Monday, March 17, 2008

சிந்தனைக்கு சில


உங்கள் சிந்தனைக்கு சில….

-- "நான் அனுபவசாலி,
நான் சொல்வதைக் கேள்
என்று கூறி நம் முடிவைப் பலர் திசை திருப்ப முயல்கிறார்கள்.
அனுபவம் என்பது வெகு சில பொது அனுபவங்களே
எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன. மற்ற பெரும்பாலான அனுபவங்கள் தனிமனிதனின் சொந்த அனுபவங்கள்.
ஒரு விஷயத்தை ஒரு மனிதன் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறான்
என்பதை பொறுத்து அனுபவங்கள் பல்வேறு விதமாய் அமையலாம்.

"மார்க்டு வெயின்" என்ற அறிஞர் சொல்கிறார் :

பூனை பாடம் படித்துக் கொண்டது உண்மைதான்.
ஆனால் என்ன ஆயிற்று? "பூனை சூடான அடுப்புக் கல்லின் மீது உட்காருவதில்லை. அத்துடன் சூடில்லாத அடுப்புக்கல்லின் மீதும் உட்காருவதில்லையே".


-- மனிதனிடமுள்ள மிகப் பெரிய குறை
தன்னிடமுள்ள குறையை ஏற்றுக்கொள்வதில்லை.
நம்மைக் குறை கூறுகின்றவர்கள் யார்?
அவர்களது உள்நோக்கம் என்ன?
நம்மைக் குறை கூறுவதால்
அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது
என்று சில கேள்விகளை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்
என்றாலும் அப்படிச் சொல்கிறவர்களுக்கு உள்ள உள்நோக்கம்
என்ன என்று ஆராய்வதை விட,
அவர்கள் கூற்றில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதே முக்கியம்.


-- வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை ஆமோதித்தால்
அடுத்த அவதூறு உன் மேல்தான்.


-- திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன்
திருடனைப் போல் மோசமானவன் தான்.
அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான்.
(செஸ்டர் பீல்டு 1694 – 1773)


-- உங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்குத்
தடையான வாசகங்கள் எவைகள் எல்லாம்
நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களோ
அவற்றை தெளிவாகக் கண்டறியுங்கள்.
அவைகளை உங்கள் மனத்திலிருந்து வெளியேற்றுங்கள்.


-- சிறந்த மனிதர்கள் -
தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


-- மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு
நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகிவிடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை
நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும்.
(மான்டெஸ்கியூ)


-- மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால் நீ உன் காதை அடைத்துக் கொள்.
(குவாரல்ஸ் 1592-1644)


-- என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக
அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்யும்.
என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது.
(ஜான்ஸன் - 1709-1784)


-- அவதூறு -
கடல்களையும்,
மலைகளையும்,
பாலைவங்களையும்
எளிதில் தாண்டிச் செல்லும்.
(கோல்டன் 1780-1832)


-- கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
தன் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்த போதிலும்
கர்வத்தோடு வீரம் பேசக் கூடாது.


-- படைகளை விட -
வல்லமை உள்ளது சொற்கள்.
(ப்ரமர்ஸ்டன் பிரபு)


-- கடுஞ்சினமும்,
வஞ்சகமும்,
நம்மிடமிருந்து
செயல்படும் போது
அறிவுடைமையும்,
பண்பும்,
உண்மையும்
மறைந்து விடுகிறது
அல்லது மறைக்கப்பட்டு
விடுகிறது.


-- கோபங்களையும்,
வெறுப்புக்களையும்,
பழிவாங்கும் உணர்வுகளையும்
சேர்த்து வைத்திருந்து
அந்த கெடுதல் உணர்வுகளை
பேச்சாகவோ,
செயல்களாகவோ
வெளியேற்ற
மனிதர்கள் தகுந்த சந்தர்ப்பத்தை
தேடுகிறார்கள்.
ஏதாவது சிறு காரணம்
கிடைத்தால் கூட போதும்.


-- நீ புனிதனாகவோ,
போதகனாகவோ,
இருக்க வேண்டாம்.
மனிதனாக இருந்தாலே போதும்.


-- நாம் மற்றவர்களுக்கு
பிரியமானவர்களாக வேண்டும் என்றால்
நாம் தவீர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஒழுங்கின்மை,
கோபப்படுதல்,
நேரம் தவறாமை,
பிறறை குறை சொல்லுவது,
பொய் பேசுவது
இவ்விஷயங்களை தவீர்ப்பது நல்லது.


-- விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளாமலேயே
நம் கருத்தை வலியுறுத்தும் திறமைக்குத் தான்
"கெட்டிக்காரத்தனம்" என்று பெயர்.


-- வார்த்தைகள் பூவைப் போன்றவை.
அதை தொடுக்கும் விதத்தில்
தொடுத்தால் தான் மதிப்பை பெற முடியும்.


-- திட்டி கெட்டாருமில்லை,
வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை.


-- அடுத்தவனுக்கு
ஆறுதல் சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்குத் தேவைப்படும் போது –
அடுத்தவனிடம் போய்விடும்.
(கண்ணதாசன்)


-- தேவையற்ற எண்ணங்கள்,
தேவையற்ற பேச்சுக்கள்,
தேவையற்ற செயல்கள்,
தேவையற்ற நண்பர்கள்,
தேவையற்ற பழக்கவழக்கங்கள்,
தேவையற்ற பொழுது போக்குகள்
இப்படித் தேவையற்ற
பல நடவடிக்கைகளை
ஒழித்துக் கட்டும் போது
உங்களிடம் மிஞ்சி இருப்பது
மிகவும் தேவையானது மட்டுமே.


-- விரோதியால் கூட குற்றச்சாட்டப்பட முடியாதபடி
எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.


-- 'முடியாதது' என்பது
முட்டாள்களின் அகராதியில் உள்ள ஒரு சொல்.


-- தவறான நோக்கத்துடன் கூறப்படுகின்ற
ஓர் "உண்மை" என்பது
நீ கண்டு பிடித்துப் பயன்படுத்தும்
எல்லாவகைப் பொய்களிலும் மிக மோசமானது.


-- புறம்பேசும் வழக்கம் பலரிடம் வளருவதற்குக் காரணமே
அத்தகைய கூற்றுக்களை சுவையுடன் நாம் கேட்பதால் தான்.
ஒருவரில்லாத சமயம் அவரைப்பற்றி குறை சொல்லி
பேச்சு வந்தால் உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றி
பேசுவது முறையாகாது. நம்மைப்பற்றி மட்டும் பேசுவோம் என
பேச்சை திசை மாற்றம் செய்வது நல்லது.


-- செய்த ஒன்றை நேரடியாகச்
சுட்டிக் காட்டும் போது
அந்தச் செயலுக்கோ,
உதவிக்கோ இருந்த
மகத்துவம் சடாலென்று
மங்கிவிடுகிறது.
மதிப்பு போய்விடுகிறது.


-- 'தன்னம்பிக்கை' _
உள்ளிருந்து புறப்படும் ஒரு மாபெரும் சக்தி.
அது உள்ளவர்களை பேச்சின் மூலம்,
செயலின் மூலம்,
நடையுடை பாவனைகள் மூலம்
உடனே அறிந்து கொண்டுவிடலாம்.
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கோ
எல்லாவற்றிலும் ஒரு தயக்கம்.
பேச்சில் தயக்கம்;
நடை உடை பாவனைகளில் தயக்கம்
இவர்கள் மற்றவர்களை
சார்ந்து இருக்கவே விரும்புவார்கள்.



_யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம். _வாழ்வில் முன்னேற நல்ல அடித்தளம் தேவை. அந்த அடித்தளங்கள் தான் நாமாக நம் வாழ்வில் அமைத்துக் கொள்ளும் சுயகட்டுப்பாடுகள். _யாருக்கும் எதற்கும் தீமை இல்லாத சொற்களையே பேசுவது தான் வாய்மை. _அளவுக்கு மீறிய பேச்சு – ஆழ்ந்த சிந்தனை மனப்போக்கிறகு எதிரான நிலையாகும். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனை செய்யவே முடியாமல் போய்விடும்._வீண்பேச்சு பேசிக்கொள்வது சிலருடைய பலவீனம்.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வடலூர் வள்ளலார் உள்ளமும், உடலும் ஒன்றாமல் இருப்பவர்களைப் பற்றி சொல்கிறார்._மனிதரை மனிதர் மதித்து நடந்தால் மதித்து பேசினால் அதுவே பண்பாடு. அதுவே சமூதாயநீதி. எந்தக் காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதர்களின் கண்ணியத்துக்கு பரஸ்பரம் மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்வதே நீதி என்று எழுதியிருக்கிறார். – பிரெஞ்ச் சிந்தனையாளர் புரெதான். _பேச்சளவில் இருக்கிறது கொள்கைப்பிடிப்பு, கோட்பாடு, உறுதி எல்லாம். செயலில் இறங்கும் போது தான் சிக்கல் தன்னலக் குறுக்கிடுகள் ஏற்பட்டுவிடுகின்றன._தொலைகிறது விடுவோம் என்று பேசாமலிருக்கும் போது அநியாயம் செய்பவர்கள் தைரியம் பெறுகிறார்கள். அநீதி வலுக்கிறது._அறநெறிப்பற்றிப் பேசுவதன்று அறநெறியில் நடப்பதே சுவர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். எம். ஹென்றி (1662 – 1714)_தெளிவான பேச்சு – தூய்மையான உள்ளத்தின் எதிரொலி. - வில்லியம் லா (1686 -1781)_நாம் வாயைத்திறந்து பேசிக் கொண்டிருக்கும் வரையில் நம்மால் புதிய அறிவு எதையும் பெற முடியாது. அறிவைப் பெற வேண்டுமானால் நாலு பேருக்கு நடுவே இருக்கும் போது நம் வாயை மூடி சிந்தனையைத் திறந்து வைத்திருக்க வேண்டும்._நல்லெண்ணத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் தான் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். உங்களது பேச்சின் போது, எழுத்தின் மூலம், செயலின் மூலம் இதை நீஙகள் உண்டாக்க வேண்டும். _நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது முக்கியமானது. வெற்றி பெற்ற மனிதர்களோடு நீங்கள் பேசுகின்ற போது அது உங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். _ஒவ்வொருவரும் தாங்கள் பாராட்டப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும் என விரும்புகிறவர்களாக இருப்பதால் அதை எப்போதும் கவனத்தில் வைத்தபடி பேசுங்கள்._உங்களைப்பற்றி அவதூறாகவோ மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். தனக்கு பிடிக்காத மனிதர்களைப்பற்றி நினைத்துப் பார்ப்பதே கிடையாது என்கிறார் "ஜெனரல் ஐசன்ஹோவர்"._பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மனம் ஒன்றை எண்ணுகிறது. வாய் வேறொன்றைப் பேசுகிறது. செய்யும் காரியமோ வேறொன்றாக இருக்கிறது.நம் மனம் மொழி, மெய்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. இம்முரண்பாடுகள் தான் மனிதவர்க்கத்தின் பலவீனத்துக்கே அடிப்படைக் காரணம். _பிறரைத்தூற்றுதல், இகழ்தல், கேவலப்படுத்திப் பேசுதல்,பரிகாசம் செய்தல், கண்டனம் செய்தல், பிறரைத் தாழ்த்திப் பேசுதல் -போன்றவைகளை தவீர்த்துக் கொள்ளுங்கள். குற்றம் இருந்தால் ஆதாரத்துடன் நயமாக, பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசுங்கள். _திறமை என்பது முக்கியமாக மொழியைக் கையாளும் திறமைதான்.பேச்சிலிருந்து பண்பாடு தெரியும். குணம் தெரியும்.அறிவாற்றல் அனைத்துமே தெரிந்துவிடும். _எப்படி பேசுவது? எதைப் பேசுவது? யாரிடம் எதைப் பேசுவது? எப்போது அதைப் பேசுவது? என்ற அறிவு நமக்கு இருக்க வேண்டும்._நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சுக்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய விஷயம். _எவ்வளவு மனிதர்களோ அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._தீங்குகளை அடிக்கடி மன்னித்து விடலாம். ஆனால் இகழ்ச்சியை ஒரு போதும் மன்னிக்க முடியாது. – செஸ்டர் பீல்டு (1694-1773)_மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாமே ஊகித்து உணர முயன்றால் அது பெரும்பாலும் தவறாகவே முடியும். மற்றவர்களின் நடவடிக்கைகளை வைத்து நாம் இதை ஓரளவு ஊகித்து விட முடியும் என்றாலும் அவர்கள் நம்மைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லும் அபிப்பிராயத்தின் மூலமாகவே இதை நன்கு உணர முடியும்._ஒருவரது குறையை வேறு எவரும் இல்லாத போது அவரிடம் மட்டும் கூறுவது பெருந்தன்மையாகும். அவரது சிறப்புகளை அவர் இல்லாத போது பிறரிடம் கூறுவது நாகரிகமாகும். _மனிதனிடம் அமைந்துள்ள குணங்கள் கொள்கைகள் ஆகியவையே வேறுபாட்டை உருவாக்குகின்றன._சொல்வன்மை : உணர்ச்சியின் வேகத்தை அணைக்கட்டித்தடுத்து சுருங்கச் சொல்லுதலே சொல்வன்மை. கூச்சல்கள், அதிகமான பேச்சுக்கள், கோபத்தை உண்டாக்குமே தவீர வேறு நன்மைகள் வரப்போவதில்லை._எப்போது பிறர் மனைவி பிறர் கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் குடும்பம் கௌரவம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும். _பதினேழாம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் ஸ்பினோசா என்ற தத்துவஞானி வாழ்ந்தார். அவர் கூறுகிறார் : உன் அறிவும், புத்திக் கூர்மையும் வளரத் துணை செய்வது எதுவோ அதுவே உனக்கு நன்மை. உன் சக்தி வளர, உன் சுதந்திரம் வளர உறுதுணையாகக் கூடியதொன்றே உனக்கு நல்லது. உன் அறிவு வளர்ச்சியைத் தடுப்பதெல்லாம் தீமையானது என்று கருது. அறிவு வளர்ச்சி தடைப்பட்டாலும் உன் பேச்சு சுதந்திரம், பறிக்கப்பட்டாலும் உன் சுதந்திரம் குன்றிவிடும். உன் உயிராற்றல் தேய்ந்துவிடும்._எப்போது பிறர் மனைவி, கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் கௌரம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும்._எவ்வளவு மனிதர்களோ! அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._பாராட்டுக்களை அவையிலே சொல்லுவோம். குறைபாடுகளை நான்கு சுவர்களுக்கு நடுவே சொல்லுவோம்._என்ன சொன்னார் என்பதை யோசி!யார் சொன்னார் என்பதையல்ல._உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்தி சொல்வதற்கு முன்னால் ஒப்புக் கொள்._மனிதர்கள் வழக்கமாக எண்ணிக்கொள்கிறார்கள்.பலர் அடிமையாயிருப்பதன் காரணம் ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதால் தான். ஆகவே அந்தக் கொடுங்கோலனை வெறுப்போம் என்று. இப்போது ஒரு சிலர் இதற்கு நேர்மாறான தீர்ப்பை வழங்குகிறார்கள். ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதற்கு காரணம் பலர் அடிமைப்பட்டு கிடப்பதனால் தான். ஆகவே அடிமைகளை கேவலப்படுத்தி ஒதுக்குவோம் என்கிறார்கள்._நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். அன்புடன் பழக வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறோம். வருகிற ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே அவர் உதிர்க்கும் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே நமது மனஅமைதி குலைகிறது. பேசுபவரது பொறாமை, ஆணவம், தற்பெருமை, அலட்சியப் போக்கு எல்லாமே நம்மை நிலைகுனிய வைத்துவிடுகிறது. ஒரு மனிதனின் வரவால் அது இப்போது கறைபடிந்து விட்டது. நமக்கு வேண்டுவது நிதானம். நிலைகுனியாத பொறுமை._எதிர்பார்பபுகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், சண்டை, விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்து தெரிந்து கொள்வது, தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும். _கோபமாக பேசுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது, சரியான அளவில்,சரியான நேரத்தில்,சரியான நோக்கத்துடன்,சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது._ஆறுவிஷயங்களைக் கொண்டு அறிவாளியைக் கண்டு கொள்ளலாம். காரணமில்லாத கோபம்,பயனில்லாத பேச்சு, முன்னேற்றமில்லாத மாறுதல், பொறுத்தமில்லாததைப் பற்றி ஆராயதல்,அன்னியனை நம்புதல், பகைவரை நண்பராகக் கருதுதல்._வாழ்க்கையின் எட்டுபடிகள் என புத்தர் காட்டும் பாதை 1. சரியாகப் புரிந்து கொள். 2. சுரியான எண்ணம். 3. சரியானபடி பேச்சு. 4. சரியான செயல்களில் ஈடுபடு. 5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு. 6. சரியான முயற்சியில் ஈடுபடு. 7. சரியான சிந்தனை. 8.சரியான கவனம்._தன் தவறுகளைத் திருத்திக் கொள்கின்ற தைரியம் - தனி மனிதனுக்கோ, ஒரு நாட்டுக்கோ எளிதான காரியம் அன்று.வீண்மானப் பிரச்சனை குறுக்கிடும்._மொழி - வெளியே இருந்து பெறும் பயிற்சி. மௌனம் - உள்ளே இருந்து எடுக்கும் முயற்சி. _பொறாமை உடையவர், வெறுப்பு நிறைந்தவர், எதிலும் திருப்தியற்றவர்,எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்,எதையும் சந்தேகப்படுபவர்,பிறரைச் சுரண்டி வாழ்பவர்,இந்த ஆறுவகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள்._எல்லாவற்றையும் இகழ்ந்து பேசுவது என்ற கேவலமான நோய் உன்னிடம் இருந்தால் அதை விரட்டிவிடு. _எதிர்பார்ப்புகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்துத் தெரிந்து கொள்வது , தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது - இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும்


பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

1 comment:

labancaetano said...

The 14 Best Casinos in the UK (2021) | MapyRO
Best Casinos in the UK (2021) 나주 출장샵 · 1. Bovegas. 7,039 reviews. 17. 8. 8. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 의정부 출장샵 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 포항 출장안마 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 7. 하남 출장마사지 7. 7. 7. 7. 7. 7. 대전광역 출장샵 7. 7. 7. 7.