Friday, November 30, 2007

சிந்தனைக்கு சில


பகுத்தறிவு:

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளிநாட்டான் கூறவேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பொது அறிவு வளர உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்படவேண்டும்.

உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால¢மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.


மற்ற நாட்டில் எல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு, அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாகக் கொள்வான். இந்த குப்பைக் கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம், இவைகளைத்தான் நம்புகிறான்.

சிந்தனை அறிவு ஒன்றுதானே உண்மையறிவாகக் கருதப்படக்கூடியது? வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அப்படியானால், படித்த மேதாவிகள், பட்டதாரிகள், விஞ்ஞானப் பாடத்தில் பட்டதாரிகள், கல்லைக் கடவுள் என்று நம்பி அதன் காலில் விழுந்து வணங்குவார்களா? மகா விஞ்ஞானம் படித்த மகோன்னதப் பண்டித நிபுணர் என்பவர்களெல்லாம் பாபவிமோசனத்திற்காகத்தான் தீர்த்தமென்று சேற்று நீரை வாரித் தெளித்துக்கொள்வார்களா? அவர்கள் படித்த அறிவியலுக்கும் இந்தச் சாணி மூத்திரக் கலவைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

இராமாயணத்திலும், பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்ந்துப் பாருங்கள். அவன், (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்,

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.

மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கலவையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தில் பேராலோ மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலோ நடத்தப்படக் கூடாது.

மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல, பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.

வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப்போட்டித் தொல்லை எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.

மன¤தன¢தனது சமூகததை வஞச¤த்துப¢பொருள் சேர்த்துப் பகுத்தற¤வுள்ள தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்றுசொல்லுக¤றான். ஆனால் மிருகம, பட்ச¤ ஆகியவைகள் பகுத்தற¤வு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றன. அவற்றைப் பற்றி கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

இரண்டாயிரம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய் எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அழுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.

கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

குருட்டு நம்பிக்கையை அறவே விட்டுப் பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதானால் ஒரு மதமும் நிலைக்காது.

பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான். பின்பற்றமாட்டான்.

நம் மக்கள் பக்குவமடைய மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.

பகுத்தறிவு மூலம் மனிதனின் ஆயுசு வளர்ந்ததோடு மனிதனின் சாவு எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.

அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருத்துக் கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுகிறானே, அதுதான் அறிவின்தன்மை.

சிந்தனாசக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனைவிட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

மனிதனிடமுள்ள வேறு எந்த சக்தியைக்காட்டிலும் பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா உயிர்களினின்றும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான் அவன் மனித்தன்மை பெற்றியங்குவதாக நாம் கூறமுடியும். பகுத்தறிவை உபயோகிக்காதவன் மிருகமாகவே கருதப்படுவான்.


இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம் என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால், இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராய முடியாமல்போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப்பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான் எனது கருத்து.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.


நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?


எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும். அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.

அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?

மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும்.

ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.

இன்று நமக்கு வேண்டியது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும். அறிவு ஆட்சி செய்தல் வேண்டும்.


மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.

உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல, உங்கள் அறிவுதான். நீங்கள், நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள்.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை பெறமுடியும்.

உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன்னோர் சொல்லித் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய - கண்டுபிடிக்க முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.

உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும்.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

Wednesday, November 21, 2007

சிந்தனை


கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசித்தார். புத்தரின் போதனையால் பலனடைந்த பலர் அவருடைய சங்கத்தில் சேர்ந்து சிஷ்யர்கள் ஆயினர், புத்தர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடியது. அவ்வாறு அவர் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள ஓர் மண்டபத்தில் பெருங்கூட்டத்தினிடையே போதித்துக் கொண்டிருந்தார். அவ்வூரில் இருந்த மனிதன் ஒருவனுக்கு புத்தரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர் புகழ் பாடுவது பிடிக்கவில்லை. புத்தர் ஒரு போலிச் சாமியார் என நம்பினான். புத்தர் போதனை செய்த இடத்திற்குச் சென்று கூட்டத்தின் முன்னிலையிலேயே அவரைக் கண்டபடி அசிங்கம் அசிங்கமாகத் திட்டத் தீர்த்தான். புத்தரின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கும் புத்திரின் சீடர்களுக்கும் அந்த மனிதன் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது, அவனை ஒரு வழி பண்ண வேண்டும் போல் தோன்றியது. ஆனால் புத்தரோ அமைதியான முகத்துடன் அம்மனிதன் திட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தார், அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தன் சீடர்களுக்கு சைகை செய்தார். அம்மனிதன், தன் வெறுப்பை கொட்டித் தீர்த்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் மனதை ஏதோ ஒன்று குத்துவது போல் இருந்தது. தான் இவ்வளவு வசைபாடியும் புத்தர் என்றழைக்கப்படும் அந்த மனிதர் அமைதியே உருவாக விளங்கியதை நினைத்ததும் அவனுக்கு வெட்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
அடுத்த நாள் முதல் வேளையாக புத்தர் சபைக்குச் சென்று அவர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினான். புத்தரின் மகிமையை தான் புரிந்துகொண்டதாகவும், தான் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் கூறி தன்னை மன்னித்து விடும்படி வேண்டினான். அதற்கு புத்தரோ, “நான் உன்னை மன்னிக்க முடியாது” என்று அவனைப் பார்த்துச் சொன்னார். அந்த மனிதனுக்கு, இவ்வார்த்தைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. சபையில் இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, நேற்று தான் புத்தர் புன்னகை பூத்த முகத்துடன் அமைதியாக இவன் திட்டுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார், இவனை ஒன்றும் செய்யவேண்டாம் என்றும் கூறினார், இன்று இவன் வந்து தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டும் அவனை மன்னிக்க முடியாது என்று கூறுகிறாரே என்று அனைவருக்கும் ஒரே குழப்பம். அப்போது புத்தர் பேசினார், “மகனே, நான் உன்னை மன்னிக்க முடியாது. ஏனெனில் நேற்று சபையில் வந்து திட்டியவன் நீயல்ல, அவன் நேற்றோடு முடிந்துவிட்டான், இன்று வந்திருக்கும் நீ அவனல்ல. நேற்று திட்டப்பட்டவனும் நானல்ல, இப்போது யார், யாரை மன்னிப்பது?” என்றார். மன்னிப்புக் கேட்டவன் மெய்சிலிர்த்துப் போனான்! பிறகென்ன, அவனும் சங்கத்தில் சேர்ந்தான், “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று பாடிக்கொண்டு ஜோதியில் கலந்தான்.
புத்தரின் மனம் தான் எவ்வளவு விசாலமானது. நம்மாலும் ஏன் புத்தரைப் போல் இருக்க முடியாது? நமக்கு ஒருவர் தீங்கிழைக்கும் போது அதனால் பாதிப்படைவதோ, அல்லது, அதை ஒதுக்கி மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதோ நம் கையில் தானே இருக்கிறது. அடுத்தவர் நமக்கு தீங்கிழைக்கும் போது நாம் ஒன்றும் இளிச்சவாயனாக அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லவில்லை. அவன் தன் தவறைத் திருத்திக்கொள்ள எவ்வகையல் நம்மால் முடியுமோ அவ்வகையில் உதவுவது நம் கடமை. ஆனால் அவன் செய்த தீங்குக்கு நாமும் பதிலாக அவனைப் பழி வாங்க நினைத்தால் அவனிடம் இருந்த காழ்ப்புணர்ச்சி எனும் வியாதி நம்மையும் தொற்றிக் கொண்டதாகிவிடும், அவனும் திருந்தமாட்டான். மேலும் அவன் நமக்குத் திருப்பித் தீங்கு செய்வதும், நாம் அவனை மறுபடியும் பழிவாங்குவதும் என இந்த சுழற்சி வளர்ந்துகொண்டே தான் போகும். யாராவது ஒருவர் நிறுத்த வேண்டும், நாமே அந்த வாய்ப்பை ஏன் முதல் முறையிலேயே பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்கை விட, அதை நாம் நினைத்துக் கொண்டு அவர் மீது காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக்கொள்வதே நம் மனதையும் உடலையும் ஆரோக்கியம் குன்றச் செய்யும். நம்பினால் நம்புங்கள், ஒரு மனிதருக்கு வரும் பெரும்பாலான வியாதிகள் அவர் காலம் காலமாக மனதில் தேக்கி வைத்திருக்கும் கோபம், தாபம், பேராசை, பொறாமை, வெறுப்புணர்ச்சி போன்றவற்றையே காரணமாக கொண்டுள்ளன. முன்னே சொன்னது போல் மற்றவர் தன் தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம் மனதிலுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் களைந்து நம் புத்தியை தெளிவாக்கினால் தான் இந்த பழிவாங்கும் சுழற்சியை நம்மால் நிறுத்த முடியும்.
மற்றவர் நமக்கு என்ன கெடுதல் செய்தாலும், அதனால் பாதிப்படையக் கூடிய நிலையில் நாம் இருந்தால் அதற்கு நாம் தானே காரணம்? சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு? எதனாலும் பாதிப்படையாத உறுதியான மனிதனாக, சமூகமாக, நாடாக, இனமாக நாம் விளங்காவிட்டால் அது நம்முடைய தவறே ஆகும். ஒருவன் நமக்குத் தீங்கு செய்த பின் அவனைப் பழி வாங்குவதை விட அவன் அச்செயலைச் செய்யும் முன்பே நாம் நம்மை தற்காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அஹிம்சை போதித்த புத்தரே காட்டிற்கு தவம் செய்யச் சென்ற போது தம்மை காட்டு விலங்குகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக கையில் தடியுடன் சென்றார். இங்கு சொல்வதெல்லாம், நம் சக்திகளையெல்லாம் நம்மை உறுதியான, யாரும் தாக்க முடியாத, ஏதனாலும் பாதிப்படையாத மனிதனாக, சமூகமாக ஆக்கிக்கொள்வதிலும், தீங்கு செய்பவர் தம்மைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளித்து அதற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதிலும் செலவிடவேண்டுமே தவிர, நாமும் அவரைத் திருப்பித் தாக்கி நம்முடைய, மற்றும் அனைவருடைய அழிவுக்கும் வழிவகை செய்வதில் அல்ல.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.(திருக்குறள்: 314)
சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைப்பக்கத்தில் ஆப்பிரிக்க பழங்குடியனம் ஒன்றில் புழங்கும் ஒரு வித்தியாசமான சடங்கைப் பற்றிப் படித்தேன். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் ஏதாவது செய்து விட்டால் அவருக்கு தண்டனை வழங்கும் சடங்கு தான் இது. பழங்குடியினம் என்றவுடன் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பெரிய சட்டியை அடுப்பில் வைத்து, குற்றம் செய்தவனை அந்தச் சட்டியில் போட்டு சுட்டு மற்றவர் அனைவரும் இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவார்கள் என்பது போல் கற்பனை செய்ய வேண்டாம். இந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் குற்றம் செய்தவரை கிராமத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். கிராம மக்கள் அனைவரும் தத்தம் பணிகளை விட்டுவிட்டு குற்றம் செய்தவரைச் சுற்றி நின்று கொள்வார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக குற்றம் செய்தவரிடம் சென்று குற்றம் செய்தவர் முற்காலத்தில் தமக்குச் செய்த நல்ல காரியங்களை அவருக்கு நினைவு படுத்துவார்கள். இந்த சடங்கு சில நாட்களுக்கு நடக்கும். சடங்கு முடிந்த பின்னர் குற்றவாளியை மறுபடியும் சமூகத்தினுள் மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்வார்கள்.
இந்தப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது. இவர்களிடம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இங்கே குற்றம் செய்தவரை பாதிப்பு ஏற்படுத்தியவராக பார்க்காமல் பாதிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். குற்றம் செய்தவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை அவர் செய்த நல்ல காரியங்களை அவருக்கே நினைவுபடுத்துகிறார்கள்.
நாம் அனைவரும் தினந்தோறும் சின்னதாகவோ, பெரியதாகவோ ஏதாவது குற்றங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். நாம் குற்றமோ தவறோ செய்வதற்கான காரணம் குற்றம் புரிவதனால் கிடைக்கும் நன்மையினால் அல்ல. உண்மையில் நாம் குற்றம் புரிய காரணம் நம்முள் உள்ள ஏதோவொரு வெறுமையினால் தான். நல்ல மனநிலையில் இருக்கும் ஒருவரும் குற்றம் செய்வதில்லை. சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து நம் செயல்கள் மூலமும் எண்ணங்கள் மூலமும் பாதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரு குற்றம் நடக்கும்போது, அதற்கு ஒரு தனி மனிதனை குற்றம் சாட்டுவது சரியல்ல. சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ள வெறுப்புணர்ச்சி ஒருசில துரதிர்ஷ்டசாலிகள் மூலம் குற்றங்களாகவும் தீவிரவாதச் செயல்களாகவும் வெளிப்படுகிறது. இதற்கு குற்றவாளியை மட்டும் உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் உலகிலிருந்து குற்றம் போய்விடுமா? இந்த துரதிர்ஷ்டசாலிகளால் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படு வாய்ப்பிருக்கிறது என்றால் அவரை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்து அவருள் இருக்கும் வெறுப்புணர்ச்சியை போக்க ஏதாவது வழி செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே நமக்குள் சிறிதளவிலோ, பெரிதளவிலோ இருக்கும் வெறுப்புணர்ச்சியை களைந்துகொள்ளும் வரை எத்தனைபேரை தூக்கில் தொங்க விட்டாலும் சமூகத்தில் குற்றம் குறையாது.
இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்றோர் செய்யும் பணிகள் மகத்தானது. இவர்கள் தங்கள் யோக முறைகளை சிறைவாசிகளுக்கு கற்பித்து அவர்களை புது மனிதர்களாக்குகிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற யோக முறை ஒன்றை நானும் கடந்த சில வருடங்களாக பழகி வருகிறேன். யோகம் செய்வது மூலம் நமக்குள் உள்ள வெறுப்புணர்ச்சிகள் நீங்கி ஆனந்தமும் எல்லா உயிர்கள் மீது அன்பும் தோன்றும் என்பது உண்மை. சமூகத்தில் அன்பு தோன்றினால் குற்றங்களுக்கு இடம் ஏது? அன்பினால் காட்டு விலங்கான புலிகளையே கட்டுப்படுத்த முடியும்போது சமூக விலங்கான மனிதர்கள் எம்மாத்திரம்?
BY
US.SUNDARAM

ஒரு கதை


கனவு நதியும் நிஜ மீன்கலும்


ஒவ்வொரு பெண்ணிடமும் ஓர் ஆண் கனவின் வாசனையை நுகர்கிறான். கனவு வேண்டியிராதவர் யார் ?... அவர்கள் பொய் சொல்கிறார்கள்.
உயரத்தில் பூத்திருந்தது அந்த மலர். அவளுக்கு எட்டவில்லை. நான் பறித்து அவளிடம் நீட்டுகிறேன். அவள் வாங்கிக்கொண்டு சிரிக்கிறாள். பூவை வாங்கிக் கொண்டு சிரிக்கிறாள். எவ்வளவு அழகாய்ச் சிரிக்கிறாள்... அந்தப் பூவைவிட அவள் அப்போது அழகாய் இருந்தாள்.
வீட்டில் அன்னை படம் இருக்கிறது. சிரித்தபடி அன்னை. அவள் பூவை அன்னைக்கு சமர்ப்பித்தாள். நான் பார்த்தேன். சிரிக்கிற, சிநேகபூர்வமான அன்னை அந்தப்பூவை விட அழகாய் இருந்தாள்.
தினசரி செம்பருத்திப் பூக்களை அன்னைமுன் சமர்ப்பிப்பது இவள் வழக்கம். நான் தெருவில் வாகனத்தில் செல்கிறேன். வழியில் சாலைக்கரையில் செம்பருத்திச் செடி. தன்னியல்பாய் அதில் பூவை கவனிக்கிற மனம். சிவந்த மலர்கள். செடியில் பூ தெரிந்தது. பூவில் அன்னை தெரிந்தாள். பூ அழகாய் இருந்தது.
சிரித்தபடி அன்னையின் படம். அவள் அன்னையை வணங்குகிறாள். நான் அவளைப் பார்க்கிறேன். இவளைச் சிரிக்க வைக்க உந்துகிறது மனம். நான் அழகின் உபாசகன். நான் அவளைக் கேட்டேன்- பாண்டிச்சேரி போய்வருவோமா ?... ஆ அவள் சிரித்தாள். எவ்வளவு அழகு இவள்.
உலகம் ஒருகாலத்தில் அழகாய் இருந்திருக்க வேண்டும்... நான் திரும்பி அன்னையைப் பார்த்தேன். உலகம் அழகாகி விடும், என்று தோணியது.
முதன்முறையாக நான் பாண்டிச்சேரி வருகிறேன். பார்த்தவுடன் பிடித்துப் போனது ஊர். ஒழுங்கான சாலைகள். அதன் அமைதி. சூழல். காற்று. கடல்காற்றின் ஆலாபனை. அழகு அங்கே குடியிருந்தது. அகனமர்ந்து செய்யாள் உறையும், என்று வள்ளுவர் சொன்னாப்போல... அழகமர்ந்து ஆட்சி செய்யும் இடம் அது. அது எப்படி அத்தனை அழகாய்த் தோணியது... அங்கே அன்னை இருந்தாள். அந்த இடம் மணத்துக் கிடந்தது.
வீட்டில், சிரித்தபடி அன்னை. என் வீடு அழகானது. பாண்டிச்சேரி. அன்னை அங்கே குடியிருந்தாள். ஊர் அழகானது. அன்னை என் காதில் சொன்னாள். உலகம் அழகானது. அழகாகி விடும் ஒருநாள். ஜனங்கள் அன்னைமுன் கூடினர். அன்னை சிரிப்பை அவர்களுக்கு வழங்கினாள். அவர்கள் நாடெங்கிலும் கிளைத்து விரிந்து பரந்து பிரிகிறார்கள். ஆரோவில் என்பதென்ன ? உலகக் கோளத்தின் சிறு வடிவம் என்றாள் அன்னை... சிரித்தபடி. ஆரோவில் எத்தனை அழகாய் இருக்கிறது.
உலகம் அழகாகி விடும். எனக்கு நம்பிக்கை வந்தது. நாங்கள் பாண்டிச்சேரி போய் வந்தோம். மனசெல்லாம் மலர்கள் பூத்ததை நாங்கள் உணர்ந்தோம். தினசரி மனசில் பூக்கள் பூக்க ஆரம்பித்திருந்தன. மனம் அழகாகி யிருந்தது.
நான் வாகனத்தில் போகிறேன். அந்த யாரோ என்னைப் பார்க்கிறான். நான் அவனைப் பார்த்தேன். நான் அவனைப் பார்த்துச் சிரிக்கிறேன். அவனும் சிரிக்கிறான். அவன் எவ்வளவு அழகாய் இருந்தான் அப்போது. ஆனால் அவன் கைகுலுக்கியபடி சொன்னான்- நான் அழகாய் இருப்பதாக.
அப்போது நான் சொன்னேன்- மனிதரில் அழகற்றவர் இல்லை.
ஃஃஃ
எப்போது நிகழ்ந்தது இது ? என்னில் இந்த மாற்றங்கள் ? எப்போது என் படுக்கையில் பூக்கள் வந்தன ? எங்கிருந்து வந்தன ?
உலகம் துயரமானது என நினைத்திருந்தேன். இனித்த காபியின் அடிவண்டலாய்... மனசில் தங்குவது அதன் கசப்பே, என நினைத்திருந்தேன். நான் உயரம்தான். ஆனால் என் கூரைகள் தாழ்ந்தவை என நினைத்திருந்தேன். ஒரு விஷயம் நான் கவனிக்கவில்லை என ஒத்துக் கொள்கிறேன்... இதே கூரை என் மகனை இடிக்காது, என நான் உணரவில்லை.
நடந்தது இதுதான். அவன் ஆசிரியை அவன் திருப்திக்கு வாய்க்கவில்லை. அவன் கேள்விகளை அவனது ஆசிரியரால் சமாளிக்க முடியவில்லை. அவன் ஊக்குவிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் முரட்டுத்தனமாய் அந்த ஆசிரியரால் கலவரப் படுத்தப் படுகிறான். இப்படி சில சமயம் நிகழ்ந்து விடுகின்றன. பிரச்னைகள்... முட்டுக் கட்டைகள். இதற்கு என்ன செய்வது ? கதவுகள் அற்ற சுவரில் காயம் பட்டு நின்றான் அவன்.
நம்புங்கள் என்றாள் இவள்!
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவள் அன்னையை நம்பியது. அதெப்படி ?- என்றேன் நான். நம்புவதற்குக் கூலி உண்டா என்ன ? செயலுக்கே கூலி... அதுவே பொருள்முதல்வாதம், என்றேன்.
அவள் புன்னகைத்தாள். ஆமாம், சிரிக்கையில் அவள் அழகாய் இருந்தாள்.
முட்டுக்கட்டைகள் பெரியவை என்றால் வந்த வாய்ப்பும் பெரியது என்றல்லவா பொருள். பெறும் வெற்றிகளும் பெரியவை என்பதல்லவா பொருள் ?... அப்படியா என்கிறேன் நான் நெற்றியைத் தேய்த்தபடி. நான் எதிர்பாராதது அது.
அன்னை சொன்னது... என்றாள் அவள். நான் சட்டென்று திரும்பி அன்னையின் படத்தைப் பார்த்தேன். ஹா- அந்தச் சிரிப்பு. எளிய... ஆனால் விலைமதிக்க முடியாத சிரிப்பு அது. அவரவர் சிரிப்பு.
தீயவை... தீய பயத்தலால்... அவை தீயினும் அஞ்சப்படும் - என்பார் வள்ளுவர். நல்லவை நன்மை பயத்தலால் அவை செயலினும் ஓம்பப்படும். அழகான சிந்தனை. உள் வெளிச்சம்...
'அப்படியா ? ' என்றேன் நான்.
அன்னையை நம்புங்கள் என்றாள் மனைவி. வேடிக்கையாய் இருந்தது.
புதுவைக்கு வைகறை இருளில் ஒரு பயணம்.
ஸ்ரீ அரவிந்தரின் சமாதி அலங்கரித்திருந்தது. அழகு கொட்டிக் கிடந்தது. அது என் முதல் பயணம். முதல் அனுபவம். அத்தனை பேர் இருந்தும் வளாகம் அமைதியாய் இருந்தது. வெளியே அமைதி. அது உள்ளமைதியை நிறுவுகிறது. கட்டமைக்கிறது. கைகூப்பியபடி நாங்கள் சமாதியை வளைய வருகிறோம். பூக்களையே இயற்கையையே வலம் வருகிறாப்போல ஒரு பிரமைத் திகட்டல். இயற்கையை இப்படி ஒன்றுகூட்டி வளைய வருதல்... எப்பெரும் கற்பனை! அரவிந்தரின் சந்நிதி. அப்படித்தான் எண்ணியிருந்தேன். எனக்கு அது முதல் அனுபவம். அருகில் இவள். கைகூப்பியபடி வலம் வருகிறாள். நான் தண்டுடைய தாமரை மலரை எடுத்துக்கொண்டு அவளுடன் பின்னே நடக்கிறேன். தாமரை மலர் என்றால் என்ன ? அவளது கூப்பிய கரங்கள் என்றால் என்ன ? பிரித்தறிய முடியவில்லை. நான் அவள் கூப்பிய கரங்களைப் பற்றியபடி வளைய வருகிறேன்...
உலகம் அமைதியாய் இருந்தது.
ஒரு கனவு. கனவல்ல- என்றாலும் அதை வேறெப்படிச் சொல்வது தெரியவில்லை. சரி- ஒரு கனவு.
ஸ்ரீ அரவிந்த வளாகத்தின் நல்வாசனைகளுடன் நான் உறங்கப் போயிருக்கிறேன். அது அரவிந்தர் சமாதியாக என் கவனம். நான் புதியவன். தளிர்வெளிச்சக் குளிர்காலை. எனக்குள்... மனம் ஓர சக்கரம் போல சிறு சலனம் காண்கிறது. என்ன இது ? சேதியொன்று வருகிறது என்கிறதாக சூட்சுமம் தயாராகிறது தன்னைப்போல. கப்பலில் சரக்கு வர கரையில் காத்திருப்பதைப் போல.
அந்த சமாதியின் பீடம் மிதப்பதை நான் கவனிக்கிறேன். பூக்களின் வாசனை என்னை எட்டுகிறது. மேலே பனித்துளிப் படுகையில் என்ன ஓர் ஆனந்த சயனம். ஆ பனித்துளி அல்ல. அது ஓர் உருவம். வெண்ணெய்ப்புகை. பூ. பனி. புகை .உயிரின் உடல் களைந்த - வலி களைந்த ஆனந்த நிலை. அடாடா, எனக்கு அது வாய்க்காதா ?
காட்சியில் ஒரு சலனம். அது ஒரு உருவம் என மனதில் பதிவு கண்டது. எப்படி என -ஐயோ- விளக்கத் தெரியவில்லை. வார்த்தைகள் விக்குகின்றன. அது ஓர் ஆனந்த நெகிழ்ச்சி.
நான் அன்னை.... என என்னைப் பார்த்து அந்த உருவம் சிரிக்கிறது.
அடடா, அந்தச் சிரிப்பு... அது எனக்குத் தெரியும். ஆமாம். நீங்கள் அன்னைதான், என்கிறேன் நான். கைகூப்பி அந்தக் கருணையுருவை வழிபடுகிறேன். அது அன்னையின் பீடம் என எனக்கு அதுவரை தெரியாது. இந்த அனுபவம்... இந்த அறிமுகம்... அது கனவா ? எப்படி அதைக் கனவென்பது ? நிஜத்தின் ஒரு துளித்தெறிப்பு அல்லவா ? கனவென எதனைச் சொல்வீர் ? கனவு என்றால்... உறக்கத்தின் பாற்பட்ட உணர்வுத்திவலை - ஏக்கத்தின் பித்தவெடிப்பு. அஃதல்ல இது. எனது கற்பனையிலும் அல்லாத ஒரு சேதிப் பகிர்வு- இது எப்படிக் கனவெனக் கொள்வது ?
அன்னையை நெஞ்சு சிலிர்க்க வணங்குகிறேன்- கருணைப் பெருங்கடலே, எத்தனை அன்பிருந்தால் நீயேவந்து என் மனசில் அமர்வாய். கண்கள் பனிக்கின்றன.
என்னால் ஆகாதது உன்னால் ஆகக் கடவது... நான் சேவகன். நீ என் சைதன்யம். நான் சாரதி. தேர்ப்பாகன். எனினும் நீ வழிநடத்து. என் வழித்தடை நீ நகர்த்து-. என் ஓட்டத்தை அமைத்துத்தா.
பிறுகு நடந்ததே... அதை விளக்க பகுத்தறிவுக்கேது பலம் ?
ஒரு நிஜம். அது கனவல்ல... நடந்ததால் அது நிஜமாகிறது.
என் மகனின் ஆசிரியருக்கு வந்ததே ஒரு கடிதம்- ஒரு விநாடிவினா நிகழ்ச்சிக்கு மாணவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பக்கோரி. அட அவர் மனதில் சட்டென்று வந்த உருவம் யார் ? வகுப்பில் சட்டுச் சட்டென்று எழுந்து கேள்வி தொடுக்கிற என் மகன் அல்லவா ? ஒரு தடைக்கல், படிக்கல் ஆனதை எப்படி விளக்க ?
அவன் வாழ்க்கையின் முன்னேற்றப் படிக்கல். மற்றவர் அவனை எடைபோடும் படிக்கல்.
விநாடிவினா நிகழ்ச்சியில் அவன் சிறு பரிசு பெற்றான். என்றாலும் புதிய எழுச்சி அவன் பெற்றதை ஊகிப்பது கடினம் அல்ல. பெரும் முட்டுக்கட்டைகள் மீறிய இணக்கச்சூழலை அன்னை உருவாக்கித் தந்தாள். அன்னைக்கு வணக்கம்.
தளராத தன்னம்பிக்கை. வேலையில் அமைதி. நேர்மையான உழைப்பு. மனஒழுங்கு சிதறாமை. அவை போதும். அன்னை துணையிருக்கிறாள். அறிவுக்கு ஆன்மிகம் உறுதுணை. குறுக்குச் சுவர் அல்ல அது. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம். மனம் - அதன் தட்பவெப்பம் சார்ந்த ஆரோக்கியத்தை ஆன்மிகம் கவனங் கொள்கிறது. தளரா நம்பிக்கை. அதன் வழிப்பட்ட உழைப்பு. கவனம் சிதறாமை. கடமை மாத்திரமேயான கண்ணோட்டம்.
ஆக்கம் தேடிவரும்.
நல்வாய்ப்புகள் வருவதை உணர அமைதி வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் வேண்டியிருக்கிறது. கவனம் சிதறாதபடி சிந்திக்கப் பழக, முடிவுகள் நோக்கி செயல்பட, தெளிவுபெற அமைதி இல்லாமல் எப்படி ?
பொருள்வாதம் ஒரு தத்துவம்.
ஆன்மிகம் ஓர் அனுபவம்.
ஆமாம். பொருள்வாத நாட்டின் தலைசிறந்த எழுத்தாளன்... தாஸ்த்தயேவ்ஸ்கி சொன்னான்- Beauty will save the world.
வாழ்கிறாள் அன்னை


by

SUNDARAM

Tuesday, November 20, 2007

பாடல் ஒன்று


காதல் காலம்

கனவோடு விழித்தேன்கண் முன்னே காதலன்
சீ போடா
தினமும் நீ தானே என் முன்னே


புத்தம் புது பூமி வேண்டும்நித்தம் ஒரு வானம் வேண்டும்தங்க மழை பெய்ய வேண்டும்தமிழில் குயில் பாட வேண்டும்
……
சொந்த ஆகாயம் வேண்டும்ஜோடி நிலவொன்று வேண்டும்நெற்றி வேர்க்கின்ற போதுஅந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்மலர்கள் வாய் பேச வேண்டும்வண்டு உட்காரும் பூ மேலேநான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடுஉன் அருகிலே ஓர் இடம் கொடுபுன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடுபூமியில் சில மாறுதல் தனை வர விடு
……
யுத்தம் இல்லாத பூமிஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்மரணம் காணாத மனித இனம்இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்பாலைவனம் பூக்க வேண்டும்சாந்தி சாந்தி என்ற சங்கீதம்சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்வந்தவை இனி வாழட்டும்தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
பாடல் முழதுமே எனக்குப் பிடித்தது தான், அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை bold செய்திருக்கிறேன். “புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு”, மற்றும் அந்த கடைசி இரண்டு வரிகள், இதிலெல்லாம் வெளிப்படும் கருத்துகள் எத்தனை ஆழம்! எத்தனை அழகு!
இந்த திரைப்படம் வந்த போது நான் சின்னப் பையன். ரஹ்மானின் இசைக்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு அறிவு கிடையாது. இடைப்பட்ட காலத்திலும் போகிற போக்கில் அப்பப்போது இப்பாடலை கேட்டிருக்கிறேன்… புரிந்தாலும் பெரிதாக ஒன்றும் விளங்கியதில்லை. இப்போதும் கூட கவிதைகளையெல்லாம் ரசிக்கத் தெரிவதில்லை எனக்கு. ஆனால் நேற்றிரவு பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அழகான பிரார்த்தனை, இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு affirmation போலல்லவா இருக்கிறது. வைரமுத்துவுக்கு ஒரு சபாஷ்!

சிந்தனை

சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள்
==================================

இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக்காக காத்திருக்கிறது என்பேன். பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும். தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தடைகளிலிருந்து விடுபடுங்கள்!
இளைஞனே வலிமை அளவற்ற வலிமை -
இதுவே இப்போது தேவை.

சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

மருத்துவம்

FOR HEALTH

என்ன இதுன்னு யோசிக்கறீங்களா? நான் இன்னிக்கு பொழுதுபோகாம வீட்டுல இருந்தப்போ சும்மா ஏதோ சில சைட்டுலபோயி ஏதேதோ படிச்சுகிட்டு இருந்தப்போ தோனினதையெல்லாம்கீழே குடுத்துருக்கேன், படிச்சுட்டு உங்களுக்கு உபயோகமாஇருந்தா ஒ.கே. இல்லயா நோ ப்ராப்ளம், சும்மா ஒரு சிரிப்புசிரிச்சுட்டு போங்களேன்.தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் தக... தகக்க வைத்து விடலாம். தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி சாறு- அரை டீஸ்பூன், தேன்அரை டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை. இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்... உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்த தக்காளி பேஸ்ட்!உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பீன், பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன், பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகைஇவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுக்கவும் நன்றாகப் பூசி, குளித்தால்.... முரடு தட்டிப் போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.* முகத்தில் வரிகள் விழுகின்றனவா? கவலையே வேண்டாம். இதோ அருமையான ஃபேஸ் பேக்!பீட்ரூட் அரைத்த விழுது - ஒரு டேபிள் ஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளிங்கு போல் பிரகாசமாகும்.* முகத்தில் கன்னிப் போன பகுதி, கரும்புள்ளிகளை நீக்க ஆவி பிடிக்கலாம்.சமையலறையில் சுக்குப்பொடி, ஜீரகப் பொடி, எலுமிச்சம்பழம், ஓமவாட்டர் என்று ஒரு குட்டி மருந்துகள் உலகம் அவசியம் வேண்டும்! வாயு, அஜீரணம், பித்தம் சம்பந்தமான தலைசுற்றல் ஏற்படும்போது கை கொடுக்கும் நண்பர்கள் இவர்கள்.சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.

TRUE LOVE

TRUST

From the very Beginning, the girl's family objected strongly on her dating this guy. Saying that it has got to do with family background & that the girl will have to suffer for the rest of her life if she were to be with him.
Due to family's pressure, the couple quarrel very often. Though the girl love the guy deeply, but she always ask him: "How deep is your love for me?" As the guy is not good with his words, this often cause the girl to be very upset. With that & the family's pressure, the girl often vent her anger on him. As for him, he only endure it in silence.
After a couple of years, the guy finally graduated & decided to further his studies in overseas. Before leaving, he proposed to the girl: "I'm not very good with words. But all I know is that I love you. If you allow me, I will take care of you for the rest of my life. As for your family, I'll try my best to talk them round. Will you marry me?"The girl agreed, & with the guy's determination, the family finally gave in & agreed to let them get married. So before he leave, they got engaged.
The girl went out to the working society, whereas the guy was overseas, continuing his studies. They sent their love through emails & phone calls. Though it's hard, but both never thought of giving up.
One day, while the girl was on her way to work, she was knocked down by a car that lost control. When she woke up, she saw her parents beside her bed. She realized that she was badly injured. Seeing her mum crying, she wanted to comfort her. But she realized that all that could come out of her mouth was just a sigh. She has lost her voice......
The doctors says that the impact on her brain has caused her to lose her voice. Listening to her parents' comfort, but with nothing coming out from her, she broke down.
During the stay in hospital, besides silence cry,.....it's still just silence cry that companied her. Upon reaching home, everything seems to be the same. Except for the ringing tone of the phone. Which pierced into her heart every time it rang. She does not wish to let the guy know. & not wanting to be a burden to him, she wrote a letter to him saying that she does not wish to wait any longer. With that, she sent the ring back to him. In return, the guy sent millions & millions of reply, and countless of phone calls,.. all the girl could do, besides crying, is still crying....The parents decided to move away, hoping that she could eventually forget everything & be happy.
With a new environment, the girl learn sign language & started a new life. Telling herself everyday that she must forget the guy. One day, her friend came & told her that he's back. She asked her friend not to let him know what happened to her. Since then, there wasn't anymore news of him.
A year has passed & her friend came with an envelope, containing an invitation card for the guy's wedding. The girl was shattered. When she open the letter, she saw her name in it instead.
When she was about to ask her friend what's going on, she saw the guy standing in front of her. He used sign language telling her "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You. With that, he slipped the ring back into her finger. The girl finally smiled.

சிரித்து வாழவேண்டும்

BE HAPPY

என்ன பார்வை?வழக்கத்திற்கு மாறான நிறம்,மணம்.என்ன காரணம்?இதற்கு பூக்கள் பதில் சொல்கிறது: சற்று முன் தான் உன்னவள் எங்களை தீண்டி விட்டு சென்றாள். கவிதை வேண்டி தவம் கிடந்தேன்பூங்காவில்..பூக்களும் உதித்ததுகவதையும் உதித்ததுஎன்னவளே, உன் வரவால் எனக்குள்உன் மீது நான் கொண்டகாதலும் புரிந்தது.-------

பேக்கரியில்:பார்த்திபன்: உங்க கடையில் எலா பன்னும் கிடைக்குமா?வடிவேல்: ஆமாம் கிடைக்கும்.பார்த்திபன்: அப்ப 1 கிலோ ரிப்பனும் 1 கிலோ கார்பனும் குடுங்க. வடிவேல்: என்னப்பா இட்லி சில்லுனு இருக்கு? பார்த்திபன்: போர்டுல என்ன போட்டு இருக்கு? வடிவேல்: ஆரிய பவன். பார்த்திபன்: அப்பறம் என்ன சூடாவா இருக்கும் ங்கொய்யாலா...--------

நான் ஏன் உன்னை நினைக்கிறேன்? உன்கூட பேசுறேன்? உனக்கு மெசேஜ் அனுப்பறேன்? நீ அதை ஏன் படிக்கறே? ஏன்னா நாம ரெண்டு பேருக்குமே வேற வேலை இல்லை....

காபியில் போடாத சுகரும் என்னை பாக்காத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.--------

தோகை விரித்தாடும் மயில் மட்டுமேஅழகு என்றிருந்தேன், கருமேகமாய் அலையென அசைந்தாடும்கருங்கூந்தலை உடைய என்னவளை கானும் வரை..ஆச்சர்யப் படுகிறேன்,
உடலால் தொலை தூரத்தில் இருந்தாலும் உள்ளத்தால் எனை உரசிப் போகும் என் இனியவளே,
உனைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன்...
மணம் வீசும் மலர்களேசெடியை விடுத்து தரைக்கு வாருங்கள் பெருமை அடைவீர்கள்,உண்மைதான்,
இந்த வழியில் தான் என்னவள் வந்து கொண்டு இருக்கிறாள்.--------

வடிவேலு: என்ன இது? 601 ரூபா வாங்கிட்டு 106 ரூபா குடுக்கறே?பார்த்திபன்:இது தான் காசுனா திருப்பி குடுக்கனும்.LOLLU-2007: Enna than ladies padippl 1stta irunthalum avanga use panra Pen "Hero Pen than" Heroin Pen illai"

மச்சான் எங்க தெரு நாய் கிட்ட டைகர்னு சொன்னா வாலை ஆட்டுது,ஜிம்மினு சொன்னா தலையை ஆட்டுது, ஆனா அது என்ன உன் பேர சொன்னா மட்டும் 'வெக்கப் படுது', என்னமோ நடக்குது...--------

A husband asks his wife do u know the Meaning of wife?It means without-information –fighting-every time.Wife on hearing this says,it cud also mean with idiot for ever.A lady delivered twins, surprisingly 1 is a boy n other is a dog. How it is possible?Bcoz her husband is a hutch user, wherever he goes dog follws.

BY
URS
U.S.SUNDARAM
MAYILADUTHURAI

Thursday, November 15, 2007

அறிவு

Hi,
this is sundaram from tamilnadu.i want to share my distress and good timings to all but i couldn't able to type in tamil so i am very sorry.very soon i will able to type in tamil ,i just think so,whatever will happened god only knows.
முதலில் நீங்கள் செயல்படத் துவங்குங்கள், அதன் பின்பு அனைத்தும் சரியாகிவுடும்.
வழக்கத்திற்கு மாறாக சற்று மாறுபட்டு இருப்பதுதான் சாதாரணமானவற்றிற்கும் அசாதாரணமானவற்றிற்கும் உள்ள வித்தியாசம்.
கற்பனையானது அறிவை விட மிகவும் முக்கியமானது. -[அல்பர்ட் ஐன்ஸ்டின்]
உங்கள் தினசரி நடவடிக்கைகளின் போது கீழ்க்கண்டவைகளைக் கடைபிடியுங்கள்:
மனோரீதியான எண்ணக்கட்டுப்பாடு: உங்கள் தினசரி செயல்பாடுகளில் இறங்கும் போது எண்ணங்களைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். உங்கள் உள்மனதில் மற்றும் ஆழ்மனநிலைகளில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதற்கு முன்பு அழித்துவிடுங்கள். அனைத்தையும் குறித்து நேர்மறையான மனோநிலையைப் பராமரியுங்கள்.
மனோரீதியான பேச்சுக்கட்டுப்பாடு: நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணியுங்கள்.எதிர்மறையான பேச்சுக்களையும், தீய வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும், திட நம்பிக்கையுடன் பேசுங்கள்.
எண்ணங்களை மனக் காட்சியாகப் பார்த்தல்: விருப்ப எண்னங்கள் உங்கள் மனதில் உட்புகும் ஒவ்வொரு நேரமும் உடனடியாக நீங்கள் ஏற்கனவே மனதில் கொண்டிருந்த காட்சிகளை நீங்களாகவே மனக்காட்சியாக காணுங்கள்.
உடனடி தியானம்:எப்பொழுதெல்லாம் ஓய்வு அல்லது புத்துணர்வு தேவைப்படுகிறதோ அப்பொழுது சற்றுநேரத்தை உடனடியாக தியானப்பயிற்சிக்கு ஒதுக்குங்கள்.
ஆக்கப்பூர்வமான ஒளிகொண்ட மனக்காட்சி:தியானப்பயிற்சியை மேற்கொண்ட பிறகு ஆக்கப்பூர்வமான மனக்காட்சியைத் தினமும் ஒரு வேளைவ்வது பயிற்சியாக செய்து பழகுங்கள். by urs
sundaram

Tuesday, November 13, 2007

முதல் அரங்கேற்றம்

hi,

my name is somasundaram,father name is uthirapathy,my father is really gentle man ,because we six ,3 sister and 3 brother.the 3 sisters were married already without anyone help,he did from his own earning ,he is doing agriculture,with 2 acra land.its amazing for me ,u know i think ,how could manage in future.in our india wherever u may work, they pay 3 -5 thousands rupees thats it ,with there payment we can't manage out life.i don't know how to type in tamil so that i have wrote in english.now i am learning tamil type ,very soon i will write in tamil by god.i want to do something in my life so pls put some commets for my post.
போராடு மனிதா..!"கீழே விழுந்த நாம் எழுந்திருக்க வேண்டும்.மறுபடியும் போராட வேண்டும்.எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து எழுந்து போராட வேண்டும்.உற்சாகத்துடன் போராட வேண்டும்.போராட வேண்டியது நமது கடமை.அது ஒன்றே நாம் செய்வதற்கு உரியது.பலனை அளிப்பவன் இறைவன்.நாம் முயற்சி என்னும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் இறைவனே பலன் என்னும் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி