Thursday, November 15, 2007

அறிவு

Hi,
this is sundaram from tamilnadu.i want to share my distress and good timings to all but i couldn't able to type in tamil so i am very sorry.very soon i will able to type in tamil ,i just think so,whatever will happened god only knows.
முதலில் நீங்கள் செயல்படத் துவங்குங்கள், அதன் பின்பு அனைத்தும் சரியாகிவுடும்.
வழக்கத்திற்கு மாறாக சற்று மாறுபட்டு இருப்பதுதான் சாதாரணமானவற்றிற்கும் அசாதாரணமானவற்றிற்கும் உள்ள வித்தியாசம்.
கற்பனையானது அறிவை விட மிகவும் முக்கியமானது. -[அல்பர்ட் ஐன்ஸ்டின்]
உங்கள் தினசரி நடவடிக்கைகளின் போது கீழ்க்கண்டவைகளைக் கடைபிடியுங்கள்:
மனோரீதியான எண்ணக்கட்டுப்பாடு: உங்கள் தினசரி செயல்பாடுகளில் இறங்கும் போது எண்ணங்களைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். உங்கள் உள்மனதில் மற்றும் ஆழ்மனநிலைகளில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதற்கு முன்பு அழித்துவிடுங்கள். அனைத்தையும் குறித்து நேர்மறையான மனோநிலையைப் பராமரியுங்கள்.
மனோரீதியான பேச்சுக்கட்டுப்பாடு: நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணியுங்கள்.எதிர்மறையான பேச்சுக்களையும், தீய வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும், திட நம்பிக்கையுடன் பேசுங்கள்.
எண்ணங்களை மனக் காட்சியாகப் பார்த்தல்: விருப்ப எண்னங்கள் உங்கள் மனதில் உட்புகும் ஒவ்வொரு நேரமும் உடனடியாக நீங்கள் ஏற்கனவே மனதில் கொண்டிருந்த காட்சிகளை நீங்களாகவே மனக்காட்சியாக காணுங்கள்.
உடனடி தியானம்:எப்பொழுதெல்லாம் ஓய்வு அல்லது புத்துணர்வு தேவைப்படுகிறதோ அப்பொழுது சற்றுநேரத்தை உடனடியாக தியானப்பயிற்சிக்கு ஒதுக்குங்கள்.
ஆக்கப்பூர்வமான ஒளிகொண்ட மனக்காட்சி:தியானப்பயிற்சியை மேற்கொண்ட பிறகு ஆக்கப்பூர்வமான மனக்காட்சியைத் தினமும் ஒரு வேளைவ்வது பயிற்சியாக செய்து பழகுங்கள். by urs
sundaram

No comments: