Tuesday, November 20, 2007

பாடல் ஒன்று


காதல் காலம்

கனவோடு விழித்தேன்கண் முன்னே காதலன்
சீ போடா
தினமும் நீ தானே என் முன்னே


புத்தம் புது பூமி வேண்டும்நித்தம் ஒரு வானம் வேண்டும்தங்க மழை பெய்ய வேண்டும்தமிழில் குயில் பாட வேண்டும்
……
சொந்த ஆகாயம் வேண்டும்ஜோடி நிலவொன்று வேண்டும்நெற்றி வேர்க்கின்ற போதுஅந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்மலர்கள் வாய் பேச வேண்டும்வண்டு உட்காரும் பூ மேலேநான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடுஉன் அருகிலே ஓர் இடம் கொடுபுன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடுபூமியில் சில மாறுதல் தனை வர விடு
……
யுத்தம் இல்லாத பூமிஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்மரணம் காணாத மனித இனம்இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்பாலைவனம் பூக்க வேண்டும்சாந்தி சாந்தி என்ற சங்கீதம்சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்வந்தவை இனி வாழட்டும்தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
பாடல் முழதுமே எனக்குப் பிடித்தது தான், அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை bold செய்திருக்கிறேன். “புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு”, மற்றும் அந்த கடைசி இரண்டு வரிகள், இதிலெல்லாம் வெளிப்படும் கருத்துகள் எத்தனை ஆழம்! எத்தனை அழகு!
இந்த திரைப்படம் வந்த போது நான் சின்னப் பையன். ரஹ்மானின் இசைக்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு அறிவு கிடையாது. இடைப்பட்ட காலத்திலும் போகிற போக்கில் அப்பப்போது இப்பாடலை கேட்டிருக்கிறேன்… புரிந்தாலும் பெரிதாக ஒன்றும் விளங்கியதில்லை. இப்போதும் கூட கவிதைகளையெல்லாம் ரசிக்கத் தெரிவதில்லை எனக்கு. ஆனால் நேற்றிரவு பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அழகான பிரார்த்தனை, இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு affirmation போலல்லவா இருக்கிறது. வைரமுத்துவுக்கு ஒரு சபாஷ்!

No comments: