்று திரண்டு வந்ததாக கருதி அன்பு செலுத்த வேண்டும். இத்தகைய பக்தியுடன் போட்டியிடுவதற்கு வேறெந்த சக்தியும் கிடையாது. இதை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

என்றும் உண்மையே பேசுங்கள்

* எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். அப்பொழுதுதான் உண்மையின் ரூபமாகிய இறைவனை காண முடியும். இறைவனிடம் உள்ளப் பூர்வமான பக்தி கொள்ள வேண்டும். அலுவலகத்திலும், வியாபாரத்திலும் உண்மை நெறி தவறக்கூடாது. கபட வேஷத்தையும், ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு உண்மையே பேசினால் கடவுளைக் காணலாம்.

* ஒரு மனிதனுக்குக் கடன் அதிகமாகிவிட்டது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டான். வைத்தியனால் குணமும் அடையவில்லை. கடைசியில் கெட்டிக்கார வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டான். அந்த போலிப் பைத்தியத்தைத் தனியாக அழைத்துச் சென்று ""அடேய்! நீ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்! பைத்தியமாக நடித்துக் கொண்டிருந்தால், உண்மையாகவே உனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இப்பொழுது உன்னிடம் பைத்தியத்திற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஜாக்கிரதையாக இரு!'' என்று எச்சரித்தான். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்துபோய் பைத்தியமாக நடிப்பதை விட்டுவிட்டான். எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே ஆகவேண்டும்.


* பொய், அனைத்தையும் விட கெட்டது. பொய் வேஷம் போடுவதும் கெட்டதே. ஒருவன் பொய் பேசுவதில் விருப்பம் கொண்டால், பொய்யின் மேலுள்ள பயம் அவனுக்குப் போய்விடும். வாய்மையே வெல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

* நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

* நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக "தர்மம்' இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

* அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.
எல்லாரிடமும் குறைபாடு உண்டு

* உணவுக்கு ஆசைப்படும் எலி, பொறியில் அகப்பட்டு தவிப்பதுபோல, மாயையான ஆசைகளை விரும்பி அதில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆசையில் சிக்கிக்கொண்டவர்கள் பொறாமை, கர்வம் போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதனால் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடுகிறது. நீங்கள் சொர்க்கத்தில் வாழ இக்குணத்தை விட்டுவிடுங்கள்.

* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும்.

* ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் குறைந்தவனாகவே இருப்பான். இதுவே, இயற்கை நியதி. எனவே, கற்றவர் கல்லாதவரையும், பணக்காரர்கள் ஏழையையும் இழிவாக நடத்துவது தவறானது.

* தனது விருப்பப்படி செயல்படும் ஒருவர், அச்செயலால் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் இன்பத்துடனேயே ஏற்றுக்கொள்வார். ஏனெனில், அவர்தான் அந்த துன்பத்திற்கு முழு பொறுப்பாளி ஆகிறார். இவ்வாறு செயல்படுவர் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார். மற்றொருவர், சுற்றத்தாரின் விருப்பப்படி செயல்களை செய்து அதில் இன்பங்களையே பெற்றாலும், அவர் அடிமையாகவே இருக்கிறார். நீங்கள் சுதந்திரம் பெற்றவர்களாகவே இருங்கள்
நல்ல நூல்களைப் படியுங்கள்

* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நுõல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.
கடவுளின் மறுஉருவம்

மனிதர்கள் ஒவ்வொருவரும், பிறர் மீது அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கும் உதவாத வகையில் பேசிக்கொண்டும், பிரச்னைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. அன்பு ஒன்று மட்டும்தான், மனிதர்களை ஒருவரோடு ஒருவர் பிணைக்கும் அற்புத சக்தியாகும். ஆகவே, அனைவர்மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள்.

தன் மீது அன்பு செலுத்துவதற்கென யாரும் இல்லாதவர்கள், உலகிலுள்ள நோய்களில் எல்லாம் கொடிய நோயை அனுபவிப்பவர்கள் ஆவர். அந்த நோய்க்கு அன்பை விட, வேறு மருந்துகள் எதுவும் கிடையாது. அவ்வாறு ஆதரவில்லாமல் இருப்பவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது பாசம் வைத்து பரிவுடன் நடந்து கொள்ளுங்கள். அதுவே, அவர்களது நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இருக்கும். ஏனெனில், அன்பினால் செயல்படுத்த முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.


ஏழைகள் கடவுளின் மறு உருவமாக இருப்பவர்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். அதோடு, உங்களது உழைப்பும் அவர்களுக்கானதாகவே இருக்கட்டும். அத்தகைய உழைப்பு, கடவுளுக்காக செய்யும் உழைப்பு ஆகும்.

உள்ளத்தில் அன்பும், கருணையும் இல்லாமல் வெளியே அன்பாக இருப்பதுபோல வெறுமனே காட்டக்கூடாது. அத்தகைய சேவையால் பயன் ஏதும் கிடையாது. உங்களது சேவை மனதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும்.
நல்லவர்களுடன் சேருங்கள்

தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.


ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.

ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.
அழிக்க வரும் மூச்சுக்காற்று

கடவுள், உங்கள் மூச்சிற்குள் மூச்சாகவும், உயிரின் உயிராகவும் இருக்கிறார். மலர்களில் வாசம் போல, உங்கள் இறைவன் உங்களுக்குள்ளே இருக்கிறார். கஸ்துõரிமான் தன் நாபியிலுள்ள கஸ்துõரி மணத்தைப் புல்லில் தேடுவது போல், நீங்கள் அங்கும் இங்கும் இறைவனை தேடாமல் உங்களினுள் உள்ள இறைவனை காண முயற்சி செய்யுங்கள். கடவுளை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. தெய்வத்தன்மையுள்ள மனிதர்களையாவது நம்புங்கள்.

உங்கள் தேவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை அடைவதற்கு கெட்டவர்களின் உதவியை நாடாதீர்கள். ஏனெனில், அது எதாவது ஒரு வகையில் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். நல்லவர்களின் உதவியை நாடுங்கள். அது நிலையான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் பலம் குறைந்தவர்களை அவமதிப்பதோ, தொந்தரவுக்கு உள்ளாக்குவதோ கூடாது. ஏனெனில், நீங்கள் கொடுக்கும் தொந்தரவால் ஏற்படும் மனக்கஷ்டத்தை வெளிப்படுத்தாமல், அவர்கள் அடக்கி வைப்பதால் ஏற்படும் மூச்சுக்காற்று பலம் வாய்ந்தது. அது உங்களை அழித்துவிடும்.

நீங்கள் நினைத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனால் உங்கள் செயல் சரியான பாதையில் போகாமல் மனம் பதட்டமடைந்து நிலை தடுமாறும். தோட்டக்காரன் நுõறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும். அதேபோல் நீங்கள் நினைப்பது மெல்ல மெல்ல நடப்பதால் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்
இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் – கல்வியைக் கல்லாதவர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றுமறி வில்லாதவென் கர்மத்தை என்சொல்கேன் ? – கல்வி கற்றும் அறிவு இல்லாத என் கர்ம பலத்தை என்ன சொல்லுவேன்?

கைவல்ய ஞான நீதி நல்லோருரைக்கிலோ – நல்லவர்கள் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதியை பற்றி சொன்னால்

கர்மமுக் கியமென்று நாட்டுவேன் – கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன்

கர்மமொருவன் நாட்டினாலோ – ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால்

பழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் – முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று கூறுவேன்

வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் – வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்

த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் – தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்

வல்ல தமிழறிஞர் வரின் – ஒரு வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் வந்தாலோ

அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன்

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகை வந்த – நியாயமாக வெல்லாமல் எவரையும் மருளும் படி செய்ய வகை ஏற்பட்டதிற்கு காரணமான

வித்தையென் முத்திதருமோ ? – வித்தையானது எனக்கு முக்தியைக் கொடுக்குமோ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற – வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற

வித்தக சித்தர்கணமே! – ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே!
-----------------------------------
கல்வி அறிவைத் தருமென்றும், அவ்வாறு கற்றவேண்டியவற்றை கற்றும், அக்கல்வி கூறியபடி நடக்காத கற்றவர்களைக் காட்டிலும், கல்லாத பேர்களே நல்லவர்கள் என்று பறைகிறார் தாயுமானவர்.

முக்தியைக் கொடுக்கும் ஞானமே முக்கியம் என்று ஒருவர் கூறினால், அவரிடம் கருமமே முக்கியம் என்று உரைத்தும், கருமம்தான் முக்கியமென்று சொல்பவரிடம், ஞானம்தான் பெரிது என்று விவகரித்துரைப்பேன்.

வட நாட்டு வித்தகரிடம் தமிழின் பெருமையையும், தமிழறிங்கர்களிடம் வட மொழியின் சிறப்பை எடுத்தோதுவேன்.

இவ்வாறொருவரை வெல்லாமல் மருளும்படி செய்யும் வித்தை என்ன பயனைத் தரும்? வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சமமாக கருதும் நிலையடைந்த சித்தர் கூட்டமே!
-----------------------------------
சில சந்தேகங்கள்:

கைவல்யம் என்றால் என்ன? இது தமிழா அல்லது ஏதாவது வடமொழிச் சொல்லா?

ஒருவன் ஒன்றை பற்றி கூறும் பொழுது, மற்றதுதான் அதை விட நல்லது என்று வாதாடுவது எந்த வகையில் நல்லது?

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ ? – இதற்கு இன்னும் நல்ல முறையில் யாரவது விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

துன்பங்கள் நிஜத்தில் துரும்புகள்

பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம். ஒருவனுக்கு எவ்வளவு பொறு மை குறைகிறதோ, அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும். அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.

பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இறைபக்தியிலும் ஈடுபட முடியாது. இறைவன் அருள் வேண்டுபவர்கள் முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் செயலுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப அடுத்த பிறப்பை எடுக்கின்றனர். ஆகவே, எந்த சூழ்நிலையிலும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பது அவசியம்.

உங்களது இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தீய செயல்களைச் செய்யாதீர்கள். இவர்கள் மறுபிறப்பில் இல்லாவிட்டாலும், இந்த பிறப்பிலேயே மற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவராக இல்லாமலும் திகழ்வர். இத்தகைய பிறப்பெடுத்து ஒரு பயனும் இல்லை.

தைரியத்துடன் இருங்கள். எந்த துன்பத்திற்கும் கலங்காதீர்கள். அவற்றால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. பிரச்னையை நேரே பார்க்கும்போது, பெரிய துன்பம் போல தெரியும். ஆனால், உண்மையில் அது ஒன்றுமில்லாத சிறிய துரும்பாகவே இருக்கும். எனவே, பயப்படுவது தேவையற்றது. மனதில் தைரியம் இல்லாதவர் ஆண்தன்மை இல்லாதவர் ஆவர். இவர்கள் மறுபிறப்பில் புழுக்களாகவே பிறப்பார்கள்.

கடமையே பெரிய வேள்வி

குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். பேச வேண்டியது குழந்தையே. ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார். கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே. இறைவனை மனக் கண்ணின் முன் நிறுத்தி அவனோடு ஒன்றி விடுவது மனிதனின் கடமை.

உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.

புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்த நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்.
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல் நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் செய்யும் கடமைகளால் கிடைக்கும் உரிமைகளை சுயநலமில்லாமல் சமுதாயத்திற்காக பயன்படுத்துங்கள்.

இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.

உங்களது எண்ணம் எப்பொழுதும் துõய்மையாகவும், புதுமையானதாகவும் இருக்க வேண்டும். கெட்ட காற்று

வெளியேற வேண்டுமானால் நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும். எண்ணத்தை விட வலிமையானது வேறு எதுவும் கிடையாது. உங்கள் எண்ணங்களை ஒருபோதும் ஒளித்து வைக்காதீர்கள். அவற்றை வெளியே சொல்வது கேவலம் என்றால், அவ்வாறு நினைப்பது இன்னும் கேவலமானது.

உடல் பலத் தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும்.
சமநிலையுள்ள மனம் வேண்டும்

* காற்று வீசாதபோது விளக்கு, ஆடாமல் நின்று எரிகிறது. அதுபோல மனதில் சஞ்சலம் இல்லாவிட்டால், உள் மனதில் உள்ள அறிவு ஒளி அற்புதமாக எரியும். எனவே, மனம் சமநிலையுடன் இருக்க வேண்டும்.

* பதட்டமும், ஆரவாரமும் நிறைந்த இந்த உலகில் சம நிலையான மனத்துடன் பலன் எதிர்பார்க் காமல் செயல்பட வேண்டும். பலன் எதிர்பாராத செயல்களில் தான் இறையுணர்வு இருக்கும்.

* கடமையே பெரிது என நினைப்பவர்கள் விழிப்பு, சமநிலை, செயல்திறன், சுயநலமின்மை, அனுபவத்தில் ஆர்வம் போன்றவற்றுடன் இருக்க வேண்டும். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒழுங்காக ஒரு செயலைச் செய்தாலே வெற்றி நிச்சயம் தான்.

* சூரியஒளியோ, மண்ணோ, நீரோ மட்டும் தனித்து ஒரு செடியை வளரச் செய்ய முடியாது. நிலத்தில் விதையைப் போட்டு, நீர் ஊற்றினால் அவ்விதை மக்கிப் போகும். விதையை நீரில் போட்டால் அழுகிவிடும். சூரிய ஒளியில் போட்டால் கருகிவிடும். இம்மூன்றும் நியாயமான முறையில் சேர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்விதை முளைத்து செடி மரமாகும். இப்படி, ஒரு செயலுக்கு பல காரணங்கள் தேவைப்படுகின்றன. அதில், நம்முடைய பங்கை மட்டும் நாம் செலுத்திவிட்டு, மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிட வேண்டும். நாமே எல்லாவற்றையும், நம் விருப்பப்படியே செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், நமக்கு ஒரு போதும் மன அமைதி கிடைக்காது.

மனம் உங்கள் நண்பனாகட்டும்!

˜ஒவ்வொருவரும் கடமையைச் செய்யும்படி விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கடமையை நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனை பரிபூரணமாக செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு முழு உரிமை தரப்பட்டிருக்கிறதே தவிர, அதன் பலன் குறித்த எதிர்பார்ப்பிற்கான உரிமை தரப்படவில்லை. ஆகவே, கடமையை கருத்தாக நிறைவேற்றுங்கள். அதனால் உண்டாகும் பலனில் உங் களது விருப்பங்களை எதிர்பார்க்க வேண்டாம்.

˜மனமானது ஒவ்வொருவரின் நடத்தைகளைப் பொறுத்தே நண்பனாகவும், எதிரியாகவும் அமைகிறது. யார் ஒருவர் மனதை அடக்கி அதனை வெற்றி கொள்கிறாரோ, அவருக்கு மனம் சிறந்த நண்பனாகவும், அடக்க முடியாமல் அதன் போக்கிற்கு விடுபவருக்கு முதல் எதிரியாகவும் இருக்கிறது. மனதை உங்களது நண்பனாக வைத்திருக்க முயற்சியுங்கள்.

˜உங்களுடன் வாழ்பவருக்காகவோ, உங்களை விட்டு பிரிந்து சென்றவருக்காகவோ மனம் வருந்தாதீர்கள். அவ்வாறு வருந்துவது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். உண்மையான அறிஞர்களை இத்தகைய நிகழ்வுகள் பாதிப்பதில்லை.

˜நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். என்னை அனைத்திலும் அனைத்துமாக காண்பவர்களுக்கு நான் எப்போதும் இழக்கப்படாதவனாகவே இருக்கிறேன். நானும் அவர்களை இழப்பதில்லை. அத்தகையவர்களை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்கிறேன்
தற்பெருமை அழிவைத்தரும்

* மருத்துவர்கள் நோயாளிகளிடம் "எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய்.

* கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்து விடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்திற்கு கூட சலனமடையும்.

* குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு "என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்

* அடுத்தவர்களது விஷயத்தில் தலையிடுவதும், அவர்களைப் பற்றி குறை சொல்வதும் கூடாது. உங்களுக்கு தெரிந்தே ஒருவர் தவறு செய்கிறார் என்றாலும் அமைதியாக இருந்து விடுங்கள். அவரது தவறை குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், ஒருவரது குறையை சுட்டிக்காட்டி தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து அவர்களை இயக்கும் கடவுளே, அவர்களை அவ்வாறு செயல்படும்படி துõண்டுகிறார். ஆகவே, அடுத்தவரது செயல்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

* ஓரிடத்தில் நடக்கும் செயல் உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம். அதற்காக நீங்கள் அச்செயலை தடுத்து நிறுத்தவோ, மறுப்பு தெரிவிக்கவோ கூடாது. உலகில் எந்தவொரு செயலும் கடவுளின் அனுமதியில்லாமல் நிச்சயமாக நிகழ்வதே கிடையாது. ஆகவே, நீங்கள் அச்செயலை தடை செய்யும் விதமாக செயல்படுவது கடவுளின் விருப்பத்தை தடை செய்வது போலவும், அவரது தீர்ப்பை விமர்சிப்பது போலவும் ஆகும். ஆகவே, என்ன நடந்தாலும் நன்மைக்கே நடக்கிறது என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

* நீங்கள் நிம்மதியாக இருக்க விரும்பினால், அடுத்தவர் வேலையில் கவனம் செலுத்தாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனத்துடன் இருங்கள். அவரை கவனித்துக் கொள்வதற்கு கடவுள் இருக்கிறார். ஆகவே தானுண்டு, தன் வேலையுண்டு என்று செயல்படுங்கள்.
நம்பிக்கையுடன் ஜெபியுங்கள்

நம்மில் பலர் அடிக்கடி, "நான் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே!' என்று சொல்வார்கள். ஆம்! இப்படி நடந்து விடுமோ என்று பயந்தால் அது நடந்தே விடும்.

யோபுவிற்கு சில பிள்ளைகள் இருந்தனர். அவர் கர்த்தரிடம், ""ஐயோ! இவர்கள் வைத்துள்ள செல்வம் களவு போய்விடுமோ, அதனால் அவர்களுக்கு ஆபத்து வருமோ,'' என மனதில் பயத்துடன் வேண்டினார். அத்துடன் நிற்கவில்லை. இன்னும் ஒரு படி மேலேசென்று, ""என் பிள்ளைகளை நான் இழந்து விடுவேனோ,'' எனவும் பயந்து கொண்டே ஜெபித்தார். அவர் கர்த்தரிடம் வேண்டுதலை வைத்த அளவிற்கு விசுவாசம் வைக்கவில்லை. ""எம் பிள்ளைகளை வழிநடத்திச் செல்ல வேண்டும் ஆண்டவரே!'' என்று ஜெபித்திருக்கலாம். ஆனால், அவரோ பயத்தினால் எது நடக்கக்கூடாதோ அதைச்சொல்லி ஜெபித்தார். அவர் பயந்து ஜெபித்தபடியே பிள்ளைகளையும் இழந்து விட்டார். பைபிளில், "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது,' என்ற வசனம் இருக்கிறது.

ஆண்டவரை நோக்கி ஜெபிக்க துவங்கும் போது, நம்பிக்கையுடன், நன்மையே நடக்க வேண்டும் என்றே ஜெபிக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுடன் ஜெபம் செய்வது, அவர் மீது நமக்குள்ள விசுவாசமின்மையையே காட்டும். ஒரு செயலில் இறங்கும் முன் அது கடவுளுக்கு ஏற்றது தானா என தெரிந்து செய்ய வேண்டும். அப்படி துவங்கிய பிறகு, அச்செயலால் ஆபத்து நேரும் என்று தெரிந்தால், ஆண்டவரிடமே அதை விட்டுவிட வேண்டும்

02. இறைவன் தாய் போன்றவர்

இறைவனைப் பற்றி சிறிதும் அறிந்திருக்காமல், அவர் இல்லை என்று அறியாமையினால் நாத்திகம் பேசுபவர்களை வேற்று மனிதர்களைப் போல பாவிக்காமல் எல்லோரிடமும் பழகுவது போல பாரபட்சமின்றி நடந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இறைவனை விரும்பவில்லை என்ற காரணத்திற்காக நீங்கள் அவர் களை வெறுத்தால், நீங்களும் வெறுக் கத்தக்கவர்களே ஆவீர்கள். எனவே, இறைவனை நம்பாதவர்களிடமும் அன்பு செலுத்துங்கள்.

இறைவன் துõய்மையான மனங்களில் தானாகவே குடிபுகுந்து கொள்கிறான். ஆகவே, மனதை துõய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நிறைய அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. மனதில் தீய சிந்தனைகளை விடுத்து பக்தி உணர்வை வளர்க்கும் இறைவனின் நாமங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால் போதும். மனம் தானாக சுத்தமாகிவிடும்.

ஒரு குழந்தை நடக்கத் துவங்கும்போது கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக தாய் கைகளை பிடித்துக் கொண்டிருப்பாள். ஆனால், குழந்தைக்கோ தாய் பிடித்திருப்பதால்தான் தான் விழாமல் செல்கிறோம் என்று தெரியாது. அதைப்போலவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் போதும், இறைவன் உங்களது கையைப் பிடித்துக் கொண்டு துணை நிற்கிறார். அறியாமையினால் நீங்கள் அவரை உணராவிட்டாலும், அவர் உறுதுணையாகத்தான் இருக்கிறார். இதை புரிந்து கொண்டு அவரை உணர்ந்து கொள்ள, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்
பக்திக்கு குல பாகுபாடு இல்லை

தண்ணீர் அசைவின்றி இருக்கும்போது அதில் விழும் பொருளின் பிம்பம் பிரகாசமாக எதிரொளிக்கும். அதே நீரில் அலைமுகடுகள் ஏற்படும்போது, பொருளின் வடிவம் சரியாக தெரியாது. இதைப்போலவே மனிதர்களின் மனம் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் போது, அவர்களது உண்மையான குணநலன் எளிதில் வெளிப்படும். ஆகவே, மனதை குழப்பமில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவனது படைப்பில் மிகவும் அற்பமானது, அனைத்திலும் உயர்வானது என்ற பாகுபாடு கிடையாது. காய்ந்த விறகுகளே எரிவதற்கு பயன்படும். அதை எரிக்க மட்டும் பயன்படுத்தினால் போதுமே தவிர, அது எந்த மரத்திலிருந்து பெறப்பட்டது, யாருக்கு சொந்தமானது என்ற விசாரணை செய்ய தேவையில்லை. நமது தேவை விறகு எரிய வேண்டும் என்பது மட்டுமே. அதைப்போல, பக்தியுடைய மனிதர்கள் இறைவனுக்கு ஏற்றவராக இருந்தால் மட்டும் போதும். அவர் உயர்ந்த குலத்தவரா, தாழ்ந்த குலத்தவரா என்ற பாகுபாடு பார்க்கத் தேவையில்லை. பக்தி விஷயத்தில் குலம், செல்வம் போன்ற தகுதிகள் பிரதானமல்ல.

மனிதர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவர்களது உள்ளத்தையே வெளிப்படுத்துகிறது. ஆகவே, செயல்கள் நல்லவையாக இருக்க வேண்டும். நல்ல செயல்களைச் செய்ய, உள்ளம் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு இறைவனிடம் மனதை செலுத்த வேண்டும். இறைவனிடம் பக்தி செலுத்துபவர்களின் எண்ணம் எப்போதுமே உயர்வாகத்தான் இருக்கும்
கடவுளே அறிவின் வடிவம்

* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான்.

* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள்.

* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.
பிறரை பழித்துப் பேசாதீர்

* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.

* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.

* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்
தங்கம் போல் துன்பப்படுவோம்

காட்டில் இருக்கும் சிறிய விறகிற்கு தீ வைத்தால், விறகு மட்டும் எரிவதோடு நின்று விடாது. காட்டையே அழித்துவிட்டுத்தான் அணையும். அதுபோலவே, மனிதர்களின் மனதில் உண்டாகும் தீய எண்ணம் என்னும் தீயானது அவர்களை மட்டுமின்றி, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும். ஆகவே, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அவை உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை என்றாலும், உங்களை நம்பி கொடுக்கப்பட்டிருப்பதால் அதனை எத்தகைய சிரத்தை எடுத்தாவது சிறப்பாக முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பெயருக்கு இயந்திரம் போல செய்யக்கூடாது. இது, எண்ணெய் இல்லாத விளக்கில், பிரகாசிக்காமல் எரியும் திரிக்கு ஒப்பானதாகும். மனதில் "ஈடுபாடு' என்ற எண்ணெய்யை விட்டு பணி செய்தால்தான், முடிவும் சுடர்போல பிரகாசமாக இருக்கும்.

உலோகங்களில் எல்லாம் உயர்ந்த தங்கத்தை, தீயில் போட்டு உருக்குகின்றனர். இதனை, தங்கத்தை வெறுப்பதற்காக தீயில் போடப்பட்டதாக சொல்லமுடியாது. அதை தீயில் இட்டால், அழுக்குகள் தானாக நீங்கிவிடும். அதைப்போலவே, மனிதர்கள் தங்களிடமுள்ள மன அழுக்குகளை நீக்கி, பரிசுத்தமானவர்களாக திகழவே கடவுள் துன்பங்களைக் கொடுக்கிறார். இதனைப் புரிந்து கொண்டு துன்பத்தை இன்பமாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இத்தகையவர்கள், கடவுளுக்கு ஒப்பானவர்கள் ஆவர்.
எரியும் நெருப்பே ஆசை

* உங்களிடம் பாதுகாப்பிற்காகவோ, தங்கு வதற்காகவோ யாரேனும் புகலிடம் கேட்டு வந்தால் அவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அன்பாக உணவு பரிமாறுங்கள். உங்களுக்கு ஒரு உணவு, வந்தவர்களுக்கு வேறு உணவு என்ற வித்தியாசமின்றி, உங்களது உணவையே அவர்களுக்கும் கொடுங்கள். அவர்கள் முழுவதும் சாப்பிடும் வரையில் உடனிருந்து கவனித்துக் கொள்ளுங்கள். விருந்தோம்பலின் புனிதத்தை அறிந்து அவர்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்யுங்கள். இவ்வாறு இருப்பவர்களே அனைத்து மேன்மையான குணங்களையும் பெற்று சிறக்கிறார்கள். விருந்தோம்பும் குணம் மனிதனுக்கு மிகவும் அவசியம்.

* ஆசைகளில் இருந்து விடுபட்டு வாழ்வதே ஆனந்தமயமான வாழ்க்கை. அதேசமயம், அதை நினைத்தவுடன் துறந்து விடவும் முடியாது. ஒவ்வொருவரும் தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, அத்துடன் திருப்தியடைந்து விடுவதில்லை. அதற்கு மேலும் ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். அதனை அடைவதற்கு மேலும் பல செயல்களைச் செய்கிறார்கள். ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பது, எரியும் நெருப்பில் மேலும், மேலும் எரியும் பொருட்களை போடுவதற்கு சமமாகும். ஆகவே, ஆசையை அடக்கிக்கொள்வது முக்கியம்.

* ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். பணத்தை சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை ஒழுக்கத்தில் சிறப்பிடம் பெற்றவராக இருப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதே சிறந்தது.
இன்பமும் துன்பமும் சமமே!

* தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லை வைக்கும்போது அது கீழிறங்கியும், மற்றொரு தட்டு மேலேயும் உயர்கிறது. அந்த தட்டில் எடைக் கல்லுக்கு ஈடான பொருளை வைத்தால் இரண்டு தட்டுகளும் சமநிலை பெறுகிறது. வாழ்க்கையும் தராசு போன்றதுதான். இன்பம் போல மாயத்தோற்றமளிக்கும் துன்பத்தை பெறுவதற்காக, பல இன்பங்களை இழக்கின்றனர். இதனால், வாழ்க்கை சமநிலையின்றி இன்பமும், துன்பமுமாக மாறிமாறி பயணிக்கிறது. இன்ப, துன்பங்களை சமமாக எடுத்துக்கொள்ள மனதை இறைவனிடம் செலுத்த வேண்டும்.

*சூரியன் எல்லாருக்கும் ஒரே வெளிச்சத்தையும், வெப்பத்தையுமே தருகிறது. யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதைப்போலவே, நாமும் பாரபட்சம் பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். இத்தகையவர்களுக்கு உயர்ந்த குணங்கள் தாமாகவே அமைந்துவிடும். அவர்களது செயல்களும், பிறரது நன்மையை முன்னிலைப்படுத்துவதாக இருக்கும். இவர்களே இறைவனுக்கு பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். இறைவனது அருட்பார்வையும் எளிதில் இவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இறைவனின் அருளைப்பெற பாரபட்சம் இல்லாத தன்மை அவசியம்.

*உதவி செய்யும் குணத்தினால்தான் மனிதனுக்குள் உண்மையான இன்பம் பிறக்கிறது. நீங்கள் கஷ்டப்படும் ஒருவருக்கு செய்யும் சிறிய உதவி உங்களிடமே பல மடங்காக திரும்பி வந்து சேரும். இந்த உண்மையை புரிந்து கொண்டு ஈகை குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
முயற்சி மிகமிக அவசியம்

* ஒரு செயலை செய்யும்போது அதற்கு எந்த வகையிலும் இடையூறு நிகழ்ந்துவிடாதபடி முன் கூட்டியே ஆராய்ந்து செயல்பட வேண்டும். அதோடு, அச்செயல் பிறருக்கு நன்மை தருவதாகவும் இருக்கவேண்டும். அச்செயலால் சிறிதளவு கூட பிறருக்கு தீமை உண்டாகும் என்றால் அதனை செய்யவே கூடாது. இயற்கை சீற்றங்களால், அந்த செயலுக்கு தடை வந்தால் கூட, மனம் தளராமல் முயற்சித்து, நல்ல முறையில் முடிக்க வேண்டும். இவ்வழிகளை பின்பற்றி நடப்பவர்களுக்கு, இறைவன் எளிதில் அருள் செய்கிறார்.

* நீங்கள் மேற்கொள்ளும் செயல் திட்டத்தை முடிக்கும் முன் யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது. அத்திட்டம் வெளியில் தெரியுமானால், நிச்சயம் அதற்கு தடைகள் வரும். அச்செயலை சிறப்பாக முடிப்பதற்கு மனதில் உறுதியும், கடின முயற்சியும் கொண்டிருக்க வேண்டும். இவ்விரண்டையும் பின்பற்றுபவர்கள் மட்டுமே எதிலும் வெற்றி காண்பர்.



* யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது. பார்வைக்கு எளியவராக தெரிபவர்களை இகழ்ந்து பேசாதீர்கள். பெரிய தேருக்கு சிறிய கடையாணி எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே எளிய தோற்றத்தில் இருப்பவர்களும் மிக முக்கியமானவர்களாகவே இருப்பர்.

நீங்கள் வலிமையானவர் என்று எண்ணிக்கொண்டிருப்பவரை விட, இத்தகையவர்கள் அரிய செயல்களையும் எளிதில் செய்து முடிப்பவர்களாக இருப்பர். ஆகவே, ஒருவரது வெளித்தோற்றத்தை விட, அகத் தோற்றத்தை கொண்டு மதிப்பிடுவதே சரியானது.
மன கட்டுப்பாடு வேண்டும்

* தவறுகள் ஆசையை மையப்படுத்தியே நிகழ்கிறது. ஆசைகளை உண்டாக்கி மனிதர்களை அடக்கி ஆளும் மூலகாரணமாக இருப்பது மனம்தான். ஆகவே, மனதை தனித்து இயங்கவிடாமல், உங்களது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாடில்லாத மனம், மனிதர்களை தீய வழியிலேயே அழைத்துச் செல்கிறது. இதனால், தவறு செய்பவர் மட்டுமின்றி அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது.

* மனதை தெளிந்த பாதையில் செலுத்துங்கள். மாயவலைகளில் சிக்கிவிடாதபடி செயலாற்றுங்கள். ஆசையில் சிக்கிய மனம், கையில் கோல் இல்லாத குருடனுக்கு ஒப்பானது. ஒருவன் செல்லும் பாதை எவ்வளவு
வெளிச்ச முடையதாக இருந்தாலும், அவனுக்கு அது தெரியாது. ஆகவே, மனதை வெளிச்சத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

* உயிர் இல்லாத உடலால் இம்மியளவுகூட அசைய முடியாது. அத்தகைய உயிருக்கு உள்ளமே பிரதானம். அந்த உள்ளத்திற்கு கடவுளே ஆதாரம். இதை உணர்ந்து கொள்ளாமல் கடவுள் இல்லையென்று பேசக்கூடாது. கடவுள் வடிவமாக வோ, வடிவமில்லாமலோ அல்லது இவையிரண்டுமாகவோ நிச்சயமாக இருக்கிறார்.

* உங்கள் கண் முன்னே ஒருவர் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பிறருக்கு உதவாதவர்கள், எதற்கும் உதவாத எட்டிக்காய்க்கு சமமானவர் ஆவர்.
பேசும் முன் என்ன செய்வது?

*அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் அதை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

* மற்றவர்களிடத்தில் நாம் என்ன குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடத்தில் இருந்தால் முதலில் அதை அகற்ற வேண்டும். அதன்பிறகு மற்றவருடைய குறையை மாற்ற முயற்சி செய்யலாம்.

* நீ பயனுள்ள விதத்தில் பத்து நிமிஷம் பேச வேண்டுமென்றால், பத்து நாளுக்கு மவுனத்தை கடைபிடிக்க வேண்டும். நீ பயனுள்ள விதத்தில் ஒரு நாள் செயலாற்ற வேண்டுமென்றால் ஒரு வருடத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும்.

*நீ என்ன செய்தாலும், எந்த வழிமுறையைப் பயன்படுத்தினாலும், அந்த வழிமுறையில் பெரும் ஆற்றலையும் திறனையும் அடைந்து விட்டாலும் கூட, அதன் விளைவுகளை நீ இறைவனின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். நீ முயற்சி செய்யலாம். ஆனால், முயற்சியின் பலனை உனக்கு கொடுப்பதா வேண்டாமா என்பது இறைவனின் கையில்தான் உள்ளது.


* நீ அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை இறைவனிடமிருந்து வருபவையாக மட்டுமே இருக்க வேண்டும். மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இறைவனுடன் ஒன்றிப்பதற்கும், தொடர்பு கொள்ளுவதற்கும் இன்றியமையாத நிபந்தனை.
விளையாட்டுக்கு கூட கோபம் வேண்டாம்

* எந்தவொரு செயலிலும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், கோபத் தால் சாதிப்பதைவிட, அன்பினால் எத்தகைய கடினமான செயலையும் மிகவும் எளிதாக சாதித்து விடலாம். நிறைய பழங்கள் விளைந்த ஒரு மரத்தில், அவற்றைப் பறிக்க வேண்டுமென்றால் மரத்தை உலுக்கி விட்டால் மட்டும் போதும். மரம் தானாகவே கனிகளை கீழே உதிர்த்து விடும். இவ்வாறு பழத்தை பெற்றுக் கொள்வதால் மேலும் அம்மரத்தில் இருந்து தொடர்ந்து கனிகளை பெற்றுக் கொண்டிருக்கலாம். அதைவிடுத்து மரத்தை வெட்டி பழத்தை பறிப்பதால் ஒரு லாபமும் கிடையாது. அது அறிவான செயலாகவும் இருக்காது.

* யாராவது தவறு செய்தால் அவர்கள்மீது கோபத்தை காட்டாதீர்கள். அன்பாக சொல்லி திருத்துங்கள். அவர்களது செயலால் உண்டாகும் தீமைகளை, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லுங்கள். இதனால், அவர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வர். மாறாக, நீங்கள் கோபப்பட்டு பேசுவதால் அவர்கள், அந்த தவறை மேலும் செய்வார்களே தவிர திருந்துவதற்கு யோசிக்கக்கூட மாட்டர். எனவே, விளையாட்டிற்கு கூட கோபம் கொள்ளாதீர்கள்.

* குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தால் தான் அவை மக்களுக்கு பயன்படும். அதைப்போல, இறைவன் மீது பக்தியில்லாமல் செய்யும் செயல்களால் சிறிதளவு பயனும் ஏற்படாது. ஆகவே, இறைவன் மீது பக்தி கொண்டிருக்க வேண்டும்
யாருக்கு அலங்காரம் செய்வது?

* ஒவ்வொருவருக்கும் பிறர் மீது பாசம் இருப்பதைவிட, தங்கள் மீதே அதிக பாசம் இருக்கிறது. அதனை தங்களது குடும்பம், மனைவி, குழந்தைகள் என உறவுகள் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார் கள். அவர்களிடம் தங்களது பாசத்தை வெளிப்படுத்தி, மனநிறைவு அடைகிறார்கள். அதைப்போலவே அம்பாள் மீது அன்பு கொண்டு, அவளுக்கு பூஜை, அலங்காரங்கள் செய்து வழிபட்டாலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும்.

* கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். நெற்றியில் பொட்டு இல்லை என தெரிகிறது. உடனே கண்ணாடிக்கு பொட்டு வைத்தால் அந்த இடம் கருப்பாகிவிடும். இங்கு உங்களது பிம்பத்திற்கு பொட்டு வைத்தல் என்பது, பிம்பத்திற்கு மூலமாகிய உங்களுக்குத்தான் வைத்துக் கொள்வதாக அர்த்தம். இதைப்போலவே, அம்பாளுக்கு செய்யும் அலங்காரமே உங்களுக்குச் செய்து கொள்ளும் அலங்காரமாகும். அதைவிடுத்து உங்களுக்கு நீங்களே, அலங்காரம் செய்து கொண்டால் அது அகங்காரத்தில்தான் முடியும்.

* உங்களை நீங்களே அலங்கரித்துக் கொண்டால் எல்லோரும் ரசிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. உங்களது அலங்காரம் ஒரு சிலருக்கு பிடித்திருந்தாலும், வேறு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம். ஆனால், அம்பாளுக்கு அலங்காரம் செய்தால், அனைவருக்கும் பிடிக்கும். அவளது அழகை கண்டு வியந்து பேசுவார்கள். இவ்வாறு வியப்பது அம்பாளின் உருவத்தில், நம்மை நாமே பார்த்துக்கொள்வது ஆகும்.
ஏழைகள் மீது நேசம் கொள்ளுங்கள்

* வாழ்க்கை இன்பமாகவும், துன்பமாகவும் அமைவது உங்களது கைகளில்தான் உள்ளது. நீங்கள் இன்பம் என்று நினைத்தால், உண்மையில் துன்பம்கூட இன்பமாக மாறிவிடும். துன்பம் என்று எண்ணினால், எத்தகைய இன்பமும் துன்பமாகத்தான் தெரியும்.

* பெரும்பாலானோர் உயர்ந்த நிலையில் இருப்பவருடனும், தங்களைவிட வசதி அதிகமாக உள்ளவர்களுடனுமே பழகுவதற்கு விருப்பப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கையுடன், தங்களது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கம் கொள்கிறார்கள். இதுவே, துன்பத்திற்கு ஆரம்பப்புள்ளியாகி, வாழ்க்கை நரகமாகி விடுகிறது. இத்தகைய வாழ்க்கை முறை தேவையில்லை. உங்களை விட வசதி குறைந்தவர்களுடன், உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு பாருங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இன்னும் வசதி கூடியதாக தெரியும். மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது துன்பத்தில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்துவிடும்.

* ஏழை மக்கள் மீது இதயப்பூர்வமாக நேசம் கொண்டு, அவர்களுக்கு சேவை செய்யுங்கள். அதை இறைவன் தந்த கடமையாக நினையுங்கள். இவ்வாறு சேவை செய்யும்போது மனம் பரமதிருப்தி அடையும்.

* இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவினை படைத்திருக்கிறார். சிலருக்கு அதிகம் கொடுத்திருப்பது, பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகவே. எனவே, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
அற்புதமான திரி
அள்ள அள்ள குறையாத‌
மனதை அமைதிபடுத்தும்
எளிய நடையில்
வள்ளலார் தாயுமானவர்
அறிவுரைகள்
அத்தனையும் தித்திப்பு பரஞ்சோதி
சுவைக்க சுவைக்க‌
மனம் அமைதி மட்டுமல்லாது
கட்டுக்குள் அடங்குகிறது
கோவம் கொள்ளாதே
ஏழையின் பேர் நேசம் கொள்
அத்தனை பேரும்
ஒன்றே தான் கூறுகிறார்கள்
மிக நன்றே தான் கூறுகிறார்கள்
படித்தே இன்புற்றோம்
தவித்த வாய்க்கு கொடுத்தது
நீர் அல்ல அமுதமப்பா பரஞ்சோதி
வாழ்க என்றும்
வளர்க என்றென்றும்
நல்ல பிறவியெடுக்க வழி

* நிலத்தை தோண்டி கிணறு வெட்டுகிறீர்கள். தரைமட்டத்திற்கு கீழே குறிப்பிட்ட அடிக்கு தோண்டும் போது, அங்கிருந்து நீர் ஊற்றாக வெளிப்படுகிறது. நீர் வெளிப்பட்டதில் உங்களது பங்கானது மணலை தோண்டி எடுத்தது மட்டுமே. தவிர, நீரை நீங்கள் படைக்கவுமில்லை, அதனை வேறிடத்தில் இருந்து கொண்டு வரவுமில்லை. நிலத்திற்குள் இருந்த நீர், மணலை தோண்டியவுடன் வெளிப்பட்டது. இதைப் போலவே ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீக உணர்வு இருக் கிறது. அந்த உணர்வை "அறியாமை' என்னும் மணல் மூடியிருக்கிறது. அதனை பக்தி உணர்வினால் தோண்டியெடுங்கள். தெய்வீக உணர்வு உள்ளிருந்து தானாக வெளிப்படும்.

* உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்யுங்கள். பசியென்று வந்து, உங்களிடம் உணவு கேட்டால் அவர்களுக்கு உணவிடுங்கள். அதைவிடுத்து, வீட்டில் உணவிருந்தாலும் "இல்லை' என்று சொல்லி திருப்பி அனுப்பி விடக்கூடாது. அவர்களை கடவுளின் துõதுவர்களாக கருதி உணவளிக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் உணவு கேட்கும்போது, "எனது முற்பிறவியில் நான், உணவு கேட்டு வந்தவருக்கு உணவை கொடுக்காமல் திருப்பி அனுப்பினேன். எனவே, இன்று நான் பிச்சை எடுக்கிறேன். அடுத்த பிறவியில் நீங்கள் இதே நிலையை அடையாமல் இருக்க உணவிடுங்கள்' என்ற செய்தியையும் தெரிவிக்கிறார்கள். ஆகவே, முடிந்த வரையில் பிறருக்கு உதவி செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த பிறவியில் நற்பிறப்பெடுக்க உதவி செய்யும்
பேசும் முன் என்ன செய்வது?

*அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் அதை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

* மற்றவர்களிடத்தில் நாம் என்ன குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடத்தில் இருந்தால் முதலில் அதை அகற்ற வேண்டும். அதன்பிறகு மற்றவருடைய குறையை மாற்ற முயற்சி செய்யலாம்.

* நீ பயனுள்ள விதத்தில் பத்து நிமிஷம் பேச வேண்டுமென்றால், பத்து நாளுக்கு மவுனத்தை கடைபிடிக்க வேண்டும். நீ பயனுள்ள விதத்தில் ஒரு நாள் செயலாற்ற வேண்டுமென்றால் ஒரு வருடத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும்.

*நீ என்ன செய்தாலும், எந்த வழிமுறையைப் பயன்படுத்தினாலும், அந்த வழிமுறையில் பெரும் ஆற்றலையும் திறனையும் அடைந்து விட்டாலும் கூட, அதன் விளைவுகளை நீ இறைவனின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். நீ முயற்சி செய்யலாம். ஆனால், முயற்சியின் பலனை உனக்கு கொடுப்பதா வேண்டாமா என்பது இறைவனின் கையில்தான் உள்ளது.


* நீ அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை இறைவனிடமிருந்து வருபவையாக மட்டுமே இருக்க வேண்டும். மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இறைவனுடன் ஒன்றிப்பதற்கும், தொடர்பு கொள்ளுவதற்கும் இன்றியமையாத நிபந்தனை.
அடக்கமும் பணிவும் அவசியம்


" நமக்கு தெரிந்ததெல்லாம் மிகவும் குறைவுதான். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல், எல்லாம் தெரியும் என்ற மனதுடன் நடந்து கொள்கிறோம். நாமே அனைத்திலும், அனைத்துமாக இருக்கிறோம் எனவும் எண்ணுகிறோம். சிலர் நான்கு விஷயங்களை படித்து தெரிந்து கொண்டால் போதும், அவர்களுக்கு உண்டாகும் அகங்காரத்திற்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. இந்த அகங்கார குணத்தை தவிர்த்து, எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்திற்கு சென்றாலும், அடக்கத்தையும், பணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை விடப் படித்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்று நினைத்தாலே, இந்த அகங்காரம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

" மெத்தப்படித்தவர், படிக்காதவர் யாராயினும் நல்ல கருத்துக்களை எளிதில் உபதேசித்து விடலாம். ஆனால், அரைகுறையாக படித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. படிக்காதவர், தனக்கு ஏதும் தெரியாததால், நாம் சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அரைகுறையாக படித்தவர்கள் அதனை பற்றி முழுவதும் தெரியாததால், தவறாக புரிந்து கொள்வார்கள். மேலும், அந்த விஷயத்தைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசி தங்கள் அஞ்ஞானத்தை மேலும் விருத்தி செய்து கொள்வார்கள். அத்தகையவர்களை திருத்துவது மிகவும் கடினம். ஆகவே, எந்தவொரு விஷயத்தை பற்றி தெளிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
நிம்மதியை கெடுக்கும் பணம்

ஏழையாக இருப்பவர்கள், தம்மை விட வசதியானவர்களை பார்த்து தாமும் அவர்கள் போல வாழ வேண்டுமென விரும்புகிறார் கள். அதனை லட்சியமாகக் கொண்டு உண்மையாக உழைத்து பணமும் சேர்க்கிறார்கள். ஆனால், பணம் கைக்கு வந்தாலும், அவர்கள் விரும்பிய வாழ்க்கை வாழ்வதில்லை. அப்பணத்தால் வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் கலையையும் அவர்கள் அறிந்திருப்பதில்லை. மாறாக மேலும் பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். அப்பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதிலேயே கவலை கொள்கிறார்கள். பணம் இல்லாதபோது, இருந்த நிம்மதி, பணம் வந்த பின்பு கெட்டுவிடுகிறது. இவ்வாறு இருக்கும் நிம்மதியையும் கெடுத்து, பல இழப்புக்களையும் தரும் பணத்தாசையை அறவே ஒழித்துவிட வேண்டும். இதையே பைபிள், ""ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும், சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்,'' என்று குறிப்பிடுகிறது.

பணத்தின் மீது ஆசை வைத்து அதன் பின்னே செல்பவர்கள் தீமையான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு, ஆண்டவர் மீது நம்பிக்கையும் இருக்காது.""பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அனேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்,'' என்கிறது பைபிள். ஆகவே, பணத்தாசையை விட்டொழியுங்கள்.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

திட நம்பிக்கை வேண்டும்

* நம்பிக்கையே கடவுளையும் விட உயர்ந்ததாக இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்களே கடவுளை விரைவில் அடையமுடியும். நம்பிக்கை இல்லாதவர்கள் முன்பு கடவுளே நேராக வந்தாலும், வந்திருப்பது உண்மையிலேயே கடவுள் தானா? என்று அவருக்கு சந்தேகம் வந்துவிடும். நம்பிக்கை இருந்தால் கல்லாக இருந்தாலும்கூட, அது கடவுளின் வடிவமாக தன்னை நம்புபவரிடம் பேசும். எனவே, கடவுளை நம்புபவர்கள் அவர்மீது திட நம்பிக்கை கொள்ள வேண்டும்.

* ஒரு செயலை துவங்கும்போது எத்தகைய ஆர்வத்துடன் துவங்கினீர்களோ, அதே ஆர்வத்தை அச்செயலை முடிக்கும் வரையில் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அச்செயலில் வெற்றி காண முடியாது. சிலர், எந்த விஷயத்திலும் சீக்கிரத்தில் தளர்ந்து விடுபவர்களாகவும், உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பர். சிலர் அமைதியாகவே இருந்துவிட்டு, திடீரென கடவுள் மீது பக்தி செலுத்தி, தீவிரமாக அவரை வணங்கிக்கொண்டிருப்பர். அவர்களே சிறிது காலத்தில் பக்தியை விட்டுவிட்டு வேறு செயலில் நாட்டம் செலுத்திக் கொண்டிருப்பர். இவ்வாறு இருத்தல் கூடாது. எந்தவொரு செயலையும் நன்றாக சிந்தித்து, பொறுமையுடனும், அறிவுடனும் செயல்படுத்த வேண்டும்.

* மனிதர்கள் தங்களது மனதை அதன்போக்கில் விட்டுவிட்டால் இறுதியில் விபரீதமே உண்டாகும். எதற்கும் அஞ்சாமல் செயல்பட வேண்டும். அப்போதுதான் எச்செயலிலும் எளிதில் வெற்றி காணமுடியும்
மனதை மேயவிடாதீர்கள்

ஆழமான கிணற்றின் விளிம்பில் நிற்பவன் அதனுள் விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக நிற்பதைப்போல, இவ்வுலகில் வாழ்பவன் ஆசைகளுக்கு அடிமையாகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆசாபாசங்கள் நிரம்பிய கிணற்றில் ஒரு தடவை விழுந்து விட்டால் காயமடையாமல் வெளிவருவது முடியாத செயலாகும்.

உயிரோடு இருக்கும் போதே எவன் ஒருவன் ஆசையற்று இருக்கிறானோ அவன் தான் உண்மையான மனிதன். ஆசை கடுகளவு இருந்தாலும் இறைவனைக் காண முடியாது. ஆகையால் உனது ஆசைகளை விவேகத்தாலும், இறைவனிடம் பக்தி கொள்வதாலும் ஒழித்து விட வேண்டும்.


யானையை அவிழ்த்துவிட்டால் மரங்களையும், செடிகளையும் வேரோடு பிடுங்கிக் கொண்டு போகிறது. ஆனால், பாகன் அங்குசத்தால் அதன் தலையில் அடித்ததும் அடங்கிவிடுகிறது. அதுபோல மனத்தை அடக்கியாளாமல் மேயவிட்டு விட்டால் வீண் நினைவுகளில் ஆழ்ந்துவிடும். விவேகம் என்ற அங்குசத்தால் இடித்தால் தான், அது நமக்குக் கட்டுப்படும்.

வயிறு நிறைய புல்லை தின்ற பசு ஓரிடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதைப்போல தீர்த்த யாத்திரைக்குச் சென்று வந்தால், அந்தந்த திவ்ய தலத்தில், உன் மனதில் எழுந்த துõய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அதிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்வாறில்லாமல், அவ்வெண்ணங்கள் மனதைவிட்டு அகன்று போகும்படி, உடனே உலக விவகாரங்களில் தலையிடக் கூடாது.
அமைதியாக வேலை செய்யுங்கள்

* நீங்கள் தற்பெருமையையும், பொறாமையையும் அறவே அகற்றிவிடவேண்டும். பூமி மாதாவைப் போல அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொள்ள தயாரானால், உலகமே உங்கள் காலடியில் கிடக்கும்.

* மக்களுக்குத் தொண்டு செய்ய விரும்பினால், சொந்த சுக துக்கங்களையும், புகழ் பெருமை களையும், எல்லா வகை இச்சைகளையும் மூட்டை கட்டிக் கடலில் எறிந்து விட்டு, இறைவனிடம் வர வேண்டும். எந்த வேலையையும் ஒழுங்காகவும், அமைதியாகவும் செய்ய வேண்டும். பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்ற பேராசையை கைவிட வேண்டும்.

* வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை கொண்டிருங்கள். அதனால் நீங்கள் நன்மை அடையலாம். அதேபோல எல்லாம் உரிய காலத்தில் நடக்கும் என்று எண்ணி சோம்பேறியாக இருக்காதீர்கள். முயற்சியில் ஈடுபட்டு செயல்படுங்கள். முயற்சியில் ஈடுபடுவதன் பயனாக, ஏராளமான சக்தி உங்களை நோக்கி வரும்.

* பிறரது குற்றங்களைப் பற்றி பேசாதீர்கள். அவை எவ்வளவு கெட்டவையாயினும் சரி, அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. அப்படி பேசுவதால் அவனுக்கு ஒரு பொழுதும் உதவி செய்தவராக மாட்டீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கும் கேடு தேடிக் கொள்கிறீர்கள்.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், வெளியே உள்ள எதற்குமே வசப்படமாட்டான். அதனால், அவன் மனம் விடுதலை பெறுகிறது. அத்தகைய நிலைமையை அடைந்தவனே, உலகத்தில் நன்றாக வாழக்கூடிய தகுதி பெற்றவனாகிறான்.

அமைதியாக இருப்பது நல்ல பழக்கம்

தன்னடக்கம் இல்லாதவன் எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் அறிவில்லாதவனுக்கு ஒப்பாவான். நான் என்ற அகந்தை உள்ளவனிடம் அடக்கம் இருக்காது. அன்புள்ள மனிதனே தன்னடக்கம் உள்ளவனாக இருப்பான். அவனிடமே சத்தியத்தைக் காண முடியும். ஆற்றலுடன் அடக்கமும் மரியாதையும் சேருமானால் அத்தகைய ஆற்றலை யாராலும் வெல்ல முடியாது.

அமைதியாக இருப்பது மிக நல்ல பழக்கம். ஏனெனில் அது தவறுகளை மூடி ரகசியங்களைக் காத்து விவாதங்களைத் தவிர்த்துப் பாவத்தை தடுக்கிறது.

அழகு என்பது உருவத்தில் இருப்பது என்பது கிடையாது. துõய்மையான உள்ளமும், நல்ல செயல்களும் தான் உண்மையான அழகாகும். அழகு என்பது ஆடையிலும் ஆபரணங்களிலும் காண முடியாது. பணியாற்றுவதில்தான் உண்மை அழகு வெளிப்படுகிறது.

உலகத்தில் அன்பை விட அதிகம் பலம் வாய்ந்தது எதுவும் கிடையாது. அதேபோல் அதிக பணிவுடையதும் கிடையாது. உண்மையை அறிய வேண்டுமானால் உயிர் போவதாக இருந்தாலும் அன்பை கைக்கொண்டாக வேண்டும்.


பிறரது துன்பத்தை மாற்ற, அவரது துன்பத்தை நாம் ஏற்றுக் கொள்வதே பேரின்பமாகும்.

மண், பெண், பொன் போன்றவைகளால் கிடைக்கும் இன்பத்தை தவிர்த்து கடவுளின் மீது பக்தி கொள்ளுங்கள்.

அதனால் நீங்கள் கண நேரமும் துன்பம் அடையாமல் துõய்மையான இன்பத்தை அடைவீர்கள்
உண்மை ஆபத்தாகும் போது...

* மரத்தில் உள்ள கனியின் சாற்றை மரம் அனுபவிப்பதில்லை. மலரில் உள்ள தேனை மலரைத்தாங்கும் கொடி குடிப்பதில்லை. புத்தகங்களிலும், வேதத்திலும் உள்ள பொன் மொழிகளைப் புத்தகம் பயன்படுத்துவதில்லை. இயற்கையின் அழகை இயற்கையே அனுபவிப்பது இல்லை.

* பானையில் நீர் இருந்தால், வானத்து நிலா அதில் பிரதிபலிக்கும். அதுபோல உங்கள் இதயத்துள் அன்பிருந்தால், கடவுள் அதில் தெரிவார். உள்ளத்தில் கடவுள் பிரதிபலிக்கவில்லை என்றால், கடவுளே இல்லையென்று ஆகிவிடாது. உங்கள் உள்ளத்தில் அன்பு இல்லை என்றுதான் பொருள்.

* கோடையில் குளுகுளு வசதி இருந்தால், அது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அளிக்கிறது. அதுபோல, மழைக்காலத்தில் நெருப்பருகே அமர்ந்தால், அதன் வெப்பம் உடலிலுள்ள குளிர்ச்சியை போக்குகிறது. அதே போல, கடவுளருகே செல்லும் போது நம்மிடமுள்ள உலக ஆசைகளை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது.

* சைக்கிளில் செல்லும் போது சமநிலையிழந்தால் விபத்துக் குள்ளாக நேரிடும். அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் அறிவுக்கும் குணத்துக்குமிடையே சமநிலை தவறினால் ஆபத்து உண்டாகும். எனவே ஒருபுறம் புலன்களை அடக்கி, மறுபுறம் நேர்மையான வாழ்க்கை வாழவேண்டும்.

* ஒருவர் உண்மையை மட்டுமே பேசவேண்டும். சில சமயங்களில் உண்மையைச் சொல்வது ஆபத்தாகலாம். அம்மாதிரி சமயங்களில் பொய்யையும், உண்மையையும் தவிர்த்து, சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும்.

No comments: