Monday, March 17, 2008

ஆரோக்கியம் தேவை


உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.

ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.

கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!
Posted by TamilNenjam at 9:42 PM 0 comments Links to this post
Labels: வாழும் கலை

சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்
முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.

சிறுகீரை- உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

வெந்தயக்கீரை- முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

அரைக்கீரை: நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

அகத்திக் கீரை-வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.


பசலைக்கீரை-பருப்புக்கீரை

குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.

மணத்தக்காளி கீரை- அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டாஇ நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

குமட்டிக் கீரை- இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை- தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
Posted by TamilNenjam at 9:40 PM 0 comments Links to this post
Labels: வாழும் கலை
Tuesday, January 15, 2008

பணமே ஓடி வா - சோம. வள்ளியப்பன் 1-9
அப்பா, அம்மா, இரண்டு மகன்கள். விடுமுறை நாட்களில் அவர்கள் நால்வருமாக வெளியே போவார்கள். பெரும்பாலும் அவர் கடற்கரைக்குத்தான் அவர்களைக் கூட்டிப்போவார். காரணம், அதற்குத்தானே டிக்கெட் கிடையாது.

மகன்களுக்கு வயது குறைவுதான். “எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்’’ என்பான் ஒருவன். “எனக்கு ஐஸ்கிரீமும், சமூசாவும் வேண்டும். கூடவே லஸ்ஸியும் வேண்டும்’’ என்பான் இன்னொருவன்.

சிரித்த முகத்துடன் தலையசைப்பார் அப்பா. ஆனால் கூடவே கண்டிப்பாகச் சொல்லிவிடுவார், “எது வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால், எதுவானாலும் தலைக்கு இரண்டு அயிட்டம் தான். அதற்கு மேல் கிடையாது. அடுத்த வாரம்தான்.’’

காரணம், மனிதர் அவ்வளவு சிக்கனமானவர்.

அதே குடும்பம். இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. மனைவியையும் மகன்களையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துப்போவார். அங்கே நடக்கும் ஹாக்கி போட்டிகளைப் பார்ப்பார்கள். (கிரிக்கெட்டுக்குத்தானே கூடுதல் கட்டணம் இருக்கும். அதனால்தான் ஹாக்கி!). வெளியில் வந்து, ஓட்டலில் சாப்பிடுவார்கள்தான். ஓட்டல்: உடுப்பி ஓட்டல். சாப்பிடும் அயிட்டங்கள், இட்லி, தோசை.

காரணம், அந்தக் குடும்பத் தலைவர் அவ்வளவு தான் செலவழிப்பார்.

‘ஆமாம், இதென்ன பெரிய அதிசயமான குடும்பம்? எங்கேயும் இல்லாததா? இவர்கள் அளவுக்குக் கூட செலவழிக்க முடியாதவர்கள் நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்! இவர்களைப் பற்றி, பணமே ஓடிவா என்கிற பணம் பற்றிய தொடரில் அதுவும் முதல் அத்தியாயத்தில் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?’

கேட்கலாம்.

இவர்களைப் பற்றி எழுதாவிட்டால் வேறு யாரைப் பற்றி எழுதுவதாம்! (இந்நேரம் ஊகித்துவிட்டவர்களுக்கு சபாஷ்! அடுத்தவர்களிடம் சொல்லாமல் அமைதியாகத் தொடர்ந்து படியுங்கள்)

இவர்களைப் பற்றி எழுது வதற்குக் காரணம் அவர்களின் இன்றைய நிலைதான். மேலே பார்த்தது, அந்தக் குடும்பம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. இன்றைக்கு அந்தக் குடும்பத் தலைவர் இல்லை. மறைந்துவிட்டார்.

அவருடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். முதல் மகன் இருக்கும் இடம், கொஞ்சம் உயரமானது. அவரைத் தவிர உலகில் மற்ற அனைவருமே அண்ணாந்து பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

சஸ்பென்ஸ் போதும். அப்பா பெயர்: திருபாய் அம்பானி. மூத்த மகன் : முகேஷ் அம்பானி. இளைய மகன் : அனில் அம்பானி.

ஆளுக்கு இரண்டு அயிட்டத்துக்கு மேல் சாப்பிட வேண்டாம். கட்டாது என்று நினைத்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானிதான் இன்றைக்கு, சிலரின் தூக்கத்தினை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ‘அடடா! என் இடம் பறிபோய்விட்டதே!’ என்று கவலைப்படவும் வைத்திருக்கிறார்.

அப்படி இவரால் தூக்கம் கெட்டிருக்கும் சிலரில் முக்கியமானவர்கள் மூன்று பேர். ஒருவர், கார்லஸ் சிலிம். இவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர். இரண்டாமவர், பில்கேட்ஸ் (ஆமாம், கம்ப்யூட்டர் சக்ரவர்த்தி பில்கேட்ஸே தான்) மூன்றாமவர், வாரன் பஃபட்.

இவர்களுடைய தூக்கம் கெடும் அளவுக்கு முகேஷ் அம்பானி அப்படி என்னதான் செய்தார்?

முகேஷ் அம்பானி, ‘நம்பர்ஒன்’ இடத்துக்கு வந்துவிட்டார்.

எதில் நம்பர் ஒன்?

உலகின் பணக்காரர்கள் பட்டியலில்.

அடேயப்பா! அப்படியென்றால் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற வேறு எந்த முன்னேறிய நாட்டில் இருப்பவரை விடவும், நம் நாட்டு முகேஷ் அம்பானிதான் ‘நம்பர் ஒன்’ னா?

ஆமாம். 29.10.2007 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2 லட்சத்து, 53 ஆயிரம் கோடி ரூபாய்கள். அவர்தான் ஃபர்ஸ்ட். (அள்ளிக்கொடுத்தது பங்குச் சந்தை) அதற்கு முன் அந்த இடங்களில் இருந்தவர்கள் தான், மேலே பார்த்த மூன்று பேரும். எத்தனை லட்சம் கோடிகள் சொத்து இருந்தாலும், முதல் இடம் என்பது தனிப்பெருமை அல்லவா! அது பறிபோனதுதான் அவர்களின் துக்கத்திற்கும் தூக்கம் தொலைந்ததற்கும் காரணம்.

சந்தேகம் தெளிந்திருக்குமே! பணம் என்கிற விஷயத்தில் ஒருவரால் எவ்வளவு உயரம் போக முடியும் என்பதற்கு, இதைவிட வேறு என்ன சாட்சி இருக்க முடியும்.

நடுத்தர வர்க்கம்.

பார்த்துப் பார்த்து செலவழிக்க வேண்டியிருக்கிறது.

போதவில்லை.

கடன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துதான் அம்பானி ராக்கெட் போல கிளம்பியிருக்கிறார். மேலே போய், இன்னும் மேலே, மேலே என்று உயர்ந்து.. உலகின் மாபெரும் பணக்காரர்களே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு, உச்சத்திற்கே போக முடிந்திருக்கிறது அவர்களால்.

‘அட! இவர்களின், உலகின் நம்பர் ஒன் ஆன கதை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறதே! இதெல்லாம் கூட சாத்தியமா என்ன? அதுவும் இந்தியாவில் இருந்துகொண்டு! அப்படி என்னதான் செய்தார்கள் அவர்கள்? ஒருவரால், அவரது வாழ்நாளில் இவ்வளவு சம்பாதித்துவிட முடியுமா? அதுவும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண நிலையில் இருந்தவரால்!!’

வெளியில் தெரிபவர்கள் அம்பானி போன்ற சிலர்தான். ஆயிரம், லட்சம் கோடி என்று நம்மூரில் சொல்வதுபோல, அமெரிக்காவில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பார்கள். இப்படிப்பட்ட பில்லியனர்கள் எண்ணிக்கை இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எத்தனையோ முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவில்தான் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகம்.

தற்சமயம் இந்தியாவில் 369 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதுவே 2015_ம் ஆண்டு வாக்கில் 1500 என்கிற எண்ணிக்கையைத் தொடுமாம்! அவ்வளவு தேவை இருக்கும். இந்தியா இளைஞர்கள் அதிகம் இருக்கும் தேசம். 24 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே 50 கோடி!

தற்போதைய நிலவரப்படி வருடந்தோறும் இந்தியாவில் ஐந்தரை லட்சம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். ஒன்றரை லட்சம் பேர் எம்.பி.ஏ., மூன்றரை லட்சம் பேர் வேறு பி.ஜி. படிப்புகள் முடிக்கிறார்கள். மற்ற தொழில் கல்விகள், ஏனைய டிகிரி படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் பல லட்சம்.

பொறியியற் கல்லூரிகள் என்றுதான் இல்லை. கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் படித்து முடித்ததும் வேலைகள் கிடைக்கின்றன. ஙிறிளி, மிசிறிளி, லிறிளி என்ற பலவிதமான புதிய வேலைவாய்ப்புகள்... ஊதியங்கள் பல ஆயிரங்கள் எடுத்த உடனேயே!

வேலைக்குப் போய் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பல்வேறு வியாபாரங்களும் செழிக்கின்றன. நம் நாட்டில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை மட்டும் 4006. இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதைப்போல 6 மடங்கு. (24,660). ஆக, இந்தியா நிச்சயமாக இப்போது வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ஒரு தேசம். பலவும் நிகழும் நாடு. எல்லாம் நல்லதற்குத்தான். வாழ்க.

பலரும் வளர்கிறார்கள். வேகமாக வளருகிறார்கள். நேற்றைய சாதாரணவர்கள் இன்றைய பணக்காரர்கள். நிறைய வாய்ப்புகள். எல்லாம் சரி.

கேள்வி இதுதான்... நாம் என்ன செய்யப் போகிறோம்?.


என்ன சௌக்கியமா?’’

“பிரச்னை ஏது மில்லையே!’’

இந்த நான்கு வார்த் தைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சௌக்கியம் என்கிற வார்த்தை, முன்னேற்றத்துக்கு எதிரி. சௌக்கியம் என்கிற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘கம் போர்ட்’ (Comfort) என்று சொல்லலாம். பிரச்னைகள் இல் லாமல் எல்லாம் எதிர் பார்ப்பது போலவே நடப்பது. சிரமமின்றி, அதிக அலைச்சல் உழைப்பின்றி, சுலபமாக செய்வது. மொத்தத்தில் சவால்கள் இல்லாமல் இருப்பது. இதுதான் சௌக்கியம்.

காலை நடை பயிற்சிக்காக போகும் இடங்களில் பார்த் திருக்கிறேன். உடல் இளைக்க வேண்டும் என்றோ அல்லது ஆரோக்கியம் கூட வேண்டும் என்றோ தான் நடக்க முடிவு செய்திருப்பார்கள். எப்படி நடப்பார்கள் தெரியுமா?

மெதுவாக. பேசிக் கொண்டு. அசைந்து அசைந்து. Brisk walking தேவைப்படும் இடத்தில் மெதுவாக நடப்பது. வேர்க்காத, உடம்பினை உறுத் தாத நடையினால் என்ன பயன்?

எடை தூக்கும் பயிற்சியில் சொல்வார்கள், No Pain No Gain என்று. வலிக்காமல் அடிப்பதுபோலத்தான் உடம்பை வருத்திக் கொள்ளாத அளவு எடை தூக்குதல் என்பதும்.

சௌகர்யங்களை விட்டுவிட வேண்டும்.

“காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்க!’’

“சொந்த ஊரை விட்டு எப்படிப் போவது?’’

“சண்டே தொந்தரவு செய்யாதீங்க. விட்டுடுங்க’’

“எதுன்னாலும் சாயங்காலம் 5 மணி வரை ஓக்கே. அதுக்கு பிறகு மறுநாள் 10.00 மணிதான்.’’

“இதென்ன புதுசா வுல்ல இருக்கு!’’

“அவரோட எனக்குப் பழக்க மில்லையே! எப்படிப் போய்க் கேட்பது’’’

“பாஷை தெரி யாதே!’’

“இனி கத்துகிட்டு செய்யணுமா?’’

இந்த உலகத்தில் பாதுகாப்பான இடம் தேடிக் கண்டுபிடித்து, அங்கே போய் சுகமாய் சுருட்டிப் படுத்துக் கொள்ளுபவர்கள்,

பூனைகள்! ‘டாய்’ என்று சத்தம் போட்டால், தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்க்கும். அப்போது கூட சுறுசுறுப்பாக உடன் எழுந்துகொள்ளாது. வேறு வழியேயில்லை. நிச்சயம் எழுந்து கொள்ளத்தான் வேண்டும் என்றால் தான் அப்போதும், வேண்டா வெறுப்பாக எழுந்து, எரிச்சலுடன் முணுமுணுத்தபடி போகும்.

சோம்பல்.

சுகம்.

சௌகர்யம்.

பிரச்னைகள் இல்லாத, ரிஸ்க் எடுக்காத வாழ்க்கையைத் தேடிக் கண்டுபிடித்து, சுகமாய் சுருட்டிப் படுத்துக்கொள்ள நாம் என்ன பூனைகளா?

தூங்குகிறோம். காலை நேரம். எழவேண்டும் என்பது திட்டம். விழிப்பு வருகிறது. உடன் இன்னும் கொஞ்ச நேரமென்கிற கெஞ்சல் மனதுக்குள் இருந்து. என்ன செய்யலாம்?

போர்வையைத் தூக்கி எறிய வேண்டும். போர்வை போய் மேலே சுழலும் ஃபேனில் இடித்தாலும் சரி. உடன் துள்ளி எழ வேண்டும். விழிப்பு. உடன் முகம் கழுவி, சுகத்தினை கழற்றி எறியவேண்டும்.

தூக்கம் மட்டுமா சுகம்? நம்மில் சிலர் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளும் கூட சுகமான வேலைகள் தான். புதிய பொறுப்புகள், புதிய வேலைகள், சிரமமாக இருக்கலாம். எதையும் முன் செய்தது போலவே செய்வது சுலபமாக இருக்கும். ஆனால் எப்போதும் செய்வதையே செய்துவிட்டு, புதிய பலன்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

இன்றைக்கு சம்பாத்தியம் இருக்கலாம். அது சிலருக்கு தேவைகளைவிட சற்று அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் அதே அளவில் பணம் ஈட்டினால் போதுமா?

வெந்துசாகும் தவளைகள்!

இன்றிருக்கும் நிலைகள் சுக மானதாக , சௌகர்யமானதாக, பிரச்சனை தராததாக இருக்கலாம். ஆனால் அவை நாளைக்கு போதாமல் செய்துவிடும். வேக மாக வளரும் உலகத்தில், இன்றைய ‘குட்’ நாளைக்கு போதாது.

ஒரு பாத்திரத்தில் சாதாரண சூட்டில் இருக்கும் தண்ணீர் எடுத்து, அதனுள் மெதுவாக ஒரு தவளையை இறக்கிவிடவேண்டும். தவளை தண்ணீருக்குள் படுத்து கொள்ளும். பின்பு மெதுவாக, அதிகம் அசைக்காமல் அந்த பாத்திரத்தினை எடுத்து, எரிகிற காஸ் அடுப்பின் மீது வைக்க வேண்டும். நெருப்பு அதிகம் இருக்கக் கூடாது. ஆரம்பத்தில் சின்ன ஜுவாலை போதும்.

தண்ணீர் மெல்ல சூடு ஏற ஆரம்பிக்கும். தண்ணீருக்குள் இருக்கும் தவளைக்கு இது தெரியுமா? தெரியும். தண்ணீர் வெது வெதுப்பாக ஆவதை தவளை உணரும். வெதுவெதுப்பான தண்ணீர் தவளைக்கு சுகம்தான். மெல்ல அசைந்து கொடுத்து சுகமாகப் படுத்துக்கொள்ளும். எழுவதற்கு சோம்பல்.

தொடர்ந்து எரியும் நெருப்பால், தண்ணீரின் சூடு அதிகரிக்கும் . அது வும் தவளைக்கு தெரியும். ஆனால் தவளையின் நினைப்பில், தண்ணீர் முன்பை விட கொஞ்சம் தான் அதிகம். முன்பு 30 டிகிரி சென்டிகிரேட் என்று வைத்துகொண்டால், இப்போது 35 தான்.

30 டிகிரி சூட்டுக்குப் பழகி விட்ட தவளையின் உடல் அதிகமாகியிருக்கும், 5 டிகிரியைச் சமாளிக்கும். இப்போது தவளை 35 டிகிரிக்கு பழகியாகிவிட்டது. நெருப்பு தொடர்ந்து எரிகிறது.

இப்போது சூட்டின் அளவை 40 டிகிரி ஆக்குவோம். தவளையைப் பொறுத்தவரை இன்னும் 5 டிகிரிதான் கூடுதல். அதற்கும் பழகிவிடும். இப்படியே நெருப்பின் அளவை கட்டுப்பாடுடன் மெல்ல மெல்ல அதிகரிக்க, தவளைக்கு மிக அதிகமாகிவிட்ட நெருப்பின் தீவிரம் உறைக்காது.

முன்னைக் காட்டிலும் கொஞ்சம் தானே கூடுதல் சூடு என்று தவளை தண்ணீரை விட்டு வெளியே வர முயற்சிக்காது. எழ சோம்பல்பட்டு, உள்ளேயே படுத்திருக்கும். அதனால் வேகும். வெந்து செத்தே கூடபோகும். ஆனாலும் அதற்கு வித்தியாசம் தெரியாது.

அதே போன்ற வேறு ஒரு தவளையை, ஏற்கெனவே அடுப்பின் மீது இருக்கும் கொதிக்கும் தண் ணீர் இருக்கும் பாத்திரத்தினுள் இறக்கி விட்டால் என்ன செய்யும்?

கொதிக்கும் தண்ணீர் உடம்பில் பட்டதுமே, துள்ளிக் குதித்து வெளியேறும்.

இரண்டு பாத்திரங்களிலும் இறுதியாக ஒரே அளவு சூடிருக்கும் தண்ணீர்தான். ஆனால் ஒன்றின் உள்ளே சமரசம் செய்துகொண்டு படுத்திருக்கும் தவளை. மற்றொன்றில் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறும் தவளை.

நம்மைச் சுற்றி நடைபெறும் மாற்றங்களும் சூடாகும் தண்ணீர் போலத்தான். அவை மெல்ல மெல்ல சூடேறும் முதல் பாத்திரம் போல இருந்தால், நமக்கு, அதிகரிக்கும் வித்தியாசம் பிரச்னை இல்லாதது போலத்தான் இருக்கும். ஆனால் சூடு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.

மொத்தமாக வந்தால்தான் மாற்றம் என்பது இல்லை. நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் மாற்றங்கள் ஐந்து ஐந்து டிகிரியாக உயரும் உஷ்ணம் போல மெல்ல அதிகரித்துகொண்டேயிருக்கின்றன.

வெளியுலகம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. எல் லோரும் சம்பாதிக்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். நேற்றைய பணக்காரர்கள் இன்றைக்கு சாதாரணர்கள். டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் தினம் தினம் மாறுகிறது. டாடா பிர்லாக்கள் வெகு தூரத்தில். அம்பானிகளுக்கு அடுத்தபடி DLF ன் குஷால் பால் சிங் என்கிறார்கள், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி என்கிறார்கள்.

வெளியில் நடைபெறும் வளர்ச்சியைவிட, நம்முடைய வளர்ச்சி அதிகமிருந்தால் மட்டுமே நாம் முன்னேறுபவர்களாக இருக்க முடியும். இருக்கும் இடத்தில் இருப்பதற்கே வேகமாக ஓடவேண்டிய நிலை.

கேள்வி இதுதான்..

மாற்றங்களை உணர்ந்து நாம் ஓடத் தயாரா?.

கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் ஆரம்பத்தில், எட்டுநாள் போட்டிகளாக இருந்திருக்கின்றன! அதற்கும் முன், நம்புங்கள், ஆட்டம் முடிகிறவரை ஆடுவார்களாம்!! நேரக் கெடு (டைம் லிமிட்) கிடையாது. பின்பு, ஐந்து நாள் போட்டிகள். அதன்பின், ஒரு நாள் போட்டிகள். இப்போது, “இருபது இருபது ஓவர்கள் போதும். அதற்குள் முடித்து, முடிவு சொல்லிவிடுங்கள்” என்கிறார்கள்.

அதனால் வீசப்படுகிற எல்லாப் பந்துகளையுமே ஒன்றுவிடாமல் அடித்து விளாசுகிற வீரர்களுக்குத்தான் மதிப்பும், குழுவில் இடமும். இல்லாவிட்டால் இரண்டும் கிடையாது. அது டெண்டுல்கரே ஆனாலும். “அடித்தாடு. முடியாவிட்டால் வெளியேறு!’’ கத்துவார்கள். ரசிகர்கள்தான். அது டிராவிடே ஆனாலும். நிலமை அப்படி. என்ன செய்ய?

உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ, உலகம் வேகமாக மாறிவருகிறது. அவ்வளவு வாய்ப்புகள். எதைச் செய்வது? எதைவிடுவது? என்று திணரவேண்டியிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்துவிடவேண்டும் என்கிற பரபரப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் வேகமாகச் செய்யவேண்டும் என்கிற தேவை. அதனால் நேரப் பற்றாக்குறை. பேசுவதைக் கூட, ஷிவிஷி வாக்கியங்கள் போல பேச வேண்டியிருக்கிறது. கூடுதலாக இரண்டு வார்த்தை பேசினால், கேட்க மற்றவர்களுக்கு நேரமில்லை.

கொடைக்கானல் மலையில் இருந்து கீழே வரும் மலைப்பாதை. நடுவில் ஒரு சிறு அருவி. அதைச்சுற்றி கடைகள், கார் பார்க்கிங். கூட்டமாய் மக்கள்.

“போட்டோ எடுத்துக்கிறீங்களா சார்? ஒரு போட்டோ 50 ரூபாய்தான்.’’

“போட்டோவை, முகவரி வாங்கிக்கொண்டு, பிறகு அனுப்புவாயாக்கும்!’’

“இல்லை சார். உடனே, இப்பவே கொடுத்து விடுவேன்.’’

“அதெப்படி?’’

“இதோ, இங்கே பிரிண்ட் போட்டுடுவேன் சார்.’’

டிஜிட்டல் காமிராவில் எடுத்து , உடன் கேசட் டினை கழற்றி மாட்டி, அங்கேயே சூட்கேஸ் அளவில் இருக்கும் பிரிண்டிங் மிஷினில், பிரிண்ட் போட்டு... பணம் கொட்டிக்கொண்டிருக்கிறது. “அம்பது ரூபாயா? அதிகமாயிற்றே!” என்று கேட்டவர்கள் குறைவு. அருவிச் சத்தத்திற்கு இணையாக, ‘பளிச் பளிச்’சென்ற காமிராவின் ஃபிளாஷ் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருவரல்ல. அங்கே அப்படிப்பட்ட புகைப்படக்காரர்கள், நான்கைந்து பேர் தென்பட்டார்கள். எல்லோர் பாக்கெட்டிலும் பணம் வழிந்தது.

மக்களுக்கு எல்லாம் அவசரம். எல்லாம் வேகமாய் வேண்டும். ‘புதுமைகளா! வெல்கம்.’ “அழகாக இருக்கிறதே? விலை பற்றி என்ன? எனக்கு ஒன்று சீக்கிரம் கொடுங்கள்” இன்றைய வாடிக்கையாளர்கள் தாராளமாக செல வழிப்பவர்கள், அவர்கள் விரும்புபவை களுக்கு!

சாதாரணமாக 300 ரூபாய்க்குக் கூட ஒரு காபியை (காபி டேகளில்) வாங்கிக் குடிக்கிறார்கள். ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை 120 ரூபாய். அட்சய திருதிக்கு கடைகளில் நகை வாங்க, கட்டை கட்டி, உள்ளேவிட வேண்டியிருக்கிறது. காரணம் தள்ளு, முள்ளு. சனி, ஞாயிறுகளில் மட்டு மல்ல மற்ற நாட்களில் கூட, மாலை வேளைகளில் உணவகங்களில் சாப்பிட சீட் கிடைப்பதில்லை. காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மக்களிடம் பணம் இருக்கிறது. நேரம் (தான்) இல்லை.

இன்றைக்கு பணம் சம்பாதிப்பது என்பது முன் எப்போதையும் விடசுலபம். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. வியாபாரம் தொழில் சேவை செய்பவர்களுக்கு சிரமமில்லை. காரணம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். மக்கள் காணாததைக் கண்டது போல, பணத்தினை பெட்டிகளில் வைத்துப் பூட்டவில்லை. தாராளமாகவே செலவழிக்கிறார்கள்.

அதை நாம் பெறுவது எப்படி?

மக்களை சரியாகப் புரிந்து கொண்டு செய்கிறவர்களுக்கு பிரச்னையே இல்லை. எதையும் காசாக்கலாம்.

தேவை: புதுமையான சிந்தனை, நேர்த்தியாகச் செய்யும் திறமை, வேகம். அவ்வளவுதான். பெரியபடிப்பு கூட அவசியமில்லை. ‘பிரார்த்தனா போன்ற திறந்தவெளித் திரை அரங்குகளில் காரில் போய், இறங்காமலே திரைப்படம் பார்க்கலாம்’ என்பது பழைய ஐடியா. ‘வாங்க, படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம்’ என்பது, (சென்னை அபிராமி காம்ப் ளெக்ஸ் சின்) புது ஐடியா.

“உங்கள் காரை நிறுத்துவதற்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக..”

“அதானே பார்த்தேன்..”

“பெரியதாக ஒன்றுமில்லை. இந்த சீட்டில் உங்கள் பெயர் முகவரி, செல்லிடைபேசி (மொபைல்) நம்பர் எழுதிவிடுங்கள். போதும்”

“அவ்வளவுதானே. கொடுங்கள்”

இரண்டு நாள் கழித்து செல்லிடை பேசியில் அழைப்பு. “உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது”

“பரிசா?”

“ஆம். நீங்கள் உங்கள் மனைவியுடன் வர வேண்டும்”

போனால், அங்கே, “இந்த விவரங் களைக் கேட்டுக் கொள்ளுங்கள். முடிந்ததும் பரிசுதான்’’ விவரங்களை கம்ப்யூட்டர் வைத்து ஒரு மணிநேரம் சொல்லுகிறார்கள். அவர்களுடைய விடுமுறைக்கால விடுதி பற்றியது. பரிசு 100 ரூபாய் பெறுமானமுள்ள வீட்டு பயன் பாட்டுப் பொருள் ஒன்று.

திரும்பிப் பார்த்தால், கணவன் மனைவியாக பல தம்பதியர் நிற் கிறார்கள். அத்தனை பேரையும் அதிக செலவில்லாமல், கிளம்பி வந்து தங்களின் விளம்பரத்தினைப் பார்க்க வைத்துவிட்ட, ஒரு யோசனை. சிறிய ஆனால் அற்புதமான யோசனை. சொல்லியவருக்கும் நடை முறைப்படுத்தியவருக்கும் லாபம் தந்துகொண்டே யிருக்கும் யோசனை.

கட்டடத்தில் இருக்கும் எல்லா பிளாட் தபால் பெட்டிகளிலும் ஒரு துண்டுப் பிரசுரம் கிடந்தது. எடுத்துப் பார்த்தால், ‘ஆஞ்சனேயா கால் டிரைவர்ஸ் 24 மணிநேர சேவை. போன் .. தொடர்புக்கு ராபர்ட் & ரத்தினம்’ பிரசுரத்தின் அடியில் ஆஞ்சனேயர் படம் வேறு! பர்வதமலையுடன்!

கால் டாக்சி தெரியும். பலரும் செய்கிறார்கள். அதை சொந்தமாக வாங்கி ஓட்ட வசதியில்லை. ஓட்டுனர் வேலையிலும் ஓரளவுதான் கிடைக் கும். என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவுதான், ஆஞ்சனேயா கால் டிரைவர்ஸ். வீட்டில் கார் வைத்திருப்பவர்கள், தாங்களே ஓட்டினாலும், சில சமயங்களில் வெளி ஓட்டுனர்களைத் தேடலாமில்லையா? “நாங்கள் ரெடி. கூப்பிடுங்கள். வருகிறோம்” என்கிற யோசனை. செயல்படுத்திவிட்டார்கள்.

மக்களுக்கு எப்படியெல்லாம் தேவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு விட்டவர்களுக்கு, சம்பாதிக்க என்ன வழி? என்கிற கேள்வியே கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள்தான்.

தேவை: புத்திசாலித்தனமான, உழைப்பு. மாற்றம்..

சுப்ரமணியம் மற்றும் அண்ணாமலை என்ற இரண்டு நண்பர்களைப் பற்றிய உண்மைக் கதை இது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். இருவருடைய ஊதியமும்கூட ஒரே அளவு தான்.

ஆனால் அவர்கள் செய்த செலவுகள்? சுப்ரமணியம் அதிகம் செலவழிக்க மாட்டார். பேருந்தில் தான் வருவார் போவார். வெளியில் சாப்பிடுவது கிடையாது. உடுத்துவதுகூட சாதாரண மாகத்தான் இருக்கும். அண்ணாமலையின் அணுகு முறை நேர் எதிர். விலையுயர்ந்த சட்டைகள்தான். அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிடுவார். எங்கே சென்றாலும் வண்டிதான். கடன் வாங்கி வாங்கிய செகண்ட் ஹேண்ட் புல்லட் மோட்டார் சைக்கிள்.

இப்படியே மூன்று நான்கு வருடங்கள் போயிருக்கும். ஊருக்கு வெளியில் வீட்டு மனைகள் விற்பனைக்கு வந்தன. சுப்ரமணியம் வாங்கினார். அண்ணாமலையிடம் பணம் இல்லை.

கடந்த சிலவருடங்களாக சிறுகச் சிறுக சுப்ரமணியம் சேமித்திருந்த காசு, ஒரு வீட்டுமனையாகிவிட்டது. அண்ணாமலை நிலையிலும் மாற்றம் இருக்கத்தான் இருந்தது. அந்த மாற்றம், அவருடைய கடன் சுமை இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருந்தது என்பதுதான்.

சுப்ரமணியம் வாங்கிய வீட்டு மனையின் விலை அதன் போக்கில் உயர்ந்துகொண்டே போக, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுப்ரமணியம் இல்லை தான்’ என்கிற நினைப்பு அவருக்கு தெம்பாக இருந்தது. அதனால் சுப்ரமணியம் அடுத்த கட்டத்துக்கு சுலபமாகத் தாவினார். தைரியமாக வீட்டுக்கடன் வாங்கினார். ‘மடமட’வென்று வீட்டைக் கட்டிமுடித்தார். உடனே வாடகைக்கு விட்டார். வாடகையை வாங்கி, ஒழுங்காக கடனைக் கட்டினார்.

சேமிப்பவர்கள் அனைவரும் சுப்ரமணியம் போல வீட்டுமனைதான் வாங்குவார்களா என்ன? பாஸ்கர் வேலை செய்தது அதே நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட் பகுதியில். நிறுவனம், பல கார்களை அதன் தேவைக்கு வாடகைக்கு எடுப்பதைப் பார்த்த பாஸ்கர், தனது சேமிப் புடன், வங்கி ஒன்றில் கடனும் பெற்று, ஒரு அம்பாசிடர் காரை வாங்கி, நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டார். வந்த வாடகையில் ஒரு பைசா தொடவில்லை. அப்படியே ‘டியூ’ விற்குக் கட்டினார்.

ஒரு காருக்குச் சொந்தக்காரர் ஆன பின்பும்கூட, அவர் தனது சொந்த செலவுகளை அதிகரித்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சேமித்து, மேலும் இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டார். அந்த நேரத்தில் பாஸ்கரைத் தவிர, அவருடைய கார்களும் பாஸ்கர் குடும்பத்துக்காக நன்றாக சம்பாதித்தன. ஆக, அவர் வீட்டில் அவரையும் சேர்த்து மொத்தம் நான்கு சம்பாத்தியங்கள்!

அந்த நான்கு சம்பாத்தியத்தில் வந்த மொத்த வருமானத்தினையும் பாஸ்கர் சிரத்தையாக சேமித்தார். சேமித்ததனால், அவரிடம் இருந்த பணம் ஒன்று இரண்டானது. இரண்டு நான்காகி, நான்கு ஆறானது. பின்பு அதுவே எட்டாகி, எட்டு பதினாறு ஆகிவிட்டது.

பாஸ்கர் மட்டுமல்ல. பல பணக்காரர்களின் ஆரம்பகாலக் கதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். சாதாரணர்கள் பணக்காரர்கள் ஆகிற நிச்சய வழியின் முதல் படி இதுவேதான்.

சேமிப்பவர்களின் பொருளாதார நிலை, அணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் போல அடிஅடியாக உயர்ந்து கொண்டே போகிறது. வருமானம் வரும் காலம் சுப்ரமணியம் போல பாஸ்கர் போல பணத்தைச் சேமிப்பவர்கள், ஒருநேரத்தில் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள்.

“சேமிக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்கிறீர்களே! 2_ம் தேதியே என் சம்பளத்தில் பத்து ரூபாய் கூட மீதம் நிற்பதில்லை. தவிர்க்கக்கூடிய செலவுகள் ஏதும் என் குடும்பத்தில் கிடையாது. கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படிச் சேமிப்பேன்?”

கேட்கலாம்.

இதற்கான பதில் கேட்பவர்களிடம்தான் இருக்கிறது. மாற்றத்துக்கான கதவுகள் உட்பக்கமாக தாழிடப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் வெளியில் இருந்து தட்டலாம். ஆனால் திறப்பதை அவரவர்கள் தான் செய்யவேண்டும்.

செலவு போக, மீதம் இருக்கும் வருமானம்தான் சேமிப்பதற்கான வழி என்று நினைப்பது ஒருவகை. அங்கே முக்கியத்துவம் செலவுகளுக்குத்தான். முன்னுரிமை செலவுகளுக்குத்தான். செலவு போக மீதம் இருந்தால்தான் சேமிப்பு.

இன்னொரு வழியும் இருக்கிறது. மேலே பார்த்த சுப்ரமணியம், பாஸ்கர் போன்றவர்கள் மட்டுமல்ல, துருபாய் அம்பானி போன்ற மிகப்பெரிய பணக்காரர்களும் செய்த முறை. சேமிப்பு போக மீதம் இருப்பதற்குள் செலவு என்கிற முறை. இங்கே சேமிப்பிற்கு முக்கியத்துவம். அதற்குத்தான் முன்னுரிமை.

“அதெப்படி? இன்றைக்கு செய்ய வேண்டிய செலவுகள் இருக்கும் போது வருங்காலத்திற்காக சேமித்துக்கொண்டிருக்க முடியுமா? பற்றாக்குறையுடன் வாழ முடியுமா? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?’’ நியாயமான கேள்விகள் போலத்தானே தோன்றுகிறது. அவற்றுக்கான பதில், இன்னொரு கேள்வியில் இருக்கிறது. அந்த கேள்வி, “இன்றைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது வருங்கால தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா?” என்பதுதான்.

‘இன்றைய தேவைகள்தான் முக்கியம்’ என்று மனது சொல்லும். அதே கேள்வியை அறிவிடம் கேட்டுப் பாருங்கள், ‘வருங்காலத்திய தேவைகள்தான் முக்கியம்’ என்று சொல்லும்.

பத்து வருடத்துக்கு முன் வாங்கிய விலையில் இன்றைக்கு வீடு கிடைக்குமா? இல்லை தங்கம்தான் கிடைக்குமா? காய்கறி முதல் கார் வரை எதன் விலைதான் போகப் போக குறைகிறது?

அதனால், தெரிந்தே, கட்டுப்பாட்டுடன் செலவுகளைக் குறைத்து வாழ்வது. இன்றைய தேவைகளை குறைத்துக்கொள்வது. அதன்மூலம் சிலகாலம் பணத்தினை சேர்ப்பது. சேர்த்த பணத்தினை மேலும் சம்பாதிக்க வைப்பது.

வேலை பார்த்தோ, தொழில், வியாபாரம் செய்தோ ஒருவர் சம்பாதிப்பது மட்டுமே குடும்பத்துக்கு போதாது. மனிதர்கள் சம்பாதிப்பதுபோல, பணத்தாலும் பணம் சம்பாதிக்க முடியும்.

சுப்ரமணியத்தின் வீடு, வீட்டு வாடகையாக சம்பாதிக்க, பாஸ்கரின் பணம் கார் வாடகையாக சம்பாதித்துக் கொடுத்தது. பங்குச் சந்தையோ, பரஸ்பர நிதியோ அல்லது வேறு எதுவுமோ. பணம், பணத்தை சம்பாதிக்கும். வேலை செய்து பணக்காரர்கள் ஆனதைவிட சொத்து விலை ஏறி பணக்காரர் ஆனவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

பணக்காரர் ஆக வேண்டும் என்றால், முதலில் பணத்தை சேர்த்தாக வேண்டும்.

முதல் ஆயிரம் அடுத்த பல ஆயிரங்களை கொண்டுவந்துவிடும். முதல் லட்சத்தினைத் தொடுவதுதான் சவால். அதன் பிறகு பல லட்சங்கள் சுலபமாக வரும்.

முதல்.. ஆம் எல்லாவற்றுக்கும் ‘முதல்’ தேவை. முதலையே செலவு செய்வது, ஆரம்ப முதல் உருவாக்காமல், பணத்தினை செலவு செய்வது புத்திசாலித்தனமல்ல.

வருமானம் என்பது ஆட்டுக் குட்டி போல. ஆட்டுக்குட்டியை அப்படியே சாப்பிடலாம். அதன் அளவு குறைவானது. அதே ஆட்டுக்குட்டியை வளர்த்தால், அதனை வளரவிட்டால் என்ன ஆகும்? அதன் எடை பெருகும். அந்த வளர்ந்த ஆடு, பல குட்டிகள் போடும்.

ஆட்டுக்குட்டியை பசித்தாலும் சாப்பிடாமல் வளர்ப்பவர்கள், நாளைய பணக்காரர்கள். அந்தத் தொலைநோக்கு, அந்தக் கட்டுப்பாடு, பொறுத்திருக்கும் தன்மை, இவையெல்லாம் சாதாரண நிலையில் இருந்தாலும் மேலே வருவதற்கான வழிகள்.

இன்றைக்கு கையில் இருக்கும் பணம், விதை நெல் போல. அதையே சாப்பிடலாம். கொஞ்சம் பசி போகும்தான். ஆனால் அதே நெல்லை விதைத்து, விளைவித்து, பெருக்கினால்? பலபேர், பலகாலம் சாப்பிடலாம்.

சேமிக்காமல் இருப்பது இன்றைக்கும் போதாமல், வருங் காலத்திற்கும் உருவாக்காமல் இருப்பது. இரண்டும் இல்லை என்கிற நிலை. சேமிப்பது, இன்றைக்கு கட்டுப்படுத்திக்கொண்டுவிட்டு , வருங்காலத்தில் நிச்சயம் வசதியாக இருப்பது. வருங்காலத்திற்கு நிச்சயம் பிரச்சனையில்லை என்கிற நிலை.

“அப்படியென்றால் சேமித்தால் போதும். பணம் தன்னால் பெருகி விடும். இல்லையா?’’

“இல்லை’’.

திரைப்படங்களில், ரஜினிகாந்த் என்னவெல்லாம் செய்வார்? ஆக்ஷன். கேரக்டர் ரோல். ஏன், காமெடி கூட சிறப்பாகச் செய்வார் இல்லையா? அவர் மட்டுமா? கமல், விஜய், ஜாக்கிசான் என்று வெற்றிபெற்றிருக்கும் பலரும் அப்படிப்பட்டவர்கள் தானே! இப்படிப்பட்டவர்கள் எல்லாம், ஒன்றல்ல, பலதிறன் பெற்றவர்கள்.

டெண்டுல்கர் தெரியுமல்லவா? அவர் பேட்ஸ்மெனா? அதில் என்ன சந்தேகம்? டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே 2 வது அதிகமான ஓட்டங்கள் எடுத்த மிகச் சிறந்த பேட்ஸ்மென் ஆயிற்றே. ஆனால் அவர், வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்வாரா?

யார் சொன்னது? ஒருநாள் பந்தயங்களில் டெண்டுல்கர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை..152! இந்தியாவின் அதிகபட்ச விக்கெட் எடுத்த சிறப்பு பந்துவீச்சாளர் கும்ப்ளே எடுத்ததை விட, 180 தான் குறைவு. டெண்டுல்கர், ரன்கள், விக்கெட்டுகள் எடுப்பதுதவிர, பீல்டிங்கிலும் புலி. மொத்தம் 120 கேட்சுகள் பிடித்திருக்கிறார். ஆக, அவர் ஒரு ஆல்ரவுண்டர். சகலகலாவல்லவன் இல்லையா?

எல்லாம் சரிதான். சொல்லவரும் தகவல் என்ன? பணம் சம்பாதிப்பதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

எல்லா இடங்களிலும் இப்படிப் பட்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒருங்கே செய்யும் ’ஆல்ரவுண்டர்கள்’ சுலபமாக ஜெயிக் கிறார்கள். ‘ஒன்றுதான் செய்வேன்’ என்று எவராலும் உட்காரமுடியாது. போதாது. இதுதான் போட்டி உலகத்தின் நிலைமை.

இது சேமிப்பிற்கும் பொருந்தும். ’சேமிப்பேன். சேமித்துவிட்டு அதன் பின் நல்ல முதலீடாகப் பார்த்து, பணத்தினை அதில் போடுவேன். அதன்மூலம் ஒன்றை, பலவாகப் பெருக்குவேன்’ என்று இருக்க முடியாது.

வேறு எப்படி செய்வதாம்?

சேமிக்கும் போதே முதலீடும் செய்யவேண்டும்.

முன்பெல்லாம், உண்டியலில் சேமிப்பார்கள். அலமாரிகளில் வைப்பார்கள். ஓரளவு காசு சேர்ந்தபின், அதனை வங்கியில் போடுவார்கள். அதன் பிறகுதான், அந்த ’சேமிப்பு’ அவர்களுக்காக சம்பாதிக்க ஆரம்பிக்கும்.

பணத்திற்கு ’டைம் வேல்யு’ என்று ஒன்று இருக்கிறது. சிவசாமி என்று பெரியவர் ஒருவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். காரணம், வீட்டிலிருந்த பழைய அலமாரி ஒன்றை விற்பதற்காக சுத்தம் செய்தபோது, அதிலிருந்து எப்போதோ வைத்த நூறு ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.

அது, அவர் மகன் திருமணத்தின் போது, ஒரு ‘கவர்’ ரோடு வைத்ததாம், 10 வருடங்களாக எவர் கண்ணிலும் படாமல் ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டு கிடந்திருக்கிறது. கிடைத்தது லாபம் என்று சந்தோஷப்பட்ட அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கிடைத்தது நூறு ரூபாய்.

இழந்தது?

அதைவிட அதிகம். 159 ரூபாய்.

இதில் எங்கிருந்து இழப்பு வந்தது என்று கேட்கத் தோன்றுகிறதா?

அந்த நூறு ரூபாய் பணத்தினை அவர் ஏதாவது வங்கியில் அப்போதே போட்டிருந்தால், அது அந்த 10 வருட காலத்தில், 259 ரூபாயாக ஆகியிருக்கும். பத்து சதவித வட்டியில்.

பணம் சில இடங்களில் இருந்தால் தூங்கும். வேறு சில இடங்களில் இருந்தால் வளரும். தினம் தினம் கொஞ்சமேனும் வளரும்.

வங்கியில் போட்ட நூறு ரூபாய், 10 வருட காலத்தில் 259 ஆகிவிடும் என்றால், 1000 ரூபாய் எவ்வளவு ஆகும்? 2,590 ஆகிவிடும். அதே 1000 ரூபாயை, 10 வருடத்திற்கு பதில் 25 வருடங்கள் தொடாமல், ஒரு வங்கியில் போட்டு வைத்தால்? 10 ஆயிரத்து 830 ரூபாயாக வளர்ந்துவிடும். நாம் ஏதும் செய்யாமலேயே.

ஆயிரம் ரூபாய் கூட பணம் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? அதானே! ஏன் வெறும் 1000 ரூபாய் மட்டும் சேமிக்க வேண்டும்? கூடுதலாக சேமிக்க முடியாதா என்ன?

அங்கே இங்கே என்று, வீட்டிலேயே பல இடங்களில் நூறும் ஆயிரமுமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு நேரங்களில், அங்கும் இங்குமாக வங்கிக் கணக்குகள் திறந்தவர்கள் உண்டு. எல்லாவற்றிலும் எடுக்காத பணம் என்று கொஞ்சமேனும் இருக்கத்தான் செய்யும்.

அவையெல்லாம் எல்லாம் தூங்குகிற பணம். சம்பாதிக்காத பணம். பணத்தால் பணம் சம்பாதிக்க முடியும். தொடர்ந்து, இரவு பகலாக அது உழைக்கும். அதற்கான இடத்தில் அது இருந்தால். நாம்தான் அதனை அங்கே கொண்டுபோய்விட வேண்டும்.

சேமிப்பு என்பதே தொடர்ந்து செய்வதுதானே. அப்படி இப்படி என்று முயன்று மாதாமாதம் 1000 சேமிக்க தொடங்கி, தொடர்ந்து 25 வருடங்கள் செய்தால், அதே 10% வட்டிக்கு மொத்த தொகை எவ்வளவாக ஆகும் தெரியுமா? 12 லட்சம். அதே நபர், இன்னும் ஐந்துவருடங்கள் கூடுதலாக சேமித்தால்? 22 லட்சமாகிவிடும். இன்னும் ஒரு ஐந்துவருடம் சேர்த்து செய்தால், 38 லட்சமாகிவிடும்.

25 வயதில் சேமிக்க தொடங்கினால், 60 வயது வரை சேமிக்கலாம். 30, 35, 40 என்று எந்த வயதிலும் தொடங்கலாம். தொடங்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. சுப காரியங்களுக்கு மட்டுமல்ல சீக்கிரம் செய்ய வேண்டும் என்பது. சேமிக்கத் தொடங்குவதற்கும்தான்.

லட்சாதிபதியாக நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையை சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்துவருவதும் தான்.

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செய்யும் தொடர்வைப்பு (ஸிஞி) தெரியும். அவை தவிரவும், இன்னும் சில வழிகள், புதிய வளம் தரும் வழிகள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று தான் சிஸ்டமாடிக் இன்வெஸ்ட் மெண்ட் பிளான் (ஷிமிறி). இதுவும் மாதாமாதம், செய்யும் சேமிப்புதான். ஆனால், பணத்தினை போடும் இடங்கள் வேறு.

இதனை மூன்று விதங்களில் செய்யலாம்.

1. தங்கம் வாங்கலாம்

ஒன்று நாமே நேரடியாக முதலீடு செய்வது. நாமேவா! என்று பயப்படத் தேவையில்லை. செய்யப்போகும் முதலீடு, எவருக்கும் நன்கு தெரிந்த தங்கத்தில். மாதம் 500 ரூபாய் சேமிக்கிறீர்களா? அரை கிராம் தங்கம் வாங்குங்கள். 1000 ரூபாய் முடியுமா? ஒரு கிராம். அதற்கும் மேல் என்றால் கேட்கவா வேண்டும்? உங்கள் சாமர்த்தியம். ஜமாயுங்கள்.

தங்கத்தினை கடைக்குப் போய் வாங்கி, அதுவும் மாதா மாதம் சரிபார்த்து வாங்கி.. அதைப் பத்திரமாகப் பாதுகாத்து.. என்றெல்லாம் சலித்துக் கொள்ளவே வேண்டாம். இப்போது சுலபமான முறைகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு சுலபமான மட்டுமல்ல, பாதுகாப்பான முறையின் பெயர், ’கோல்ட் பீ•ஸ்’ (நிஷீறீபீ ஙிமீணிs). குறைந்தபட்ச முதலீடாக 10,000 வைத்திருக்கிறார்கள்.

தேசியப்பங்குச் சந்தையிலேயே பிப்ரவரி 2007 முதல், தங்கம் விற்கிறார்கள். ஓர் கிராம் முதல் எத்தனை கிலோக்கள் வரை வேண்டுமானாலும் வாங்கலாம். கனமாகவே இருக்காது. காரணம், வாங்கிய தங்கம் கையில் தரப்படமாட்டாது. நம் கணக்கில் வரவு வைக்கப்படும். வாங்கலாம். விற்கலாம். அவ்வபோது நடக்கும் விலைகளில்.

அதற்கு, பங்குகளுக்குத் திறப்பது போல, ஒரு ’டிமேட்’ கணக்கு இருந்தால் போதும். விற்பதும் சுலபமே. பங்குகள் போலவேதான். ஹிஜிமி, கோட்டக் மற்றும் பென்ச்மார்க் பரஸ்பர நிதிகள் நடத்தும் கோல்ட் பீஸ் களில் வாங்கலாம்.

ஒளவையார், கல்விக்கு சொன்னது, இன்றைக்கு இந்த டிமேட் தங்கத்திற்கும் பொருந்தும். ஆமாம். இது வெள்ளத்தால் போகாது. வெந்தணலால் வேகாது. கள்வராலும் களவாடமுடியாது. தங்கம் நம் கணக்கில், பாதுகாப்பாக, எத்தனை வருடங்கள் ஆனாலும், சேதாரம் இல்லாமல் இருக்கும். 1% கூலி உண்டு. பங்குத் தரகர்களிடம் விசாரியுங்கள். ’இது சேமிப்பு என்பது சரிதான். ஆனால், சேர்க்கும் போதே வளரும் சேமிப்பா?’ என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்கம் விலை கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்ன ஆகியிருக்கிறது என்று தெரியுமல்லவா?.

தங்கமே தங்கம்.. இந்த வாரமும் தொடருகிறது

இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும் போது, கடைசியாகச் சொல்லும் விலை நிலவரங்களை நீங்கள் கவனிப்பது உண்டா? தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைத்தான் சொல்லுகிறேன்.

அன்றைய தினம் கிராம் ஒன்றுக்கு எவ்வளவு ஏறியது அல்லது இறங்கியது என்று சொல்வார்கள். முன் எப்போதும் இல்லாத அளவாக, கடந்த நான்கு ஐந்து வருடங்களில் தங்கம் நன்றாக விலை உயர்ந்து, ஒரு நல்ல வருமானம் தந்த முதலீடாகவே இருந்து வந்திருக்கிறது, என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு கட்டத்தில், கிடு கிடுவென்று உயர்ந்து வந்த பங்குச் சந்தைக்கே ஈடு கொடுக்குமளவு கூட, தங்கத்தின் விலையில் உயர்வு இருந்தது. பின்னே? 2003_ல் கிராம் 533 ரூபாய் ஆக இருந்த தங்கம், 2007 நவம்பர் 1 ம் தேதி கிராம், 1011 என்கிற உச்சத்தினைத் தொட்டது. பின்பு இறங்கியது தற்சமயம் கிராம் 1034 ஆக இருக்கிறது. 22 கேரட் அல்ல 24 கேரட்.

இதுதான் தங்கத்தின் குணமா? எப்போதுமே தங்கம் இப்படித்தான் விலை ஏறுமா? இதே அளவு விலை ஏற்றம் இனியும் சாத்தியமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா? தங்கம் வாங்குவது முதலீடு ஆகுமா?

நிறைய கேள்விகள்.

நமது நாட்டில் இன்றும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கத்தினை ஒரு நகையாகவே, ஆடம்பரப் பொருளாகவே பார்ப்பது உண்மை. தங்கம் இன்னமும் கூட, பெரும்பாலானவர்களால் ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படவில்லை என்பதும் அதே அளவு உண்மை.

இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமான அளவு தங்கம் இருப்பதும், வருடா வருடம் இறக்குமதி செய்யப்படுவதும் (ஆண்டுக்கு 750 டன்) இந்தியாவில்தான்.
தங்கத்திற்கு என்று சில தனிப் பட்ட குணங்கள் உண்டு.

முதலாவது, தங்கம் ஒரு சர்வதேசப் பொருள். அது செல்லுபடியாகாத தேசமே இல்லை. எல்லா நாடுகளிலும் வாங்குவார்கள், விற்பார்கள். மக்கள் மட்டுமல்ல, எல்லா அரசாங்கங்களுமே டன் கணக்கில் வாங்கி, ஆண்டுக் கணக்கில் பூட்டி வைத்திருப் பார்கள்.

நம்முடைய மத்திய ரிசர்வ் வங்கியிடம் மட்டும் 400 டன் ( 4 லட்சம் கிலோ தங்கம். சவரன் கணக்கில் சொல்வ தென்றால் 5 கோடி சவரன்!) கையிருப்பாக இருக் கிறது. இது போக, நம் மக்களிடம் 13,000 டன்கள் (13 லட்சம் கிலோ) தங்கம் இருக்கிறது. உலகத்தில் இருக்கும் மொத்த தங்கத்தில், இது 9 சதவிதம். அரசிடம் இருப்பதையும் சேர்த்தால் 10.4 %. ஆம். நாம் சவரன் என்கிறோம். பவுன் என் கிறோம். ஒரு சவரனோ ஒரு பவுனோ அதன் எடை 8 கிராம். உலக அளவில் தங்கத்தின் விலையைச் சொல்லும் போது, டிராய் அவுன்ஸ் கணக்கில் குறிப்பிடுகிறார்கள். ஒரு டிராய் அவுன்ஸ் என்றால் அது கிட் டத்தட்ட 31 கிராம்கள் ( 31.1035 ரீனீs).

மக்கள் தங்கம் வாங்குவது சரி. அரசாங்கங்களுக்கு என்ன? என்று கேட்கலாம். தங்கத்தில் முதலீடு என்பது அதன் விலை ஏற்றத்துக்காக செய்யப் படுவதைவிட, அதன் பாதுகாப்பு தன்மைக்காவே செய்யப்படுகிறது. எப்போதெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் தங்கத்தினுள் நுழையும் பணம் அதிகரிக்கும். அதனால் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும். காரணம், எல்லா காலங்களிலும், எல்லா பிரச்னைகளின் போதும், எல்லா தேசங்களிலும் அதுதான் சேஃப்.

அதேதான் நம்முடைய குறிக்கோளுமாக இருக்கலாம். தங்கத்தில் போடும் பணம் காணாமல் போகாது. மற்ற முதலீட்டு வாய்ப்புகள் போல, அதனால் வருமானம் தரமுடியாமல் போகலாம். ஆனால் முதலுக்கு எப்போதும் பிரச்னை வந்ததில்லை.

தங்கத்துக்கு போர்களுடன் மட்டுமல்ல எல்லா நிச்சயமற்ற தன்மைகளுடனும் தொடர்பு உண்டு. உலகில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவும் போதெல்லாம் (இயற்கைப் பேரழிவுகள், தீவிரவாதிகளின் பெரிய தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள்) தங்கம் கவர்ச்சியாகி விடும். பாதுகாப்பு தேடி ஓடும் பணம் தங்கத்தில் தான் தஞ்சமடையும். தங்கம் தான் சேஃப்.

தங்கத்துக்கு இந்த வகையில் போட்டி என்று பார்த்தால், அமெரிக்காவின் (யு.எஸ்) டாலர்தான். பல அரசாங்கங்களாலும் யு.எஸ் டாலர் நிறைய சேர்த்துவைத்துக் கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளாக, தங்கத்திற்கு அடுத்தபடி, சர்வதேச அளவில் டாலர் முதலீடுதான் சேஃப். டாலர் கையிருப்பு எவ்வளவு என்பதுதான் கணக்கு.

டாலருடன் தங்கத்துக்கு தனி உறவே உண்டு. இவர் வலது என்றால் அவர் இடதுபக்கம்.

டாலர் விலை இறங்கினால் தங்கம் விலை உயரும். டாலர் விலை உயர்ந்தால்? தங்கம் விலை இறங்கும். சமீபகாலமாக தங்கம் விலை ஏறுவதும், டாலர் வீழ்ச்சி அடைந்து வருவதும் இதனாலும்தான். இதனை எதிர் உறவு என்று சொல்லலாம்.

டாலர் தவிர , இன்னொரு சர்வதேச பயன்பாட்டுப் பொருள், கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் விலைக் கும் தங்கத்துக்கும் கூட உறவு உண்டு. இது, ஒரே போக்கில் போகும் நேர் உறவு. அவர் சிரித்தால் இவரும் சிரிப்பார். கச்சா எண்ணெய் விலை உயர உயர, தங்கத்தின் விலையும் உயரும். அவர் இறங்கினால் இவரும் இறங்குவார்.

இன்னொரு உறவு பங்குச்சந்தை களுடனானது. பங்குச் சந்தைகள் வீழ்ந்தால் தங்கம் விலை உயரும். காரணம் அங்கிருந்து வெளியேற்றும் பணத்தினை, அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் முதலீடு செய்யவேண்டுமென்றால் முதலீட்டாளர் களுக்கு முதலில் நினைவு வருவது தங்கம் தான். சமீப காலங்களில், இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக உயர்ந்த போதே தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. பங்குச் சந்தைக்கு ஏதும் நிகழ்ந்தால்.. தங்கத்தின் விலை இன்னும் கூட அதிகரிக்கும்.

விபரங்கள் சரி. தங்கத்தில் நாம் முதலீடு செய்யலாமா?

எந்த முதலீட்டிலும் மூன்று அம்சங் களைப் பார்க்க வேண்டும். முதலாவது அந்த முதலீடு பாதுகாப்பானதா? இரண் டாவது அந்த முதலீட்டுக்கு வருமானம் எப்படி? மூன்றாவது தேவைப்படும் நேரம் அந்த முதலீட்டில் இருந்து வெளியேற முடியுமா?

தங்கம் என்கிற முதலீடு பாதுகாப் பானதே. மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தங்கத்தில் இருந்து வரக்கூடிய வருமானம் கடன் பத்திரங்கள், வங்கி வைப்புகள் போல நிச்சய மானதும் இல்லை. பங்குச் சந்தை பரஸ்பர நிதிகள் போல, நிறைய வாய்ப்பிருப்பதும் இல்லை. வருமானம் வரலாம், வராமலும் போகலாம். விற்பதில், வெளியேறுவதில் பிரச்னையே இல்லை என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.

சரி. நாம் முதலீடு செய்யலாமா, கூடாதா?

தம்மிடம் இருக்கும் முதலீட்டின் மொத்த அளவே குறைவு என்றால், அதைப் பெருக்க வேண்டியது மிக அவசியம் என்றால், தங்கத்தினை நகை என்கிற அளவுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

மொத்த முதலீட்டுத் தொகை கணிசமானது என்றால், அதனை பிரித்துப் போடுவது நல்லது. அந்த சந்தர்ப்பத்தில் தங்கத்திற்கு நமது ’போர்ட்போலியோ’வில் நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்கள், அதிலும் சேமிக்க விரும்புபவர்கள், மாதாமாதம் தங்கம் வாங்கலாம். சேமிக்கக்கூடிய பணத்தில் ஒரு பகுதிப் பணத்திற்கு மட்டும், வங்கிகளும் மற்றவர்களும் விற்பனை செய்யும் தங்க நாணயங்களாகவோ அல்லது, கடந்த வாரம் பார்த்த பங்குச் சந்தையில் கிடைக்கும், தங்க யூனிட்டுகளாகவோ(நிஷீறீபீ ஙிமீணிs) வாங்கலாம்.

மற்ற இரண்டு விதமான சிஸ்டமாடிக் (Gold BeEs) பிளான் (ஷிமிறி)கள் பற்றி விளக்க மாக அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம். .

கடைக்காரரே! ஒரு ரூபாய் தக்காளி, ஒரு ரூபாய் வெங்காயம், ஐம்பது பைசா பச்சை மிளகாய் கொடுங்க.”

“இந்தா புடிம்மா.’’

“ஒரு ரூபாய் தக்காளி கேட்டா, ஒரு தக்காளி தரீங்களே என்ன! நினைப்பு எங்க இருக்கு?’’

“நான் சரியான நினைப்பிலதாம்மா இருக்கேன். உனக்குதான் தக்காளி விலை தெரியலை. இன்னைக்கு கிலோ என்ன விலை தெரியுமா? 30 ரூபாய்.’’

“கிலோ முப்பது ரூபாயா? அநியாயமா இருக்கே! என்ன விலையோ என்ன பிரச்னையோ. சரி வுடு. மவராசன் ஒண்ணாவது கொடுத்தியே..’’

போகும் வழியில் முணுமுணுத்துக் கொண்டே போகிறார் நீலா. ‘நேத்து ஒரு ரூபாய்க்கு மூணு கொடுத்தார். இன்னைக்கு அதே ஒரு ருபாய்க்கு ஒண்ணுதானாம். விலை அதிகமாம்ல .. ம்ம்.’

சித்தாள் வேலை செய்யும் நீலா எப்போதும் அப்படித்தான். தக்காளி விலை அதிகமானாலும் இறங்கினாலும் , அவர் வாங்குவது என்னவோ ஒரு ரூபாய்க்குத்தான். என்ன? விலை குறைந்திருக்கும் தினங்களில் இரண்டோ மூன்றோ கிடைக்கும். சந்தோஷமாக குழம்பில் போடுவார். விலை உயர்ந்த தினங்களில், ‘இன்றைக்கு ஒன்றுதானா? சரி, கொடு’ என்று அதையும் வாங்கிக்கொள்ளுவார்.

அவரைப் பொறுத்தவரை, விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தக்காளிக்காக செலவழிப்பது என்னவோ, தினம் ஒரு ரூபாய்தான்.

கடந்த வாரம் பார்க்க ஆரம்பித்துள்ள சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்பதற்கும், நீலா தக்காளி வாங்குவதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வித்தியாசம் அதிகமில்லை. தக்காளி அழுகும். எஸ்.ஐ.பி. (SIP) யில் வாங்கும் பங்குகள் அழுகாது.

பங்குச் சந்தை அனுபவம் சிலருக்கு இல்லவே இல்லை. கிடைக்கப் பெற்றவர்களில் சிலருக்கு, அது சந்தோஷம் தரவில்லை. காரணம், ’எல்லோரும் வாங்குகிறார்களே சொல்லுகிறார்களே என்று பங்குகளை வாங்கினால், அவர்கள் வாங்கிய பிறகு, விலை இறங்குகிறது.

’சரி வாங்கியது தவறாகிவிட்டது. இனி எதுவுமே வாங்க வேண்டாம்’ என்று விட்டுவிட்டால், சொல்லிவைத்ததுபோல, பங்குகளின் விலைகள் அதன்பிறகு கடுமையாக உயருகின்றன. ’அடடா இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமே’ என்று வருத்தப்படவைக்கின்றன.

என்ன செய்வது? எப்போதுமே, பங்கு விலைகள் இப்படித்தான் அடிக்கடி ஏறியும் இறங்கியும் அலைக்கழிக்கின்றன! ஆனாலும் பங்குச் சந்தை தரும் வாய்ப்புகளையும் விட மனதில்லை. இதைச் சமாளிப்பது எப்படி? என்ன செய்யலாம்?

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று முடிவு செய்துவிட்டவர்கள் (சில பத்திகள் தள்ளி விவரமாக பார்க்கலாம்), இரண்டு வழிகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

முதலாவது, கையில் கணிசமாக பணம் இருக்கும் போது, அந்த அளவுக்கு பங்குகள் வாங்குவது. அப்படி ’லம்ப்’ ஆக முதலீடு செய்வது.

இரண்டாவது வகை , நீலா தக்காளி வாங்கியது போல, தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்கு மட்டும், கொஞ்சம் கொஞ்சமாக பங்குகள் வாங்குவது.

ஒருமுறை, கணிசமாக வாங்குவதற்கும், தொடர்ச்சியாக, பல தவணைகளில் சிறிய தொகைகளுக்கு வாங்குவதற்கும் இடையே என்ன வித்தியாசம்? என்று கேட்கலாம்.

நாம் பங்குகள் வாங்கும் நேரம், சந்தையில் விலை குறைந்திருந்தால், கணிசமாக வாங்கும் முறை நல்லது. மாறாக, நாம் வாங்கப்போகும் நேரம் விலைகள் உயர்ந்திருந்தால், மொத்தப் பணத்திற்கும் அந்த நேரம் வாங்குவது, புத்திசாலித்தனம் இல்லை.

இருக்கும் நிலைமைகளைப் பார்த்தால், வருங்காலத்தில் சில நிறுவனங்கள் நன்றாகத்தான் செயல்படும், நல்ல லாபமீட்டும் என்பது போலத்தான் சொல்லமுடியுமே தவிர, எந்த நேரம், எந்த நாள், பங்குகள் விலை உயரும்? எதனால் எப்போது இறங்கும் என்று நாள் குறித்து எவராலுமே சரியாக கணித்துச் சொல்லமுடியாது.

அதனால்? எப்போது பங்குகளை வாங்கலாம் என்கிற முடிவினை எடுக்க முடிவதில்லை. இதனைச் சமாளிக்க சுலபமான வழி, ஒரு நல்ல நிறுவனம் நடத்தும் எஸ்.ஐ.பி. (ஷிமிறி) யில் சேர்ந்து மாதாமாதம் ஐநூறோ, ஆயிரமோ கட்டவேண்டியதுதான்.

அப்படிச் சேர்ந்துவிட, நீலா, தினம் ஒரு ரூபாய் தக்காளி வாங்கியது போல, நமக்காக நாம் கட்டும் 500 ரூபாய்க்கோ, 1000 ரூபாய்க்கோ, அந்த நிறுவனம் பங்குகள் வாங்கும். ( எஸ்.ஐ.பி.யில் அதனை யூனிட்டுகள் என்பார்கள். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்)

விலை குறைந்திருக்கும் காலங்களில் ஒரு ரூபாய்க்கே கூடுதல் எண்ணிக்கை தக்காளி கிடைப்பது போல, பங்குச் சந்தை இறங்குகிற காலங்களில், கூடுதல் யூனிட்டுகளும், பங்குகளின் விலைகள் உயரும் காலம், குறைவான யூனிட்டுகளும் நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

சேமிக்கிறோம் சரி. சேமிக்கிற பணத்திற்கு பங்குகள் போன்ற யூனிட்டுகள் கொடுக்கிறார்கள். அதுவும் சரி. சேர்ந்த யூனிட்டுகளை எப்போது விற்பதாம்? விற்று காசு பார்ப்பதாம்?

விற்பதா? ஒரு குரங்குக் கதை தெரிந்திருக்குமே!

”உன்னால் எதையுமே உருப்படியாக செய்யமுடியாது. அதனால் தான் குரங்கு புத்தி என்கிறார்கள்” என்று சொன்னதற்கு, ஒரு குரங்கிற்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதாம். ’யாரையடா சொன்னாய்? அடா!’ என்று சொல்லி, ”எங்கே எதாவது ஒரு வேலையை என்னிடம் கொடுத்துப் பாருங்கள்!” என்று சவால் விட்டதாம்.

”அப்படியா சரி. இந்தா, இந்த செடியை நட்டு, நன்கு வளர்த்துக் காட்டு பார்ப்போம்” என்று சொல்ல, செடியை வாங்கிக்கொண்டு போய், அழகாவே நட்டதாம் அந்த குரங்கு.

’அட பரவாயில்லையே! இது கொஞ்சம் வித்தியாசமான குரங்கு போலத்தான் தெரிகிறது’ என்று கவனித்துப் பார்க்க, குரங்கு நட்டுவைத்த செடிக்குப் பக்கத்திலேயே, அக்கறையுடன் உட்கார்ந்துகொண்டதாம். சற்று நேரம் போக, சவால் விட்டவர்களுக்கு ஆச்சரியம் அதிகமானது.

இன்னும் சிரிது நேரம் போக, திடீரென, குரங்கு அந்த செடியைப் பிடுங்கி உயர தூக்கிப் பிடித்து, செடியை உற்றுப் பார்த்ததாம். ”அடடா ! என்ன செய்கிறாய்?” என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை. செடி எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று பார்த்தேன் ” என்றதாம்.

பங்குகளை, குரங்கு செடி வளர்த்தது போல, வாங்குவதும் விற்பதுமாக இருந்தால், முதலீடு வளராது. எஸ்.ஐ.பி. (SIP) யின் பலமே, அதனை நீண்டகாலத்திற்கு விட்டு வைப்பதுதான். அப்போதுதான், அது நின்று வளரும், கணிசமான பலன் தரும்.

குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வுக் காலத்திற்கான சேமிப்பு போன்றவற்றைச் செய்ய, இந்த சேமிப்பு முறை சிறந்தது. 5, 10, 15, 20 வருடங்களுக்கு தொடர்ந்து, இந்த வகையில் சேமித்தால், மிகவும் கணிசமான தொகையினைப் பெற முடியும்.

மாதாமாதம் நமது சக்திக்கு ஏற்றபடி 500 அல்லது 1000 ரூபாய் சேமிக்க, வருடத்திற்கு 6000 அல்லது 12 ஆயிரமோ, சேமித்ததாவும் ஆகிவிடும், அதே சமயம் அதை துரித வளர்ச்சி காணும் பங்குச் சந்தையில் அவ்வப்போதே முதலீடு செய்ததாகவும் ஆகிவிடும்.

யோசனை நன்றாக இருப்பதுபோலத்தான் தெரிகிறது. ஆனாலும், பாடுபட்டு சம்பாதித்த பணத்தை, செலவைக் கட்டுப்படுத்தி சேமித்த பணத்தை பங்குச் சந்தையிலா போடுவது? அதுதான் பயமாக இருக்கிறது என்று சிலருக்குத் தோன்றலாம்.

பங்குச் சந்தையில் இருக்கும் பிரச்னைகள் என்ன? ஏன் அதற்குள் வருவதற்கு இன்னும் கூட சிலர் தயங்குகிறார்கள்?

1) எது நல்ல நிறுவனம் எது சரியில்லாத நிறுவனம் என்றெல்லாம் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

2) ஒரு நேரம் பங்குகளின் விலை உயருகிறது. இன்னொரு நேரம் விலைகள் வீழுகின்றன. நமக்கு ஏதும் புரியவில்லை.

3) ஆசை காரணமாகவும் பயம் காரணமாகவும், முதலீட்டை அதிக நாட்கள் விட்டுவைக்க முடியவில்லை

4) இதில் போடும் சேமிப்பு பெருகுமா? அல்லது பங்குச் சந்தையின் பிரச்னைகள் காரணமாக, காணாமலேயே போய்விடுமா?

சரி. இந்த நான்கு பிரச்னைகளுமே பங்குச் சந்தை தொடர்பான பிரச்னைகள்தான். ஆனால் இவை நான்கிலும் இருந்து தப்பிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது போன்றதுதான் எஸ்.ஐ.பி. (SIP)

என்ன இது ஒரே எஸ்.ஐ.பி. (SIP) புராணமாக இருக்கிறதே!

விஷயம் இருக்கிறது..

செய்தி கேட்கிறோம். அல்லது பத்திரிகை பார்க்கிறோம். முன்தினம் தங்கத்தின் விலை, கிராமுக்கு 40 ரூபாய் ஏறியிருக்கிறது என்று தெரியவருகிறது. நமக்கு எப்படியிருக்கும்?

நம்மில் சிலருக்கு சந்தோஷமாக இருக்கும். வேறு சிலருக்கு வருத்தமாக இருக்கும். இதென்ன வேடிக்கை! அதெப்படி, ‘தங்கம் விலை ஏறிவிட்டது’ என்கிற ஒரே செய்தியை வெவ்வேறு விதங்களாக எடுத்துக்கொள்ளமுடியும்?

அப்படித்தான். விஷயம் இருக்கிறது. சந்தோஷங்கள் அல்லது வருத்தங்கள் எவற்றைப் பொறுத்தவை? நம் லாப நட்டங்களைத்தானே! நாம் ஏற்கெனவே தங்கம் வாங்கிவிட்டிருந்தால்? தொடர்ந்து உயரும் விலைகளால் நமக்கு லாபம். அதனால் வரும் மகிழ்ச்சி. ’தங்கம் வாங்க வேண்டும்’, ‘வாங்கிவிடலாம்’ என்றே யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, இன்னும் வாங்காமல் இருப்பவர்களுக்கு? உயரும் விலை, தவற விட்ட லாபம். அதனால் ஏற்படும் வருத்தம்.

இதே உணர்வுதான் எல்லா சொத்துக்களுக்கும். வீடோ இடமோ வாங்கிவிட்டவர்கள், விலை உயர உயர, நியாயம்தான் என்பது போல பார்க்கிறார்கள். வாங்கத் தவறியவர்களோ, ‘என்ன அநியாயம்? இதெல்லாம் ரொம்ப அதிகம் ’ என்று புலம்புகிறார்கள்.

இத்தனைக்கும் தங்கம் விலை ஏறுவதற்கு சதோஷப்படுபவரிடம் எவ்வளவு தங்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகமில்லை. ஐந்து சவரன் பத்து சவரன், வாங்கியிருந்தாலே போதும். விலை உயர்வு மகிழ்ச்சி தந்துவிடும். அதேபோல, வாங்கி விற்க அல்ல, குடியிருக்க வீடோ ஃபிளாட்டோ, விலை அதிகரிப்பதற்கு முன் வாங்கியிருந்தால் போதும். அதன்பிறகு நிகழும் ரியல் எஸ்டேட் விலை உயர்வை, திருப்தியுடன் கவனிப்பார்கள்.

தங்கம், வீடு, இடங்கள் மட்டும் தான் சொத்துக்களா என்ன? ஏன்? எத்தனையோ பேர் கடைகளை வாங்குகிறார்கள். செழிப்பாக நடைபெறும் வியாபாரங்களை வாங்குகிறார்கள். கணிசமான அளவு வசதி படைத்தவர்கள், தொழிற்சாலைகளையே கூட வாங்குகிறார்கள்.

தங்கமோ, இடமோ, கடையோ, வியாபாரமோ, தொழிற்சாலையோ. எல்லாம் முதலீடுகள் தான். லாபம் பார்ப்பதற்காகச் செய்யப்படும் முதலீடுகள். பலரும் வாங்குகிறார்கள்! லாபம் பார்க்கிறார்கள்.

அதுசரி, நாம் ஏன் வாங்கவில்லை?

நாம் ஏன் தொழிற்சாலைகள் வாங்கவில்லையா? நல்ல கதையாக இருக்கிறதே! நம்மிடம் ஏது சாமி அவ்வளவு பணம்?

இப்படிக் கேட்பவர்களுக்கு பங்குச் சந்தை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிய வேண்டியிருக்கிறது என்று சொல்லலாம். பங்குச் சந்தை என்பதே இப்படிப்பட்ட அற்புதமான முதலீட்டு வாய்ப்புதான். இந்திய மக்களிடம் இருக்கும் மொத்த தங்கத்தின் அளவு கிட்டத்தட்ட 13000 டன் (1,30,00,000 கிலோ). கிராமுக்கு 40 ரூபாய் ஏறினால் நமக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? நம்மிடமும் ஒரு (சிறு) அளவு இருக்கிறதே. அதற்கும் சேர்த்துத் தானே விலை உயர்வு. அதனால் தான்.

சென்னையோ, கோவையோ அல்லது கோணாபட்டோ. எல்லா ஊர்களிலும் இட விலைகள் உயர்ந்திருக்கின்றன. எவ்வளவு சதுர கிலோ மீட்டர் இடங்கள்! அத்தனையும் விலை உயர்ந்து உள்ளன. நம்மிடம் மிஞ்சி மிஞ்சிப் போனால் எவ்வளவு இடம் இருக்கும்! ஆனாலும் என்ன? விலை உயருகிற பொருளில் ஒரு சிறு பகுதியேனும் நாமும் வாங்கிவிட்டோமல்லவா! அந்த மனநிறைவுதான். பிறகு? நம் சக்திக்கு ஏற்பத்தானே நம்மால் முதலீடு செய்ய முடியும்? அதைச் செய்துவிட்ட மகிழ்ச்சிதான், திருப்திதான்.

சில சவரன்கள், ஒன்றிரண்டு சதுர(ங்கள்) இடங்கள். இவற்றைப் போலவே, சிறிய அளவுகளில் நிறுவனங்களையும் வாங்கலாம். நம் சக்திக்கு ஏற்ப கொஞ்சம் பணம் முதலீடு செய்து, நன்கு செயல்படும் நிறுவனங்களின் ஓரளவு உரிமை பெறலாம். அதற்குரிய அளவு பணம் கொடுத்தால் கிடைக்கும். யார் கொடுத்தாலும் கிடைக்கும். தடையில்லை. எவரும் (பட்டியல் இடப்பட்ட) நிறுவனங்களின், உரிமையை வாங்கலாம். அற்புதமான நிறுவனங்களின் பங்குதாரர் ஆகிவிடலாம். இதுதான் பங்குச் சந்தை கொடுக்கும் வாய்ப்பு.

வீடுகட்ட சிமெண்ட் வாங்குகிறோம். விலை அதிகரித்துவிட்டது என்று பேசிக்கொள்ளுகிறோம். சிமெண்ட் நிறுவனத்திற்கு நல்ல லாபம் என்றும் கேள்விப்படுகிறோம். என்ன செய்கிறோம்? அதோடு விட்டு விடுகிறோம்.

வேறு என்ன செய்யலாம்?

அந்தக் கொழுத்த லாபம் ஈட்டும் நிறுவனத்தின் பங்குகளை முடிந்த அளவு வாங்கலாமே!

அவ்வளவு பெரிய நிறுவனத்தின் பங்குகளைப் போய் நான் வாங்குவதா? முடியுமா? என்பது போன்ற தயக்கங்களே வேண்டாம்.

சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவிட்டால் (அதற்குரிய டிமேட் கணக்கு, வங்கிக் கணக்கு, வர்த்தகக் கணக்கு திறப்பது), அந்த நிறுவனத்தின் ஒரு பங்கினை வெறும் 1000, 1500 ரூபாய்கள் கூடப் போதும். வாங்க முடியும். பலரும் வாங்குகிறார்கள். ஏ.சி.சி. நிறுவனத்தின் ஒரு பங்கு விலை: 1070; இந்தியா சிமெண்ட் : ரூ. 330 , டால்மியா சிமெண்ட்: ரூ. 525 அல்ட்ராடெக் சிமெண்ட் ஒரு பங்கு விலை : ரூ. 995 குஜராத் அம்புஜா : ரூ. 150.

இவற்றை நம்மால் வாங்க முடியாதா? எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதில் போட விரும்புகிறோமோ அவ்வளவு பணத்திற்கு பங்குகள் வாங்கலாம்.

சிமெண்ட் நிறுவனங்கள் மட்டும் தான் வாங்க முடியுமா? யார் சொன்னது? எந்த (பப்ளிக் லிமிடெட் & லிஸ்டட்) நிறுவனங்களின் பங்குகளையும் நாம் வாங்கலாம். மற்ற எவரைப் போலவும் நமக்கும் உரிமை இருக்கிறது.

டாடா ஸ்டீல் வேண்டுமா? வாங்கலாம். விலை 900 சொச்சம். மாருதி கார்கள் தயாரிக்கும் மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக்கொள்ள விருப்பமா? ஓ தாராளமாக வாங்கலாம். விலை : ரூ. 1075

அசோக் லேலண்ட் :ரூ. 53 பாட்டா (ஷ¨ கம்பெனி) ரூ. 266.

இப்படியாக, இன்ஃபோசிஸ், பிரிட்டானியா (பிஸ்கெட் நிறுவனம்), கோல்கேட், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ் மோட்டார் என்று 7000 க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் விலைக்குக் கிடைக்கின்றன. வேண்டியவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன் மூலம் அப்படிப்பட்ட நன்கு லாபமீட்டும் புளுசிப் நிறுவனங்களில் நாமும் முதலீடு செய்யலாம்.

நாம் வாங்கும் நிறுவனங்கள் லாபம் செய்யும். லாபத்தினை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும். அந்த ‘டிவிடெண்ட்’டுக்குக்காகவே பங்குகள் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். மிக அதிக லாபம் செய்யும் காலம், நாம் வாங்கிய பங்குகளுக்கு இணையாக, கூடுதல் பங்குகளை இலவசமாகவே (போனஸ் பங்குகள்) நிறுவனங்கள் வழங்கும்.

அந்த நிறுவனம் லாபம் செய்தால் நல்லதுதான். தவறி நட்டம் செய்தால் அது நம்மைப் பாதிக்காதா? பாதிக்கும் தான். நாம் வாங்கிய அளவுக்கு மட்டுமே,. அதாவது நாம் வாங்கிய பங்கின் விலை குறையலாம். நட்டம் அந்த அளவுக்கு மட்டுமே. லாபமோ நட்டமோ நாம் வாங்கும் பங்குகளின் அளவுக்கு மட்டுமே.

நல்ல நிறுவனங்களாகத் தேர்வு செய்து, அவற்றின் பங்குகளை இயன்ற அளவு வாங்கிவிட்டு, ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தவர்கள் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள். அந்த நிறுவனங்களைப் போலவே, நிறுவியவர்களைப் போலவே.

பல பெரிய, முன்ணணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் போலத்தான் தெரிகிறது என்று தோன்றுகிறதா? தவிர ஏதோ எஸ்.ஐ.பி பற்றியும் விரிவாகச் சொல்லப்போவதா சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறதா?

ஒரு வாரம் பொறுத்திருங்கள்..

நீங்கள் மோதிரம் அணிந்திருக்கிறீர்களா, இல்லை கழுத்தில் தங்க செயின் போட்டிருக்கிறீர்களா? அதை வாங்கி சுமாராக எத்தனை வருடங்கள் இருக்கும்? மோதிரம், சங்கிலி போல இன்னும் சிலபல ஆபரணங்கள் உங்களிடமோ, உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ இருக்கும்.

அவையெல்லாம் உங்களிடம் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றன? நீங்கள் குடியிருக்கும் வீடு அல்லது பிளாட், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ சொந்தம் தானே! அதை வாங்கி எவ்வளவு காலம் ஆகிறது? நிலம், இடம் போன்ற இன்னும் சில சொத்துக்களும் கூட உங்களிடம் இருக்கலாம்.

அவற்றை வாங்கியும் பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அல்லது இப்போதுதான் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்கள் அவற்றை விற்கப்போவதில்லை. காரணம் அவை சொத்துகள். அவற்றை வாங்கி, விற்று அதன் மூலம் உடனடி லாபம் பார்க்க நினைப்பதில்லை.

அப்படி பல காலம் வைத்திருக்கக் கூடிய சொத்துகள் என்கிற பட்டியலில், தாராளமாக பங்குகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பார்க்கப்போனால், அப்படிப்பட்ட பங்குகளை வாங்கி நீண்டகாலம் வைத்துக்கொள்வது என்கிற அணுகுமுறையுடன் வாங்கினால், பங்குச் சந்தைக்கே உரியதான சில தனிப்பட்ட (பிரத்யேகபெக்யுலியர்) பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

யானையை குருடர்கள் பார்த்தது போல, சிலர் அதன் வாங்கி விற்கும் ‘டிரேடிங்’ வாய்ப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அதன் மூலம் பணம் இழந்து, பங்குச் சந்தையே நம்பமுடியாதது என்று நினைக்கிறார்கள்.

பங்குச் சந்தை என்பதை, நன்றாக நடக்கும் நிறுவனங்களில் செய்யக்கூடிய முதலீடாக, நம்முடைய சேமிப்பினை வளர்ப்பதற்காக செய்யும் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கலாம். இதுதான் யானையைத் தள்ளி நின்று அதன் முழு உருவத்தினையும் பார்ப்பது. அதற்கு முக்கியமாக, நிதானம் (என்ற கண்) வேண்டும். உடனடியாக மிக அதிகமான லாபம் என்று பார்க்காத நிதானம்.

நாம் முதலீடு செய்யும் நிறுவனங்கள், சிறப்பாக வியாபாரம் செய்து லாபம் ஈட்ட, அந்த லாபம் பங்குதாரர் ஆகிய நமக்கும் பலவிதங்களில் வந்து சேரும்.

ஆக, பங்குச் சந்தையில் முதலீடு என்பது, சிறப்பாக வியாபாரம்/தொழில் நடத்தும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது.

இன்றைக்கு இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் தேசம். உலகிலேயே மிக அதிகமான வளர்ச்சி காணும் நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். நமக்கு முன்னே சீனா மட்டுமே. இந்தியா மொத்தமும் (GDP யில்), ஆண்டுக்கு 9 சதவிகிதத்திற்கும் மேல் வளருகிறது

சுதந்திரம் பெற்ற பின் 45 ஆண்டுகளாக மூன்றரை, நாலு சதவிதம் மட்டுமே வளர்ந்துகொண்டிருந்த நாடு, அதுவும் கிட்டத்தட்ட 110 கோடி மக்கள் இருக்கும் நாடு, கடந்த 10, 15 ஆண்டுகளாக வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது.

என்ன காரணம்? பல ஆண்டுகளாக செய்தவற்றின் பலன் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகள் முதலியவை பெருகிவருவதால், மக்கள் சம்பாதிக்கிறார்கள். அதைவிட முக்கியமாக அதனை இங்கே செலவும் செய்கிறார்கள்.

செலவு என்பது பொருளாதாரத்தில், நல்ல வார்த்தை. மக்கள் செய்யும் செலவு என்பது, பல பொருட்களுக்கும் சேவைகளுக்குமான தேவைகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை. அது இப்போது இந்தியாவில் சிறப்பாக நடக்கிறது. அதனால் வியாபாரப் பெருக்கம். அதனால் தொழில் வளர்ச்சி.

இப்படியாக, சங்கிலித் தொடர் போன்ற பொருளாதார பெருவளர்ச்சி ஆரம்பித்திருக்கும் நேரம் இது. இந்தியாவின் இந்த வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள். காரணம், சீனா உட்பட, வேறு எந்த நாட்டினையும் விட, இங்கே வயது குறைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 30 வயதுக்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே, கிட்டத்தட்ட 60 கோடி. எல்லாம் வளம் சேர்க்கும் ’மக்கட் செல்வம்’ (Human Resource).

இப்படிப்பட்ட நேரத்தில் வியாபாரமோ, தொழிலோ செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். வியாபாரம் அல்லது தொழிலை பெரிய அளவுகளில் நிறுவனங்களாக நடத்தினால் அவைதான் ’கார்பரேட்’ கள்.

அந்த நிறுவனங்களில் பல, பப்ளிக் லிமிட்டெட் நிறுவனங்கள். அதாவது பங்குச் சந்தையில் வாங்க கிடைக்கும் நிறுவனங்கள்.

இப்படி எவரும் வாங்கக்கூடிய பட்டியலிடப்பட்டுள்ள (லிஸ்டட்) நிறுவனங்களின் எண்ணிக்கை 7000 _ க்கும் மேல். அவற்றில் கோடிக்கணக்கானவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்.

இவை தவிரவும், இன்னும் ஏராளமான நல்ல முதலீடு செய்யத்தக்க நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன. விபரம் தெரிந்தவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்.

தேசப் பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றால்,

குறிப்பிட்ட தொழில் நன்றாக நடக்குமென்றால்,

குறிப்பிட்ட நிறுவனம் சரியாக செயல்படக் கூடிய நிறுவனம் என்றால்,

அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்குக் கிடைக்கிறதென்றால்,

அவற்றில் முதலீடு செய்வது பலன் தானே தரும்!

ஆக, பங்குச் சந்தையை ஒரு சூதாட்டம் போலவே பார்ப்பதை நிறுத்திவிட்டு, அதிலிருந்து, முதல் சில மாதங்களிலேயே இரட்டிப்பாகும் என்பது போன்ற அதீத ஆசைகளையும் தள்ளிவிட்டுவிட்டு, அதையும் மற்ற முதலீடுகளைப் போலவே, கவனமாகத் தேர்வு செய்யலாம். அது முழுப்பலன் தரும் வரை பொறுத்திருக்கலாம்.

காரணம் பங்குகள் என்பன, நன்கு வளரும் வாய்ப்பிருக்கும் ’கார்பரேட்’ களின் உரிமைகள். அவற்றை வாங்க மற்ற எவரையும் போலவே, நமக்கும் முழு உரிமை உண்டு. அதற்கான வாய்ப்புகளும் பரவலாகியிருக்கின்றன.

சேமிக்க வேண்டும். சேமித்த பணத்தினை, சேமிக்கும் காலத்திலேயே, லாபகரமாக முதலீடும் செய்ய வேண்டும். அதற்கு எஸ்.ஐ.பி. எனப்படும் தொடர் முதலீடுகளும் ஒரு நல்ல வழி. எஸ்.ஐ.பி. யில் போடும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை என்பது, நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்பு.

இதுதான் நாம் இதுவரை பார்த்திருப்பதன் முன்கதைச் சுருக்கம்.

இனி, விட்ட இடத்தில் இருந்து, அதாவது ,

பல பெரிய, முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் போலத்தான் தெரிகிறது என்றாலும்...

1. எது நல்ல நிறுவனம், எது சரியில்லாத நிறுவனம் என்றெல்லாம் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லையே!

2. சில நேரங்களில் விலைகள் உயர்ந்தும், வேறு சில நேரங்களில் விலைகள் வீழ்ந்தும் போகிற பங்குச் சந்தையில், எப்போது எது நிகழும் என்று முன்கூட்டியே சரியாகக் கணிப்பது சிரமமாயிருக்கிறதே! 3. ஆசை காரணமாகவும் பயம் காரணமாகவும் , முதலீட்டை அதிக நாட்கள் விட்டுவைக்க முடியவில்லையே!

4. இதில் போடும் சேமிப்பு பெருகுமா? அல்லது பங்குச் சந்தையின் பிரச்னைகள் காரணமாக, காணாமலேயே போய்விடுமா? என்கிற பதைபதைப்புடனேயே இருக்க வேண்டியிருக்கிறதே! இவற்றுக்கு என்ன செய்வது? என்று கேட்டுவிட்டு, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்று சொல்லியிருந்தோம். அது எப்படி என்பதை, கேள்விகள் இருக்கும் அதே வரிசையிலேயே பார்த்துவிடலாம்.

(1) எஸ்.ஐ.பி. யினை நடத்துபவர்கள், (நம்மைவிடக் கூடுதலாக) பங்குச் சந்தை விபரம் தெரிந்தவர்கள். எது நல்ல நிறுவனம் என்பதை அவர்களால் கணிக்க முடியும். (2) வல்லுனர்களால் பங்குச் சந்தையில் எப்போது எது நிகழலாம் என்பதை நம்மைவிடக் கூடுதலாக கணிக்க முடியும். (3) முதலீட்டில் அவர்கள் ‘புக் பிராபிட்’, ’ஸ்டாப் லாஸ்’ போன்ற ஒழுங்குமுறைகளை, தொழில்முறை திறனுடன் (புரபஷனலாக) கடைபிடிப்பார்கள். (4) பங்குச் சந்தை என்பது நீண்டகாலத்தில் சரியாகவே இருக்கும். குறுகிய காலத்தில் தான் , ’இப்படி’ ’அப்படி’ என்றெல்லாம் அதனை எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. எஸ்.ஐ.பி. என்பது நீண்டகால அணுகுமுறை உடையது.

எஸ்.ஐ.பி. என்பது பரஸ்பர நிதி போலவேதான். ஒருவித்தியாசம், இது தொடர் முதலீடு. அதனால் விலைகள் பரவலாகும். ஒரு சராசரி விலைகிடைக்கும். அதே நேரம், சந்தை இடையில் விழும் போது, இதில் உள்ள நம் பணத்தின் மதிப்பும் குறையத்தான் செய்யும். என்ன? படிக்கிற பையன், சிரமமான தேர்விலும், படிக்காத பையனைவிட அதிக மதிப்பெண் வாங்குவதுபோல, நாமாக செய்வதைக் காட்டிலும், தெரிந்தவர்கள்மூலம் செய்யும் போது, விழுந்தாலும் அடி அவ்வளவு பலமாக இருக்காது. தவிர நீண்டக்காலத்தில் நல்ல பங்குகள் மீண்டும் எழுந்துவிடும்..


10ம் பாகம்

http://tamizh2000.blogspot.com/2008/01/10.html
Posted by TamilNenjam at 10:47 PM 0 comments Links to this post
Labels: பொருளாதாரம், வாழும் கலை
Monday, January 7, 2008

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்
1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.

2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.

3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.

4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.

5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.

6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.

7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.

8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.

9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.

10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.

ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.

இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
Posted by TamilNenjam at 4:19 AM 2 comments Links to this post
Labels: வாழும் கலை
Wednesday, January 2, 2008

பல மரம் கண்ட தச்சன்
பல மரம் கண்ட தச்சன்

ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவனிடம் கட்டில் செய்வதற்காக ஒரு 'ஆர்டர்' வந்தது. அவன் அதற்காக காட்டுக்குச் சென்று மரங்கள் தருவிக்கச் சென்றான்.

ஒவ்வொரு மரமாகச் சோதித்தான். எந்த மரத்தின் மீதும் பிடிப்பு வரவில்லை.
இறுதியில் ஒரு மரத்தை மனதால் ஏற்றுக்கொண்டு வெட்டினான். பாதியை வெட்டிவிட்டான். ஆனால் திடீரென்று அந்த மரம் பிடிக்கவில்லை. உடனே மனதை மாற்றிக்கொண்டு வேறொரு மரத்தை வெட்டினான். அதையும் பாதிதான் வெட்டினான். மீதியை முழுவதும் வெட்டுவதற்கு முன்னரே அவன் மனம் கள் குடித்த குரங்கு (நரி) மாதிரி ஆனது. இப்படி காலையிலிருந்து இரவு வரை ஒவ்வொரு மரத்தையும் பாதி பாதிதான் வெட்டியிருந்தான். ஒரு மரத்தைக்கூட முழுவதும் வெட்டவில்லை. மேலும் கட்டில் ஆர்டரை முழுமை செய்வதற்குத் தேவையான ஒரு மரம் கூட அவனால் கண்டறிய இயலவில்லை. முடிவில் பொறுமையிழந்து அவனது 'கிளையன்ட்' இன் ஆர்டரை கேன்சல் செய்தேவிட்டான்.

இவனைப்போல எனது நண்பன் ஒருவன் முதலில் ஜாவா படித்து வேலை தேடினான். 6 மாதம் கழித்து டாட்நெட் படித்து அதிலே 8 மாதங்கள் வேலை தேடினான். பிறகு சோலாரிஸ் படித்தான். அதிலே 7 மாதங்கள் வேலை தேடினான். இறுதியில் இப்போது சாப் படித்துக்கொண்டு இருக்கிறான். இவன்தான் 'பல மரம் கண்ட தச்சனுக்கு' சரியான உதாரணம்.
Posted by TamilNenjam at 10:20 PM 1 comments Links to this post
Labels: வாழும் கலை
Monday, December 31, 2007

எத்தனை பேருக்கு துணிவு வருமோ?
மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறேன்னு மூணு மாசத்துக்கு முன்னாடி சொன்ன கல்பனா இன்னிக்கு வேலையை விட்டுட்டேன்னு சொல்றா... ‘ஏன்’னு கேட்டா. தூங்க முடியலேங்கறா... ‘வேலையில யாராவது தூங்குவாங்களான்’னு கேட்டா, வீட்ல தூங்க முடியல அதான் விட்டுட்டேன்னு புதிர் போடறா... கால் சென்டர் டூயூட்டியாம். ராத்திரி போயிட்டு காலைல வீட்டுக்கு வந்தா அம்மாவும் அண்ணியும் கதவு, ஜன்னலையெல்லாம் திறந்து வச்சுக்கிட்டு தூங்கவிடாம தொந்தரவு பண்றாளாம். அதுவும் என்னைக்கோ ஒன்றிரண்டுநாள்... இதுக்கு போய்
யாராவது வேலையை விடுவாங்களா? என்னமோ ‘மோர்வன்ஸ் சிண்ட்ரோ’மே வந்துட்டா மாதிரி..

தொடர்ந்து தூங்காம இருந்து அது உடம்புல ஏற்படுத்துற பாதிப்பைதான் மோர்வன்ஸ் சிண்ட்ரோம்னு சொல்றாங்க... வியட் நாம்ல ஒருத்தர்... தாய் நாகோன்னு பேரு. 33 வருஷம் தூங்காம இருந்திருக்கிறாரு... 11,700 ராத்திரி அவர் பொட்டுக்கூட தூங்கலையாம். அவருக்கு எந்த சிண்ட்ரோமும் வரலை. அது ஏதோ ஜெனிட்டிக்கல் டிஸ் ஆர்டராம்... அதனால தூக்கம் கெட்டதோட பாதிப்பு துளிகூட
அவர்கிட்ட தெரியலையாம்...


ஆனால் நாற்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடி ராண்டி கார்ட் னர்னு
ஒருத்தர் பதினேழு வயசா இருக்கும்போது ஸ்கூல் ப்ராஜக்ட் ஒண்ணுக்காக பதினோரு நாள் தூங்காம இருந்தாறாம்... அதுக்கு மேல முடியல... அப்புறம் மூணு மாசம் படாதபாடு பட்டுட்டாராம்.


அப்படின்னா நம்மூர் கால் சென்ட்டர்ல வருஷக்கணக்கா தூங்காம
வேலைபார்கிறவங்க நிலைமை என்னாகிறதுன்னு கேட்கறீங்களா... பகல்ல தூங்கிட்டா பாதிப்பே வராதாம், ஆனால் பாதிப்பே இல்லைன்னு சொல்ல யாரும் தயாரில்லே...

வெளிச்சமாக இருந்தால் சரியாகத் தூங்க முடிவதில்லை... வெளிச்சத்துக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்மந்தம்? என்று கோவஸ்காட்டில் இருந்து கல்யாணி கேட்டிருக்கிறார்...


பதில் தருகிறார் டாக்டர் என். ராமகிருஷ்ணன். ஸ்லீப் ஸ்பெஷலிஸ்ட்...


‘‘நம்மை தூங்கவைப்பது மூளையின் ஒரு பகுதியில் சுரக்கும் மெலட்டோனின் என்கிற என்சைம். அது சுரப்பதற்கு, ‘உலகம் இருண்டு விட்டது. இனி தூங்கலாம்!’ என்று கண்கள் சுற்றுப்—புறத்தை ஆராய்ந்து கட்டளையைப்பிறப்பிக்க வேண்டும். உடம்பும் அதை உணர்ந்து ஓய்வுக்குத் தயாராக வேண்டும்... இருட்டு, இயல்பான தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் மூளை நம் புலன்களின் செயல்பாட்டின் வாயிலாக உணரும்போது மெலட்டோனின் தேவைக்குச்
சுரந்து தூக்கம் உங்களைத் தழுவும்...


தூக்கத்திற்கான நேரம் வந்தும் நல்ல வெளிச்சத்தில் நாம் வேறு வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, சூழ்நிலையைப் புரிந்து கொள்வதில் மூளையில் தடுமாற்றம் ஏற்பட்டு மெலட்டோனின் சுரப்பதில் சிக்கல் உண்டாகும். உடம்பு களைப்பாகும், உறக்கம் தள்ளிப்போகும்...

அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங் சென்றால் புத்துணர்ச்சி
ஏற்படுவதாகச் சொல்கிறோம்... அதற்குக் காரணம், இதுபோன்ற பயிற்சிகள் நம் உடம்பில் மெலட்டோனின் அளவை விரைவாகக் குறைத்து தூக்கத்தின் தன்மையை சீக்கிரம் போக்கிவிடுவதால்தான். காலையில் தேகப் பயிற்சிகள் செய்யாதவர்களுக்கு மெலட்டோனின் அளவு குறைய காலதாமதமாவதால் தூக்கம் கலைந்து புத்துணர்வு பிறக்கவும் தாமதமாகும்... ஆக உறக்கமும் உற்சாகமும்
உடம்பில் மெலட்டோனின் அளவைப் பொறுத்தது... நம் உடம்பு அதை இயல்பாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் கஷ்டப்படுத்தும் போதுதான் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு சங்கடங்கள் உண் டாகிறது.

இரவுப் பணி என்று வரும்பொழுது மாதத்தில் ஒருவாரம் பத்து நாள் என்று வரும் ஷிஃப்ட் முறையில் பாதிப்புகள் குறைவு... கால் சென்டர்போல் காலமெல்லாம் நைட்ஷிஃப்ட் என்பது மன அழுத்தத்தில் துவங்கி இதயத்தைத் தாக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது. இதை தவிர்க்க நினைத்தால் இரவுப் பணி முடிந்தபின், குளிக்காமல், டி.வி. பார்க்காமல், அறையை முடிந்தமட்டும் இருட்டாக்கி, இரவுத் தூக்கத்தின் இழப்பை பகலில் தூங்கி சரிகட்டினால் ஓரளவுக்கு தப்பிக்கலாம்... மற்றபடி ஒரு இரவு தூக்கத்தின் இழப்பை சரிகட்ட இருமடங்கு
பகலில் தூங்கினால்தான் உடம்பு மீண்டும் இயல்புக்குத் திரும்பும்... அது முடியாத பட்சத்தில் நாம் இழப்பது தூக்கத்தின் நேரத்தை மட்டுமல்ல வாழும் நேரங்களையும்தான்.’’


இதற்குப் பிறகும் கால் சென்டரில் காலமெல்லாம் வேலைபார்க்க எத்தனை பேருக்கு துணிவு வருமோ?
Posted by TamilNenjam at 2:36 AM 0 comments Links to this post
Labels: வாழும் கலை
Thursday, December 27, 2007

காதிருந்தும் செவிடு
காதிருந்தும் செவிடு

சிறு குழந்தையின் மழலை மொழி கேட்க இயலாத பாவி நான்!..!!..!!!
(ஏன் என்றால் எனக்கு காது கேட்காது)

--கால் சென்டரில் வேலை பார்க்கும் காரிகையின் நாட்குறிப்பிலிருந்து.

வேலை நேரத்தில் அலுவலகத்தில் காதிலே போன் அணிகிறாள்.

வீட்டிலேயும், வெளியிலேயும் கூட காதிலே போன் அணிகிறாள்.

எப்போது தனது குழந்தையின் மழலை மொழி கேட்கிறாளோ தெரியவில்லை.

இவளுக்கு காது கேட்கத்தான் செய்கிறது..

ஆனால் தன் குழந்தையின் மழலையைக் கேட்டு
ரசிக்க இயலாத இவளின் காதின் கேட்கும் சக்தி
இருந்தால் என்ன இழந்தால் என்ன?

வள்ளுவர் சொல்லுவாரே -
கண்ணிருந்தும் குருடர் அதுபோல காதிருந்தும் செவிடு
Posted by TamilNenjam at 8:50 PM 0 comments Links to this post
Labels: வாழும் கலை
Wednesday, December 26, 2007

பொய்யில்லை -- கண்ட உண்மை
சின்னதாய் ஒரு முயற்சி.
அட வேறு எதுவுமில்லை. தினமும் காலையிலே 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். அவ்வளவுதான். சனியாவது, ஞாயிறாவது - எந்தக்கிழமையாக இருந்தாலும் காலை 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். போய்யா உன் வேலையைப் பாத்துக்குட்டு அப்புடீங்கறியளா.
உங்களுக்காகத்தான் நான் இப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்.அது சரி.. 6.00 மணிக்கு எழுந்தபிறகு என்ன பண்ணுறது அப்புடின்னு கேக்குறவங்க இந்தப்பக்கம் வாங்
அட 6.00 மணிக்கு எழுந்த பிறகு காலையிலே பல மேட்டர்கள் இருக்குங்க. சும்மா 10 மணி வரைக்கும் தூங்குறானே நண்பன் அவனை 10 நிமிடத்துக்கு ஒரு முறை எழுப்பலாம்ல. கண்டகண்ட ஓட்டல்களிலே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறதுக்குப் பதிலா உங்கள் கையாலே சமைத்துப் பாருங்க. ஒரு வித்தியாசமா தெரிந்ததை வைத்து சமையல் முயற்சி பண்ணுங்க எண்ணி 10 நாளிலே உங்கள் சமையல் உங்களுக்கே ரொம்பப் பிடிக்கும்.
ஜிம்முக்குத்தான் போகமுடியவில்லை. இந்தப் பாழாப்போன சாப்ட்வேரு எழுதி எழுதி வயிறு பெருத்துத் தொப்பை விழுது. சும்மா தூங்குறதுக்கு பதிலா ஒரு குத்துப்பாட்டைப் போட்டு ஒரு குத்தாட்டம் போடுங்க. ஒரு அரை மணி நேரம் - (அப்படிப்போடு போடு ... பாட்டுக்கூட OK) ஆட்டம் ஆடிப்பாருங்க. 15 நாளு வெறித்தனமா இப்படி ஆடுனீங்கன்னா அப்புறம் இந்த ஆட்டம் உங்களுக்கே ரொம்பப்பிடிக்கும்.
உங்களுக்கு இங்கிலீஸ் நல்லா வராது என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் ஒரு சின்ன ஆடியோரெக்காடர் கருவியைக் கொண்டு - நீங்களே எதாவது நெட்டில் டவுன்லோடு பண்ணியதை வாசித்து - பேசிப்பதிவு செய்து தினமும் கேட்டுப்பாருங்க. எந்த இடத்திலே தவறு செய்கிறோம் அப்படிங்கறதை ஒரு அனலைஸ் பண்ணலாம். மறுபடி மறுபடி வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கேட்டு தப்பைத்திருத்திக்கோங்க. சரி.
எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் அப்படிங்கறவங்க தூங்கப்போகிடாதீங்க. ஒரு வெளிமாநில மொழி / வேற்று தேச மொழியில் பரிச்சயம் ஆகுவதற்காக - அதை அரை மணி நேரம் பயிற்சி எடுக்கலாம்ல.
சாப்ட்வேருதான் கதின்னு இருக்குறவங்க - எதாவது ஒரு செர்ட்டிபிகேசன் கோர்ஸ் - செல்ப்ஸ்டடி - செய்து செர்ட்டிபிகிசேன் எழுதலாம்ல. போனவருசம் எழுதலாம்னு நினைச்சேன் - எழுத நேரம் இல்லை. இந்த வருசம் எழுதலாம்னு நினைக்கிறேன் - ஆனால் அதை பிரிப்பேர் பண்ண நேரமில்லை அப்படின்னு சப்பைக்கட்டுக் கட்டுரவங்கதானே நீங்கள் எல்லாம்.
6.00 மணிக்கு எழுந்தால் உங்களுக்கு 3.00 மணிநேரம் மிச்சமாகுதுல்லே. அதை சரியாகப் பயன்படுத்தலாம்ல. நைட்டு 1 மணிவரைக்கும் என்ன காரியத்துக்காக முழிக்கிறீங்க. எதாவது பிரயோசனம். வேலையை முடிச்சுட்டு இரவு 10.00 க்கு படார்னு தூக்கத்தைபோடுங்க. 6.00 மணிக்கு எழுந்துவிடுங்கள். சரி. எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் ..
செர்ட்டிபிகேசன் பலதும் முடிச்சுட்டேன்.. தூங்கலாமேன்னு நினைக்குறீங்களா? அட - உங்களுக்கு கார் டிரைவிங்க் தெரியாதுல்ல. போங்க போகி முதல்காரியமா அதைக் கத்துக்கோங்க..
ஒரு ம்யூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கக் கத்துக்கலாம்ல. ஒரு ட்ரம்ஸ் வாங்கி காட்டுத்தனமா பிராக்டீஸ் பண்ணி உங்கள் கேள்-பிரண்டை அசத்தலாம்ல. இப்பப் பாரு பட்டையைக் கிளப்புறேன் அப்படின்னு ஒரு ரிதம் பார்ம் பண்ணி வாசிச்சுக்காட்டுங்க. அசத்துங்க.
88 கிலோ வெயிட்டு இருக்குது. ஆனால் 10.00 மணி வரை தூக்கம். வெள்ளிக்கிழமை ஆனால் தீர்த்தப் பார்ட்டி - இப்படியே இருந்தால் என்ன ஆவது. உடம்பு நீங்க சொன்னதை கேட்காது.. நீங்கள்தான் உடம்பு சொன்னதை கேட்கனும். கேவலமா இருக்குல்ல.
அட எல்லாம் பண்ணியாச்சு.. வேறு வேலை எதுவும் இல்லை.. அப்படின்னு ஏன் சொல்லுறீங்க.. உங்கள் பக்கத்துவீட்டுப் பசங்களுக்கு இலவசமா டியூசன் சொல்லித் தரலாம்ல.
சனி, ஞாயிறுகளில் எதாவது ஒரு சாப்ட்வேர் கோச்சிங்க் சென்டரிலே - வீக் எண்ட் கிளாஸ் எடுங்க. சம்பளம் குறைவாக இருக்குதுன்னு கவலைப் படாதீங்க. வெறும் தியரி கிளாஸ் மட்டும் எடுங்க.
சனி,ஞாயிறுகளில் மப்பு அடித்து முழுபோதையிலே இருக்கத்தான் வேண்டுமா என்ன? பொழுது போகவில்லைன்னா.. அட என்னை மாதிரி ஒரு பிலாக் ஓப்பன் பண்ணி - யாரும் படிப்பாங்க / படிக்கமாட்டாங்கன்ற கவலையில்லாமல் சும்மா காட்டுத்தனமா இப்படி- இதுமாதிரி எதையாவது எழுதிப் போஸ்ட்டாவது பண்ணலாம்ல.
அட சும்மாசொல்லலைங்க.. இவையெல்லாம் பொய்யில்லை. -- கண்ட உண்மை..
Posted by TamilNenjam at 9:23 PM 4 comments Links to this post
Labels: வாழும் கலை
Monday, December 17, 2007

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம்
ஒலிப்பதிவுகளாக இங்கே டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் கோப்புகளாக உள்ளன.
மிர்ரர் சைட்ஸ் - பிற தளங்கள்
http://www.esnips.com/doc/d2b6e0b9-a590-4915-88ca-2b46583def7d/Kannadasan01-AUHM
http://www.esnips.com/doc/2d135bbd-05a3-4e29-b597-90a5cdbbb88f/Kannadasan02-AUHM
http://www.esnips.com/doc/064a66bd-935d-4a91-95f1-217b0e84fdb1/Kannadasan03-AUHM
http://www.esnips.com/doc/583d3d26-0556-4a97-b51f-19462058d9d2/Kannadasan04-AUHM
http://www.tamilnation.org/asx/arthamulla1.asx
http://www.tamilnation.org/asx/arthamulla2.asx
http://www.tamilnation.org/asx/arthamulla3.asx
http://www.tamilnation.org/asx/arthamulla4.asx
http://pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Arthamulla%20Hindu%20Matham/
http://pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Manase%20Relax%20Please/
http://krishnadot.4shared.com/
சந்தோசமாக டவுன்லோடு செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்களேன்

URS
SUNDARAM
MAYILADUTHURAI

சிந்தனை செய்


காலந் தவறாமல் செய்ய வேண்டும் !
கடின உழைப்பால் பெற வேண்டும் !
உழைப்பால் உயர உண்மை வேண்டும் !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம்மை !
போற்றிய செயல்கள் பேசும் நம்பெருமை !
விட்டுக் கொடுத்தால் உயர்வோம் !
வீட்டில் கடமை வெளியில் கடமை
வேத வாக்காய் விளங்க வேண்டும் !
பிள்ளைகள் பேச்சும் செயலும்
பெற்றோர் பின்புலம் ! மற்றவர்
பார்வை நம் உட்புலம் !
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்கள்
நாம் பெற்ற பேறு ! கற்றதின் பரிசு !
நன்செயல் எண்ணவும் இன்சொல் பேசவும்
தயங்காதே ! இதில் என்ன சுமை !
சுவை தானே இவை !
காலத்தால் அழியாத கவி அல்லவா !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம் அருமை !


துன்பங்கள் நிஜத்தில் துரும்புகள்

பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம். ஒருவனுக்கு எவ்வளவு பொறு மை குறைகிறதோ, அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும். அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.

பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இறைபக்தியிலும் ஈடுபட முடியாது. இறைவன் அருள் வேண்டுபவர்கள் முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் செயலுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப அடுத்த பிறப்பை எடுக்கின்றனர். ஆகவே, எந்த சூழ்நிலையிலும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பது அவசியம்.

உங்களது இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தீய செயல்களைச் செய்யாதீர்கள். இவர்கள் மறுபிறப்பில் இல்லாவிட்டாலும், இந்த பிறப்பிலேயே மற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவராக இல்லாமலும் திகழ்வர். இத்தகைய பிறப்பெடுத்து ஒரு பயனும் இல்லை.

தைரியத்துடன் இருங்கள். எந்த துன்பத்திற்கும் கலங்காதீர்கள். அவற்றால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. பிரச்னையை நேரே பார்க்கும்போது, பெரிய துன்பம் போல தெரியும். ஆனால், உண்மையில் அது ஒன்றுமில்லாத சிறிய துரும்பாகவே இருக்கும். எனவே, பயப்படுவது தேவையற்றது. மனதில் தைரியம் இல்லாதவர் ஆண்தன்மை இல்லாதவர் ஆவர். இவர்கள் மறுபிறப்பில் புழுக்களாகவே பிறப்பார்கள்
கடமையே பெரிய வேள்வி

குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். பேச வேண்டியது குழந்தையே. ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார். கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே. இறைவனை மனக் கண்ணின் முன் நிறுத்தி அவனோடு ஒன்றி விடுவது மனிதனின் கடமை.

உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.

புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்த நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல் நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் செய்யும் கடமைகளால் கிடைக்கும் உரிமைகளை சுயநலமில்லாமல் சமுதாயத்திற்காக பயன்படுத்துங்கள்.

இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.

உங்களது எண்ணம் எப்பொழுதும் துõய்மையாகவும், புதுமையானதாகவும் இருக்க வேண்டும். கெட்ட காற்று

வெளியேற வேண்டுமானால் நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும். எண்ணத்தை விட வலிமையானது வேறு எதுவும் கிடையாது. உங்கள் எண்ணங்களை ஒருபோதும் ஒளித்து வைக்காதீர்கள். அவற்றை வெளியே சொல்வது கேவலம் என்றால், அவ்வாறு நினைப்பது இன்னும் கேவலமானது.

உடல் பலத் தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும்.
சமநிலையுள்ள மனம் வேண்டும்

* காற்று வீசாதபோது விளக்கு, ஆடாமல் நின்று எரிகிறது. அதுபோல மனதில் சஞ்சலம் இல்லாவிட்டால், உள் மனதில் உள்ள அறிவு ஒளி அற்புதமாக எரியும். எனவே, மனம் சமநிலையுடன் இருக்க வேண்டும்.

* பதட்டமும், ஆரவாரமும் நிறைந்த இந்த உலகில் சம நிலையான மனத்துடன் பலன் எதிர்பார்க் காமல் செயல்பட வேண்டும். பலன் எதிர்பாராத செயல்களில் தான் இறையுணர்வு இருக்கும்.

* கடமையே பெரிது என நினைப்பவர்கள் விழிப்பு, சமநிலை, செயல்திறன், சுயநலமின்மை, அனுபவத்தில் ஆர்வம் போன்றவற்றுடன் இருக்க வேண்டும். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒழுங்காக ஒரு செயலைச் செய்தாலே வெற்றி நிச்சயம் தான்.

* சூரியஒளியோ, மண்ணோ, நீரோ மட்டும் தனித்து ஒரு செடியை வளரச் செய்ய முடியாது. நிலத்தில் விதையைப் போட்டு, நீர் ஊற்றினால் அவ்விதை மக்கிப் போகும். விதையை நீரில் போட்டால் அழுகிவிடும். சூரிய ஒளியில் போட்டால் கருகிவிடும். இம்மூன்றும் நியாயமான முறையில் சேர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்விதை முளைத்து செடி மரமாகும். இப்படி, ஒரு செயலுக்கு பல காரணங்கள் தேவைப்படுகின்றன. அதில், நம்முடைய பங்கை மட்டும் நாம் செலுத்திவிட்டு, மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிட வேண்டும். நாமே எல்லாவற்றையும், நம் விருப்பப்படியே செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், நமக்கு ஒரு போதும் மன அமைதி கிடைக்காது.
மனம் உங்கள் நண்பனாகட்டும்!

˜ஒவ்வொருவரும் கடமையைச் செய்யும்படி விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கடமையை நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனை பரிபூரணமாக செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு முழு உரிமை தரப்பட்டிருக்கிறதே தவிர, அதன் பலன் குறித்த எதிர்பார்ப்பிற்கான உரிமை தரப்படவில்லை. ஆகவே, கடமையை கருத்தாக நிறைவேற்றுங்கள். அதனால் உண்டாகும் பலனில் உங் களது விருப்பங்களை எதிர்பார்க்க வேண்டாம்.

˜மனமானது ஒவ்வொருவரின் நடத்தைகளைப் பொறுத்தே நண்பனாகவும், எதிரியாகவும் அமைகிறது. யார் ஒருவர் மனதை அடக்கி அதனை வெற்றி கொள்கிறாரோ, அவருக்கு மனம் சிறந்த நண்பனாகவும், அடக்க முடியாமல் அதன் போக்கிற்கு விடுபவருக்கு முதல் எதிரியாகவும் இருக்கிறது. மனதை உங்களது நண்பனாக வைத்திருக்க முயற்சியுங்கள்.

˜உங்களுடன் வாழ்பவருக்காகவோ, உங்களை விட்டு பிரிந்து சென்றவருக்காகவோ மனம் வருந்தாதீர்கள். அவ்வாறு வருந்துவது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். உண்மையான அறிஞர்களை இத்தகைய நிகழ்வுகள் பாதிப்பதில்லை.

˜நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். என்னை அனைத்திலும் அனைத்துமாக காண்பவர்களுக்கு நான் எப்போதும் இழக்கப்படாதவனாகவே இருக்கிறேன். நானும் அவர்களை இழப்பதில்லை. அத்தகையவர்களை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்கிறேன்.

தற்பெருமை அழிவைத்தரும்

* மருத்துவர்கள் நோயாளிகளிடம் "எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய்.

* கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்து விடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்திற்கு கூட சலனமடையும்.

* குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு "என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்

* அடுத்தவர்களது விஷயத்தில் தலையிடுவதும், அவர்களைப் பற்றி குறை சொல்வதும் கூடாது. உங்களுக்கு தெரிந்தே ஒருவர் தவறு செய்கிறார் என்றாலும் அமைதியாக இருந்து விடுங்கள். அவரது தவறை குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், ஒருவரது குறையை சுட்டிக்காட்டி தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து அவர்களை இயக்கும் கடவுளே, அவர்களை அவ்வாறு செயல்படும்படி துõண்டுகிறார். ஆகவே, அடுத்தவரது செயல்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

* ஓரிடத்தில் நடக்கும் செயல் உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம். அதற்காக நீங்கள் அச்செயலை தடுத்து நிறுத்தவோ, மறுப்பு தெரிவிக்கவோ கூடாது. உலகில் எந்தவொரு செயலும் கடவுளின் அனுமதியில்லாமல் நிச்சயமாக நிகழ்வதே கிடையாது. ஆகவே, நீங்கள் அச்செயலை தடை செய்யும் விதமாக செயல்படுவது கடவுளின் விருப்பத்தை தடை செய்வது போலவும், அவரது தீர்ப்பை விமர்சிப்பது போலவும் ஆகும். ஆகவே, என்ன நடந்தாலும் நன்மைக்கே நடக்கிறது என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

* நீங்கள் நிம்மதியாக இருக்க விரும்பினால், அடுத்தவர் வேலையில் கவனம் செலுத்தாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனத்துடன் இருங்கள். அவரை கவனித்துக் கொள்வதற்கு கடவுள் இருக்கிறார். ஆகவே தானுண்டு, தன் வேலையுண்டு என்று செயல்படுங்கள்.
இளமையிலேயே கடமையைச் செய்

*உலக வாழ்க்கை என்பது கற்பாறைகளும் குன்றுகளும் குறுக்கிடும் காட்டாறு போன்றது. அதில் தான் உன் குடும்பம் என்னும் படகைச் செலுத்தியாக வேண்டும். அதை செலுத்திட துடுப்புகளைத் துடிப்புடன் போட இளையபருவம் தான் ஏற்றது. அதில் வலுவுடன் செயல்பட்டு, காட்டாற்றைக் கடந்து அக்கரையில் உள்ள இறையடியைச் சேரவேண்டும். எல்லையற்ற பேரின்ப வாழ்வினை எய்த வேண்டும்.

* நீ பருவ வயதில் ஊர்சுற்றிக் கொண்டு காலத்தை வீணாக்கினால் முதிய பருவத்தில் உன் உடல் வலிமையும், மன வலிமையும் இழந்து வாழ்க்கைப் படகை துரிதமாக இயக்க முடியாமல் அது இடர்ப்படும். இளமை நிரந்தரமானதல்ல. அது, நகர்ந்து செல்லும் மேகங்களை போன்றது. அந்த அந்த பருவத்தில் கடமைகளை சரியாக செய்தால் பேரின்ப வாழ்வை அடையலாம்.

* கத்தியை தீட்டுவது என்பது கல்லை வழுவழுப்பாக மாற்றுவதற்காக அல்ல. கூர்மையும், வெட்டும் சக்தியும் அதிகரிப்பதற்காகத்தான். அதே போல வாழ்க்கையில் இனிமை சேர்த்து வாழ நீ உனக்குள்ளே உற்சாகம், சாகசம், தைரியம், புத்தி, சக்தி, பராக்கிரமம் ஆகிய குணங்களை வளர்த்துக் கொள். இந்த நல்ல குணங்கள் உனக்கு சுகத்தை தரும்.

* பெரியோரைக் கவுரவியுங்கள். பெற்றோரைக் கவுரவியுங்கள். அவர்களை வணங்கி இறைவனை நண்பனாக அடையுங்கள்.

* கடவுள் உங்களைச் சோதித்தால், அது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு தருவதாக எண்ணுங்கள். என்ன நேர்ந்தாலும் அது நன்மைக்கே என நினையுங்கள்.
வாழ்க்கைக்கு ஆதாரமானவர்

கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழியே பறந்து சென்ற பறவை ஒன்று கப்பல் மீதுள்ள பாய்மரத்தில் அமர்கிறது. நீண்ட துõரம் பயணித்த பறவைக்கு, ஒரே இடத்தில் அமர்ந்திருக்க பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றது. அப்பறவை எங்கு சென்றாலும் கடலில் தண்ணீர் மட்டும்தான் இருந்ததே தவிர அமர்வதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அப்பறவை மீண்டும் கப்பலை அடைந்து, பாய்மரத்தின் மீது அமர்ந்து கொண்டது. இதைப்போலத்தான் மனிதர்களும் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்தை விரும்பிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கான சரியான இடம் எங்கும் கிடைக்காமல் இருந்த இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். கடவுளும், பாய்மரம் போன்றவர்தான். நீங்கள் அவரை விட்டு எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு உங்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காது.

இந்த உலகில் கடவுள் ஒருவர்தான் அனைவரது வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறார். உங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோ, வாழ்க்கையின் ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தோ காப்பாற்றுகிறார். உங்களுக்கு வேலை தந்தவர்களை, உங்களுக்கு உதவி செய்யும்படியாக துõண்டிவிட்டவர் கடவுள்தான். அவர் பலரது வடிவில் உங்களுக்கு அருள் செய்கிறார். ஆனால், நாம் தான் இதைப்புரிந்து கொள்வதில்லை. எனவே, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் கடவுளிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.
மனதை அமைதிப்படுத்த வழி

* ஒருவனை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் மனமே முதலிடம் பிடித்திருக்கிறது. பல வழிகளில் வெளிப்படும் இன்ப, துன்ப எண்ணங்கள் உடல் வழியாகவும் வெளிப்படுகிறது. உள்மனதில் இன்பமுடன் இருப்பவன் வெளியில் உற்சாகமாக செயல்படுகிறான். எந்த செயலிலும் அதிக நாட்டத்துடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்கிறான். அதேசமயம் மனதில் துயரங்களுடன் இருப்பவன் எதிலுமே அக்கறையுடன் செயல்படுவதில்லை. அவன் மனம் எந்த செயலிலும் ஒன்றாமல், துயரத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எளிதாக செய்யக்கூடிய செயலில்கூட அவன் வெற்றி பெற முடியாமல் தடுமாற்றம் அடைகிறான். எனவே, மனதை எப்போதும் ஒரே நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

* மனம் விழித்திருக்கும்போது பல நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்து அலைபாய்கிறது. அது துõங்கும்போது கூட வேறு விதமாக செயல்பட்டு, தான் விரும்பி நடக்காத செயல்களை, கனவு பிம்பமாக கண்டு மகிழ்கிறது. மனதை அமைதிப்படுத்த இறைவனிடம் பக்தி செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

* மனிதன் எப்போதும் தன் மனதுடன் ஒரு தொடர் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறான். மனப்போராட்டம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதியே என்னும் அளவிற்கு, மனம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இப்படியாக உருவம் இல்லாத மனம் ஒவ்வொருநாளும் நடத்தும் போராட்டத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். முதலில் அது கடினமாக தெரிந்தாலும், பின்பு சரியாகி விடும்.
அடுத்தவர்களுக்காக செலவிடுங்கள்

* பணத்தின் மீது ஆசை கொள்ளாதிருங்கள். பணஆசையே பல தவறுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இன்று உங்களிடம் இருக்கும் செல்வம் நாளை வேறு ஒருவரிடம் சென்று விடும். நிலையற்ற செல்வம் மீது விருப்பம் இல்லாமல் வாழுங்கள். உங்களது அத்தியாவசிய தேவைக்கான செல்வத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ அது மட்டுமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். செல்வம் உங்களிடம் இருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே நன்மைதரும். செல்வத்தை வேண்டாம் என்று ஒதுக்குவது ஒருவகையில் அறிவான செயலும் ஆகும்.

* உங்களிடம் இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்கு செலவிடுங்கள். அதை கையிலேயே வைத்து கொண்டிருக்காதீர்கள். எந்த நற்செயலை செய்வதற்கு பயன்படாத செல்வம் இருந்தும் இல்லாதது போலத்தான். செல்வத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் செல்வத்தை அடுத்தவர்கள் பயன்படுத்துவதற்காக கொடுப்பது உங்கள் மனதில் இருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.

* செல்வத்தால் அனைத்தும் கிடைப்பதாக எண்ணி போலியாக வாழ்பவர்கள் உண்மையான வாழ்க்கையை பார்ப்பதே இல்லை. பறவைகள் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் வலையை பார்க்காமல், தானியத்தை எடுக்கச்சென்று சிக்கிக்கொள்வது போல, இவர்களும் ஆசைகளில் சிக்கி, உண்மை வாழ்க்கையை பார்க்காமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செல்வத்தின் மீதான பற்றை துறப்பவர்கள் நல்வாழ்க்கை காணலாம்.
செயல்பாட்டில் அதிக கவனம் வேண்டும்

* குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பு தேவை என விரும்புகிறீர்கள். அதற்கு நெருப்பு அவசியம். நெருப்பு வேண்டும் என்பதற்காக நீங்கள் நெருப்பை உடலில் வைத்துக்கொள்வதில்லை. நெருப்பின் அருகில் மட்டும் அமர்ந்து கொள்கிறீர்கள். அப்போது நெருப்பின் தாக்கத் தால் உடல் சூடாகிறது. இதனால், குளிரும் தணிகிறது. இதைப்போலவே, நீங்கள் குருவிடம் பாடம் கற்கும்போது அவருக்கு அருகில் கேட்க வேண்டும். இதனால், உங்களுக்குள் கூடுதல் மாற்றங்கள் உண்டாகும். இவ்விடத்தில் அருகில் கேட்க வேண்டும் என்பது அவரை நெருங்கி அமர்ந்து கேட்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்லும் கருத்துக்களை மிகவும் ஒன்றி கேட்க வேண்டும் என்பது பொருள். எதிலும் சிரத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தோல்வி என்பதே வருவதில்லை.


* ஒரு லட்சியத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, மனதை லட்சியத்திலேயே நிலைநிறுத்தி செயல்படுங்கள். ஒரு சிறு கணத்தில் கூட நீங்கள் அதில் காட்டும் ஈடுபாட்டில் இருந்து விலகிவிடக்கூடாது. நீங்கள் அதனைப் பற்றி எப்போதும் நினைக்கும்போது, அதன் உண்மை நிலை நன்கு புலப்படும். மேலும் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றலாம் என்ற எண்ணமும் வெளிப்படும். மனம் எப்போதும் அதனையே எண்ணிக்கொண்டிருப்பதால், அதற்கு அதீத சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியே எப்போதும் உத்வேகத்துடன் செயல்பட்டு செய்யும் செயலுக்கு வெற்றியைத் தருகிறது
கவலையை மறக்க வழி

* இந்த உலகத்தில் கவலைகள் ஏராளம். அவற்றை நினைக்கும்போதே மனம் பகீரென்கிறது. அவற்றில் விஷசக்தி ஒளிந்து கிடக்கிறது. ஒருவனது முகத்திலுள்ள அழகையும், ஒளியையும், இளமையையும் இந்தக் கவலை எவ்வளவு சீக்கிரம் அழித்து விடுகிறது தெரியுமா? கண்களின் ஒளியைப் மாற்றி விடும் இந்தக்கவலை, உடலின் நிறத்தைக் கூட குறைத்து விடுகிறது.

* கவலையால் நெற்றியிலே வரிகள் உண்டாகின்றன. கன்னங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இனிய குரல் மாறி கரகரப்பான சப்தம் உண்டாகிறது. மார்பும், தோள்களும் பலமிழந்து விடுகின்றன. ரத்தஓட்டம் தடைபட்டு, உடலுக்குள் ஏதோ அழுக்குநீர் ஓடுவது போல் உணர்வு ஏற்படுகிறது.

* கவலைப்படும் ஒருவனின் கால்கள் தடுமாறுகின்றன. அந்த விஷப்பூச்சி சரீரத்தை உள்ளூர அரித்து விடுகிறது. அறிவை அழித்துவிடுகிறது. மறதியை உண்டாக்குகிறது. படித்தபடிப்பு பாலைவனத்தில் பெய்த மழையாகி
விடுகிறது.

* கவலைகள் மறைய மனதை இறக்கச் செய்ய வேண்டும். மனம் என்று மடிகிறதோ அன்று கவலைகள் அழிந்து விடும். கவலை என்ற அசுரர்களை பெற்றுத்தள்ளும் தாயே மனம். அந்த அரக்கியிடம் இருந்து என்று விடுபடுகிறோமோ, அன்று கவலையற்ற உலகம் எனப்படும் உபசாந்தி லோகத்தை அடையலாம்.

* மனதைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் விட்டுவிடக்கூடாது. கவலைகளை மறக்க மனதைக்கொல்ல வேண்டுமென்பதில்லை. இந்த உலக வாழ்க்கையை நமக்கு தந்ததே மனம் தான். மனதை நல்லதன் பக்கம் திருப்பினாலே போதும்.
நண்பர்களின் தவறை திருத்துங்கள்

* நீங்கள் எப்போதும் எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவர்களாக இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு பணி கொடுக்கப்பட்டால் அதனை சிறப்பாக செய்து முடியுங்கள். அதைவிடுத்து அச்செயலில் கவனம் செலுத்தாமலும், சரியாக ஈடுபாடு காட்டாமலும் இருக்காதீர்கள். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நீங்கள் மட்டும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக செயல்படாதவர்கள் மீது இறைவனும் நம்பிக்கை வைப்பதில்லை.


* நல்ல செயல்களையே செய்யுங்கள். நல்ல சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்துங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு நல்லவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு செயல் செய்வதால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து வைத்திருந்தாலும்கூட அதனை செய்வதால் நன்மைகள் உண்டாகுமா என நல்லவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் அச்செயலால் துன்பம் நேரலாம் என அவர்கள் கூறினால் அதனை அப்படியே கைவிட்டுவிடுங்கள். எந்த நிலையிலும் நல்லவர்கள் விரும்பாத செயல்களை மட்டும் செய்யாதீர்கள்.


* நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுங்கள். உங்களிடம் நட்புடன் பழகும் ஒருவர் தவறான பாதையில் சென்றால் அதனை சுட்டிக்காட்டி திருத்துங்கள். அதைவிட்டுவிட்டு அவரது வழியிலேயே நீங்களும் செல்லாதீர்கள். தீய வழியில் செல்லும் நண்பர்களை திருத்துவதுதான் உண்மையான நண்பர்களுக்கு அழகாகும்.
தெய்வம் இருப்பது எங்கே?


* பக்தியுடன் இருப்பவர்களின் மத்தியில்தான், நாத்திகம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். நாத்திகவாதிகளின் பேச்சைக்கேட்டு கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார் என சிலர் மனம் வருந்துகிறார்கள். அவர்கள் அப்படி பேசுவதும் இறைவன் செயல்தான். தர்மம் இருக்கும் இடத்தில்தான் அதர்மமும் இருக்கிறது. நாட்டில் அதர்மமான செயல்கள் நடக்காமல், தர்மம் ஒன்று மட்டுமே இருந்தால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும். அதனால் தான் ஆத்திகம் இருக்கும் இடத்தில் நாத்திகமும் இருக்கிறது.

* கடவுளுக்கு உண்மையாக சேவை செய்யப்படும் இடத்தில் அன்பு, சுயநலமின்மை, அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற அனைத்து மேலான நல்ல குணங்களும் இருக்கும். ஏனென்றால், அவ்விடத்தில் கடவுள் இருக்கிறார். ஆனால், சேவை செய்வதாக கூறி எதுவும் செய்யவில்லை என்றால் அங்கு நிச்சயமாக கடவுள் இருப்பதில்லை. அங்கே அனைவரும் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* ஒரு சிலர் மக்களை ஆளும் பதவியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பையோ ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்களால்தான் அனைத்தும் நடக்கிறது என்றும், தான் இல்லாமல் எதுவும் அசையாது எனவும் மார்தட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருப்பவர்கள் ஆவர். இந்த உலகம் கடவுளின் விருப்பப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவரே அனைத்தையும் இயக்குபவராகவும், இயங்குபவராகவும் இருக்கிறார்.
தோல்விக்கு காரணமும் இறைவனே!


* ஒரு சிலர் தாங்கள் செய்த செயல்களில் தோல்வி ஏற்பட்டுவிட்டால் மனம் கலங்கி சோர்ந்து விடுகிறார்கள். தான் எவ்வளவு கடின முயற்சி செய்து உழைத்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று மனம் சஞ்சலப்படுகிறார்கள். தங்களுக்கு இறையருள் கிடைக்கவில்லையே என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். இவ்வாறு நினைத்தல் கூடாது. வெற்றி இறைவன் அருளால் கிடைக்கிறது என்றால், தோல்வியும் அவன் அருளாலேயே கிடைக்கிறது. தற்போது இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் தோல்வி அடுத்தமுறை நீங்கள் வெற்றி பெறுவதற்கும், உங்களை மேலும் தயார்படுத்திக் கொள்வதற்குமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* இறைவன் பாரபட்சம் இல்லாத அன்பு செலுத்துபவர். இருந்தாலும், தன்னை எப்போதும் நினைத்துக்கொண்டும், தன் திருநாமங்களைச் சொல்லி வணங்கிக் கொண்டும் இருப்பவர்களிடம் அதிக அன்பு காட்டுகிறார். தன்னை வேண்டி செயலை துவங்குபவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர் உறுதுணையாக செயல்படுவார். எனவே, எந்த செயலைச் செய்தாலும் இறைவனை வேண்டிக்கொண்டு துவங்குங்கள். அவர் அருள் கிடைத்துவிட்டால் தோல்வி என்பதே இருக்காது.

* இன்பம், துன்பம் எது வந்தாலும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சிறு துன்பங்
களுக்காக அதையே எண்ணிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருக்காதீர்கள். குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன தரவேண்டும் என தாய்க்கு தெரியும். அதுபோல் ஆண்டவனும், நாம் கேட்காமலேயே அனைத்தையும் நிறைவேற்றி விடுவார்.
இறைவன் தரும் வாய்ப்பு

* உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே மூலாதாரமாக இருக்கிறார்.

* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு கண்டிப் பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.


* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ், தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும். இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன் வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்
உற்சாகமாக இருக்க வழி

* உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும் செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.

* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம் அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.


* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.

* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா' செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக உங்களது சக்தியை நடத்திக் காட்டுவது தான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள் விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்
இறைவன் வைக்கும் "டெஸ்ட்'

* அனைவரும் ஒரு நாள் இறைவனை அடைந்தாக வேண்டும். முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப இப்பிறவியை எடுத்துள்ளோம். அவற்றிற் கான பலன்களை அனுபவித்த பிறகு, மீண்டும் இறைவனை அடைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளும் இடம் தான் உலகம்.

* இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளை பரிசாக கொடுக்கிறான். சிலருக்குஅதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் பரிசைத் தருகிறான். தன்னிடம் பரிசு பெற்றவர்கள் பரிசை நேசிக்கிறார்களா அல்லது தன்னை நேசிக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக அவன் வைக்கும் சோதனைதான் அது. இதை புரிந்து கொண்டு இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். தன் மீது அன்பை செலுத்துபவர்களுக்கே இறைவன், "கருணை' என்ற பரிசைக் கொடுக்கிறான்.


* மூன்று வேளை சாப்பிடுதல், கொடுக்கப்பட்ட வேலையை செய்தல், சுய நலத்துடன் செயல்படுதல் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் பலர் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் இந்த உலகில் படைக்கப்பட்டும் வீணாக இருப்பவர்களே ஆவர். இறைவன் மீது பக்தியை செலுத்தி அவன் அருளைப் பெற முயற்சிப்பதே நிஜமான வாழ்க்கை.

* பெற்றோர் சொல் கேளாத குழந்தைகள் துன்பங்களையே அனுபவிக்கின்றனர். அதுபோலவே, கடவுளின் குழந்தைகளாகிய மக்கள் அவர் விரும்பியபடி நல்வழியில் செல்லாமல், தீய வழிகளில் சென்றால் தீமையை அனுபவிக்கிறார்கள். எனவே, இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும்.
அறிவை அலங்கரித்து கொள்ளுங்கள்

ஒருவன், மற்றொருவனால் அவமதிக்கப்படும்போது, அதை அவமதிப்பாக நினைக் காமல் இருக்கும் உயர்ந்த நிலையே மன்னிப்பு ஆகும். உங்களை அவமரியாதை செய்த ஒருவன், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு ஒன்றுமே நடந்துவிடவில்லை என்று எண்ணும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பக்குவத்தை உடையவர்கள் அனைவரிலும் உயர்ந்தவர் ஆவர். இவர்களே அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பர்.

சிறு குழந்தையை தூக்கி வைத்து விளையாடுகிறீர்கள். அப்போது குழந்தை உங்களை உதைக்கிறது. முடியைப் பிடித்து இழுக்கிறது. அதற்காக நீங்கள் கோபப்படுவதில்லை. மாறாக சந்தோஷப்படுகிறீர்கள். குழந்தை உங்களை வேண்டுமென்றே உதைக்கவில்லை என்பதை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் சந்தோஷம் வருகிறது. அதைப்போலவே, உங்களுக்கு தீங்கு செய்பவர்களையும் குழந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களின் அன்பிலேயே அவர்கள் முழுவதும் திருந்தி விடுவார்கள். நீங்கள் செலுத்திய அன்பையே உங்களிடமும் செலுத்துவார்கள்.

நீங்கள் உடலை அலங்காரம் செய்வதைவிட்டு அறிவை அலங்கரித்துக் கொள்ளுங்கள். அந்த அறிவினால் பலரது அன்பையும் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். தனக்கு துன்பம் இழைக்கப் பட்டிருப்பது நேரடியாக தெரிந்தாலும்கூட அதை மறப்தோடு, மன்னித்துவிடவும் வேண்டும். இதுவே உயர்ந்த குணமாகும்.
நல்ல சிந்தனை வேண்டும்

* கறந்த பால் உடனே தயிராவதில்லை. அது போல தீய செயல்களின் பலன்கள் உடனே தெரிவதில்லை. நீறு பூத்த நெருப்பு போல மறைந்து இருந்து, தீய செயல்கள் செய்தவனையே துன்பத்திற்கு ஆளாக்குகின்றன. பாவம் செய்தவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பம் அடைகின்றான். இரு உலகிலும் அவனுக்கு துன்பமே ஏற்படுகிறது.

* தீய செயல்களை செய்பவனுக்கு எதிரிகள் என யாரும் தனியாக இருப்பதில்லை. அவன் செய்த செயல்களே அவனுக்கு எதிரியாகும். அதுவே அவனை அழித்து விடும்.

* தீமை தரக்கூடிய செயல்களை செய்வது மிகவும் எளிது. ஆனால் நன்மை உண்டாக்க கூடிய செயல்களை செய்வது மிகவும் கடினம். நாம் செய்யும் செயல்களால் தீமை ஏற்படும் என தெரிந்தும், அந்த செயல்களை செய்யக் கூடாது. எப்போதும் நல்ல சிந்தனையும், நல்ல செயல்களும் மட்டுமே செய்ய வேண்டும்.

* சிறியவரோ, பெரியவரோ, யார் ஒருவர் பாவங்களை செய்யாமல் மனதை கட்டுப்படுத்துகிறாரோ அவரே துறவி. துறவி என்பவர் தனது குறைகளையும், தான் செய்யத் தவறிய செயல்களையும் மட்டுமே சிந்தித்து பார்க்க வேண்டும். பிறரது குறைகளை கவனிப்பது துறவியின் கடமை ஆகாது.

* தலையை மொட்டை அடிப்பதால் மட்டும் ஒருவர் துறவியாகிவிட முடியாது. ஆசைகளையும், கோபத்தையும் அடக்கி உண்மை பேசுபவனே துறவியாவான். அவன் தனக்குரிய சிறு உணவைக் கூட, பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் பெற வேண்டும்.

புத்தர்
அலை பாயாத மனம் வேண்டும்

* காய்கறி, பழங்கள் போன்ற சைவ உணவையே உண்ணுதல் வேண்டும். இதனால் பலவித நோய்களிலிருந்து உடல் காப்பாற்றப்படுகிறது. மனம் அமைதியடைகிறது.

* மனதை அலைய விடக்கூடாது. மனது அலைந் தால் ஆசை உண்டாகும். அதனால், தவறான செயல்கள் செய்ய தோன்றும். வாழ்க்கை நன்கு அமைய மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.

* சிறந்த சிந்தனையாளர்கள் எல்லாம் நாவடக்கம் உடையவர்களாக இருப்பர். நாவடக்கம் உடைய உயர்ந்த மனிதர்களிடம் உயர்ந்த கருத்துக்கள் வெளிவரும். நாவடக்கம் உடையவர்களை பிறர் பழித்து கூற மாட்டார்கள்.

* அடக்கம், கோபம், அகங்காரம் இல்லாதவன், காம இச்சை ஆகிய குணங்கள் இல்லாதவன், பிறரிடம் குற்றம் காணாதவன் "சான்றோன்' என போற்றப்படுவான்.

* பிறரை ஏமாற்றுவது என்பது மிகவும் கொடிய செயலாகும். அடுத்தவர் பொருளை, அவர்கள் கவனிக்காத நேரத்தில் அபகரிக்க நினைப்பது துன்பத்தை ஏற்படுத்தும்.

* அமைதியான தியானத்தால் அகந்தை அழியும். ஆசை பெருகாது. துன்பம் விலகும். இன்பம் பெருகும். இன்றைய ஆசை நாளைய அழிவிற்கு அடிப்படை.

* நல்லவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பிற்காலத்தில் பெரும் நன்மைகளைத்தரும்.

* கோபம் கொள்ளக்கூடாது. கோபம் வந்துவிட்டால் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு, மனிதன் மிருகம் போல செயல்படுகிறான்
உழைக்காதவனுக்கு நரகமே சொந்தம்

ஆசை இல்லாமல் போனால் துன்பமே கிடையாது. ஆசை என்பது எவ்வளவு கிடைத்தாலும் அடங்காதது. ஆசையை அடக்கிவிட்டால் இந்த பிறப்பிலேயே இன்பம் கிடைத்து விடும்.

உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவன், எதிலும் வெற்றி பெறுகிறான். பொது வாழ்க்கையாக இருந்தாலும், தனி மனித வாழ்க்கையாக இருந்தாலும் உழைத் தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.உழைக்க வேண்டும் என்ற நினைப்பு இல்லாதவனை நரகம் தன் பக்கம் இழுத்து கொள்ளும்.


செல்வம் சேர்க்க வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கலாம். அப்படி சேர்க்கக்கூடிய செல்வம் நியாயமான முறையில் சேர்ந்ததாக இருக்க வேண்டும். தன்னிடம் சேர்ந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் செல்வத்தை மேலும் மேலும் சேர்த்தால், செல்வம் அழிந்து விடும்.

காவி கட்டிக்கொண்டும், திருநீறு தரித்துக்கொண்டும், ருத்ராட்சம் அணிந்து கொண்டும் வாழ்வது அறவாழ்க்கை ஆகாது. பொறாமை, ஆசை, சினம், காமம், கடுஞ்சொல் ஆகியவற்றை ஒழித்து வாழ்வதே அறவாழ்க்கை ஆகும்.

பெரியோர் தீய குணமுள்ளவர்களைக் கண்டு பயப்படுவார்கள். ஆனால் சிறியோர் (அற்பர்) தீய குணங்கள் கொண்ட கூட்டத்தாரை தங்களது சுற்றமாக கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வர்.
கவலையிலிருந்து விடுதலை

கவலை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எதிர்பார்த்தது நடக்காமலோ, விரும்பிய பொருள் கிடைக்காமல் போனாலோ கவலை வந்து விடுகிறது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, உறவுகளில் ஏற்படும் விரிசல், பொருளாதாரத்தில் பிரச்னை, வயது முதிர்வு போன்ற பல நிகழ்வுகளை எண்ணி, மனம் ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு சிலர், யாராவது ஆறுதல் சொல்லும் வேளையில் மனம் அமைதியடைந்தது போல் இருப்பர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் கவலை தொற்றிக் கொள்கிறது.

கவலைகளை நீங்கள் மனிதர்களிடம் சொல்லி பயனில்லை. பிள்ளைகள் தங்கள் பிரச்னைகளை பெற்றோரிடம் சொல்வது போல, உங்களது கவலைகளை கர்த்தரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில், நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகள் என்பதை உணர்ந்து, அவரை பற்றிக் கொண்டு, கவலைகளை அவரிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவரே, அதற்கு தீர்ப்பு கூற முடியும்.


கவலையுடன் இருப்பவர்களை, கர்த்தர் அருகிலேயே இருந்து இரட்சிக்கிறார். இதையே பைபிள் வசனம், ""நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்,'' என்கிறது.

கர்த்தரிடம், ""உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ விடாதேயும்,'' என்று மனதார ஜெபியுங்கள். நிச்சயம் கவலைகளிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார்
என்ன நடந்தாலும் கலங்காதே

நாடகத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பவனையும், உண்மையில் பிச்சையெடுப்பவனையும் ஒப்பிட்டு பார்த்தால் இருவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள். ஆனால், பிச்சை எடுப்பவன் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்கிறான், நடிப்பவனோ நிர்பந்தத்திற்கு ஆளானவனாக இருக்கிறான். இவர்களில் பிச்சைக்காரன் சுதந்திரன், நடிப்பவன் கட்டுண்டவன் ஆவான். நீ கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், சுதந்திரமானவனாக இரு

நடந்ததையும் கடந்ததையும் எண்ணி வருத்தப்படாதே. அதேபோல செய்த நற்செயல்களைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிராதே. அதை நினைவில் கூட வைத்துக் கொள்ளக்கூடாது. செய்த செயல்களுக்கான பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும். நீ இல்லை என்று சொல்வதால் அவை இல்லையென ஆகிவிடாது. அதே சமயம் அச்செயலை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்பு செய்த தவறுக்கு கிடைக்கும் பலன்களை துணிவுடன் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தீய செயல்களை புறக்கணி. அவற்றை மீண்டும் ஒரு போதும் நினைக்காதே. மூட நம்பிக்கையை விடு. மரணமே எதிர்வந்தாலும் பலவீனம் அடையாதே.

எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார். அவ்வாழ்க்கையில் நீ, மற்றவரிடமிருந்து உதவி பெற முயற்சி செய்ததும், அது கிடைக்காமல் போன நிகழ்வுகளும்தான் இருக்கும். நீ பெற்ற உதவி, உனது சுயமுயற்சியால் கிடைத்ததாகத்தான் இருக்கும்.

கடவுளின் கணக்கு புத்தகம்

மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நாவை அடக்கிக் கொண்டு செயலாற்ற வேண்டும். மவுனம் அந்தளவுக்கு நல்ல விஷயம். ஆனால், இதற்குரிய மன அடக்கத்தை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. அதற்கு நிறைந்த பொறுமையும் பயிற்சியும் தேவை.

உண்மையை நாடுவோர் மவுனமாய் இருக்க வேண்டும். நாவடக்கம் உள்ளவன் யோசிக்காமல் பேசமாட்டான். பேசும்பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்தே உபயோகிப்பான். மிகைப்படுத்தி கூறுவதும், உண்மையை மாற்றுவதும், மறைப்பதும் மனிதன் இயற்கையாகச் செய்யக்கூடிய தவறுகளில் சேர்ந்தவை. அந்தத் தவறுகள் வராமல் இருக்க மவுனம் அவசியம். கோபத்தை அடக்குவதற்கும் இது சிறந்ததொரு சாதனம்.

பேசாமல் இருப்பது மட்டும் மவுனமாகாது. பேச சக்தியிருந்தாலும், அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருக்க வேண்டும். உண்மையைத் தேடுவோருக்கு மவுனம் பெருந்துணையாகும்.

ஒவ்வொருவரும் நற்செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். கடவுளின் கணக்கு புத்தகத்தில் மனிதர்களின் செயல்கள் மட்டுமே இடம்பெறுகிறது. ஆகவே, செய்யப்படும் செயல்கள் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். நற்செயல்கள் செய்ய வேண்டுமெனில், சத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்தை பேணுபவர், அமைதியானவராக இருக்க வேண்டியதும் அவசியமாகும். அமைதியுடன் இருப்பவர்களே தங்களது செயல்களில் வெற்றி காண்கின்றனர். சாதனையாளராகவும் உருவெடுக்கின்றனர்.
சைவ உடை அணியுங்கள்

பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமான வாழ்க்கை வாழக்கூடாது. பணம் இல்லாத ஏழைகள் எப்படி எளிமையாக வாழ்கிறார்களோ, அந்த வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும். அந்த வாழ்க்கையும் ஆத்மவிருத்திக்கு நன்மை தரக்கூடியதாகவே இருக்க வேண்டும். அதுவே, அனைத்து நிலைகளிலும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று ஒவ்வொன்றின் மீதும் ஆசைப்பட்டு ஆளாய் பறந்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் ஆசையில்லாதவர்களாக இருந்தாலும், உங்களுடன் இருப்பவர்களும் ஆசையில்லாமல் இருப்பவர்களாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வரம்புமீறி சென்றாலும், எளிமையான வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். உங்களது எளிமையே, அடுத்தவர்களும் எளிமையாக வாழ்வதற்கு துõண்டுகோலாக இருக்க வேண்டும்.

பெண்கள் பட்டு, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிகப்பற்று வைக்கின்றனர். அதனை மிகவும் விரும்புவதற்கேற்ப எந்த இன்பமும் அதில் இல்லை. லட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்றுதான், ஒரு பட்டுப்புடவையை தயாரிக்கிறார்கள். பல உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரு வஸ்துவினால், நமக்கு எப்படி இன்பம் கிடைக்கமுடியும். உணவில் சைவம் என்று மட்டும் இருந்தால் போதாது. உடுத்தும் உடையிலும் சைவம் இருக்க வேண்டும்.பெண்கள் ஆடம்பர செலவுகளைக்குறைத்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் உள்ளவனே உயர்ந்தவன்

நீங்கள் பல நூல்களை படிப்பதைவிட, ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேல் . ஒருவரது ஒழுக்கம் அவரது வாழ்க்கைக்கு உயர்வைத் தரும். அதேபோல் உலகம் முழுவதும் ஒழுக்கத்துடன் நடந்தால் சாந்தி நிகழும்.

நமது நடை, உடை, செயல், பழக்க வழக்கம் எல்லாமே ஒழுங்காக அமைந்தால் தான் உயர்ந்தோர் உள்ளங்களில் இடம் கிடைக்கும். நீங்கள் பல நூல்கள் கற்றும், பண்பில்லாமல் இருந்தால், உங்களைவிட கல்வி அறிவில்லாமல், ஒழுக்கத்தோடு இருப்பவன் உயர்ந்தவனே ஆவான். கல்வியைப் பயின்று, ஒழுக்கத்தைக் கைவிட்டவன், நூல் அறுந்த, வால் மட்டும் மிஞ்சிய பட்டம் போன்றவன்.

இறைவன் நமக்கு உடலைத் தந்தபோது, அது ஒரு துõய்மையான இரவல் பாத்திரமாகவே இருந்தது. அதை அவனிடம் திருப்பிக் கொடுக்கும் போதும் அதே துõய்மையுடன் தரவேண்டும். மயிலின் முட்டையைக் கோழி அடைக்காத்தாலும் குஞ்சு பிறக்கும் போது மயிலாகத்தான் இருக்கும். அதேபோல் உங்களிடம் தெய்வீகத் தன்மை இருந்தால், எவரோடு சேர்ந்தாலும் துõய்மையானவராகவே இருப்பீர்கள்.

உங்களது நடத்தை நன்னடைத்தையாக வேண்டும். செல்வம் குறைந்திருந்தாலும், ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வானவையாக கருதப்படுகின்றன. அக்குடும்பங்களுக்கு பெரும்புகழ் தானாக வந்து சேரும். முள்ளிலே பிறந்து, முள்ளோடு மலர்ந்த தாழம்பூவுக்கும் மணம் உண்டு. அதுபோல, பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும், ஒழுக்கம் இருப்பவன் உயர்வானவனாக கருதப்படுவான்.
நல்ல எண்ணமே வெற்றி தரும்

ஒழுக்கம் என்றால், சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ அடக்குமுறை என்றும், ஆனந்தம் இல்லாத வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள். இது தவறாகும். ஒழுக்கமுள்ள மனம் கட்டுப்பாடுடன் இருப்பதுடன், நல்லதை மட்டுமே நினைக்கும். நல்லதை நினைக்காத மனமுடையவர்களால் நிச்சயமாக ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

எண்ணத்தில் கட்டுப்பாடும், ஒழுக்கமும் வந்துவிட்டாலே ஒருவருக்கு எல்லாமும் கிடைத்துவிடுகிறது. ஒருவர் பெறும் வெற்றியானது, அவரது எண்ணங்களுக்கு கிடைக்கும் வெற்றியாகவே அமைகிறது. சுத்தமான எண்ணத்துடன் இருப்பவர்களின் மனம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்.

ஒருவர் தன் வாழ்க்கையில் அடையும் எந்த சாதனையும் ஒழுக்கத்ததைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சரியாக செயல்படும் ஒருவர் வெளியில் யாருக்கும் பயப்படவோ, அவர்களது உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நடக்கவோ தேவையில்லை. சுயமாக முடிவெடுத்து, தன் விருப்பப்படியே செயல்படலாம். இத்தகையவர்கள் எடுக்கும் முடிவுகளும் தவறாக இருக்காதென்பதால், யாரும் அச்சம் கொள்ளவும் தேவையில்லை.

ஒழுக்கம், தியானம் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. தியானம் செய்யும் மனம் அமைதியடைகிறது. அமைதி இருக்கும் இடத்தில் ஒழுக்கம் வந்து விடுகிறது. இவ்விரண்டும் இருப்பவர்களின் மனம் தெளிவானதாக இருக்கிறது.
நல்ல பேச்சுக்கு அனைத்தும் சொந்தம்

* ஒவ்வொருவரும் தங்கள் தன்மையை வெளிப்படுத்த உதவும் பிரதான கருவியாக பேச்சு இருக்கிறது. ஒருவரது பேச்சில் இருந்தே அவரது குணநலனை அறிந்து கொள்ளலாம். பேச்சு நல்ல கருத்துக்களை உடையதாக இருக்க வேண்டும். சிறப்பாக பேசும் திறனுடையவர்கள் சிறந்த மனிதர்களாக திகழ்வர். அவர்களுக்கு அனைத்துமே சொந்தமாகிறது.

* சிலர் பேசும் முன்பாக, எப்படி பேச வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்றது. உள் மனதின் தன்மை எப்படியிருக்கிறதோ, அதற்கேற்பவே பேச்சும் அமையும். ஆகவே, மனதை அன்பாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். உள்மனதில் கவனம் கொள்ளாமல், வெளியே நன்றாக பேசவேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும் அது சரியாக அமையாது.

* ஒவ்வொருவரும் மற்றொருவருக்காகத்தான் பேசுகின்றனர். அத்தகைய பேச்சின் சாராம்சம் கேட்பவருடைய நலனை கருத்தில் கொண்டதாகவும், அவர்களது மனம் புண்படாத படியும் இருக்கவேண்டும். அர்த்தமற்ற, அன்பில்லாத பேச்சால் யாருக்கும் நன்மை விளையப்போவதில்லை.

