Tuesday, December 4, 2007

திருக்குறள் என்னும் அறிவு அமுதம்

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
(1002) விளக்கம்:

"பொருளினால் எல்லாமே உண்டாகும்" என்று அறிந்து, அதை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
(1013) விளக்கம்:

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா. அவ்வாறே "நாணம்" என்னும் குணத்தையும் "சால்பு" ஒருபோதும் விட்டுவிடாது.

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
(1004) விளக்கம்:

ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்த பின்ர் இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?

கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
(1005) விளக்கம்:

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
(1006) விளக்கம்:

தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
(1007) விளக்கம்:

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல் தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
(1008) விளக்கம்:

வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சு மரமானது நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
(1009) விளக்கம்:

உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது ஒருவன் தேடிய பெரும் பொருளைப் பிறர்தாம் கொண்டு போவார்கள்.

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
(1010) விளக்கம்:

புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே.

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
(1011) விளக்கம்:

இழிந்த செயல் காரணமாக நாணுதரே நன்மக்களது நாணம். பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும்.


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
(1012) விளக்கம்:

ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது "நாணம்" ஆகும்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
(1013) விளக்கம்:

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா. அவ்வாறே "நாணம்" என்னும் குணத்தையும் "சால்பு" ஒருபோதும் விட்டுவிடாது.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை.
(1014) விளக்கம்:

நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும். அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால் அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகி விடும்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி யென்னும் உலகு.
(1015) விளக்கம்:

பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை உலகத்தார் "நாணத்திற்கே உறைவிடம் இவர்தாம்" என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
(1016) விளக்கம்:

உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
(1017) விளக்கம்:

நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாதபோது, சான்றோர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். உயிரைக் காப்பதற்கு நாணத்தை விடமாட்டார்கள்.

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
(1018) விளக்கம்:

கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கி விடும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
(1019) விளக்கம்:

ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டு விடும். ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

நாணகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.
(1020) விளக்கம்:

தம் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளதுபோல் மயக்குவது போன்றதாகும்.

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
வெருமையிற் வீடுடைய தில்.
(1021) விளக்கம்:

"என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓய மாட்டேன்" என்னும் பெருமையைப் போல், ஒருவனுக்குச் சிறந்த பெருமை தருவது வேறில்லை.


ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(1022) விளக்கம்:

"முயற்சியும், நிறைந்த அறிவும்" என்று சொல்லப்பட்ட இரண்டனையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால் ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்..
(1023) விளக்கம்:

"என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்" என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன்வந்து உதவி நிற்கும்.

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
(1024) விளக்கம்:

தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு அதன் வழி பற்றி அவர் ஆராயும் முன்பே தெய்வ உதவியால் அது தானாகவே முடிந்து விடும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
(1025) விளக்கம்:

குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
(1026) விளக்கம்:

"ஒருவனுடைய நல்லாண்மை" என்பது தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை அவன் தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
(1027) விளக்கம்:

அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார். அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.
(1028) விளக்கம்:

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருத வேண்டும். மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும். ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
(1029) விளக்கம்:

தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அது ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?

இடுக்கன்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இல்லாத குடி.
(1030) விளக்கம்:

துன்பம் வரும்போது அதைத் தாங்கி காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம் புகுந்ததால் வீழ்கின்ற மரம் போல வீழும்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031) விளக்கம்:

"என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓய மாட்டேன்" என்னும் பெருமையைப் போல், ஒருவனுக்குச் சிறந்த பெருமை தருவது வேறில்லை.


உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
(1032) விளக்கம்:

உழவைவிட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
(1033) விளக்கம்:

யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர். மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே ஆவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
(1034) விளக்கம்:

உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
(1035) விளக்கம்:

உழவான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார். தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
(1036) விளக்கம்:

உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், "யாவரும் விரும்பும் உணவையும் கைவிட்டோம்" என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
(1037) விளக்கம்:

ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காயவிடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
(1038) விளக்கம்:

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதால் சிறந்தது. இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
(1039) விளக்கம்:

நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல அவனோடு பிணங்கி விடும்.

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
(1040) விளக்கம்:

"யாம் வறியோம்" என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்துப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
(1041) விளக்கம்:

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை.


இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
(1042) விளக்கம்:

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலக இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
(1043) விளக்கம்:

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன் மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும் புகழையும் கெடுத்து விடும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
(1044) விளக்கம்:

இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
(1045) விளக்கம்:

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
(1046) விளக்கம்:

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
(1047) விளக்கம்:

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப்படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
(1048) விளக்கம்:

நேற்றுக் கொன்றதுபோலத் துன்பஞ்செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்து விடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
(1049) விளக்கம்:

மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம். ஆனால் வறுமை வந்தபோது எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
(1050) விளக்கம்:

பொருளில்லாத வறுமையாளர் செய்யக் கூடியது முற்றத் துறத்தலே. அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே ஆகும்.

இரக்க இரத்தக்கார்க் காணின் சுரப்பின்
அவர்பழி தம்பழி யன்று.
(1051) விளக்கம்:

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம். அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால் அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.


இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
(1052) விளக்கம்:

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
(1053) விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
(1054) விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

கரப்பிலார் வையகத்து உண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
(1055) விளக்கம்:

முன்னால் நின்றபோதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான் உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
(1056) விளக்கம்:

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால் மானம் விடாமல் இரப்பவருக்கு அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
(1057) விளக்கம்:

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால் இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
(1058) விளக்கம்:

வறுமையால் இரப்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும் மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போன்றதாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
(1059) விளக்கம்:

தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும் இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
(1060) விளக்கம்:

இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும். பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.

கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
(1061) விளக்கம்:

தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
(1062) விளக்கம்:

முயற்சி செய்து உயிர்வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர்வாழ்தலை இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால் அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
(1063) விளக்கம்:

வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
(1064) விளக்கம்:

நுகர்பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும் பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மன அமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.

தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
(1065) விளக்கம்:

நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே ஆனாலும், அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை.

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
(1066) விளக்கம்:

வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு "நீர் தருவீராக" என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
(1067) விளக்கம்:

வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு "நீர் தருவீராக" என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
(1068) விளக்கம்:

வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும்போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
(1069) விளக்கம்:

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும். அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால் அந்த உருக்கமும் காய்ந்து போகும்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
(1070) விளக்கம்:

ஒளிப்பவர் "இல்லை" என்று சொன்னதுமே இரப்பவர் உயிர் போய்விடுகிறது. ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ?


மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
(1071) விளக்கம்:

ஒளிப்பவர் " வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள். அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.


நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.
(1072) விளக்கம்:

தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரைவிட அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர். அவர்போல் இவர் தம் நெஞ்சத்தில் கவலை இல்லாதவர் ஆதலால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
(1073) விளக்கம்:

தேவரைப் போலவே தம்மை நியமிப்பவர் இல்லாமல் தாம் விரும்புபவன செய்து ஒழுகுதலால் கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.
(1074) விளக்கம்:

கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால் அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
(1075) விளக்கம்:

"அரசால் துன்பம் வரும்" என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம். அது ஒழிந்தால் விரும்பப்படும் பொருள் வரும்போது சிறிது உண்டாகும்.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
(1076) விளக்கம்:

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால் கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
(1077) விளக்கம்:

தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு கீழ்மக்கள் தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதற மாட்டார்கள்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படும் கீழ்.
(1078) விளக்கம்:

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள். கரும்பைப் போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
(1079) விளக்கம்:

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள். கரும்பைப் போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
(1080) விளக்கம்:

ஒரு துன்பம் வந்துவிட்டால் அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர். அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியவராகார்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
(1081) விளக்கம்:

இவ்வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ? புரியாமல் என் நெஞ்சம் மயங்கின்றதே.


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.
(1082) விளக்கம்:

என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள். அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டதுபோல் உள்ளதே.

பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
(1083) விளக்கம்:

"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன். இப்போது அறிந்து விட்டேன். அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
(1084) விளக்கம்:

தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.
(1085) விளக்கம்:

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ? பிறழும் கண்ணோ? மருளும் பிணையோ? இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
(1086) விளக்கம்:

வளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால் அவற்றைக் கடந்து இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே.

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(1087) விளக்கம்:

இந்த மாதின் சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால் மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
(1088) விளக்கம்:

போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம் இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
(1089) விளக்கம்:

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும் உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்துதல் ஏனோ?

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
(1090) விளக்கம்:

தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல் அடப்பட்ட நறாவானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.
(1091) விளக்கம்:

இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன. ஒன்று, என்னிடத்து நோய் செய்யும் பார்வை. மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(1092) விளக்கம்:

என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அறுகிய நோக்கமானது , காம உறவிலே சரிபாகம் ஆவதன்று , அதனிலும் மிகுதியானது ஆகும்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
(1093) விளக்கம்:

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள்போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு,எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
(1094) விளக்கம்:

யான் தன்னைப் பாராதபோது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும்பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
(1095) விளக்கம்:

என்னையே குறிப்பாகக் கொண்டு பார்த்தல் அல்லாமலும் , தான் ஒரு கண்ணை , ஒருபக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி , தன்னுள்ளாகவே அவள் நகுவாள்.

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லெ உணரப் படும்.
(1096) விளக்கம்:

புறத்தே நன்மை விரும்பாதவரைப்போலச் சொன்னாரானாலும் , தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல் , விரைவில் உணரப்படும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
(1097) விளக்கம்:

நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும் , சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும் , அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
(1098) விளக்கம்:

நம்மை அவளை இரப்பதுபோல யான் பார்த்தபோது , அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள் ; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நம்மைக் குறிப்பும் உண்டு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.
(1099) விளக்கம்:

முன் அறியாதவரைப்போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும் , தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் நன்மை ஆகும்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல.
(1100) விளக்கம்:

காமத்திற்கு உரிய இருவருள் , ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால் , அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
(1101) விளக்கம்:

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும் ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளன.


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோயக்குத் தானே மருந்து.
(1102) விளக்கம்:

நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள். அவ்வாறு இல்லாமல் அணி புனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள் தானே மருந்தும் ஆயினாள்.

தாம்வீழ்ார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணுன் உலகு.
(1103) விளக்கம்:

தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் பேலாத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ ?

நீங்கின் தொறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
(1104) விளக்கம்:

தாம் தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும் , அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை , இவள்தான் , எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ ?

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
(1105) விளக்கம்:

தாம் த விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப்போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலெ உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
(1106) விளக்கம்:

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை மமுயக்கு.
(1107) விளக்கம்:

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளெத்தழுவிப் பெறுகின்ற இன்பம் .

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
(1108) விளக்கம்:

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும் .

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
(1109) விளக்கம்:

ஊடலும், அதனெ அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
(1110) விளக்கம்:

ஒன்றை அறியும்போது, முன்னிருந்து அறியாமையைக் கண்டாற்போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளெச் சேருந்தோறும், காமஇன்பமும் உண்டாகின்றது.

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
(1111) விளக்கம்:

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய், நீ வாழ்க, எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னெக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்.


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
(1112) விளக்கம்:

இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளெப் பூவைப் போன்றதாகுமோ என்று, இக்குவளெ மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே .

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.
(1113) விளக்கம்:

அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை

காணிற் குவளெ கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
(1114) விளக்கம்:

குவளெ மலர்கள், இவளெக் கண்டால், இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் என்று தலெயைக் கவிழ்ந்து நிலத்தை நோக்குமே.

அனிச்சப்பூக் கால்களெயால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
(1115) விளக்கம்:

தன் இடையின் நுண்மையை நினெயாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களெயாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.
(1116) விளக்கம்:

மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலெயில் நில்லாது கலங்கிப் போயினவே.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
(1117) விளக்கம்:

அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளதுபோல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லெயேல்
காதலெ வாழி மதி.
(1118) விளக்கம்:

மதியமே, இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப்போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய், நீதான் வாழ்க.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
(1119) விளக்கம்:

மதியே! இம்மலர் போலும், கண்ணினையுடையவள் முகத்திற்கு நீ ஒப்பாக விரும்புவாய் ஆயின், இம்முகத்தைப் போல யான் மட்டும் காணத் தோன்று! பலரும் காணும்படி தோன்றாதே !

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
(1120) விளக்கம்:

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.
(1121) விளக்கம்:

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினெ உடையதாகும்.


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னந
மடந்தையொடு எம்மிடை நட்பு
(1122) விளக்கம்:

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம்.
(1123) விளக்கம்:

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலெ உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லெ.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னன் நீங்கும் இடத்து.
(1124) விளக்கம்:

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலெயே தருகின்றாள்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
(1125) விளக்கம்:

ஒள்ளியவாய் அமர்த்த கண்களெ உடையவளின் குணங்களெ மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினெப்பதும் செய்வேனோ !

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.
(1126) விளக்கம்:

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார்; எம் கண்களெ இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
(1127) விளக்கம்:

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினெத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

நெஞ்சத்து காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(1128) விளக்கம்:

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார். அதனால் அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்.

இமைப்பிற் கரப்பாக்கு அறிவில் அனெத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1129) விளக்கம்:

'இமைப்பின் அவர் மறைவார்' என்று, கண்களெ மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1130) விளக்கம்:

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர் என்றும் இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே!

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லெ வலி.
(1131) விளக்கம்:

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, மடலேறுதல் அல்லாமல், வேறு யாதும் இல்லெ.


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினெ நீக்கி நிறுத்து.
(1132) விளக்கம்:

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
(1133) விளக்கம்:

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலெயே பெற்றுள்ளேன்.

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணெ.
(1134) விளக்கம்:

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளெக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, என்ன செய்வேன்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
(1135) விளக்கம்:

தொடர்பான குறுவளையள்களை அணிந்த இவள்தான், மாலைப் பொழுதில் வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் தந்துவிட்டாள்.

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென கண்.
(1136) விளக்கம்:

அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒருபோதும் மூடுதலெச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளெயிலும் மடலேறுதலெயே நான் நினெத்திருப்பேன்.

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்ப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
(1137) விளக்கம்:

கடலெப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணெப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லெ.

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
(1138) விளக்கம்:

நிறைஇல்லாதவர் இவர்' என்றும் 'இரங்கத்தவர் இவர்' என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்சு, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே.

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
(1139) விளக்கம்:

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்ஸெ என்று நினெத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திரிகின்றது போலும்.

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
(1140) விளக்கம்:

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.
(1141) விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.


மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
(1142) விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
(1143) விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
(1144) விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.

களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.
(1145) விளக்கம்:

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலெ விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களெப் பாம்புகொண் டற்று.
(1146) விளக்கம்:

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களெப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.

ஊரவர் கெளவை எருவாக அன்னெசொல்
நீராக நீளுமிந் நோய்.
(1147) விளக்கம்:

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களெ எருவாகவும், அதுகேட்டு அன்னெ சொல்லும் கடுஞ்சொல்லெ நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
(1148) விளக்கம்:

பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம் என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
(1149) விளக்கம்:

"அஞ்சாதே, பிரியேன்" என்று என்னெத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அலருக்கு நாணவும் நம்மால்இயலுமோ

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை யெடுக்கும் இவ்வூர்.
(1150) விளக்கம்:

யாம் விரும்புகின்ற அலரினெ இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினெச் செய்வார்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை.
(1151) விளக்கம்:

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.
(1152) விளக்கம்:

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினெத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
(1153) விளக்கம்:

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் "பிரிவது" ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லெயும் என்னால் நம்ப முடியவில்லெ.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
(1154) விளக்கம்:

அருள் செய்த காலத்தில், "அஞ்சாதே" என்று கூறி என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
(1155) விளக்கம்:

என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
(1156) விளக்கம்:

'பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்', அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(1157) விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .
(1158) விளக்கம்:

தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
(1159) விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.
(1160) விளக்கம்:

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
(1161) விளக்கம்:

பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.


சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
(1162) விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.

காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(1163) விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
(1164) விளக்கம்:

காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
(1165) விளக்கம்:

இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
(1166) விளக்கம்:

காம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
(1167) விளக்கம்:

காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
(1168) விளக்கம்:

இந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
(1169) விளக்கம்:

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
(1170) விளக்கம்:

என் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.



கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது.
(1171) விளக்கம்:

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?


தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் ?
(1172) விளக்கம்:

மேல் விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள்,இன்று, என் துயரைப் பகுத்துணராமல், தாமும் துன்பப் படுவது எதனாலோ?

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.
(1173) விளக்கம்:

அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.
(1174) விளக்கம்:

அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.
(1175) விளக்கம்:

அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
(1176) விளக்கம்:

எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.

உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
(1177) விளக்கம்:

விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
(1178) விளக்கம்:

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
(1179) விளக்கம்:

காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.
(1180) விளக்கம்:

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
(1181) விளக்கம்:

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்.


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
(1182) விளக்கம்:

அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும் என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
(1183) விளக்கம்:

என் அழகையும், நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காம நோயையும் பசலையையும் எனக்கு தந்துள்ளார்.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
(1184) விளக்கம்:

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
(1185) விளக்கம்:

அதோ பார் என் காதலர் என்னை பிரிந்து போகின்றார் ; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது பற்றி படருகின்றது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
(1186) விளக்கம்:

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
(1187) விளக்கம்:

தலைவனை தழுவிய படியே கிடந்தேன் ; பக்கத்தில் சிறிது புரண்டேன் ; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல, என்மீது மிகுதியாக பரவி விட்டதே.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
(1188) விளக்கம்:

இவள் பசந்தாள் ' என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
(1189) விளக்கம்:

'பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர், நல்ல நிலையினர் ஆவார்' என்றால், என்னுடைய மேனியும் உள்ள படியே பசலை நோயினை அடைவதாக.

பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
(1190) விளக்கம்:

'பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் ' என்றால், யான் பசந்தேன் என்று பேர் பெறுவதும் நல்லதேயாகும்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
(1191) விளக்கம்:

தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்லின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவார்.


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
(1192) விளக்கம்:

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றதாகும்.

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு.
(1193) விளக்கம்:

காதலரால் விரும்பப் படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், 'மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்' என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும்.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வீர்
வீழப் படாஅர் எனின்.
(1194) விளக்கம்:

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப் படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம்மகளிர், முன் செய்த நல் வினைப் பயனை உடையவரே அல்லர்.

நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.
(1195) விளக்கம்:

நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்.

ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.
(1196) விளக்கம்:

காதல் ஒருதலையானது என்றால் மிகவும் துன்பமானது; காவடித்தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால் , அதுவே மிக இனிமையானது.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்.
(1197) விளக்கம்:

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ?

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா இல்.
(1198) விளக்கம்:

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள் யாரும் இல்லை.

நசை இயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
(1199) விளக்கம்:

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
(1200) விளக்கம்:

நெஞ்சமே ! நின்னிடம் அன்பற்றவர்க்கு நின் நோயைச் சென்று செல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக.

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
(1201) விளக்கம்:

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.
(1202) விளக்கம்:

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒரு வகையில் இனிமையானதே.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(1203) விளக்கம்:

தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே. அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
(1204) விளக்கம்:

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் நிறைந்திருக்கின்றோமோ?

தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல் .
(1205) விளக்கம்:

தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி வெட்கப்பட மாட்டாரோ?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
(1206) விளக்கம்:

காதலரொடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால்தான் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறிப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
(1207) விளக்கம்:

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால் அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
(1208) விளக்கம்:

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என் மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
(1209) விளக்கம்:

'நாம் இருவரும் வேறானவர் அல்லேம்' என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
(1210) விளக்கம்:

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலார என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
(1211) விளக்கம்:

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதொடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
(1212) விளக்கம்:

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் செய்வேன்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
(1213) விளக்கம்:

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
(1214) விளக்கம்:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
(1215) விளக்கம்:

முன்பு நனவில் கண்ட இன்பமும், அந்தப் பொழுதளவிலேயே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே உள்ளது.

நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
(1216) விளக்கம்:

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ.

நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.
(1217) விளக்கம்:

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவதுதான் எதனாலோ?

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
(1218) விளக்கம்:

தூங்கும்போது கனவிலே என் தோள் மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக இருப்பார்.

நனவினால் நல்காரை நோவார் கனவினாற்
காதலர்க் காணா தவர்.
(1219) விளக்கம்:

கனவிலே காதலரை வரக் காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.

நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
(1220) விளக்கம்:

'நனவிலே நம்மை விட்டுப் பிரிந்து போனார் ' என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ ?

மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
(1221) விளக்கம்:

பொழுதே, நீ மாலைக் காலமே அல்ல. காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவுக் காலமே ஆவாய்.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
(1222) விளக்கம்:

மயங்கிய மாலைப் பொழுதே, எம்மைப்போலவே நீயும் துன்பமுற்று தோன்றுகிறாய். நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாதவரோ?

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
(1223) விளக்கம்:

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
(1224) விளக்கம்:

காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவதைப்போல், இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே.

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
(1225) விளக்கம்:

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.
(1226) விளக்கம்:

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
(1227) விளக்கம்:

காலையில் அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றதே, இந்தக் காலமாகிய நோய்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
(1228) விளக்கம்:

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
(1229) விளக்கம்:

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே இந்த ஊரும் மயங்கியதாய் என்னைப் போலத் துன்பத்தை அடையும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
(1230) விளக்கம்:

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகமால் நின்ற என் உயிரானது இம் மாலைப் பொழுதிலே நலிவுற்று மாய்கின்றதே.

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.
(1231) விளக்கம்:

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
(1232) விளக்கம்:

பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(1233) விளக்கம்:

காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(1234) விளக்கம்:

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச் செயகின்றனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(1235) விளக்கம்:

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறிய சொல்கின்றனவே.

தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236) விளக்கம்:

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.
(1237) விளக்கம்:

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
(1238) விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்து விட்டதே.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
(1239) விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம் அடைந்து விட்டனவே.

கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
(1240) விளக்கம்:

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம் அடைந்துவிட்டது.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
(1241) விளக்கம்:

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும் சொல்ல மாட்டாயோ?


காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.
(1242) விளக்கம்:

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதாவராக இருக்க, நீ மட்டுமே அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவது பேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(1243) விளக்கம்:

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே.

கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
(1244) விளக்கம்:

நெஞ்சமே, நீ அவரிடம் போகும்போது இக் கண்களையும் அழைத்துப் போவாயாக. அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
(1245) விளக்கம்:

நெஞ்சமே, நாம் விரும்பி நாடினாலும் நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
(1246) விளக்கம்:

என் நெஞ்சமே, ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யான சினம் கொண்டுதான் காய்கின்றாய்.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.
(1247) விளக்கம்:

நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
(1248) விளக்கம்:

என் நெஞ்சமே, நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கி, பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
(1249) விளக்கம்:

என் நெஞ்சமே, காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருக்கும்போது, நீ அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
(1250) விளக்கம்:

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சத்திலேயே உடையவராய் நாம் இருக்கும்போதும், இன்னும் நாம் அழகிழந்து வருகின்றோமே.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(1251) விளக்கம்:

நாணம் என்னும் தாழ் பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.


காமம் எனஒன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
(1252) விளக்கம்:

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது. அது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
(1253) விளக்கம்:

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன். ஆனால் அதுவோ என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோ என்காமம்
மறையிறந்து மன்று படும்.
(1254) விளக்கம்:

இதுவரை நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
(1255) விளக்கம்:

தம்மை வெறுப்பவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர்.
(1256) விளக்கம்:

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.
(1257) விளக்கம்:

நாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.
(1258) விளக்கம்:

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று நம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன.

புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
(1259) விளக்கம்:

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல்.
(1260) விளக்கம்:

தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மைதான் உண்டாகுமோ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261) விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262) விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263) விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே இன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264) விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265) விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266) விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தை நானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269) விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270) விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன? அவரோடு பொருந்தினால்தான் என்ன?


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261) விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262) விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263) விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே இன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264) விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265) விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266) விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தை நானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269) விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270) விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன? அவரோடு பொருந்தினால்தான் என்ன?

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261) விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262) விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263) விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே இன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264) விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265) விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266) விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தை நானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268) விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில் அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269) விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270) விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன? அவரோடு பொருந்தினால்தான் என்ன?


சுரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.
(1271) விளக்கம்:

நீதான் மறைத்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
(1272) விளக்கம்:

கண் நிறைந்த பேரழகும், மூங்கில்போல் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது.

மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.
(1273) விளக்கம்:

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்கும் உள்ளதொன்று உண்டு.
(1274) விளக்கம்:

அரும்பினுள்ளே அடங்கியிருக்ணுன்ற மணத்தைப்போல என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
(1275) விளக்கம்:

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.
(1276) விளக்கம்:

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
(1277) விளக்கம்:

குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவனான நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும் நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
(1278) விளக்கம்:

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர். யாமும், அவரைப் பிரிந்து ஏழு நாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே.

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.
(1279) விளக்கம்:

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
(1280) விளக்கம்:

கண்ணினால் காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மை உடையது என்று சொல்லுவர்.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
(1281) விளக்கம்:

நினைத்தபொழுதில் களிப்படைவதும், கண்ட பொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளக்குக் கிடையாது, காமத்திற்கு உண்டு.


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
(1282) விளக்கம்:

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதளவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.
(1283) விளக்கம்:

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு.
(1284) விளக்கம்:

தோழி, நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சமோ அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
(1285) விளக்கம்:

மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல், என் காதலனைக் கண்டபோது, அவள் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே.

காணுங்கால் காணேன் தவறாய காணக்கால்
காணேன் தவறல் லவை.
(1286) விளக்கம்:

என் காதலனைக் காணும்போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன். அவரைக் காணாதபோதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலர்ந்து.
(1287) விளக்கம்:

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப்போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
(1288) விளக்கம்:

கள்வனே, இழிவு வரத் தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவர்க்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப்போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
(1289) விளக்கம்:

அனிச்ச மலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது. அதன் தன்மை அறிந்து அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள் உலகத்தில் சிலரே யாவர்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
(1290) விளக்கம்:

கண் நோக்கத தளவிலே பிணங்கினாள். பின், என்னைக் காட்டிலும்தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக்கு ஆகா தது.
(1291) விளக்கம்:

நெஞ்சமே, அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் எமக்குத் துணையாகததுதான் எதனாலோ?


உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைக்
செறாஅர்செனச் சேறிஎன் நெஞ்சு.
(1292) விளக்கம்:

என் நெஞ்சமே, நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே, அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சசேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
(1293) விளக்கம்:

நெஞ்சமே, நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
(1294) விளக்கம்:

நெஞ்சமே, நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய். இனிமேல் அத்தகைய செய்திகளைப்பற்றி நின்னோடு ஆராய்பவர்தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
(1295) விளக்கம்:

அவரைப் பெறாத போதும் அஞ்சும். பெற்றபோதும் பிரிவாரோ என்று அஞ்சும். இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினியே இருந்ததென் நெஞ்சு.
(1296) விளக்கம்:

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகமால், என்னைத் தின்பதுபோலத் துன்பம் தருவதாக இருந்தது.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
(1297) விளக்கம்:

காதலரை மறக்கவியலாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து மறக்கக்கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேன்.

எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
(1298) விளக்கம்:

பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம் அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.
(1299) விளக்கம்:

தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில் வேறு எவர்தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
(1300) விளக்கம்:

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்.

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கஞ் சிறிது.
(1301) விளக்கம்:

நாம் ஊடுரும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம். அதற்காக அவர் வந்ததும் அவர்பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(1302) விளக்கம்:

உணவுப் பண்டங்களில் அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல். அதை அளவுகடந்து சிறிது நீளவிட்டாலும் உப்பின் மிகுதிபோல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
(1303) விளக்கம்:

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்து தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவோரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வதுபோன்ற கொடுமையாகும்.

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
(1304) விளக்கம்:

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக்கொடியின் வேரை அறுப்பதுபோன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
(1305) விளக்கம்:

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
(1306) விளக்கம்:

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது மிகக் கனிந்த கனியும் பழுக்காத கருக்காயும் போல பயனற்றதாகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
(1307) விளக்கம்:

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது. அது கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
(1308) விளக்கம்:

நம்மாலே இவரும் நோயுற்றார் என்று உணர்ந்து அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
(1309) விளக்கம்:

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும். அதுபோன்றதே ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால் இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
(1310) விளக்கம்:

ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றரோடு, எம் நெஞ்சம் கூடுவோம் என்று நினைப்பது அது கொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
(1311) விளக்கம்:

பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால் நின் மார்பை நான் தழுவமாட்டேன்.


ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.
(1312) விளக்கம்:

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக. அவரும் அவ்வேளையில் யாம் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்து தும்மினார்.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
(1313) விளக்கம்:

மரக்கிளையிளிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர் என்று காய்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
(1314) விளக்கம்:

யாரினும் நின்னையே விரும்புகின்றோம் என்று சொன்னேன். அவள், யாரினும்? யாரினும்? என்று கேட்டவளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள்.

இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
(1315) விளக்கம்:

இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம் என்று சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
(1316) விளக்கம்:

நின்னை நினைத்தேன் என்றேன். நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழுத்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
(1317) விளக்கம்:

யான் தும்மினேன். நூறாண்டு என்று கூறி வாழ்த்தினாள். அடுத்து அதைவிட்டு, எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர் என்று கேட்டுக் கேட்டு அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
(1318) விளக்கம்:

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினேன். உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ என்று அவள் அழுதாள்.

தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதீர் என்று.
(1319) விளக்கம்:

அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத் தன்மையரே ஆவீர் என்று என்மேற் சினம் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(1320) விளக்கம்:

அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்று கேட்டுச் சினம் கொள்வாள்.

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு.
(1321) விளக்கம்:

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்.


ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
(1322) விளக்கம்:

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(1323) விளக்கம்:

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மொடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும் தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ?

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
(1324) விளக்கம்:

காதலரைத் தழுவி விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறிலின் ஆங்கொன்று உடைத்து.
(1325) விளக்கம்:

தவறு இல்லாதவரானபோதும், நம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை ஊடலால் நீங்கியிருக்கும்போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறலினது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
(1326) விளக்கம்:

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும். அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
(1327) விளக்கம்:

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர். அந்த உண்மையானது ஊடல் தெளிந்தபின் அவர் கூடிமகிழும்போது தெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
(1328) விளக்கம்:

நெற்றி வியர்வை அரும்பும்படி காதலனுடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும்போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னா இரா.
(1329) விளக்கம்:

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே யாம் அவளை இரந்து நிற்கும்படியாக இராக்காலமும் இன்னும் நீள்வதாக.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(1330) விளக்கம்:

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும் மிகுந்த இன்பமாகும்.

திருக்குறள் என்னும் அறிவு அமுதம்

பழைமை எனப்படுவது யாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
(801) விளக்கம்:

"பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?" என்றால் அது உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்து வரும் நல்ல நட்பு ஆகும்.


நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
(802) விளக்கம்:

நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும். அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
(803) விளக்கம்:

தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தம் நண்பரிடத்திலும் அமைந்திரா விட்டால் அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
(804) விளக்கம்:

தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக ஒரு செயலைச் செய்து விட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே நல்ல நண்பர்கள்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
(805) விளக்கம்:

நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால் அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது. நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
(806) விளக்கம்:

அறிவுடையவர் தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
(807) விளக்கம்:

அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
(808) விளக்கம்:

நண்பரின் குற்றம், குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளில் குறையாகவே தோன்றும்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
(809) விளக்கம்:

கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகிவந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
(810) விளக்கம்:

பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப்படுவார்கள்.

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
(811) விளக்கம்:

நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது நாளுக்கு நாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.


உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
(812) விளக்கம்:

செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்று தான்.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
(813) விளக்கம்:

தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
(814) விளக்கம்:

போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப் போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
(815) விளக்கம்:

நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்.
(816) விளக்கம்:

பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.
(817) விளக்கம்:

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(818) விளக்கம்:

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
(819) விளக்கம்:

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
(820) விளக்கம்:

வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும் நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
(821) விளக்கம்:

உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரின் நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.


இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
(822) விளக்கம்:

நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலை மகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(823) விளக்கம்:

பலவான நல்ல அற நூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
(824) விளக்கம்:

முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.
(825) விளக்கம்:

மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
(826) விளக்கம்:

நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுக்களைச் சொன்னாலும் நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்து விடலாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
(827) விளக்கம்:

நம்மிடம் பேசும் பேவில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே. இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(828) விளக்கம்:

நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும். பகைவர் அழுது வடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
(829) விளக்கம்:

வெளிப்பட மிகுதியாக நட்புச் செய்து உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்து விடல் வேண்டும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
(830) விளக்கம்:

பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து உள்ளத்திலே போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
(831) விளக்கம்:

"பேதைமை" என்பதன் தன்மை என்னவென்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.


பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
(832) விளக்கம்:

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
(833) விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும் பேதையரது தொழிலாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர்குரைத்தும் தான்அடங்காப்
பேதையிற் பேதையர் இல்.
(834) விளக்கம்:

நூல்களை முறையாகப் படித்து உணர்ந்தும், பிறர்க்கும் அதை சொல்லி வந்தும், தன் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும் பெரிய பேதையர் உலகில் எவரும் இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835) விளக்கம்:

இந்தப் பிறப்பில் பேதமைச் செயல்களையே செய்து வரும் பேதை, தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(836) விளக்கம்:

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
(837) விளக்கம்:

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
(838) விளக்கம்:

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழி தவறி நடப்பான்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
(839) விளக்கம்:

ஒரு வகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். அது தான் அவனைப் பிரிந்தவிடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாதது.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
(840) விளக்கம்:

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு.
(841) விளக்கம்:

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை. பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.


அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
(842) விளக்கம்:

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
(843) விளக்கம்:

அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
(844) விளக்கம்:

அறியாமை என்று சொல்லப்படுவது என்னவென்றால், அறிவில்லாதவனும் "தான் அறிவுடையவன்" என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்.

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
(845) விளக்கம்:

தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
(846) விளக்கம்:

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாத போது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
(847) விளக்கம்:

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
(848) விளக்கம்:

அறிவுடையோர் "இன்னின்னபடி செய்க" என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
(849) விளக்கம்:

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
(850) விளக்கம்:

உலகத்தார் "உண்டு" என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே "இல்லை" என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப்படுவான்.

இகலென்ப எல்லா உயர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
(851) விளக்கம்:

எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், இகல் என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
(852) விளக்கம்:

தம்முடன் கூடாமையை நினைத்து ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
(853) விளக்கம்:

"மாறுபாடு" என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கிவிட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை அதுவே தரும்.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
(854) விளக்கம்:

"மாறுபாடு" என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
(855) விளக்கம்:

தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர் எவருமே இலர்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணிந்து.
(856) விளக்கம்:

"பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது" என்று அதனைச் செய்பவனது உயிர் வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.

மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர்.
(857) விளக்கம்:

இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூல்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
(858) விளக்கம்:

தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும். அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
(859) விளக்கம்:

தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான். தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
(860) விளக்கம்:

"மாறுபாடு" என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும். நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
(861) விளக்கம்:

தம்மைவிட வலியவருக்கு பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிட வேண்டும். தம்மினும் மெலியவருக்கு பகையாமல் இருப்பதை விடாமல் கொள்ள வேண்டும்.


அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலாள் துப்பு.
(862) விளக்கம்:

தம்மைவிட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.

அஞ்சும அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
(863) விளக்கம்:

அஞ்சுபவன், அறிய வேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
(864) விளக்கம்:

நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
(865) விளக்கம்:

நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன் ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
(866) விளக்கம்:

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமாக சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
(867) விளக்கம்:

தொடங்கும் போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இளனிலனாம் ஏமாப்பு உடைத்து.
(868) விளக்கம்:

நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான். அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
(869) விளக்கம்:

நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.

கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
(870) விளக்கம்:

நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறு பொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.

பகையெனும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
(871) விளக்கம்:

"பகை" என்று கூறப்படும் தீமை தருவதனை ஒருவன் விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது. இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிபாகும்.


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
(872) விளக்கம்:

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

ஏழுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
(873) விளக்கம்:

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
(874) விளக்கம்:

தான் வேண்டும்போது, தன் பகைவருள் சிலரைப் பிரிந்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித் திறனுடைய அரசனின் பெருமையினுள்ளே இவ்வுலகமே அடங்கி விடும்.

தன்துணை யின்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றி னொன்று.
(875) விளக்கம்:

"தனக்கு ஒரு துணை இல்லை, பகையோ எனில் இரண்டு" என்னும்போது அதனுள் ஒன்றை அப்போதைக்கு தனக்கு இனிய துணையாகுமாறு செய்துகொள்ளல் வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
(876) விளக்கம்:

பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாதும் நீக்காதும் விட்டு வைக்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.
(877) விளக்கம்:

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம். வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
(878) விளக்கம்:

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

இளைதாக முன்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
(879) விளக்கம்:

களைய வேண்டிய முன்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக. முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால் அது களைபவர் கையினைத் தான் களைந்து விடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
(880) விளக்கம்:

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியான அதனைச் செய்யாத அரசர் பின்னர் உயிரோடு இருப்பதற்கும் உரியவர் ஆகார்.

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
(881) விளக்கம்:

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும். தழுவ வேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் ணிதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.


வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
(882) விளக்கம்:

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே அஞ்ச வேண்டும்.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
(883) விளக்கம்:

உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்தபோது அவர்கள் கெடுதல் செய்வார்கள்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
(884) விளக்கம்:

உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால், அது சற்றும் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
(885) விளக்கம்:

புறத்தே உறவுமுறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அது அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
(886) விளக்கம்:

தனக்கு உட்பட்டவரிடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
(887) விளக்கம்:

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை யுற்ற குடி.
(888) விளக்கம்:

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
(889) விளக்கம்:

ஒருவனது உட்பகை அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவுபோன்று சிறிதானது என்றாலும் அதனாலும் அவன் பெருமை எல்லாம் பிற்காலத்தில் கெட்டுவிடும்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(890) விளக்கம்:

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
(891) விளக்கம்:

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்.


பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.
(892) விளக்கம்:

பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால் அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்து விடும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
(893) விளக்கம்:

தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதிநூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
(894) விளக்கம்:

மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக் கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
(895) விளக்கம்:

பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும் எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

எரியாற் சுடப்பனும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(896) விளக்கம்:

காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப் பட்டாலும், ஒருவழியாக உயிர் பிழைத்து விடுவான். பெரியாரைப் பிழைத்து நடந்தவனுக்கு உய்வே கிடையாது.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
(897) விளக்கம்:

சாபமிடுதலும் அருள் செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால் பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும் பெரும்பொருளும் அழிந்து விடும்.

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் செறின்.
(898) விளக்கம்:

குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெட வேண்டும் என்ற நினைப்பார்களானால், தம் குடியோடு நிலை பெற்றார் போன்ற பெருஞ்செல்வரும் மாய்வார்கள்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
(899) விளக்கம்:

உயர்ந்த விரதவாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும் அப்போதே அழிந்து போய்விடுவான்.

இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
(900) விளக்கம்:

மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப் பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள். அப்போதே அழிவார்கள்.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
(901) விளக்கம்:

தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார். பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே.



பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும்.
(902) விளக்கம்:

தன் ஆண்மையைப் பாணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
(903) விளக்கம்:

தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில் எப்போதும் நாணத்தையே தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
(904) விளக்கம்:

தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப் பயனை இல்லாத ஒருவனுக்கு செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும் அது நல்லோரால் மதிக்கப்படாது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
(905) விளக்கம்:

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
(906) விளக்கம்:

தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகின்றவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும் ஆண்மையற்றவரே.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
(907) விளக்கம்:

தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
(908) விளக்கம்:

தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்க மாட்டார்கள். மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
(909) விளக்கம்:

அறச் செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
(910) விளக்கம்:

கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
(911) விளக்கம்:

அன்பால் விரும்பாமல் அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர் துன்பம் தரும்.



பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
(912) விளக்கம்:

ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
(913) விளக்கம்:

கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
(914) விளக்கம்:

இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொது மகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
(915) விளக்கம்:

இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசை காட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்ட மாட்டார்கள்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
(916) விளக்கம்:

தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்ட மாட்டார்கள்.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
(917) விளக்கம்:

நெஞ்சிலே பொருள் மேல் ஆசை கொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
(918) விளக்கம்:

வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ்வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, "அணங்கு தாக்கு" என்று சொல்வார்கள்.

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
(919) விளக்கம்:

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
(920) விளக்கம்:

எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிர், கள், சூது என்னும் மூன்று தொடர்புகளும் திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
(921) விளக்கம்:

கள்ளின்மேல் ஆசைகொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.



உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
(922) விளக்கம்:

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக. நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
(923) விளக்கம்:

எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும். அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
(924) விளக்கம்:

"கள்" என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, "நாண்" என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
(925) விளக்கம்:

தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
(926) விளக்கம்:

உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
(927) விளக்கம்:

கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப்படுவர்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
(928) விளக்கம்:

கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, "யான் உண்டு அறியேன்" என்று பொய் கூறுவதைக் கைவிடுக.

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
(929) விளக்கம்:

கள்ளுண்டு களித்தவனைக் காட்டி "இஃது நினக்கும் ஆகாது" என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
(930) விளக்கம்:

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிகனைக் காண்பான் அல்லவோ? அப்பக் காணும்போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
(931) விளக்கம்:

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ்வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே.


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
(932) விளக்கம்:

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
(933) விளக்கம்:

உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்து விடும்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
(934) விளக்கம்:

தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக் கூடியது வேறு எதுவும் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
(935) விளக்கம்:

முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அது ஆடும் களத்தினையும், கைத்திறனையும் மேற்கொண்டு விடாதவரே.

அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
(936) விளக்கம்:

சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
(937) விளக்கம்:

நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்து விடும்.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(938) விளக்கம்:

பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
(939) விளக்கம்:

சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
(940) விளக்கம்:

இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
(941) விளக்கம்:

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
(942) விளக்கம்:

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு "மருந்து" என்னும் எதுவுமே வேண்டாம்.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
(943) விளக்கம்:

முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும். அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
(944) விளக்கம்:

முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உணவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
(945) விளக்கம்:

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
(946) விளக்கம்:

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(947) விளக்கம்:

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
(948) விளக்கம்:

குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
(949) விளக்கம்:

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
(950) விளக்கம்:

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.


இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
(951) விளக்கம்:

செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.


ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
(952) விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒருபோதுமே தவறமாட்டார்கள்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
(953) விளக்கம்:

எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
(954) விளக்கம்:

பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
(955) விளக்கம்:

தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கியபோதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.

சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
(956) விளக்கம்:

"வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்" என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
(957) விளக்கம்:

உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
(958) விளக்கம்:

குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக்குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
(959) விளக்கம்:

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும். அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச் சொற்கள் எடுத்துக் காட்டும்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
(960) விளக்கம்:

ஒருவன் தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும். குலனுடைமையை விரும்பினால் பணிவோடு நடத்தல் வேண்டும்.
இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்.
(961) விளக்கம்:

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.


சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
(962) விளக்கம்:

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
(963) விளக்கம்:

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும். செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
(964) விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையை விட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.
(965) விளக்கம்:

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.

புகழின்றால் புத்தணோட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
(966) விளக்கம்:

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது. அதனால் என்ன பயன்?

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(967) விளக்கம்:

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர் வாழ்தலைவிட இறந்தவன் என்று சொல்லப்படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.

மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.
(968) விளக்கம்:

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல் மானம் விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பணிக்கு ஏற்ற மருந்தாகுமோ

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(969) விளக்கம்:

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

இனிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
(970) விளக்கம்:

தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ் வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.

ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
(971) விளக்கம்:

ஒருவனுக்குப் பெருமை, "பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்" என்னும் மனவூக்கமே. இழிவாவது, "அதனைச் செய்யாமலே உயிர்வாழ்வேன்" என்று நினைப்பதாகும்.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(972) விளக்கம்:

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே. தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
(973) விளக்கம்:

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார். அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
(974) விளக்கம்:

கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும் தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
(975) விளக்கம்:

பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
(976) விளக்கம்:

"இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்" என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒருபோதும் உண்டாகாது.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.
(977) விளக்கம்:

தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிறியவர்களித்தேயும் சேருமானால், தகுதியைவிட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
(978) விளக்கம்:

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள். மற்றைச் சிறுமை உடையவரோ எப்போதும் தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
(979) விளக்கம்:

பெருமைக் குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல், சிறுமைக் குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
(980) விளக்கம்:

பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள். சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
(981) விளக்கம்:

"நமக்கு இது தகுவது" என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.


குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.
(982) விளக்கம்:

சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே. அது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம் எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் பூன்றிய தூண்.
(983) விளக்கம்:

அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
(984) விளக்கம்:

"தவம்" ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது. சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
(985) விளக்கம்:

ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டுக் கொள்ளுதல். சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
(986) விளக்கம்:

சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
(987) விளக்கம்:

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், "சால்பு" என்று சிறப்பாகக் கொள்ளப்படுவதுதான் என்ன பயனை உடையதாகுமோ?

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
(988) விளக்கம்:

"சால்பு உடைமை" என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார்.
(989) விளக்கம்:

சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தபோதும், தாம் நிலை திரிய மாட்டார்கள்.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
(990) விளக்கம்:

பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(991) விளக்கம்:

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(992) விளக்கம்:

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(993) விளக்கம்:

உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது. செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.

நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு.
(994) விளக்கம்:

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
(995) விளக்கம்:

தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
(996) விளக்கம்:

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது. அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
(997) விளக்கம்:

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
(998) விளக்கம்:

தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(999) விளக்கம்:

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழமாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(1000) விளக்கம்:

பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ்செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.


வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.
(1001) விளக்கம்:

வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.