அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
(501) விளக்கம்:
அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
குடிபிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பிரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
(502) விளக்கம்:
நல்ல குடியிலேயே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக்ணாடாதென்று அஞ்சும் மானணிள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
(503) விளக்கம்:
அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாவரிடத்தில் ஆராய்ந்தால், அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
குணம்நாடி குற்றணிம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.
(504) விளக்கம்:
ஒருவனது குணங்களையும், குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
(505) விளக்கம்:
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
(506) விளக்கம்:
உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாம் தரும்.
(507) விளக்கம்:
அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால், எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
(508) விளக்கம்:
தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு, அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும் தீராத துன்பம் உண்டாகும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
(509) விளக்கம்:
ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.
(510) விளக்கம்:
ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆள ப் படும்.
(511) விளக்கம்:
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
(512) விளக்கம்:
செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப் படுத்திக்கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நேன்குடையான் கட்டே தெளிவு.
(513) விளக்கம்:
அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
(514) விளக்கம்:
எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
(515) விளக்கம்:
செய்யும் செயலைப்பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
(516) விளக்கம்:
செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
(517) விளக்கம்:
இந்தச் செயலை இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச்செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
(518) விளக்கம்:
இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேன்மை வேறாக
நினைப்பான் நீங்கும் திரு.
(519) விளக்கம்:
எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனைவிட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
(520) விளக்கம்:
தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கேணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
(521) விளக்கம்:
ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
(522) விளக்கம்:
அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது, குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று .
(523) விளக்கம்:
சுற்றாத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையிலாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.
சுற்றத்தார் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
(524) விளக்கம்:
சுற்றாத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் அடைந்த பயனாக இருக்க வேண்டும்.
கொடுத்தாலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தான் சுற்றப் படும்.
(525) விளக்கம்:
சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலும், அவரோடு இனிதாகப் பேதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
(526) விளக்கம்:
மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(527) விளக்கம்:
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும், அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்பெருக்கமும் உண்டாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(528) விளக்கம்:
எல்லோரையும் ஒரே தன்மையாகப் பொதுப்படையாக நோக்காது, அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
(529) விளக்கம்:
சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திப்பார்கள்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
(530) விளக்கம்:
காரணம் இல்லாமல் தன்னிடம் இருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.
இறந்த வெகுளியில் தீதே சிறந்த
உவமை மகிழ்ச்சியிற் சோர்வு.
(531) விளக்கம்:
சிறப்பான உவகையாலே மகிழ்ச்சி அடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் தீமையைக் காட்டிலும் தீமை தருவதாகும்.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
(532) விளக்கம்:
நாளுக்கு நாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பானூ லோர்க்குந் துணிவு.
(533) விளக்கம்:
மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
(534) விளக்கம்:
அச்சம் உடையவர்க்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
(535) விளக்கம்:
துன்பம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்தபோது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயி னதுவொப்ப தில்.
(536) விளக்கம்:
மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமலிருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.
அரியவென் றாகத இல்லை பொச்சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
(537) விளக்கம்:
மறவாமை உன்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
(538) விளக்கம்:
சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு எழுமையும் நன்மை இல்லை.
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
(539) விளக்கம்:
தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும்போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெரின்.
(540) விளக்கம்:
தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
(541) விளக்கம்:
நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
(542) விளக்கம்:
மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும். மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
(543) விளக்கம்:
அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோண்மையே ஆகும்.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
(544) விளக்கம்:
குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து, வாழ்வும் நிலைபெறுவதாகும்.
இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.
(545) விளக்கம்:
அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.
(546) விளக்கம்:
மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(547) விளக்கம்:
உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.
எண்பதத்தான் ஓரா ணிறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
(548) விளக்கம்:
ணிறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து ணிறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலேயே சென்று தானே கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
(549) விளக்கம்:
குடிகளைப் பகைவர்களிடத்தில் இருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால், வேந்தனுக்கு குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
(550) விளக்கம்:
கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும், மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
(551) விளக்கம்:
குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாக கொண்டவரினும் கொடியவனாவான்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
(552) விளக்கம்:
அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், "எல்லாவற்றையும் தந்துவிடு" என்று கேட்பதைப் போன்றதாகும்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
(553) விளக்கம்:
நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
(554) விளக்கம்:
மேல் நடப்பதைப் பற்றிக் கருதாமல், முறைதவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும் ஒருங்கே இழந்து விடுவான்.
அல்லற்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
(555) விளக்கம்:
கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
(556) விளக்கம்:
செங்கோன்மையால் தான் மன்னர்க்கு புகழ் நிலைக்கிறது. அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
(557) விளக்கம்:
மழையில்லாத நிலைமை உலகத்திற்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவர்களுக்குத் துன்பம் தரும்.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
(558) விளக்கம்:
முறைப்படி ஆட்சிசெய்யாத மன்னவனின் கொடுங்கோலின் கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும் செல்வம் உடைமையே துன்பம் தரும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
(559) விளக்கம்:
ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப்போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்.
(560) விளக்கம்:
காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளமும் குன்றும்; அறு தொழிலோரும் மறை நூல்களை மறப்பார்கள்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(561) விளக்கம்:
ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாகவே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.
கடிதொச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
(562) விளக்கம்:
நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும்போது, கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
(563) விளக்கம்:
கடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப்போய் அழிவை அடைவான்.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
(564) விளக்கம்:
எம் அரசன் கடுமையானவன் என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
(565) விளக்கம்:
எளிதாகக் காணமுடியாத தன்மையும், கமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
மநீடின்றி ஆங்கே கெடும்.
(566) விளக்கம்:
கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து, அப்போதே கெடும்.
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
(567) விளக்கம்:
கடுமையான சொல்லும், முறைகடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகுந் திரு.
(568) விளக்கம்:
அமைச்சர் ணிதலானவரோடு கலந்து ஆராயந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானனால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெரு வந்து வெய்து கெடும்.
(569) விளக்கம்:
போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை.
(570) விளக்கம்:
கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும். அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு யாதும் இல்லை.
கண்ணோட்டம் என்னுங் கரிபொருள் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
(571) விளக்கம்:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான், இவ்வுலகமும் அழிவை அடையாமல் நிலைபெற்றிருக்கிறது.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை.
(572) விளக்கம்:
உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே. ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(573) விளக்கம்:
பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அதுபோலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(574) விளக்கம்:
தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பது போலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
(575) விளக்கம்:
கண்ணிற்கு அழகு தரும் ஆபரணம் கண்ணோட்டமே. அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது "புண்" என்றே சான்றோரால் கருதப்படும்.
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
(576) விளக்கம்:
கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயல்களைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.
கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
(577) விளக்கம்:
கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே. கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
(578) விளக்கம்:
தொழிலிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
(579) விளக்கம்:
தம்மை வறுத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(580) விளக்கம்:
விரும்பத்தகுந்த 'கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பம் சான்றோர்கள், பழகியவர் நஞ்சை பெய்வதைக்கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
(581) விளக்கம்:
ஒற்றர்களும், புகழ் அமைத்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இருக்கண்களாகக் கொள்ளல் வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்வை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் துணை.
(582) விளக்கம்:
எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக்காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர் மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
(583) விளக்கம்:
பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்துக்கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
(584) விளக்கம்:
அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்ாபாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவயுைம் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(585) விளக்கம்:
சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவனே ஒற்றன்.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாதாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
(586) விளக்கம்:
புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.
மறந்தவை கேட்கவற் றாகி அறுந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
(587) விளக்கம்:
மறைவான பேச்சுகளையும்கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவிவிதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.
ஒற்றொற்றித தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
(588) விளக்கம்:
ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப்படும்.
(589) விளக்கம்:
ஓர் ஒற்றன் மற்றுமோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஓருங்கே ஆராய்ந்தே உண்மை தெளியவேண்டும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.
(590) விளக்கம்:
பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புகளைச் செய்யக் கூடாது. செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
(591) விளக்கம்:
ஊக்கம் உடைமையை ' உடையவர் ' என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது, ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
(592) விளக்கம்:
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும். மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
(593) விளக்கம்:
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அடைவிலா
ஊக்கம் உடையான் உழை.
(594) விளக்கம்:
தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம் தானே அவரிருக்கும் இடத்திற்கு வழகேட்டுக்கொண்டு போய்ச்சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
(595) விளக்கம்:
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும். அது போலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
(596) விளக்கம்:
உயர்ந்த நிவைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும். அந்த நிலை கை கூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும்கை விடவே கூடாது.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
(597) விளக்கம்:
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலை நிறுத்தும். அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
(598) விளக்கம்:
யாம் வள்ளன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
(599) விளக்கம்:
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம் மக்களாதலே வேறு.
(600) விளக்கம்:
ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே. அந்த ஊக்கம் ஆசிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே.
குடியென்னுங் குனறா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
(601) விளக்கம்:
ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்படர, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்தும் போய்விடும்.
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
(602) விளக்கம்:
தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
(603) விளக்கம்:
விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பே அழிந்து விடும்.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
(604) விளக்கம்:
சோம்பலிலே ஆழ்ந்து விட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
(605) விளக்கம்:
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும், தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
(606) விளக்கம்:
நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை.
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
(607) விளக்கம்:
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
(608) விளக்கம்:
நல்ல குடியிலே பிறந்தனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
(609) விளக்கம்:
ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்து விட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கி விடும்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
(610) விளக்கம்:
சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்று விடுவான்.
அருமை யுடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(611) விளக்கம்:
இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தனறு உலகு.
(612) விளக்கம்:
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால், செய்யும் செயலிடத்திலேயே முயற்சியற்றிருப்பதை விட்டு விட வேண்டும்.
தாளாண்மை யென்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு.
(613) விளக்கம்:
எல்லாருக்கும் உதவி செய்தல் என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலே தான் நிலைத்திருப்பது ஆகும்.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்-மை போலக் கெடும்.
(614) விளக்கம்:
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாதது போல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண்.
(615) விளக்கம்:
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி, அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
(616) விளக்கம்:
இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லமையை உண்டாக்கும்.
மடியுளான் மாமுகடி யென்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
(617) விளக்கம்:
சோம்பல் இல்லாதவனின் முயிற்சியிலே தாமரையாளான திருமகன் சென்று வாழ்வாள். சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவி தான் சென்று வாழ்வாள்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
(618) விளக்கம்:
நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது. அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்.
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
(619) விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.
ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
(620) விளக்கம்:
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச்செய்பவர் ஆவார்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
(621) விளக்கம்:
துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
(622) விளக்கம்:
வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனைவிட்டு மறைந்து போய்விடும்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(623) விளக்கம்:
இடையூறுகள் வந்தபோது அதற்காக வருந்தாத மனத் தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவர்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.
(624) விளக்கம்:
தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
(625) விளக்கம்:
மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு, நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
(626) விளக்கம்:
பொருள் அடைந்தோம் என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் பொருளை இழந்தோம் என்று துன்பம் அடைவாரோ?
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
(627) விளக்கம்:
இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து, அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
(628) விளக்கம்:
இன்பம் உண்டாகியபோது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருவதும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
(629) விளக்கம்:
இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன் துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
(630) விளக்கம்:
துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.
கருவியும் காலணிம் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
(631) விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் செயலின் அருமையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
(632) விளக்கம்:
மன வலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலங்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே அமைச்சன்.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
(633) விளக்கம்:
பகைவரோடு சேர்நதுள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒரு தலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
(634) விளக்கம்:
எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லன்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
(635) விளக்கம்:
நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் இருப்பவனே, நல்ல அமைச்சன்.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(636) விளக்கம்:
இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாமல் போய்விடும்.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
(637) விளக்கம்:
செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
(638) விளக்கம்:
அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
(639) விளக்கம்:
அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
(640) விளக்கம்:
முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
(641) விளக்கம்:
நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
(642) விளக்கம்:
மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்.
கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
(643) விளக்கம்:
கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உயைவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கும் இல்.
(644) விளக்கம்:
கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
(645) விளக்கம்:
தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல் வேண்டும்.
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றோர் கோள்.
(646) விளக்கம்:
தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே, மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
(647) விளக்கம்:
சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது எவருக்குமே அருமையாகும்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
(648) விளக்கம்:
கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
(649) விளக்கம்:
குறைவில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு, எப்போதும் விரும்புவார்கள்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
(650) விளக்கம்:
தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மனம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
(651) விளக்கம்:
துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும். செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
(652) விளக்கம்:
புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும் ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும்.
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதுவும் என்னு மவர்.
(653) விளக்கம்:
மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்.
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
(654) விளக்கம்:
கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
(655) விளக்கம்:
என்ன செய்தோம் என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது. செய்து விட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமல் இருப்பது நன்று.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
(656) விளக்கம்:
தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தில் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(657) விளக்கம்:
பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தைக் காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்தது ஆகும்.
கடிந்த கடிந்தொரர் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
(658) விளக்கம்:
செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
(659) விளக்கம்:
பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும். நல்ல வழியில் வந்தவற்றே இழந்தாலும் பின்னர் பயன் தரும்.
லத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
(660) விளக்கம்:
தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
(661) விளக்கம்:
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே. பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
(662) விளக்கம்:
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.
(663) விளக்கம்:
செயலில் ஆண்மையாவது, முடிந்த பின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம். இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
(664) விளக்கம்:
இதனை இப்படி, அப்படி செய்வோம் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளிதாகும். சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
(665) விளக்கம்:
எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
(666) விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
(667) விளக்கம்:
உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணி போல் நின்று காப்பவரையும் உலகம் உடையது. அதனால் ஒருவரது சிறிதான உருவத்தை பார்த்து இகழக் கூடாது.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
(668) விளக்கம்:
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வு இல்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும்.
துன்பம் உறவரினுஞ் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
(669) விளக்கம்:
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முதலிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத் துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
(670) விளக்கம்:
எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது. சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
(671) விளக்கம்:
ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும். அவ்வாறு துணிவு கொண்ட பின் அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.
தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
(672) விளக்கம்:
காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும். காலம் கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
(673) விளக்கம்:
செய்யக் கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே. செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
(674) விளக்கம்:
செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறை விடாமல் செய்து விட வேண்டும். அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கி விடும்.
பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
(675) விளக்கம்:
வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றயாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
(676) விளக்கம்:
செயலின் முடிவைப் பற்றியும், இடையில் வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்தப் பின் அடையும் பெரும் பயனைப் பற்றியும் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.
(677) விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவரிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.
வினையான் வினையாக்கி கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
(678) விளக்கம்:
மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவது போல், பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும்.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
(679) விளக்கம்:
மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும்.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
(680) விளக்கம்:
ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
(681) விளக்கம்:
தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்.
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
(682) விளக்கம்:
தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும் தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள்.
நூலாறுள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
(683) விளக்கம்:
அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
(684) விளக்கம்:
இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவரச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.
(685) விளக்கம்:
விரிக்காமல் தொகுத்து சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுபைடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பனே தூதன்.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
(686) விளக்கம்:
கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான் தலை.
(687) விளக்கம்:
தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற்கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாக சிந்தித்து சொல்பவனே தூதன்.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
(688) விளக்கம்:
நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
(689) விளக்கம்:
தன் அரசன் சொல்லியனுப்பிதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
(690) விளக்கம்:
தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவு படாது, தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டைச் செய்து முடிப்பவனே தூதன்.
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
(691) விளக்கம்:
மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகி வர வேண்டும்.
மன்னர் விழைய விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.
(692) விளக்கம்:
மன்னர் விரும்புகிற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
(693) விளக்கம்:
அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
(694) விளக்கம்:
அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும்போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
(695) விளக்கம்:
அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும்.
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
(696) விளக்கம்:
அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
(697) விளக்கம்:
அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதனபற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும்.
இனையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.
(698) விளக்கம்:
"இளையவர்" என்று கருதியோ, "இனமுறை" என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
(699) விளக்கம்:
தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம் என்று, அவர் ஏற்றுக்கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
(700) விளக்கம்:
மிகப் பழையகாலத் தொடர்புடையோர் என்று நினைத்தும் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
(701) விளக்கம்:
ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
(702) விளக்கம்:
கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
(703) விளக்கம்:
ஒருவரது முகக் குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போர் அனையரால் வேறு.
(704) விளக்கம்:
தாம் செய்வதற்குத் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
(705) விளக்கம்:
ஒருவர் ஒரு கருத்தைக் குறிப்பால் காட்டியபோது, அதை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ?
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
(706) விளக்கம்:
தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப்போல், ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
(707) விளக்கம்:
முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்.
ணிகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
(708) விளக்கம்:
ணிகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவும் சொல்ல வேண்டாம்.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
(709) விளக்கம்:
கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
(710) விளக்கம்:
நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப்பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை.
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(711) விளக்கம்:
சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
(712) விளக்கம்:
சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே சொல்ல வேண்டும்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
(713) விளக்கம்:
தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
(714) விளக்கம்:
அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகி விட வேண்டும்.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
(715) விளக்கம்:
அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது; சிறந்த நன்மை தருவது.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
(716) விளக்கம்:
விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றரிதல் வல்லார் அகத்து.
(717) விளக்கம்:
குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உள்ளவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
(718) விளக்கம்:
சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
(719) விளக்கம்:
நல்ல அறிவாளிகள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாக பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.
(720) விளக்கம்:
தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாக பேசுதல், அங்கணத்துள்ளே அமுதைக் கொட்டியது போல் பாழாகிவிடும்.
வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(721) விளக்கம்:
சொற்களின் தொகை பற்றி அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய் சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
(722) விளக்கம்:
'கற்றவர்களுள் கற்றவர்கள்' எனப் புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
(723) விளக்கம்:
போர்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால் , கற்றோர் அவையிலே சென்று பேசக்கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச்சிலரே.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
(724) விளக்கம்:
தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாக கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியை கேட்டுக் கொள்ளல் வேண்டும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
(725) விளக்கம்:
அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்.
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
(726) விளக்கம்:
அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு அவர் நூலறிவாலும் பயன் இல்லை.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
(727) விளக்கம்:
பகைவர் நடுவிலே புகுந்த, பேடியின் கையிலே உள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
(728) விளக்கம்:
நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள் பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.
(729) விளக்கம்:
தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர்கள் அவையிலே பேச அஞ்சுபவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
(730) விளக்கம்:
அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே ஆயினும், அறிவற்றவர்களுக்கே சமமானவர்கள்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
(731) விளக்கம்:
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும்.
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
(732) விளக்கம்:
பெரும்பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத்தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுந்த விளைச்சல் உடையதாகியும் விளங்குவதே நல்ல நாடு.
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவதற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
(733) விளக்கம்:
வேற்றுநாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்துக் காப்பதே, நல்ல நாடாகும்.
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.
(734) விளக்கம்:
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் லளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
(735) விளக்கம்:
பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
(736) விளக்கம்:
பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளங்குன்றாத நாடு தான், நாடுகளுள் தலைசிறந்த நாடாகும்.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
(737) விளக்கம்:
கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும் ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புகளாம்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
(738) விளக்கம்:
மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின் கலைகள், நல்ல காவல் என்னும் இந்த ஐந்துமே நாட்டிற்கு அழகு.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு.
(739) விளக்கம்:
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு நாடே ஆகாது.
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.
(740) விளக்கம்:
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
(741) விளக்கம்:
பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கு அரண் செல்வம்; அஞ்சி உள்ளே இருந்து தம்மை காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
(742) விளக்கம்:
நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மர நிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
(743) விளக்கம்:
'உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் ' என்னும் இந்நான்கும் சிறப்பாக அமைந்ததே அரண் என்று போரியல் நூல்கள் கூறும்.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.
(744) விளக்கம்:
காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிய பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றிலும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும்.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெள்தாம் நீரது அரண்.
(745) விளக்கம்:
பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருட்களை உடையதாயும், அகத்தாரது போர் நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
(746) விளக்கம்:
அகத்தாருக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய் விளங்குவதே அரண்.
ணிற்றியும் ணிற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
(747) விளக்கம்:
சூழ்ந்து ணிற்றியும், திடீரெனத் தாக்கியும் வஞ்சனைகளாலே உள்ளிருப்பபோரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற இயலாத அருமையுடையதே அரண்.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
(748) விளக்கம்:
வந்து சூழந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம் விட்டு பெயராமல் நிலைத்து நின்று வெல்லும் அமைப்பை உடையதே அரண்.
முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.
(749) விளக்கம்:
முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த் தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொணடதே அரண்.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
(750) விளக்கம்:
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
(751) விளக்கம்:
ஒரு பொருளாக மதிப்பதற்கு தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும் படியாகச் செய்யக்கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
(752) விளக்கம்:
பொருள் இல்லாத வறியவரை எல்லாரும் இகழ்ச்சியாகவே பேசுவர்; செல்வம் உடையவர்களையோ எல்லாரும் சிறப்பு செய்து போற்றுவார்கள்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
(753) விளக்கம்:
பொருள் என்னும் நந்தாவிளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
(754) விளக்கம்:
தீய வழிகளில் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்த செல்வமானது, அறவாழ்க்கையையும் இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பதாகும்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொகுளாக்கம்
புல்லார் புரள விடல்.
(755) விளக்கம்:
அருள் என்னும் இயல்போடும் மக்களின் அன்போடும் பொருந்தி வாராத பொருட் பெருக்கத்தை, தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டு விட வேண்டும்.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
(756) விளக்கம்:
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும் வேந்தன் பொருளாகும்.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
(757) விளக்கம்:
அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
(758) விளக்கம்:
தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டாற் போல, துன்பமின்றி இன்பம் தருவதாகும்.
செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.
(759) விளக்கம்:
பகைவரின் மனச்செறுக்கை அழித்து வெற்றி பெரும் ஆயுதம் பொருளைக் காட்டிலும் கூர்ாமயானது வேறில்லை; ஆதலால் பொருளை எப்போதும் தேடிக் கொள்ள வேண்டும்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றயார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
(760) விளக்கம்:
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும்
உறுப்பமைந்து ஊரஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
(761) விளக்கம்:
நால்வகை உறுப்புகளாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
(762) விளக்கம்:
நால்வகை உறுப்புகளாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.
ஒலித்தக்கால் எல்லாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
(763) விளக்கம்:
பகைப்படைகள் எலிகளைப்போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
(764) விளக்கம்:
மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே சிறந்த படை.
கூற்றடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
(765) விளக்கம்:
கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே சிறந்த படை ஆகும்.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
(766) விளக்கம்:
மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும் படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.
(767) விளக்கம்:
மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே படை ஆகும்.
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
(768) விளக்கம்:
போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணி வகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்து விடும்.
சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
(769) விளக்கம்:
தேய்ந்து சிறுகுதலும், மனம் நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்.
நிலமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
(770) விளக்கம்:
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால் பயனற்று அழிந்து விடும்.
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
(771) விளக்கம்:
பகைவரே, என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர். அவன் முன் எதிர்த்து வந்து நின்று களத்தில் வீழ்ந்து பட்டு நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(772) விளக்கம்:
காட்டு முயலைக் குறி தவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானை மேல் எறிந்து குறி தவறிய வேலினைத் தாங்குதலே படை மறவருக்கு இனிதாகும்.
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
(773) விளக்கம்:
பேராண்மை என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர்நின்று போரிடும் ஆண்மையே. அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவி நிற்கும் ஆண்மையோ அதனினும் சிறந்ததாகும்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(774) விளக்கம்:
தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்து விட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்.
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
(775) விளக்கம்:
பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவு தரும் அல்லவோ?
விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து.
(776) விளக்கம்:
கழிந்துபோன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
(777) விளக்கம்:
உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
(778) விளக்கம்:
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும் தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
(779) விளக்கம்:
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர் தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
(780) விளக்கம்:
தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத் தகுந்த சிறப்பினை உடையதாகும்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
(781) விளக்கம்:
நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை. நட்பைப் போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
(782) விளக்கம்:
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளரும். பேதைகளின் நட்பு, தேய்பிறை போல் நாளுக்கு நாள் தேய்ந்து போகும்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
(783) விளக்கம்:
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப்பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் .
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
(784) விளக்கம்:
நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
(785) விளக்கம்:
நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
(786) விளக்கம்:
உள்ளம் கலக்காமல் முகத் தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது. நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்புச் செய்வது தான் நல்ல நட்பு.
அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
(787) விளக்கம்:
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(788) விளக்கம்:
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவது தான் நல்ல நட்பு.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(789) விளக்கம்:
நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது என்றால், மனமாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
(790) விளக்கம்:
இவர் எமக்கு இப்படிப்பட்டவர், யாம் இவருக்கு இத்தன்மையவர் என்று நட்பின் அளவைச் சொன்னாலும் அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
(791) விளக்கம்:
நன்றாக ஆராயமல் நட்பு செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை. அப்படி நட்பு செய்த பின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
(792) விளக்கம்:
பல வகைகளிலும் ஒருவனைப் பற்றி ஆராயந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்கு பெரும் துயரத்தைத் தந்துவிடும்.
குனனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு.
(793) விளக்கம்:
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றம் குறைகளையும், நிலையாக அவனுடன் இருக்கும் தோழர்களையும் அறிந்தே நட்பு செய்ய வேண்டும்.
குடிப்பிறந்து தன்கட் பனிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
(794) விளக்கம்:
உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை எந்தப் பொருளைக் கொடுத்தாவது நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
(795) விளக்கம்:
உயர்ந்த குடியிலே நாம் தவறு செய்யும்பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
(796) விளக்கம்:
ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு. நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக விளங்குவது தான் அது.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
(797) விளக்கம்:
ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப் பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும்.
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றுப்பார் நட்பு.
(798) விளக்கம்:
உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக் கூடாது, அல்லல்படும் காலத்திலேயே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
(799) விளக்கம்:
நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும்.
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
(800) விளக்கம்:
குற்றம் இல்லாத நல்லோரின் நட்பையே கொள்ள வேண்டும். தகுதியில்லாத கீழோரின் நட்பை ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிட வேண்டும்.
No comments:
Post a Comment