* பேச்சுக்கு என வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு பேசும் பேச்சானது நோக்கம் இல்லாததாகத்தான் இருக்கும். சிலநேரங்களில் அதுவே பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்து விடலாம். ஆகவே, சூழ்நிலைக்கு தக்கபடி பேசுவதும், செயல்படுவதும் நல்லது.

மன' யானையை கட்டிப்போட வழி

* சாணத்தில் உதிக்கும் புழுவை, பத்திரமாக எடுத்து, சந்தனக் கலவையில் வைத்தால் அது செத்துவிடும். அதுபோல கயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்தாலே அதை மிகப்பெரிய துன்பமாகக் கருதுவர்.

* ஈயானது மலத்திலும் உட்காரும். உணவுப் பொருளிலும் உட்காரும். அதுபோல், சபல குணமுடைய மக்கள் நல்லது கெட்டது என்று வித்தியாசம் பார்க்காமல் இரண்டையும் மாறிமாறிச் செய்கின்றனர். அப்படி இல்லாமல் தேனீ போன்று நல்லதையே நாடி, நல்லதையே செய்தால், இறைவனுக்கு சொந்தமாவோம்.

* செல்வ செழிப்பில் மனதைப் பறிகொடுக்காமல் அருட்செல்வமான தெய்வத்திடம் மனதைப் பறிகொடுங்கள். பொருளிடம் வைக்கும் பற்று, தெய்வ நட்பை புறக்கணித்துவிடும்.

* நுõலின் இழைகளைச் சிறுகச் சிறுக வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து முறுக்கலாம். அவ்வாறு முறுக்கிய கயிற்றினால் ஒரு பெரிய யானையைக் கூட கட்டலாம். அதுபோல சிறிய அறிவுரைகளாக இருந்தாலும், அதை கேட்க கேட்க அவ்வப்போது கடைப்பிடித்து வந்தால், மனம் என்ற யானையையே கட்டிப் போட்டு விடலாம்.

* பழக்கம் இல்லாது ஒரு வேலையை ஆரம்பத்தில் செய்யும்போது சிறிது தட்டித் தடுமாறிச் செய்ய வேண்டியிருக்கும். நாளடைவில் அதே வேலை சர்வ சாதாரணமாய் ஆகிவிடும். அதேபோல் நல்ல எண்ணம் மனதுக்குள் நுழைய கஷ்டப்படுகிறது. பழக்கத்தால் அதை மனதுக்குள் எளிதாக நுழையும்படி செய்யலாம். நாளடைவில் நல்லெண்ணங்கள் உடலில் ஊறி, கெட்ட எண்ணங்கள்
உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை
விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண
காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே
இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே
மூலாதாரமாக இருக்கிறார்.
* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக
தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை
தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு
நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு
கண்டிப்பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.
* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ்,
தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான
கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு
என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு
கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும்.
இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே
கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன்
வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.
உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு
விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம்
காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை
விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள
பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும்
செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.
* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம்
அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும்
சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து
உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.
* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு
என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.
* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து
கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா'
செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக
உங்களது சக்தியை நடத்திக்காட்டுவதுதான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள்
விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்.
கவலை அகல தியாகம் செய்

* நீ துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்றால் உன்னிடமுள்ள பாவங்களைப் போக்கிக் கொள். அப்பொழுது, உனக்குள் எங்கும் நிறைந்த ஸ்வரூபமான கடவுளை உணர்வாய். தீய செயல் உன்னிடம் இருக்கும் வரை மன அமைதி இருக்காது. மன அமைதி இல்லாதவர்களால் ஒருநாளும் தனக்குள் இருக்கும் இறைவனைக் காண இயலாது. உனக்கு, முதலில் வேண்டியது உள்ளத் தூய்மையாகும்.

* மனம் போன போக்கில் போகிறவர்கள், கட்டுப்பாடில்லாத மிருகங்களாகவே மறுபடி பிறப்பார்கள். சாஸ்திரத்தில் சொன்ன கட்டுப்பாட்டுடன், யார் மனம் இருந்து வருகிறதோ அவர் பயமின்றி இருக்கலாம். உனது மறுபிறவியை நீ உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்.


* ஆடுமாடுகள் கூட தனக்குண்டான பரிசுத்த உணவையே உட்கொள்கிறது. மனிதனுக்கோ கடவுள் நல்ல பகுத்தறிவுடன் கூடிய உடலை கொடுத்திருக்கிறான். அந்த பகுத்தறிவால் தீயது செய்யாமல் நல்லவற்றை செய்தால் இறைவன் உன்னுள் குடியேறுவான்.

* நீ புண்ணியம் செய்துள்ளதற்கு அடையாளம் உனது உள்ளம் துõய்மையாய் இருப்பதேயாகும். உள்ளத்தூய்மை இல்லையென்றால் அதுவே நீ செய்த பாவத்திற்கான அடையாளமாகிறது. நீ தூய்மையாக இருப்பதற்கு ஒரே வழி அனைத்தையும் தியாகம் செய்வதாகும். தியாகம் செய்தால் கவலை அகன்று விடும்.
நன்கு சிந்திக்க நல்ல சிந்தனை,நல்ல ஒழுக்கம்,நல்ல பன்பு,எளிமை, ஆஹா அற்புதமான தொகுப்பு ஒருசேர தொகுத்துஅளிக்கும் அய்யாவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது அய்யாஅவர்களுக்கு நிச்சயம் புன்னிய பலன் கிட்டும்

ஒருவன் வாழ்நாள் முடிந்து எமலோகம் சென்றானாம் அப்போது எம தர்மராஜா சொன்னாராம் உனக்கு மோட்சம்
என்றாராம், அவனோ அய்யா நான் வாழ்நாளிள் எந்த ஒரு தர்மமோ புன்னியமோ செய்யவில்லை எனக்கு எப்படி மோட்சம் என்று வினவினான், அதற்க்கு எமதர்மராஜா கூறினார் ஆம் உன்மைதான் நீஎந்த தர்மமும் செய்யவில்லை ஆனால் வழிபோக்கன் ஒருவன் உன்னிடம் குடிக்க தன்னீர் கேட்டான் உன்னிடம் நீ அவனுக்கு தன்னீர் கொடுக்கவில்லை மறாக அவனுக்கு அங்கு செல் தன்னீர் கிடைக்கும் என்று அவனுக்கு வழிகாட்டினாய் அந்த புன்னிய பலனின் காரனமாக உனக்கு மோட்சம் வழங்கினேன் என்று எமதர்மராஜா கூறினாராம் அவன் சற்று சிந்தித்தான் இதற்கே மோட்சம் என்றால் தர்மம் செய்திருந்தால் இன்னும் அதிகபலன் அல்லவா கிடைத்திருக்கும் மனதில் நினைத்து கொண்டானாம்
உடலை சேவைக்கு அர்ப்பணிப்போம்

*இதயப்பூர்வமாக செய்யும் பிரார்த்தனைகள் அற்புதங்களைச் செய்ய வல்லமை பெற்றதாகஇருக்கிறது. அத்தகைய பிரார்த்தனையை கடவுள் மிக விரைவாக ஏற்றுக்கொள்கிறார். ஆகவே, இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். துõய எண்ணங்களை வரவேற்கவும், தீய சிந்தனை, போதனைகளை எதிர்க்கும் துணிவுடையதாகவும் இருக்கும் இதயமே பரிசுத்த இதயம் ஆகும். நீங்களும் உங்கள் இதயத்தை துணிவுடையதாக வைத்துக் கொள்ளுங்கள்.

* வயிற்றுக்கு உணவு இல்லாதிருப்பவர்கள், பசியை எண்ணி வருந்த தேவையில்லை. கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுக்கான தேவைகள் கிடைப்பதற்கு அவர் அருள் செய்து விடுவார். ஏனெனில், பசியால் வாடுபவர்களுக்கு கடவுளே உணவாக இருக்கிறார்.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான உடலைத்தான் கொடுத்திருக்கிறார். அந்த உடலை கடவுளுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுத்தவேண்டுமே தவிர, சுகங்களை அனுபவிக்கும் வழியில் ஈடுபடுத்தக்கூடாது. உடல் சுகம் என்பது மரணத்திற்கு ஒப்பானது ஆகும். உங்களது உடலை கடவுள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

* வெளிப்பொருட்கள் மீது நாட்டம் வைக்காமல், புலன்களை அடக்கி வையுங்கள். அதனை அடக்குவதற்கு விரதம் இருங்கள். இத்தகைய விரதம் ஆன்ம வளர்ச்சியை அதிகரிக்கும் சாதனமாகவும், உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை துõய்மைப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்
வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக்கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.

* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.

* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்
பக்தியின் அடிப்படை சத்தியம்

* ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணம் எங்கு செல்கிறது என்றே தெரியாமலேயே சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லையற்ற வாழ்க்கை எவ்விடத்திலும் முடிவுறப்போவதில்லை. ஆகவே, உங்கள் பயணம் ஆன்மாவைத் தேடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் ஆத்மாவை அறிந்து கொள்கிறீர்களோ, அவ் விடத்தில் பயணத்தை முடித்துவிடுங்கள்.

* அழகான பொருட்களைக் காணும்போது மகிழ்ச்சி கொள்ளும் மனம், அது அழியும்போது துன்பப்படுகிறது. இது தேவையில்லாதது. அழகான பொருளால் தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டுமே தரமுடியும். நிரந்தரமான பொருளால் மட்டுமே, நிலையான மகிழ்ச்சி கிடைக்கும். உலகில் கடவுள் ஒருவரைத்தவிர, நிரந்தரமான பொருள் என்று எதுவுமே கிடையாது. ஆகவே, கடவுள் மீது பக்தி கொண்டு, அவரை அடைந்து நிரந்தர இன்பம் காணுங்கள்.

* காலைவேளையில் ஒரு செடியில் ரோஜா மலர்கிறது. அதனை பார்க்கும்போது மனம் மகிழும். மறுநாள் காலையில் அதே மலர் இதழ்களை உதிர்த்து குச்சியாக நிற்கும்போது, முன்பிருந்த மகிழ்ச்சி இருப்பதில்லை. நாம் மகிழ வேண்டும் என்பதற்காக ரோஜா, உதிராமல் அப்படியே இருப்பதில்லை. அது தன்னிலையில் எப்போதும்போல் செயல்படுகிறது. ஆகவே, தற்காலிக இன்பம் தரும் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள்.

* சத்தியமே பேச வேண்டும். சத்திய வழியில் நடக்க வேண்டும். அதுவே பக்திக்கு மிகவும் அடிப்படையான விஷயம்.
பிறவிப்பயன் அடைய வழி

தனித்திருக்கும் ஒன்றாகத் தோன்றினாலும், "அலை' என்ற தனிப்பெயரைப் பெற்றிருந் தாலும், அலையானது, கடலை ஆதாரமாகக் கொண்டு, பிரிக்க முடியாதபடி செயல்பட்டு, மீண்டும் கடலையே அடைகிறது. இதைப் போலத்தான் மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. இன்பம் வரும்போது சிரிக்கிறார் கள், சிறிய துன்பத்திற்கு கூட கலங்குகிறார்கள், புரியாத சில கேள்விகளுக்கு விடை தேடி அங்கும் இங்குமாக அலைகிறார்கள்.

இறுதியில் எதுவுமே புலப்படாமல் வந்த இடத்திற்கே சென்று விடுகிறார்கள். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் இறுதிக்காலத்தில் பரமானந்தமாகிய இறைவனைத்தான் அடைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் மீது நாட்டம் செலுத்துங்கள். அதுதான் பிறவிப்பயன் அடைய வைக்கும் வழியாகும்.

அறிவுமயமான இறைவன் எந்த இடத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கும் அவர், உங்களை எந்த நேரத்திலும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் தான் உங்களது அறியாமையால் அதனை உணராமல் இருக்கிறீர்கள். அத்தகையவரை அடைய வேண்டுமென நினைப்பவர்கள் பக்தி ஒன்றைத்தவிர வேறெதையும் செய்ய வேண்டாம். அவரைத்தேடி வெளியில் அலைய வேண்டும், அவரோடு பேச வேண்டும் என மிகச்சிறிய வேலையைக்கூட செய்யத் தேவையில்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஏனென்றால் அமைதி மட்டுமே உண்மையாகும். இந்த உண்மையை உணருபவர்கள் இறைவனை அடைவது நிச்சயம்.
மிகவும் கவனமாக இருங்கள்

* மனிதர்கள் அனைவருக்கும் கவனத் தன்மையும், ஒருமுகப்படுத்தும் திறனும் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே எடுத்த செயலில் வெற்றி காண்கின்றனர். ஒருவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவோ, மேதையாகவோ இருக்கிறார் எனில் அது அவரது ஒருமுகப்படுத்திய தன்மையாலேயே சாத்தியமாகிறது. ஆகவே, மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம்.

* வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டுமென செயல்படுபவர்கள், முதலில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கென பெரியளவில் செயல்படத் தேவையில்லை. சிதறிக்கிடக்கும் உணர்வுகளை ஒரே முனையில் கொண்டு சேர்த்தாலே போதும். கவனம், உணர்வு நிலை இவ்விரண்டையும் ஒன்றாக்கி செயல்படும்போது, வேறெந்த சக்தியாலும் வெல்ல முடியாத அளவிற்கு அது பலன் பெற்று விடுகிறது.


* பலவீனமானவர்கள் கூட, சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம், எளிதில் பலசாலிகளாக மாறிவிடலாம். ஒரு குறிப்பிட்ட யோசனை உங்கள் மனதில் தோன்றும் போது, உடனே அதை செயல்படுத்திவிட வேண்டும். மாறாக அதன் மீது கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அதைவிட வேறு அறிவற்ற செயல் இருக்க முடியாது. அத்தகைய அறிவை பெறுவதற்கு கவனத்தை ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம்.

* மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்யுங்கள். தியானம் மூலம் அமைதி உண்டாகும். அமைதி இருக்குமிடத்தில் மனமும் ஒருமுகப்படும். அந்த நிலையில் செய்யும் செயல்கள் எளிதில் வெற்றி கண்டுவிடும்.
பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?

* கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியை, ஒரு முக்கோணமாக உருவகம் செய்து கொள்ளலாம். இதில் முதல் கோணம் பேரம் பேசாத தன்மை, இரண்டாவது பயம் இல்லாத தன்மை, மூன்றாவது போட்டியிடாத குணம், இம்மூன்றுமே பக்தியின் அடிப்படை குணங்களாகும்.

* இறைவனிடம் ஏதேனும் எதிர்பார்த்து செலுத்தும் பக்திக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில், நிச்சயமாக அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் பக்தியும் இருப்பதில்லை. கடவுள் தன் மீது பிரதிபலன் பார்க்காத பக்தியையே விரும்புகிறார். ஆகையால், அவர் மீது பரிபூரணமான அன்பை மட்டும் செலுத்துங்கள்.


* பயம் காரணமாகவும், இறைவன் மீது பக்தி செலுத்தக்கூடாது. இத்தகைய பக்தி உடையவர்கள் மனித இயல்பே இல்லாதவர் ஆவர். இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சவுக்கும், மறு கையில் செங்கோலும் ஏந்திய தலைவனாகவே தோற்றமளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு அடிபணியாவிட்டால், அவர் தண்டனை கொடுத்துவிடுவார் என்று பயந்து வணங்குவது மிகவும் இழிவான செயலாகும். அச்சம் இருக்குமிடத்தில் அன்பு இருக்கவே முடியாது. அன்பு இல்லாத பக்தியும் பக்தியே கிடையாது.

* கடவுள் மீது பக்தி கொண்டவர்கள், தங்களது லட்சியமே ஒன்று திரண்டு வந்ததாக கருதி அன்பு செலுத்த வேண்டும். இத்தகைய பக்தியுடன் போட்டியிடுவதற்கு வேறெந்த சக்தியும் கிடையாது. இதை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

என்றும் உண்மையே பேசுங்கள்

* எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். அப்பொழுதுதான் உண்மையின் ரூபமாகிய இறைவனை காண முடியும். இறைவனிடம் உள்ளப் பூர்வமான பக்தி கொள்ள வேண்டும். அலுவலகத்திலும், வியாபாரத்திலும் உண்மை நெறி தவறக்கூடாது. கபட வேஷத்தையும், ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு உண்மையே பேசினால் கடவுளைக் காணலாம்.

* ஒரு மனிதனுக்குக் கடன் அதிகமாகிவிட்டது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டான். வைத்தியனால் குணமும் அடையவில்லை. கடைசியில் கெட்டிக்கார வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டான். அந்த போலிப் பைத்தியத்தைத் தனியாக அழைத்துச் சென்று ""அடேய்! நீ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்! பைத்தியமாக நடித்துக் கொண்டிருந்தால், உண்மையாகவே உனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இப்பொழுது உன்னிடம் பைத்தியத்திற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஜாக்கிரதையாக இரு!'' என்று எச்சரித்தான். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்துபோய் பைத்தியமாக நடிப்பதை விட்டுவிட்டான். எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே ஆகவேண்டும்.


* பொய், அனைத்தையும் விட கெட்டது. பொய் வேஷம் போடுவதும் கெட்டதே. ஒருவன் பொய் பேசுவதில் விருப்பம் கொண்டால், பொய்யின் மேலுள்ள பயம் அவனுக்குப் போய்விடும். வாய்மையே வெல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

* நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

* நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக "தர்மம்' இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

* அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.
எல்லாரிடமும் குறைபாடு உண்டு

* உணவுக்கு ஆசைப்படும் எலி, பொறியில் அகப்பட்டு தவிப்பதுபோல, மாயையான ஆசைகளை விரும்பி அதில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆசையில் சிக்கிக்கொண்டவர்கள் பொறாமை, கர்வம் போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதனால் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடுகிறது. நீங்கள் சொர்க்கத்தில் வாழ இக்குணத்தை விட்டுவிடுங்கள்.

* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும்.

* ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் குறைந்தவனாகவே இருப்பான். இதுவே, இயற்கை நியதி. எனவே, கற்றவர் கல்லாதவரையும், பணக்காரர்கள் ஏழையையும் இழிவாக நடத்துவது தவறானது.

* தனது விருப்பப்படி செயல்படும் ஒருவர், அச்செயலால் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் இன்பத்துடனேயே ஏற்றுக்கொள்வார். ஏனெனில், அவர்தான் அந்த துன்பத்திற்கு முழு பொறுப்பாளி ஆகிறார். இவ்வாறு செயல்படுவர் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார். மற்றொருவர், சுற்றத்தாரின் விருப்பப்படி செயல்களை செய்து அதில் இன்பங்களையே பெற்றாலும், அவர் அடிமையாகவே இருக்கிறார். நீங்கள் சுதந்திரம் பெற்றவர்களாகவே இருங்கள்
நல்ல நூல்களைப் படியுங்கள்

* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நுõல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.
கடவுளின் மறுஉருவம்

மனிதர்கள் ஒவ்வொருவரும், பிறர் மீது அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கும் உதவாத வகையில் பேசிக்கொண்டும், பிரச்னைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. அன்பு ஒன்று மட்டும்தான், மனிதர்களை ஒருவரோடு ஒருவர் பிணைக்கும் அற்புத சக்தியாகும். ஆகவே, அனைவர்மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள்.

தன் மீது அன்பு செலுத்துவதற்கென யாரும் இல்லாதவர்கள், உலகிலுள்ள நோய்களில் எல்லாம் கொடிய நோயை அனுபவிப்பவர்கள் ஆவர். அந்த நோய்க்கு அன்பை விட, வேறு மருந்துகள் எதுவும் கிடையாது. அவ்வாறு ஆதரவில்லாமல் இருப்பவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது பாசம் வைத்து பரிவுடன் நடந்து கொள்ளுங்கள். அதுவே, அவர்களது நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இருக்கும். ஏனெனில், அன்பினால் செயல்படுத்த முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.


ஏழைகள் கடவுளின் மறு உருவமாக இருப்பவர்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். அதோடு, உங்களது உழைப்பும் அவர்களுக்கானதாகவே இருக்கட்டும். அத்தகைய உழைப்பு, கடவுளுக்காக செய்யும் உழைப்பு ஆகும்.

உள்ளத்தில் அன்பும், கருணையும் இல்லாமல் வெளியே அன்பாக இருப்பதுபோல வெறுமனே காட்டக்கூடாது. அத்தகைய சேவையால் பயன் ஏதும் கிடையாது. உங்களது சேவை மனதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும்.
நல்லவர்களுடன் சேருங்கள்

தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.


ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.

ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.
அழிக்க வரும் மூச்சுக்காற்று

கடவுள், உங்கள் மூச்சிற்குள் மூச்சாகவும், உயிரின் உயிராகவும் இருக்கிறார். மலர்களில் வாசம் போல, உங்கள் இறைவன் உங்களுக்குள்ளே இருக்கிறார். கஸ்துõரிமான் தன் நாபியிலுள்ள கஸ்துõரி மணத்தைப் புல்லில் தேடுவது போல், நீங்கள் அங்கும் இங்கும் இறைவனை தேடாமல் உங்களினுள் உள்ள இறைவனை காண முயற்சி செய்யுங்கள். கடவுளை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. தெய்வத்தன்மையுள்ள மனிதர்களையாவது நம்புங்கள்.

உங்கள் தேவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை அடைவதற்கு கெட்டவர்களின் உதவியை நாடாதீர்கள். ஏனெனில், அது எதாவது ஒரு வகையில் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். நல்லவர்களின் உதவியை நாடுங்கள். அது நிலையான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் பலம் குறைந்தவர்களை அவமதிப்பதோ, தொந்தரவுக்கு உள்ளாக்குவதோ கூடாது. ஏனெனில், நீங்கள் கொடுக்கும் தொந்தரவால் ஏற்படும் மனக்கஷ்டத்தை வெளிப்படுத்தாமல், அவர்கள் அடக்கி வைப்பதால் ஏற்படும் மூச்சுக்காற்று பலம் வாய்ந்தது. அது உங்களை அழித்துவிடும்.

நீங்கள் நினைத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனால் உங்கள் செயல் சரியான பாதையில் போகாமல் மனம் பதட்டமடைந்து நிலை தடுமாறும். தோட்டக்காரன் நுõறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும். அதேபோல் நீங்கள் நினைப்பது மெல்ல மெல்ல நடப்பதால் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்
இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.

URS
SUNDARAM